Yearly Archive: 2020

‘மூச்சு’

🌸🌸 ‘எப்போதும் ஒருவித பயத்தோடே இருப்பேன். தூங்குவதற்கு மிகச் சிரமப்படுவேன். ‘மூச்சு’ ஆன்லைன் வகுப்பின் பயிற்சிகள் பெரும் மாறுதல்களைத் தந்துவிட்டது. நன்றாக மிக ஆழமாக தூங்குகிறேன். பாசிட்டிவாக லைவ்வாக இருக்கிறேன்! பரமன் சாருக்கு நன்றி!’ குத்தாலிங்கத்தை அழைத்து சொல்லியிருக்கிறார் ஒரு மாணவி. ‘அதே தியானம்தான். ஆனால் இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு வேற நிலை ஆழம்!’ என்று… (READ MORE)

Uncategorized

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு B பாலாஜி ,பத்தாம் வகுப்பு,எஸ்ஆர்ஜிடிஎஸ் ஸ்கூல்,திருவண்ணாமலை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage

Arumbugal-Mottugal, Uncategorized

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு

    மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு கிருத்திக் ராஜா எஸ் ஆர் ,பன்னிரெண்டாம் வகுப்பு,எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன ஸ் ஸ்கூல்,சென்னை,மலர்ச்சி மொட்டுகள் – பேட்ச் 1 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids… (READ MORE)

Arumbugal-Mottugal, Uncategorized

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு நவீன் K ,ஏழாம் வகுப்பு,மகரிஷி வித்யாமந்திர்,சென்னை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 1 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage 👏👏👏👏 🌸🌸 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:… (READ MORE)

Arumbugal-Mottugal, Uncategorized

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு சுபா P,ஒன்பதாம் வகுப்பு,விக்னேஷ் இண்டர்நேஷனல் ஸ்கூல்,திருவண்ணாமலை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage 👏👏👏👏 🌸🌸 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:… (READ MORE)

Arumbugal-Mottugal

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:

👏👏👏👏 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு சூர்யா P, எட்டாம் வகுப்பு, எஸ்கேபி வனிதா இன்டர்நேஷனல், திருவண்ணாமலை, மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage

Arumbugal-Mottugal

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:

👏👏👏👏 🌸🌸மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு நிஷிதா பாலாஜி,எட்டாம் வகுப்பு,சென்னை பப்ளிக் ஸ்கூல்,சென்னை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage

Arumbugal-Mottugal

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:

👏👏👏👏 🌸🌸மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு வி வர்ஷினி,எட்டாம் வகுப்பு,வேலம்மாள் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்,சென்னை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 3 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage

Arumbugal-Mottugal

எவர்க்ரீன் எல் ஆர் ஈஸ்வரி

நேற்றைய ப்ளாக்பஸ்டர் படம். பாலதண்டாயுதம் சித்தப்பா அதிகம் சிலாகித்தப் படங்களின் வரிசையில் பார் மகளே பார், பாச மலர், கௌரவத்திற்கு அடுத்து வரும் படம் இது. ஜில்ஜில் ரமாமணி, ரோசாரமணி ஆகிய இந்தப்பாத்திரத்தின் பெயர்களை ராஜவேலு – முத்தையா – சடாட்சரம் சித்தப்பாக்கள் மறக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். மனோரமா கதாபாரத்திரம் செய்த இதே பாட்டை… (READ MORE)

Uncategorized

எவர்க்ரீன் எல் ஆர் ஈஸ்வரி

நேற்றைய ப்ளாக்பஸ்டர் படம். பாலதண்டாயுதம் சித்தப்பா அதிகம் சிலாகித்தப் படங்களின் வரிசையில் பார் மகளே பார், பாச மலர், கௌரவத்திற்கு அடுத்து வரும் படம் இது. ஜில்ஜில் ரமாமணி, ரோசாரமணி ஆகிய இந்தப்பாத்திரத்தின் பெயர்களை ராஜவேலு – முத்தையா – சடாட்சரம் சித்தப்பாக்கள் மறக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். மனோரமா கதாபாரத்திரம் செய்த இதே பாட்டை… (READ MORE)

Uncategorized

இருவீட்டார் திருமணம்

ஊரார் இல்லாமல் உற்றார் இல்லாமல் சுற்றம் இல்லாமல் நட்பும் வாராமல் ‘இப்ப ஏன் வைக்கனும் கல்யாணத்தை’ என்றோரும்‘இப்ப எப்படி போவறது?’ என்றோரும் எவரும் வரமுடியாமல் பெண்ணையும் சேர்த்து பெண்வீட்டார் ஏழு பேர் அதேயளவு மாப்பிள்ளை வீட்டாரென அசல் ‘இருவீட்டார்’ திருமணமாக  போன திங்களன்றுநடந்தேறியதாம் சங்கரியின் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்ற திருமணங்கள் கொரோனா காலங்களிலும் நடந்தேறுகின்றன. –… (READ MORE)

Uncategorized

மதுவில்லாத் தமிழகம்

மதுக்கடைகள் இல்லாமலிருந்தால் மடிந்துவிடுவார்கள் குடிமகன்கள், போதையில்லாமல் போனால் போதைக்குப் பழகியவர் பொலபொலவென விழுவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். போதை தேடி ஜசோப்ரோபைல் ஆல்ஸகாலை, மருந்தக ஸபிரிட்டை குடிக்க முயன்று செத்தவர்கள் வெறும் பத்துப் பேருக்குக் கீழேதான் மொத்தத் தமுழ்நாட்டிலும். மீதி குடிமகன்கள் என்னவானார்கள்? முப்பத்தேழு நாட்களாய் குடியின்றிதானே முழுதாய் வாழ்கிறார்கள். அப்படியானால்… எந்த மருத்துவமும், எந்த ஆலோசனையும்… (READ MORE)

Uncategorized

‘மூச்சு’ – மலர்ச்சி ஆன்லைன் கோர்ஸ்

சென்ற வளர்ச்சிப் பாதையில் ‘ஆன் லைன் கோர்ஸ்ஸஸ்’ வருகிறது என்று சொன்னது, இனி எதிர்காலத்தில் செய்யலாம் என்ற பொருளில்தான். வகுப்பு முடிந்து அன்று இரவு உறங்க வெகுநேரம் ஆனது. நள்ளிரவிற்கு மேல் பாத்ரூம் போய்விட்டு திரும்ப படுக்கைக்கு வரும் போது சில வரிகள், சில எண்ணங்கள் அடுத்தடுத்த நிமிடங்களில், ‘மூச்சு’ ‘உயிர்காக்கும் மூச்சு’ ‘ஆன் லைன்… (READ MORE)

Paraman's Program

, , ,

3வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் அன்னதானம் தொடர்கிறது ஊரடங்கு என்பதால் மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாது என்பதால், வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் மக்களுக்கு தருவதற்கு அதற்குரிய ஆட்கள் மூலம் முன் அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாம் வீட்டடங்கலில் இருந்தாலும், நம்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

மூச்சு

🌸🌸 சன்னலை அடித்துத் திறந்து உள்ளே சாரலை ஊற்றும் பெருங்காற்றோடும் பெருமழையோடும் விடிகிறது இக்காலை. சாலிகிராமத்திலிருந்து சாந்திதேவியும், ராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து முத்துமாலையும் மழையை காணொளிப் பதிவு செய்து அனுப்பியிருந்தார்கள் அவரவர் மலர்ச்சி க்ரூப்புகளில்.… 🌸 கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற வளர்ச்சிப்பாதை நேரலையின் காணொளிப்பதிவை இதுவரை 1494 பேர் பார்த்திருக்கிறார்கள். நெடுநாளாய் உள்ளிருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்ததென்றும்,… (READ MORE)

Uncategorized

அரும்புகள் மொட்டுகள் மலர்ச்சி விருதுகள்

👏👏👏👏 மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ 🌸🌸 சிறப்பு விருது : 🌸 Learning : Making of Audio Spectrum utility for Malarchi Iraivanakkap Paadal 🌸 …….. பெயர் : சாத்விக் சதீஷ்மலர்ச்சி: அரும்புகள் பேட்ச் 1வகுப்பு: பதினொன்றாம் வகுப்புபள்ளி: ஆச்சார்யா பால சிக்‌ஷா மந்திர்,புதுச்சேரி …….. :… (READ MORE)

Arumbugal-Mottugal

அரும்புகள் மொட்டுகள் மலர்ச்சி விருதுகள்

👏👏👏👏 மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ 🌸🌸 சிறப்பு விருது : 🌸 Learning : Cooking of fried rice , Bitter guard – ladies finger pakoda, French fries 🌸 …….. பெயர் : R. ராகவி – R A மைத்ரேயிமலர்ச்சி: அரும்புகள் பேட்ச் 4வகுப்பு:… (READ MORE)

Arumbugal-Mottugal

அரும்புகள் மொட்டுகள் மலர்ச்சி விருதுகள்

👏👏👏👏 மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ 🌸🌸 சிறப்பு விருது : 🌸 Learning : Making of Dulgona Coffee 🌸 …….. பெயர் : மருந்தீஷ்வர் VPமலர்ச்சி: அரும்புகள் பேட்ச் 2வகுப்பு: எட்டாம் வகுப்புபள்ளி: மகரிஷி வித்யா மந்திர், சேத்பட்,சென்னை …….. : மலர்ச்சி DulgonaCoffee QuarantinePeriodLearning MalarchiAwards MalarchiYoungAdults… (READ MORE)

Arumbugal-Mottugal

‘இப்படியொரு திரைப்படத்தை தமிழில் எடுத்தால் திரையிடவிடுவோமா?!’ ‘ட்ரான்ஸ்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

:அயல் சினிமா: மலையாளம் – தமிழ்: ‘துன்பம் தாளாமல் நான் தற்கொலை செய்துகொள்ள போகையில் என்னை நோக்கி குரல் வந்தது… ‘ஜோஷுவா!’ நான் எழுந்து பார்த்தேன்!’ ‘அழைத்தது யாரானும்?’ ‘ஜீசஸ்.. இறைவன் இயேசு நாதர்!’ ‘இயேசுவா!’ ‘ஆமாம் இயேசுவேதான்! ‘ஜோஷுவா, இந்த வாழ்வு நான் கொடுத்தது, அதை முடித்துக்கொள்ள உனக்கு உரிமையில்லை. நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன்! எழுந்து… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , ,

மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’

👏👏👏👏 மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ 🌸🌸 சிறப்பு விருது : 🌸 Learning : Cooking – Appam and coconut milk 🌸 …….. பெயர் : பிரஷாந்த் Rமலர்ச்சி: மொட்டுகள் பேட்ச் 1வகுப்பு: பன்னிரெண்டாம் வகுப்புபள்ளி: மகரிஷி இண்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் ஸ்கூல், சாந்தவேலூர்காஞ்சிபுரம் …….. : மலர்ச்சி AppamCoconutmilk… (READ MORE)

Arumbugal-Mottugal

இன்றைய தலையங்கத்திற்கு ஒரு கொட்டு, உரிமையோடு!:

  இன்றைய தலையங்கத்திற்கு ஒரு கொட்டு, உரிமையோடு!:   இன்று வெளியான இந்து தமிழ் திசையில் ‘செயல்பாட்டின் வழி நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம்’ என்ற தலைப்பிலான தலையங்கம் நன்று. மருத்துவர்களும், அதிகாரிகளும், களப்பணியாளர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றி வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. வணங்கத்தக்கவர்கள் அவர்கள். தலையங்கத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு சங்கதி நெருடலாக இருக்கிறது…. (READ MORE)

பொரி கடலை

ஊரடங்கு காலத்திலும்

இந்த ஊரடங்கு – வீட்டடங்கு காலத்தில் மட்டும் நடந்த மலர்ச்சி மாணவர்களுக்கான மூன்று வளர்ச்சிப்பாதைகள் நேரலை, கார்காத்தார் பிஸினஸ் ஃபோரம், கோவை – ஈரோடு – கரூர் டெக்ஸ்டைல்ஸ் அசோஸியேஷன் ஆகியவற்றிற்கான ‘மலர்ச்சி உரை’ நேரலை என இது வரை நேரடியாக 6,000 பேர் பார்த்திருக்கிறார்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.  ‘நிமிர்ந்து உட்காருகிறோம்! தெளிவாக புரிந்து கொண்டோம்,… (READ MORE)

Uncategorized

wp-15870241563715704037430440531192.jpg

ஜெயகாந்தனின் – ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ – நூல் மீள் வாசிப்பு : பரமன் பச்சைமுத்து

வேட்டியை இடுப்பில் கட்டாமல்  போர்வையைப் போல் மேலுக்குப் போர்த்திக் கொண்டு கோவணத்துடன் திரியும் பல மனிதர்களையும் சில தெருக்களையும் கொண்டபேருந்து கூட நுழையாத ஒரு படு சிற்றூருக்கு நடை உடை வண்ணம் வடிவம் வாழ்க்கை முறை என அந்த ஊருக்கு எதிலுமே சம்பந்தமுமில்லாத வகை மனிதனொருவன் வருகிறான்.   அவன், ஒரு மணியக்காரர் வீடு, போஸ்ட்(ஆஃபீஸ்) ஐயர்… (READ MORE)

Books Review

, , , , , , ,

ஜெயகாந்தன்

அடுத்தது என்ன என்ற விறுவிறுப்பு, கதை சொல்லலில் கீழே வைக்க முடியா வண்ணம் சுவாராசியம், ‘ப்பா!’ என்று வியக்க வைக்கும் செறிவுள்ள வாழ்வியல் கருத்துக்கள், ‘பொளிச்’ என்று அறையும் நிதர்சனங்கள், ‘உணர்க்கை’ போன்ற வித்தியாச சொல்லாடல்கள், எல்லா இலக்கணங்களையும் உடைக்கும் கதாபாத்திரங்கள்… ஒவ்வொரு எழுத்தாளரும் இவற்றில் சிலவற்றைக் கொண்டிருப்பார்கள். ஒரே எழுத்தாளர் ஒரு நூலில் இத்தனையையும்… (READ MORE)

Uncategorized

தட்டைப் பயிரு

மதியத்திற்கு மனைவி செய்த தட்டைப்பயிறு குழம்பின்தட்டைப்பயிரை மட்டும் அள்ளிபோட்டு சூடு பண்ணிசாயந்திரம் தின்போமே! ஊட்டத்துக்கு ஊட்டமும் ஆச்சுவூட்டுக்கு உருப்படியாவும் ஆச்சு! #குவாரண்டைன்-அட்ராசிட்டீஸ் பரமன் பச்சைமுத்து 12.04.2020

Uncategorized

மரித்து எழுந்த மரியாவின் மகனே

மரித்து எழுந்தமரியாவின் மகனே ஞாயிறன்று உதித்தஉன் வெளிச்சம்ஞாலத்திற்கும் பரவட்டும் முடிந்தது என்று வருந்தியோர்முன்னே முகங்காட்டி உயிர்த்தெழுந்து நின்ற அன்னே எந்நிலையிலும்  எழுதல் சாத்தியம்எம்முள் நம்பிக்கை தோத்திரம் முடங்கிக் கிடக்கும் இக்காலத்தையும்முறுவலோடு கடக்கிறோம் புத்துயிரோடு எழப்போகும் நாட்களையெண்ணிபுவனத்தினரோடு கொண்டாட! – பரமன் பச்சைமுத்து12.04.2020

Religion

,

தினமலரில் வெளியான என் கட்டுரை

இன்று வெளியான தினமலரில் பதிப்பாகியுள்ளது என் கட்டுரை. இணைப்பு இதழ்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மெயின் எடிஷனிலேயே ‘வாரமலர்’ பகுதியில் வெளியாகியிருக்கிறதாம். தினமலர் திருச்சி – மயிலாடுதுறை – நாகை – தஞ்சை – வேலூர் – திருவண்ணாமலை – ஈரோடு – புதுக்கோட்டை பதிப்புகளில் வெளிவந்துள்ளது. வேலூர் பதிப்பிலிருந்து படமெடுத்து அனுப்பிய நமது மாணவர் குணசேகரனுக்கு… (READ MORE)

Uncategorized

dheepan

‘தீபன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அயல் சினிமா: ஃபிரெஞ்ச் – தமிழ் ‘தீபன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து இலங்கையில் வடக்கு மாகாணத்தில், தரைக்கு மேலே சில அடிகள் இடைவெளி உயரத்தில் சொற்ப கழிகளால் அமைக்கப்பட்டுள்ள மேடையில் முகம் சிதைந்து சிலர், காயங்களுடன் சிலர், குழந்தைகள் பெரியவர் என வரிசையாக கிடத்தப்பட்டுள்ள உடல்கள் மீது பனை மட்டைகள் வைக்கப்படுகின்றன, இயலாமை, இழப்பு என சொல்லவொண்ணா… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

சோப்பு நுரை

கை கழுவும் போது சோப்பு நுரை நீர்க்குழாயின் முனையில் பட்டுவிட்டால் கவனமாக சோப்பு நுரை போகும் வரை அதையும் கழுவி விடும் வழக்கம் கொண்டவன், இப்போதெல்லாம் சோப்பு நுரையை நீர்க்குழாயின் திருகு நாதாங்கி, கதவின் கைப்படி என எல்லாவற்றிலும் படட்டுமென  தடவி விடுகிறேன் சிரத்தையாக. கொரோனா காலம்! – பரமன் பச்சைமுத்துசென்னை09.04.2020 Facebook.com/ParamanPage

Uncategorized

ஒரு வார்த்தையில் அடைத்து விட முடிவதா உணர்வு!

‘டைட்டானிக் பாபு ஆர் ஏ புரம் நியூஸ்பேப்பர்’ செல்லிடப்பேசியின் தொடுதிரையில் ‘காண்டாக்ட்ஸ்’ஸில் ‘ஆர்ஏ புரம் நியூஸ்பேப்பர்’ என்று டைப் செய்து தேடுகிறேன். புதிதாக ஒரு மனிதரின் எண்ணை  செல்லிடப்பேசியில் சேர்க்கும்போது, தேடும்போது எளிதாக இருக்கும் என்பதற்காக அவருக்கு ஒரு அடையாளத்தையும் சேர்த்து பதிவது நம் இயல்புதானே. ‘உமா ப்ரியாஸ் ஃப்ரண்ட்’ ‘ராஜேந்திரன் எலக்ட்ரிகல்ஸ்’ ‘வாணிஸ்ரீ கெமிஸ்ட்ரி… (READ MORE)

Self Help

என் சினிமா விமர்சனத்தை தினமலர் வெளியிட்டுள்ளது

‘அயலூர் சினிமா’ என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள ‘ஐயப்பனும் கோஷியும்’ திரைவிமர்சனத்தை, தினமலர் இன்று வெளியிட்டுள்ளது. தினமலர் திருச்சி – தஞ்சை – நாகை – வேலூர் – திருவண்ணாமலை – ஈரோடு – புதுக்கோட்டை – நாகை பதிப்புகளில் இது வெளியாகி உள்ளது. வாழ்க! – பரமன் பச்சைமுத்து

Uncategorized

wp-15860251707551544230341540481640.jpg

‘நாலாவது சார்’ – தி ஜானகிராமன்

‘பொட்டமாரி’ ‘ஆத்தா சார்’ ‘அக்கா சார்’ என்று கேலி பேசும் தன் பள்ளியின் நாலாவது சாரை நாயகனாகப் பார்க்கிறான் சின்னஞ்சிறு முத்தப்பன். நாலாவது சாரின் கை விரல்கள் பட்டால் தென்னை ஓலைகளில் பொம்மைகளில் கிளி உருவாகும், பாம்பு நாக்கை நீட்டிக் கொண்டு கண்ணை உருட்டிக் கொண்டு எழும். ‘கொண்ணுப்புடுவேன் கொண்ணு’ என்றே மூணாவது சாரும் இரண்டாவது… (READ MORE)

பொரி கடலை

,

தகப்பன் மனசு

‘அப்பா, டெல் மீ ஈஃப் திஸ் ஈஸ் டூ லைட். ஈஃப் த டேஸ்ட் ஈஸ் நாட் ஓக்கே, கிவ் இட் டு மீ, ஐ வில் ட்ரிங்க்’ ‘அது எப்படி இருந்தாலும் நான் குடிப்பேன் செல்லமே, நீ போட்டங்கறதுக்காகவே!’ மகள்கள் என்றதும் ஊற்று பெருக்கிறது தகப்பன்களுக்கு ##குவாரன்டைன்-நேர-களிப்புகள் பரமன் பச்சைமுத்து 04.04.2020

Uncategorized

டேய் வானரங்களா…

டேய் வானரங்களா…   அன்பழகன் சார் கால்களை மடித்து சம்மணமிட்டு உட்கார்ந்து ‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்…’ என்று தொடங்கினால், ஊரே அடங்கிக் கேட்கும்.  அப்படித்தான் ஒவ்வொரு நாளும் தொடங்குவார் அவர். அதுவும் ‘அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே!’ என்று அந்தக் குரலில் அவர் முடிக்கும்போது ஏழாவது படிக்கும் சிறுவனான நான் சொக்கிக் போயிருப்பேன். மார்கழி… (READ MORE)

பொரி கடலை

புதிய வானம் காட்டும்

தினமலர் ஆசிரியர் குழுவிலிருந்து அழைப்பு. …. ‘பரமன் சார்.. கொரோனா பிரச்சினைல, ஏஜென்ட்ஸ் சப்ளிமெண்ட் பேப்பரே வேணாங்கறாங்க. ஞாயிறு மலர்லேருந்து எல்லாத்தையும் சுருக்கி ரெண்டு பக்கமாக்கி மெயின் எடிஷன்லே பிரிண்ட் பண்ணிடறோம்.  நீங்க நல்லா எழுதுவீங்க. இப்ப நிலைமைல பெரிய கட்டுரை வேண்டாம், போட முடியாது. சின்னதா வேணும். டைனி ஆர்ட்டிக்கிள்.  கொரோனா பத்தி் வேணவே… (READ MORE)

Uncategorized

இறை நம்பிக்கையென்பது…

இறை நம்பிக்கை என்பதுஇதைக் கொடு அதைக் கொடு என்பதல்ல, கொடுத்ததை முதலில் ஏற்றுக் கொள்வது. இறைவன் மிகப் பெரியவன்! – பரமன் பச்சைமுத்து #Faith #Gratefulness #QuarantineTime #Malarchi #StayPositive #BeInTouchWithPositivity

Spirituality

விழிப்புணர்வோடு வெல்லுவோம் கொரோனாவை! :
பரமன் பச்சைமுத்து

ஹாங்காங்கில் பல ஆண்டுகள் வசித்து விட்டு இப்போது சென்னை திருவான்மியூரில்  வசிக்கும் தொழில் முனைவரான நண்பர் முத்து ரகுபதி, இன்றும் முகத்தைத் துடைக்க புறங்கையையே பயன்படுத்துகிறார்.  உள்ளங்கையை முகத்துக் கொண்டு செல்வதேயில்லை. அனிச்சை செயலாகவே அடிக்கடி கையைக் கழுவுகிறாராம்.  சார்ஸ் வைரஸ் தொற்று வந்த போது ஹாங்காங்கே எதிர்த்துப் போராடிய போது கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

விவசாயப் பொருட்களுக்கு தடை விலக்கல் – நல்ல செய்தி!

இன்று விவசாயப் பொருட்களுக்கு தடை விலக்கல் செய்திருக்கிறது அரசு. மிக மிக நல்ல செய்தி.  தர்ப்பூசணிப் பழங்களை, வெள்ளரிக்காய்களை இனி மனம் நொந்து வீதியில் கொட்ட மாட்டார்கள் விவசாயிகள். தவிர, தோட்டங்களில் விளைவது மக்களுக்குத் தொடர்ந்து சென்றால்தான் விவசாய உற்பத்தியாளர்கள் நுகரும் பொது மக்கள் என இருபுறங்களிலும் தொடர்ந்த சீரான இயக்கம் இருக்கும். பொருட்களும் கிடைக்கும்… (READ MORE)

Uncategorized

கப சுரக் குடிநீர் – கொரோனாவிற்கு

…… குத்தாலிங்கம்: பரமன், ஆக்னஸிடமிருந்து கேள்வி வந்திருக்கிறது. பதில் வேண்டும். Agnes Batch 47: I have got one (Kaba Sura Kudi neer). Please guide how to make the medicinal drink.….. பரமன்: கப சுர குடிநீர் என்பது சித்த மருத்துவத்தில் தரப்படும் முக்கிய மருந்து (கஷாயம்). நில வேம்பு… (READ MORE)

Uncategorized

, , ,

‘ஐயப்பனும் கோஷியும்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அயலூர் சினிமா:   ‘ஐயப்பனும் கோஷியும்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து   இரு மருங்கிலும் அடர் காடுகளைக் கொண்ட நெடிய மலைப்பாதையின் இரவு இருட்டை தன் முகப்பு விளக்கின் வெளிச்சம் கொண்டு ஓரளவிற்குக் கிழித்துக் கொண்டு விரைகிறது நல்ல வசதிகள் கொண்ட ஒரு கார். ‘குமரா, தூக்கம் வந்தா சொல்லு. நான்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

TCM

இரண்டும் கைகோர்த்து இணைந்து செயல்பட வேண்டும் இப்போது – பரமன் பச்சைமுத்து

  பீஜிங்கிலிருந்து சாங் யாங்ஃபேய், வுஹானிலிருந்து வு யோங் ([email protected]) ஆகிய பத்திரிக்கையாளர்கள் எழுதி சீன தினசரியான ‘சைனா டெய்லி’யில் வெளியான ஒரு கட்டுரை நம் கவனத்தைக் கவருகிறது. ……. “   ….கொரோனா புயலின் மையப் பகுதியான வுஹானில் உள்ள லேய்ஷென்ஷான் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோய்த் தாக்குதலிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 16 பேரில் 6… (READ MORE)

Politics, பொரி கடலை

, , , , ,

அடுத்தவரின் நிலையை புரிந்து ஒத்துழைத்து உயர வேண்டிய நேரமிது – பரமன் பச்சைமுத்து

சீனா கையூன்றி எழுந்து இப்போது இயங்கத்தொடங்கிவிட்ட வேளையில் கிட்டத்தட்ட மொத்த உலகமும் முடங்கிக் கிடக்கிறது. இந்திய நாடு மொத்தமாய் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. மருத்துவர்களும், காவல்துறை மற்றும் அரசுப் பணியாளர்களும் வெளியில் தங்களைத் தந்து மற்றவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று வாரங்கள் வீட்டுக்குள் இருங்கள், வீட்டு வாசலில் லக்ஷ்மணன் ரேகை இருப்பதாகக் கருதி அதைத் தாண்டி… (READ MORE)

Politics, Self Help

மயிலாடுதுறை – மலர்ச்சி – பிஸினஸ் முதல்வன்

மலர்ச்சி வணக்கம். சுகாதாரத்துறையும் அரசும் எடுத்து வரும் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நடந்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் காத்திட வேண்டிய தருணமிது என்பதால், *மயிலாடுதுறையில் மார்ச் 29 அன்று நடைபெற இருந்த ‘பிசினஸ் முதல்வன்’ மலர்ச்சி பயிலரங்க நிகழ்ச்சி, 95% பாஸ்கள் விற்று விட்ட போதிலும், தேதி குறிப்பிடப்படாமல்… (READ MORE)

Paraman's Program

, , , , , , , ,

இந்தியா இரண்டு நிமிட கைதட்டல் – 22 மார்ச்

ஐந்தாக மூன்று நிமிடம் இருக்கையிலேயே கைதட்டத் தொடங்கிவிட்டனர் இங்கு பக்கத்து குடியிருப்பில். கைதட்டுங்கடான்னா, மாட்டுப் பொங்கல் கொண்டாடற மாதிரி, தட்டு கரண்டி வச்சி தட்றானுவோ இங்க சிட்டியில! நம்ம பழக்கத்துல வாய் உடனே ‘பொங்கலோ பொங்கல்… மாட்டுப் பொங கள்!’ன்னு கத்துது! 😀👏👏

Uncategorized

பசிப்பதும் பசி போக்குவதும் நன்று

சூர்ய நமஸ்காரம் போன்ற வயிற்றைப் பிழிந்து நிமிர்த்தும் சில ஆசனங்களை இரண்டு சுற்று செய்து முடிக்கும் போதே வயிறு கபகபவென்று பசிக்கும். வெறும் வயிற்றில் ஒரே மூச்சில்ல்லாமல் நிதானமாக ஒரு சிறு செம்புத் தண்ணீரை உறிஞ்சும் பழக்கம் கொண்டவன் நான். ஹெல்த் பாஸ்கட் நிறுவனரும், மலர்ச்சி மாணவருமான திருமதி சுதா கதிரவன் ‘வெறும் வயிற்றில் இதைக்… (READ MORE)

பொரி கடலை

நல்ல படங்கள் சொல்லுங்களேன்.

கேள்வி: கொரோனோ வைரஸ் பிரச்சினையால் வீட்டில் அடைந்து கிடைக்கிறோம். நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைமில் பார்க்க நல்ல படங்கள் சொல்லுங்களேன். இது வரை வளர்ச்சியில் வி-டாக்கீஸில் சொல்லப்பட்டப் படங்களை பார்த்துவிட்டோம். பரமன்: சமீபத்தில் நான் பார்த்த நல்ல படங்கள் சிலவற்றை சொல்கிறேன். (இந்தப் படங்களின் பட்டியலை இப்போது நான் தந்தாலும், இந்த இதழ் அச்சாகி வெளிவரும் போது மார்ச் 31 ஆகியிருக்கும்…. (READ MORE)

Uncategorized

என் குரங்காசனக் காரணம்…

வள்ளியம்மைப் பாட்டி நல்ல உயரமும் திடகாத்திரமான உடலமைப்பும் கொண்டவர். உழவு தவிர நெல் விதை விதைத்தல்,  நடவு, களை பறித்தல், அறுவடை, உளுந்து – பயிறு விதைத்தல், உளுத்தஞ்செடி பிடுங்குதல் என எல்லா வேலைகளிலும் ஆட்களோடு சேர்ந்து தானும் இறங்கிச் செய்பவர். அறுவடை முடிந்த கோடை கால வயல்களில் மாடுகளைக் கூட்டிப் போய் மேய விடுபவர்…. (READ MORE)

Manakkudi Manithargal, Spirituality, பொரி கடலை

, , , , , , , , ,

மருத்துவமனையில் புத்தகம்

காலையில் மருத்துவமனை வார்டின் உள்ளே நுழைகிறேன். நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல் நலம் தேறி வரும் அம்மா மருத்துவமனை கவுன் அணிந்து பெட்டில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருக்கிறார்.  நின்று கவனிக்கிறேன். சித்தி சொல்கிறார், ‘நேத்தி சித்தப்பா வச்சுட்டுப் போச்சி இல்ல, அந்த புக்!’ என்ன புத்தகம் என்று பார்க்கிறேன்…. (READ MORE)

Uncategorized

ரஜினி சொல்லியிருக்கலாம்

ரஜினி நிறைய சிந்தித்திருக்கிறார், வியூகம் செய்தார், கள ஆய்வு செய்தார் என்பதெல்லாம் சரி.  தனது திட்டங்களை, ஆசைகளை சொன்னதெல்லாம் நன்று. ஆனால், வரவில்லை என்றால் ‘வர மாட்டேன்!’ என்று தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். நேரடியாக ‘இதான் மேட்டரு!’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்க வேண்டும். ‘மக்கள்கிட்ட எழுச்சி வரணும், இல்லன்னா இது சாத்தியம் இல்ல!’ என்பதெல்லாம் சரியில்லை…. (READ MORE)

Uncategorized

,

நாளை ஊடகங்களை அழைத்திருக்கிறார் ரஜினி.

இன்றைய தினமணி முதல் பக்கத்தில் முக்கிய அரைபக்கத்திற்கு ரஜினி பற்றிய செய்திக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.  எம்ஜிஆருக்கு அன்று கட்சி தொடங்க ஏற்பட்ட தர்மசங்கடங்களையும் இன்று ரஜினிக்கு உள்ள தர்மசங்கடங்களையும் ஒப்பிட்டு விரிகிறது அந்தக் கட்டுரை. ஊடகங்கள் பரபரக்கின்றன. ரஜினி கட்சி தொடங்கினால் பாமாக, ஜி கே வாசன் ஆகியோர் அவர் பக்கம் இறங்குவர் என்பதற்காகவே, ஜிகே… (READ MORE)

Politics

, ,

wp-15836895900933147889544007306507.jpg

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒரு நாயகன், அவனுக்கு ஒரு நண்பன், அவன் மனதை ஈர்க்கும் ஒரு நாயகி, அவளுக்கு ஓர் தோழி. ஆண்கள் இரண்டு பேருக்கும் இந்த வேலை, பெண்களுக்கு அந்த வேலை என்று தொடங்கும் ஒரு திரைப்படத்தில், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவைப் பார்த்துப் பழகிய ரசிகர் ஒருவரால், அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என்ன காட்சிகள் வருமென ஓரளவிற்கு… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , , , , ,

திருமணம் என்னும் நிக்கா

‘பரமன் சார் உங்கள பள்ளிவாசல்ல பாத்ததில அவ்ளோ சந்தோஷம் எங்களுக்கு!’ ‘நீங்க ?’ ‘நான் அப்ளைடு சைக்காலஜி டீச்சர். உங்கள் வீடியோக்களை பாத்திருக்கேன்’… புரசை கார்டன் ஆயிஷா இல்லத்து ‘வலிமா நிக்கா’விற்காக அழைப்பின் பேரில் புரசைவாக்கம் பள்ளிவாசல் சென்றிருந்தேன்.  பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் உறவினர்களும் ஊர்ப்பெரியோர்களும் அங்கீகரிக்கும் மத குருமார்களும் மௌலானக்களும் நிரம்பி வழிந்த… (READ MORE)

Uncategorized

2வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

அமரர்கீழமணக்குடி மு. பச்சைமுத்து அவர்களின் நினைவாகமு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான இன்று 03. 03. 2020ல், சென்னை வடபழனியில் சிவன் கோவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி! பரமன் பச்சைமுத்து 05.03.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

wp-15830787348501990811816643332254.jpg

பெரிய பழுவேட்டரையர் சரத்குமாருடன்…

‘பொன்னியின் செல்வனுக்காக காத்திருக்கிறோம்! சுந்தர சோழனா உங்களை பாக்க!’ கைகளை பற்றிய படியே பதில் சொன்னார், ‘சுந்தர சோழரா பண்றது அமிதாப் பச்சன். நான் பெரிய பழுவேட்டரையர்!’ ‘ஓ… ஆகா, பெரிய பழுவேட்டரையரா?! இன்னும் சிறப்பான வீரமான பாத்திரமாச்சே. நந்தினியின் கணவர் வேறு!’ ‘ஆமா…ம், அதுக்காகத்தான் இவ்ளோ உடற்பயிற்சி!’ என் ஒரு கை அவரது வலக்கையைப்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , ,

மலையாளக் கரையிலிருந்து பறம்புநில பாரியின் கதை

நிலம் கொள்ள பொன் கொள்ள புகழ் பெருக்க படை கொண்டு இயற்கையை அழித்தவர்கள் தமிழ் மூவேந்தர்கள் என்று சு.வெங்கடேசன் எழுதிய போது சோழக்காதலர்கள் அதிர்ந்து போயினர். ஆயினும் பறம்பின் பாரியை தோழமையின் கபிலரை குறிஞ்சி நில இயற்கையில் அவர் நனைத்துக் கொடுத்த விதம் நெஞ்சில் இறங்கி நின்றது (இன்னும் நிற்கிறது!). ராபர்ட் டௌனி ஜூனியரின் உருவத்தில்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , ,

பூமி சுழலவே செய்யும். நாள்கள் கழியவே செய்யும்.

உள்ளுணர்வு அலாரம் எழுப்ப துயிலெழுபவனுக்கு செல்லிடப்பேசியில் அடிக்கும் வெளி அலாரம் இரண்டாம் கட்ட ஏற்பாடே.  செல்லிடப்பேசி அலறியபோதும் கண் திறக்க இயலவில்லை இன்று. உடம்பு கொதிக்கிறது. ‘இன்னும் சில நிமிடங்கள் கொடேன்!’ என்று கண்களும் உடலும் கெஞ்சுகின்றன.  ‘ஐயப்பா ஸ்கூல்ல ப்ரோக்ராம் இருக்கு, கோட் அயர்ன் பண்ணனும். உடற்பயிற்சி, ஓஎம்ஆர் ட்ராஃபிக்…’ என அறிவு முணுமுணுத்தது…. (READ MORE)

Uncategorized

வியக்கிறேன்

‘அப்பா… அங்க பாரு, ஃப்ளைட் நிக்குது!’ விமான நிலைய வாயிலிலிருந்து ஓடுதளத்திற்கு பேருந்தில் வரும் போது, கண்ணாடியின் வழியே தூரத்தில் நிற்கும் விமானமொன்றைப் பார்த்து பரவசப்பட்டு கூச்சலிடுகிறான் சிறுவன். மொத்த பேருந்தும் புன்னகைக்கிறது. ‘அப்பா… அங்க பாரு கபாலி ஃப்ளைட்!’ ஸ்பைஸ்ஜெட் விமானமொன்றைப் பார்த்துக் கூவுகிறான். ‘அப்பா, நம்ம போற ட்ரூஜெட் எப்பப்பா வரும்?’ பேருந்து… (READ MORE)

Uncategorized

கங்கை கொண்ட சோழபுரம்

வணக்கம் பாலா. உண்மையாகவும் இருக்கலாம், பின்னே வந்தவர் தன் பார்வையில் பட்டதை ‘இதுதான் நிஜம்!’ என்று பரப்பியுமிருக்கலாம். பெருவுடையார் கோவில் ராஜராஜனின் ஆட்சியின் 25ஆம் ஆண்டின் 275ஆம் நாளில் கட்டி முடிக்கப்பட்டது. ராஜேந்திரனுக்கு அப்போது இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. சோழப்படை தலைவனாகவே ராஜேந்திரன் இருந்தான். இருவரும் ஒன்றாக 25 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். கி.பி. 1014ல்… (READ MORE)

Uncategorized

wp-15815138552624968990881890515864.jpg

ஏவிசிசி பாலிடெக்னிக் – 91 பேட்ச் – அப்டேட்:

மலர்ச்சி மாணவரும் புதுச்சேரியின் பிரபல தொழில்முனைவோருமான முத்துக்குமரனின் ‘சிவா பிரிண்ட்ஸ்’ புதிய அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காக பயணித்துக் கொண்டிருந்த போதே, நப்பின்னையிடமிருந்து அழைப்பு, அவரும் ஜெகதீஸ்வரியும் விழாவிற்கு வருவதாக. ‘யாரோ ஒருவரின் அலுவலகத்திறப்பு விழா!’ ‘நான் அழைக்கப்படவில்லை, எதற்குப் போக வேண்டும்?’ என்ற திசையில் சிந்திக்காமல், ‘என் க்ளாஸ்மேட்டப் பாக்கப் போறேன்!’ என்ற ஒரே முடிவில்… (READ MORE)

AVCCP

ஆ….!

‘வயின்ஷாங் ஹா!’ ‘தம்பீ, என்னாட சொல்றே!’ ‘அம்மா… இந்த ஊர் பாஷையில மாலை வணக்கம்ன்னு அர்த்தம்மா. ஃபோன எடுத்தாலே ‘வயின்ஷாங் ஹா, வைன்ஷாங் ஹா’ன்னு சொல்லி சொல்லி பழகி, உன்கிட்டயும் அப்படியே பேச்சுல வந்துருச்சிம்மா!’ ‘பொண்ணு பாத்திட்டுருக்கோம் தம்பீ. கும்பகோணம் போற வழியில நாச்சியார் கோயிலுக்கு முன்னால உள்ள போனா இருக்காம் ஒரு ஊரு. அங்கேருந்து… (READ MORE)

ஆ...!

, ,

பெரு நகர காவல் துறைக்கு மலர்ச்சி வணக்கம்!

நகரின் உள்ளே நுழையும் வாகனங்களின் பதிவு எண்ணைப் படமெடுக்குமளவிற்கும்,விதி மீறல் வாகனங்களைக் கண்டறியும் வகையிலும் துல்லியமாகப் படமெடுக்கும் நவீன கேமராக்களை நந்தனம் சிக்னல் போன்ற இடங்களில் நிறுவி கலக்குகிறது பெருநகர காவல் துறை. விதிகளை மீறும் வாகனங்களை தானாகவே படமெடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வசதிகள் கொண்டவையாம் இந்த கேமராக்கள்.  சபாஷ்! இது போன்ற மிகத்… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-15811451877651185453074450219831.jpg

இளநீர்… இளநீர்!

இலங்கையின் கொழும்பு நகரில் கிடைக்கும் இளநீர், சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கிடைக்கும் மலேசியா இளநீர், தானே புயலுக்கு முன் கிடைத்த புதுச்சேரி இளநீர்,  தமிழகத்தின் பிற ஊர்களுக்கு அனுப்பப்பட்டு சில தினங்கள் கழித்துப் பருகப்படும் பொள்ளாச்சி இளநீர்,  பறித்த அன்றே குடிக்கும் போது ‘சுருக்’ என்று இருக்கும் பொள்ளாச்சி இளநீர் என ஒவ்வொரு இளநீரும் ஒவ்வொரு… (READ MORE)

பொரி கடலை

, , ,

கஃபே உடுப்பி ருச்சி

ஓர் உணவகத்தின் உள்ளே நிகழும் சிறு சிறு வெளிப்பாடுகளே போதுமானதாக இருக்கிறது, நம்மை கண்டு கொள்ள. இடப்பறம்: ‘மாவு இப்பத்தான் அரைக்கறாங்களா?’ சீருடையணிந்த பணியாளர் வருவதைக் கண்டு அவரிடம், ‘பூரி சுட்டுக் குடுக்கனும். நேரம் ஆவும் சரி. இட்லிக்கு என்னா? ஒரு இட்லி ஏன் இவ்ளோ நேரம்! இத்தனைப் பேர் வேலை பாக்கறீங்க, ஒரு இட்லிக்கு… (READ MORE)

Uncategorized

மு. பச்சைமுத்து அறக்கட்டளை – முதல் அன்னதானம்

அமரர் கீழமணக்குடி மு. பச்சைமுத்து  அவர்களின் நினைவாகமு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான 05.02.2020 அன்று,  சென்னை வடபழனியில் சிவன் கோவில் தெருவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி! முதல் அன்னதானம் 05.02.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

காலத்திற்கேற்ப…

பெரியாரின் கொள்கையிலிருந்து பிரிந்து அரசியல் இயக்கமாக உருவான அன்றிலிருந்து திமுகவின் வரலாற்றிலேயே இது நடந்ததில்லை என்கிறார்கள். இறைமறுப்பு, பகுத்தறிவு என்பதே கொள்கையாகக் கொண்டதால் இதுவரை நடந்த 9 மாநாடுகளிலும் கொடியேற்றித் தொடங்குவதே தொடக்கமாக இருந்தது. இப்போது திருச்சியில் நடந்த 10வது மாநாடு இதுவரை எப்போதும் இல்லாத முறையில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு மங்கள இசை ஒலிக்கப்பட்டு… (READ MORE)

Uncategorized

wp-15801816657922380032534699239519.jpg

காகங்களின் மொழி

‘கா… கா…. கா…. கா….’ ‘அத்தை ஏன் இப்படி கத்துது அது? சாப்பாடு வச்சாச்சா?’ ‘தோ வைக்கறேன்!’ – அத்தை ‘கா… க்க்கா…’ ‘யேய்… சாதம் வச்சாச்சில்ல, நீ சாப்டேன். எல்லாரையும் கத்திக் கூப்பிடறியா!’ ‘ஏங்க நான் கிளம்பறேன்!’ மனைவி ‘க்கா… க்ரகா…கா’ ‘சோறு வைக்கலன்னு கத்தனே. இப்பதான் சோறு வச்சாச்சே, நீ சாப்டேன். ஏன்… (READ MORE)

Uncategorized

கை கொடுக்க வேண்டும் நாம்…

‘பரமன்… என் காலேஜ்மேட் எல்ஸா லீனா பத்து மாடி கட்டடத்திலிருந்து குதிச்சி தற்கொலை பண்ணிகிட்டாளாம். இப்பதான் நியூஸ்ல பாத்தேன். ஃபீலிங் பேட். டிப்ரஷன்ல இருந்தா, ட்ரீட்மெண்ட்ல இருந்தா, கணவனோட இல்ல, ஒரு குழந்தை வேற இருக்கு!  மலர்ச்சி அவளுக்குக் கெடைச்சிருந்தா, வாழ்க்கையே வேறய இருந்திருக்கும், எழுந்து நின்னு நிறைய செஞ்சிருப்பா!’ மலரவள் ஒருவரிடமிருந்து சற்று முன்… (READ MORE)

Uncategorized

மலர்ச்சி தினம் 2020

திருவண்ணாமலை, புதுச்சேரி, வேலூர், சேலம், பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை என பல இடங்களிலிருந்தும் வந்து குவிந்திருந்த மலரவர்களின் உண்மையான கொண்டாட்டங்களால் ‘மலர்ச்சி தினம் 2020’ மிகச் சிறப்பாக நடந்தேறியது ( 22.01.2020) ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே ஜனவரி 22ல் மலர்ச்சியைத் தொடங்கி வைத்த தந்தையை நினைத்து கொஞ்சம் நான் தடுமாற, நான் தடுமாறுவதை உணர்ந்து… (READ MORE)

Uncategorized

பாராயணத் திரட்டு – மு. பச்சைமுத்து அறக்கட்டளை

மு. பச்சைமுத்து அறக்கட்டளையின் அடுத்த செயல் வடிவம்: வில்லுப்பாட்டு, கதாகாலட்சபம், பக்தி இலக்கிய பேருரை, வழக்காடு மன்றம், கதைப்பாட்டு என்று பல வகைகளில் அப்பா சைவ மணம் பரப்பி பணி செய்திருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் அவர் தொடர்ந்து பயணித்தது செய்தது ‘தமிழ் முறைப்படி இறைவனை தொழும் பணி’யே. வீடு குடிபுகுதல், கோவில் குடமுழுக்கு, மணி விழா,… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

பெரும் நன்றி…

கலகலவென்று கதைத்துக் கொண்டு கஞ்சியின் கடைசி மிடறு குடித்தவர் அப்படியே உறைந்து சுய நினைவு இழந்தார் என்ற செய்தி கேட்டு ஊருக்குப் புறப்பட்டேன்.  புதுச்சேரியில் மருத்துவமனையில் வைத்து சில மணி நேரங்கள் போராடினோம். தந்தையின் அருகில் நின்று கதறுவதைத் தவிர இறைவனை வேண்டுவதைத் தவிர வேறெதுவும் இயலவில்லை அத்தருணங்களில்.  உடல் விட்டு உயிர் பிரிந்த அவ்வேளையில்… (READ MORE)

Uncategorized

அமாவாசை என்பது

‘அமாவாசை’ என்பது ஒரு வார்த்தை, மாதாமாதம் வரும் ஒரு நாள், நிலவு இல்லாத நாள்… தந்தையை இழக்கும் வரை நீத்தாரை நினைக்கிறேன். பரமன் பச்சைமுத்து சென்னை 24.01.2020 –

Uncategorized

wp-1579605832923815546854747414146.jpg

‘சித்திரம் பேசுகிறேன்…’ – பரமன் பச்சைமுத்து : மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ் புதிய நூல்

முன்னுரை ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா…’ இந்தச் சொற்றொடரைக் கேட்காமல் வளர்ந்த குழந்தைகளே இருக்காது போன தலைமுறை வரையில். தாத்தாக்களும் பாட்டிகளும் மாமாக்களும் அத்தைகளும் என கதைசொல்லிகளாலேயே கதைகள் சொல்லப்பட்டே கதைகளாலேயே வளர்க்கப்பட்டது நம் சமூகம். கதைகளாலே மனவளப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது நம் சமூகம். ‘ஒரு பாட்டி வடை சுட்டாங்க, ஒரு காக்கா பாத்துச்சாம்’, ‘ஒரு… (READ MORE)

Paraman's Book

, , , , , , , , , , , , , , , , , ,

wp-15793510869645133351545504007296.jpg

வீட்டுக்கு வந்த சாரைப் பாம்புக் குட்டி

பாம்புகள் என்றதும் என்ன தோணும் உங்களுக்கு? ‘வீட்டுக்குள்ள வந்துது, அடிச்சித் தூக்கிட்டோம்!’  நீண்ட கழியொன்றின் நுனியில் ஒரு பாம்புக் குட்டியை மாட்டித் தூக்கிக் கொண்டு வந்தார் எதிர் வீட்டு முருகதாஸ்.  ‘என்ன பாம்பு இது?’ ‘சாரை, குட்டி!’ தெருவில் தரையில் கிடத்தப்பட்டது பாம்பு. ‘செத்துப் போச்சி, தூக்கிப் போட வேண்டியதுதான்!’ ‘ஆமாம், செத்திடுச்சி!’ ‘திடீர்னு இப்படி… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , ,

wp-15789334671788644114339697143521.jpg

‘உறுதியோடு உயர்வோம்’ : பரமன் பச்சைமுத்து : ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

My 11th book ‘Uruthiyodu Uyarvom’ from Zero Degree Publishing ‘உறுதியோடு உயர்வோம்’ – பரமன் பச்சைமுத்து : ஜீரோ டிகிரி பப்ளிஷிங் #UruthiyoduUyarvom #ZeroDegree #ZeroDegreePublishing #AuthorParaman #ParamanPachaimuthu #Malarchi #Inspring #SelfHelp #SelfHelpBook #Growth #Motivational #MotivationalBook

Paraman's Book

, , , , , , , , ,

திருவண்ணாமலை மலர்ச்சி மாணவர்களுக்கு…

திருவண்ணாமலை மலர்ச்சி மாணவர்களுக்கு, மன்னிக்கவும். இன்று மாலை உங்களுக்கு வளர்ச்சிப்பாதை வகுப்பு எடுத்திருக்க வேண்டும். சிவாகமப்படி மரபு செய்யும் வழக்கம் கொண்ட குடும்பத்தில் சிவலோக பதவி அடைந்தவரை நல்லடக்கம் செய்து விட்டு அடுத்த நாள் சமாதி பூசை செய்து விட்டால், அடுத்த வேலைகளில் ஈடுபடலாம். தீட்டு என்பதெல்லாம் இல்லை. என் பாட்டி இறந்து சிவாகம முறைப்படி… (READ MORE)

Uncategorized

20170507_184158.jpg

தந்தையை இழந்த தனயனாக

வந்தால் செல்வர் என்பது வாழ்வின் பெரும் விதி, நிலையாமை விதியே வாழ்வின் நிலைத்த விதி என்பதையெல்லாம் அறிவு ஏற்றுக் கொள்கிறது. வீட்டின் ஒவ்வொரு இடமும், தோட்டத்தின் ஒவ்வொரு செடியும் மரமும் தந்தையை நினைவு படுத்துகின்றன, கையறு நிலையில் கண்ணீர் பெருக்கவே செய்கிறது. சென்னை – புதுவை – திருவண்ணாமலை – வேலூர் – மயிலாடுதுறை –… (READ MORE)

Uncategorized

, , , ,

IMG_20200105_215119_469.jpg

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில்…

ஒரு நாள் அல்ல, ஒவ்வொரு முறையும் வாழ்வின் வேறுவேறு அத்தியாயங்களில் என்னை நெகிழ வைக்கிறார் நடிகர் சூர்யா. அகரம் அறக்கட்டளையோடு கொஞ்சோண்டு தொடர்பு ( மாணவர்களுக்கு சில பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளேன்) உள்ளவன் என்பதால் ஓரளவு தெரியும், தனது சினிமா சங்கதிகளை கொஞ்சம் கூட உள்ளே கொண்டுவராமல் அறக்கட்டளையின் நிறுவனராகவே இருப்பார், நடப்பார் என்று. இன்று… (READ MORE)

பொரி கடலை

, , , , ,