தொடங்கட்டும், நல்ல திட்டம்!

காஞ்சியின் வேகவதி ஆற்றைப் பார்த்து விட்டு நாம் வருந்தி எழுதிய கட்டுரையில், ‘…நல்ல நதிகளை ஆக்ரமித்து வீடுகட்டுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினை, நதிகளை கழிவுநீர் வடிகாலாக மாற்றுவது நாம் தொடங்கி வைக்கும் அடுத்த பெரும் பிரச்சினை. இதற்கேதேனும் தீர்வு வர வேண்டும். நிலமும் கெடுகிறது, நிலத்தடி நீரும் கெடுகிறது. …’ என்று எழுதியிருந்தோம். 

அதைப் படித்து விட்டு, சிதம்பரத்தில் நீர் நிலைகளை புனரமைப்பதில் பெரும்பங்காற்றிய செங்குட்டுவன் அவர்கள் கூட வேகவதியை நோக்கி கைகோர்க்க காஞ்சி தன்னார்வலர்களோடு ஆலோசித்து வந்தார்.

மிகச்சரியாக 8 நாட்கள் கழித்து அதே திசையில் அறிவிப்பு செய்திருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.  இது ஒரு ‘கோயின்சைடு’தான்!

‘தமிழகம் முழுவதிலும் கழிவுநீர் நேரடியாக நீர்நிலைகளில் கலக்கா வண்ணம் மாற்று தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்று அறிவித்திருக்கிறார்.

இது மிக மிக முக்கியமான திட்டம். இந்த திசையில் பயணிக்கத் தொடங்கினால் நம் மண்ணும் நீர்நிலைகளும் நிலத்தடி நீரும் பல்லுயிர்ச்சூழலும் என எல்லாமும் காக்கப்படும்.

இதை சரியாக செய்துவிட்டால் இந்த அரசை நான் போற்றுவேன்.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
21.09.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *