மு பச்சைமுத்து : 2ஆம் குருபூசை

🌸

என் தந்தை மு. பச்சைமுத்து அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூசை (நினைவு நாள் / அவர் வீட்டிற்கு வரும் நாள்) தினம், திருப்புகழ் இசை அஞ்சலி, கோ பூசை, ஓதுவார்களின் திருமுறைகள் முற்றோதல், அவர் பூசை செய்து வழிபட்ட வேலுக்கு நீராட்டு பூசனைகள், அமுது படைத்தல், அழைத்து விருந்தினர்களுக்கு அன்னம் படைத்தல் என அவர் இருந்த போது விரும்பிச் செய்தனவற்றை நிகழ்த்தி நிறைவாக நடந்தேறியது.

சென்ற ஆண்டு் குருபூசையில் வெளியிடப்பட்ட ‘சிவ வழிபாட்டு மாலை’ ஓராண்டில் சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள், வேள்விகள் புரிந்து தருவோர், கோவில் அர்ச்சகர்கள், இல்ல வழிபாடு செய்வோர் என ஆயிரம் பேரை அடைந்திருக்கிறது, அவர்களின் வழியே எண்ணற்ற முறையில் திருமுறைகள் ஓதப்பெற்றுள்ளன.

தொடர்ந்து பணிகள் நடக்க தோன்றாப் பெருமையன் அருள் புரியட்டும். வானிலிருந்து தந்தையும், அப்பாவின் குருநாதர் வாரியார் சுவாமிகளும், எங்கள் குல மூதாதைகளும் வாழ்த்தட்டும்!

இறைவனுக்கு நன்றி!

  • பரமன் பச்சைமுத்து
    19.12.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *