‘நவரசா’ – மணிரத்னத்திற்கு பூங்கொத்து

அந்தக் காலத்திலிருந்தே படமெடுக்கும் விதத்தாலும், திரைமொழியாலும், தொழில்நுட்பப் பயன்படுத்தலாலும் மதித்துப் பார்க்கப்படும் இயக்குநர் மணிரத்னத்தை வேறொன்றிற்காகவும் மதிக்கிறேன் இன்று.

ஓடிடி தளத்திற்காக கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், அர்விந்த் சுவாமி, வசந்த், பிரியதர்ஷன், கார்த்திக் நரேன் என பலரை இயக்குநராகப் போட்டு, சூர்யா, விஜய் சேதுபதி, அசோக் செல்வன். அர்விந்த் சுவாமி, ப்ரகாஷ் ராஜ், அதர்வா என நட்சத்திரங்களை வைத்து படம் பண்ணுவதால் அல்ல; ‘நவரசா’ எனும் இந்தப் படத்தின் மொத்த வருமானத்தையும் பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு கொடுக்க எடுத்த அந்த முடிவிற்காகவும், ஒவ்வொரு ஊழியருக்கும் கிரெடிட் கார்டு மாதிரி ஒன்றைத் தந்து அதில் மாதம் 1500/- ரூபாய்க்கு மளிகை சாமான் வாங்கிக் கொள்ளலாம் எனும் ஒரு நடைமுறையை கொண்டு வந்ததற்காகவும் மதிக்கிறேன். அவருக்கும் அவரோடு இணைந்து இதை செய்யும் அவரது நண்பருக்கும் பூங்கொத்து!

( 1500/- மளிகை சாமான், கார்டில் கிரெடிட். நல்ல முன்னெடுப்பு இது. நிறைய மற்ற இடங்களில் இந்த திட்டத்தை  கொண்டு செல்லலாம்!)

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
08.07.2021

#Navarasa
#Maniratnam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *