நடிகர் சூர்யாவின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த…

நடிகர் சூர்யாவின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த இளைஞர் என்ற அந்த செய்தி கவனம் ஈர்த்தது என்பதைவிட சூர்யாவின் மீதான மரியாதையை உயர்த்தியது என்றே சொல்வேன்.

அந்தப் பெண்மணி தன் காரில் பிரேக் போட்டார், பின்னே வந்த இளைஞரின் பைக் இடித்தது. இருபக்கமும் பாதிப்பு. வண்டியை நிறுத்தி சண்டை. சூரியா தாக்கினார் என்று அந்த கால்பந்து வீரர் சொல்வது உண்மையா என்று தெரியாது, ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது – அந்த சண்டையை பார்த்துக் கொண்டே அவ்வழியே பலர் போக, ஒரு பெண்ணிற்கு பிரச்சினை என்றதும் இறங்கி ‘ஏய்…ஏய்… பெண்ணத் தொடக்கூடாது!’ என்று குரல் கொடுத்திருக்கிறார் சூர்யா!

நடிகர் என்பதால் இந்நிகழ்ச்சி கவனம் பெறுகிறது என்றாலும், நமக்கென்ன மற்றவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று போகவில்லை அவர் என்பது என் கவனத்தை ஈர்க்கிறது. அந்த இளைஞன் புகாரை திரும்பப் பெற்றதும், அந்தப் பெண் என்ன நடந்ததென்பதை சுட்டுரையில் பகிர்ந்து சூர்யாவிற்கு நன்றி சொன்னதும் இன்றைய செய்திகள் .

 

பரமன் பச்சைமுத்து

02.06.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *