தமிழகம் முழுக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் முதல்வர். இதனால் சில சங்கதிகள் நடந்துள்ளன.
( ‘அவரு ஹெலிகாப்டர்ல போவல, நேரில் போனாரு பாரு!’ என்றும், ‘அந்தத் தொகுதியில் இன்னும் தண்ணி நிக்குது, போட்லதான் போகனும்!’ என்றும் அரசியல் நிலை சார்பு எதிர்ப்பு கொண்டோர்கள் பேசுகிறார்கள், பேசட்டும். நமக்கு வேண்டியதை மட்டும் நாம் இதில் பார்க்கிறோம்!)
1. தமிழகம் முழுவதற்கும் வெள்ள நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்துவது இந்த அரசின் முதன்மை நோக்கம் என்று அறிவித்திருக்கிறார். இதை நாம் எழுந்து நின்று வரவேற்கிறோம்.
2. நாகை டெல்டா மாவட்டத்தை எரிபொருள் வேதியியல் மண்டலம் என்று அறிவிக்கையை ரத்து செய்திருக்கிறார். (இதற்காக அதிமுக உட்பட அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் போராடின!)
3. வெள்ள நீர் சூழலாலும், மழையாலும் ஏற்படும் நோய்களை தடுத்து எதிர்கொள்ள வீடுகளுக்கு செல்ல மருத்துவ குழு மாநிலம் முழுதும். இதுவும் மிக மிக சிறப்பானது.
…
தமிழகம் முழுவதும் வெள்ள நீர் வடிகால் வரட்டும், அதன் வழியே நீர்நிலைகளை பராமரிப்பதும் உபரியை வெளியேற்றுவதும் சிறப்பாக நடக்கும். இந்த திட்டம் நடந்தேறட்டும். சிதம்பரத்தில் இதை சிறப்பாக செய்துள்ளது தன்னார்வலர்கள் குழு. இதை அரசே தமிழகம் முழுவதிலும் கொண்டு வருவது நல்லது. ‘சூப்பர்’ நல்லது.
– மணக்குடி மண்டு
16.11.2021