இலங்கையில் பிறந்து தமிழர்கள் இதயத்தில் வாழும் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன்…
தமிழ் சினிமாவிற்கு
நேச்சுரல் லைட்டிங் பார்க்கப் புதிய கண்களைத் தந்தவனே,
நீ செல்லுலாய்டில் எழுதிப் போனது, தமிழ் சினிமாவின் ‘அழியாத கோலங்கள்’,
கமல், ஶ்ரீதேவி, அர்ச்சனா, ஷோபா, பாலா, வைரமுத்து, சசிகுமார், தனுஷ், வெற்றிமாறன்… என்று தேசியவிருது குவிப்போர் அனைவரும்,
உன்னோடு கைகோத்தோர் அல்லது உன் கேமரா வழியே காணப்பட்டோர்!
இன்று பட்டையைக் கிளப்புவோர்கள் எல்லாம்
உன் பட்டறையிலிருந்து வந்தோர் அல்லது பட்டறையிலிருந்து வந்தோரால் பட்டைத் தீட்டப்பட்டோர் (விக்ரம்,…)!
நீல தொடங்கியதை தொடர்ந்தே வெற்றி பெற்றதாக பி.சி. ஶ்ரீராமும், ரவி கே சந்திரனும் சொல்கிறார்கள்.
‘மூன்றாம் பிறை’ தந்த முழு நிலவே…
போய் வா…!
தமிழ் சினிமாவின் கண்களைத் திறந்துவிட்டு,
தன் கண்களை மூடிக்கொண்டவனே,
போய் வா…
நீ உண்டாக்கிய அதிர்வுகள், உருவாக்கிய கலைஞர்கள் வழியே – உன் பெயர் இருக்கும்.
‘தலைமுறைகள்’ தாண்டி நிற்கும் உன் புகழ் தமிழ் சினிமாவில்.
: சினிமா ரசிகன் – பரமன் பச்சைமுத்து