சென்னையில ஏறி காஃபி குடிச்சா பெங்களூரூ!

சென்னையில் ரயிலில் ஏறி உட்கார்ந்து ஒரு காஃபி குடித்து விட்டு கழிப்பறை போய் விட்டு வெளியே வந்தால் பெங்களூரூ வந்து விட வேண்டும் என்பது என் பல காலத்தைய வியப்பான கற்பனை.

ஜப்பானில் பணி புரிந்த காலத்தில் ‘ட்துஜிகாவோக்கோவோ’ மெட்ரோ நிலையத்தில் என் இளம் வயது கற்பனைகளில் ‘டோக்கியோவிலிருந்து இந்த புல்லட் ட்ரெயினை அப்படி கடத்தி தூக்கிட்டுப் போய் இந்தியாவுல சென்னை டூ பேங்களூர் வுட்டா எப்படி இருக்கும்? சென்னையில் காலையில சாப்டுட்டு புறப்பட்டு மார்னிங் பேங்களூர் ஆஃபீஸுக்கு வேலைக்குப் போய்ட்டு சாயந்திரம் கிளம்பி சென்னை வீட்டுக்கு வந்துடரலாம்! ச்சே!’ என்று மூழ்கியிருந்திருக்கிறேன்.

‘சென்னையில் ரயிலில் ஏறி உட்கார்ந்து காஃபி குடித்து விட்டு கழிப்பறை போய் விட்டு வெளியே வந்தால் பெங்களூரூ!’ என்ற என் பல காலத்தைய வியப்பான கற்பனை இன்று சாத்தியமான சாதனையாக மாறுகிறது!!!!

ஹைப்பர் லூப் முயற்சி செய்யும் ஐஐடி மெட்ராஸ் – இந்திய ரயில்வே துறைக்கு வாழ்த்துகள்! வெற்றிகள் வரட்டும்!

இந்தியாவிலிருந்து இன்னொரு மெருகேற்றல் தொழில்நுட்பம் உலகிற்கு கிடைக்கட்டும்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
27.02.2025

#Hyperloop #HyperLoopTrain #iitMadras #ParamanPachaimuthu #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #பரமன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *