நீண்ட காலமாக (பல ஆண்டுகளாக) என் பட்டியலில் இருந்த தொடாமல் விட்ட திருவருட்பா நூலை புரட்ட எண்ணி எடுத்தேன் இன்று (அழைப்பு இப்போதுதான் வருகிறது).
முதல் பக்கம் அவரது கையெழுத்து, ‘சிதம்பரம்’ என்று ஊர்ப்பெயரை சேர்த்து எழுதியிருப்பதை கண்டது என வியப்புடன் நகர்த்தி, முதல் பக்கம் முதல் செய்தி ‘இந்திரிய ஒழுக்கம்’ படித்தேன். ஆடிப் போனேன்.
‘இதில் ஒண்ணக் கூட நாம ஒழுங்கா செய்யறது இல்லையே!’ என எண்ணம் வந்து நிற்க, நூலை அப்படியே வைத்து விட்டு திகைத்து நிற்கிறேன் இன்னும்.
- பரமன் பச்சைமுத்து
30.07.2022