நல்ல தமிழ் எழுதவேண்டி இன்று
ஐய ஓகாரம், குற்றியலுகரம், ‘என்ற’ ‘என்னும்’ வித்தியாசங்கள் படிக்கும்போது,
அன்று
வாழ்க்கைக்குப் படிக்காமல்,
தேர்வுக்குப் படித்தது புரிகிறது.
தேடலுக்குப் படிப்பதற்கும், தேர்வுக்குப் படிப்பதற்கும்
ஆழ அகல உயரங்கள்
வேறுவேறு!
-பரமன்
[‘இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று]