கடைத்தெருவில்
மக்களோடு நான் நடந்து வரும் விதத்தை
தூரத்திலிருந்து கவனித்த என் மனைவி
வீடு வந்ததும் சொன்னாள்,
“முன்ன மாதிரி இல்ல நீங்க இப்போ,
உங்களுக்கு பவர் கூடிடிச்சிங்க!”
அட, மனைவியே சொல்லிவிட்டாள்,
வேறென்ன வேண்டும்!
எப்படி இருக்கும் எனக்கு!
நிஜமாகவே இன்னும் கொஞ்சம்
பவர் கூடியதுபோல இருந்தது.
சரி…
சாயந்திரம், கண் டாக்டரைப்
போய்ப் பார்ப்போம், வயசாகுதுல்ல!
: பரமன் பச்சைமுத்து
[இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று ]