தங்களது இறுதியாத்திரைக்கு
தாங்களாகவே புறப்பட்டுப் போனார்கள் ஐஏ-171ல்
அவசர வழியின் அந்த இருக்கையில் இருந்தவன்
ஐந்து நொடிகள் தூங்கியிருந்தால் மரணித்திருப்பான்
மற்ற இருக்கைகளின் 241 பயணிகளும் விழித்திருந்தும் மரணித்துப் போயினர்.
உணர்வதற்குள் உடல்களை விட்டுவிட்டு
உயிரை தின்றுவிட்டது தீ.
கரிக்கட்டைகளாக மனிதர்கள் ஆன பின்பு கருப்புப் பெட்டியால் பயன் என்ன இனி!
பறந்து செல்ல லண்டனுக்கு
டிக்கெட் எடுத்துவிட்டு பரலோகத்திற்கு போய்விட்டவர்களுக்கு…
அஞ்சலி!
– பரமன் பச்சைமுத்து
#ia171 #FlightCrash #RIP #ahmedabadairport #AhmedabadflightCrash