பொரி கடலை

என் மனைவி பள்ளிக்குப் போகிறாள்…

என் மனைவி பள்ளிக்குப் போகிறாள்… கொரோனா தீ நுண்மி முடக்கத்திற்குப் பிறகு, நீண்ட காலம் கழித்து பள்ளி திறக்கப்பட்டது இன்று.வகுப்புகளில் மர பெஞ்சுகள் நீக்கப்பட்டு தனி நபர் இடைவெளி நெறியோடு நாற்காலிகள் சிறு மேசைகள் போடப்பட்டுள்ளனவாம் மாணவர்கள் அமர்வதற்கு. கழிப்பறைகளில் தொடாமல் இயங்குவதற்கு தானியங்கி தண்ணீர்க்குழாய்களாம். நுழையுமிடம் தொடங்கி ஒவ்வொரு தளத்திலும் முக்கிய இடங்களிலும் கால்களால்… (READ MORE)

பொரி கடலை

wp-16106883271396509394169969006271.jpg

மாட்டுப்பொங்கல் கோலம்

எல்லா நாட்களிலும் மாக்கோலம்தான் என்றாலும், மார்கழியில் பூசணிப்பூவோடு பெரிதாகும் கோலம், தை பிறந்ததும் தெருவடைத்து போடப்படுகிறது.  தை இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் அன்று மணக்குடியில் போடப்படுவது மிக வித்தியாசமானது.  இதை கோலமென்றும் சொல்ல முடியாது கட்டங்கள் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்தவை இவை. அரிசி மாவால் வெள்ளைக் கோடுகளும், செங்காமட்டை (செங்கல் துண்டுகளை இடித்து… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

போகி – முதல் மாற்றம்!

பெங்களூருவில் வாழ்ந்த காலங்கள், சென்னையில் வசிக்கும் காலம் என எங்கிருந்தாலும்  மார்கழியின் கடைசிநாளான போகியன்று சொந்த ஊருக்குப் பயணிப்பது இருபத்தியொன்பதாண்டுகளாக இறையருளால் தொடரும் வழக்கம். கர்நாடக பெங்களூருவாக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி. போகி அன்று நடத்தப்படும் சம்பிரதாய முறைகளால் மூச்சுத்திணற வைப்பதையே கண்டிருக்கிறேன்.  விடிந்த பிறகும் விலகாத மூட்டமாக போகி கொளுத்திய புகை… (READ MORE)

பொரி கடலை

உப்புமா பெஸ்ரெட்டு @ஆந்திரா

ஆந்திர துவரம் பருப்பை அரைத்து கலக்கப்பட்ட மாவை, நல்ல சூடான கல்லில் மெலிதாக வார்த்து, பதத்திற்கு வரும் போது அதில் ஏசியன் பெயிண்ட்ஸ் வெளிப்பூச்சு போல பச்சை வண்ண சட்னியொன்றை பூசி, சில நிமிடங்கள் காய்ந்ததும், அதன் மீது அப்படியே உப்புமாவை கொட்டி (ஆமாம்பா… ஆமாம், உப்புமாதான்! ஆவ்வ்வ்வ்…) அள்ளியடித்த சிமெண்ட் கலவையை கொற்றர் கரணையால்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

தில்லை நடராசரின் தேர் திருவீதியுலா வரட்டும்

ஒரு புறம் மார்கழித் திருவாதிரை தில்லை நடராசர் உற்சவத்திற்கு கோவில் தயாராகிறது. அதற்கு முந்தைய நாள் நடராஜர் தேரை இயக்குவதற்கு கொரோனாவைக் காரணம் சொல்லி அனுமதி மறுக்கப் படுகிறது.  வடம் பிடித்து இழுப்பதில் தொற்று வந்துவிடும் எனக்கூறி என்எல்சி பொறியாளர்களை வைத்து தேரை இயந்திரங்கள் மூலம் இழுக்க வைக்க முடியுமா என்று மதிப்பீடு செய்வதாக தகவல்… (READ MORE)

பொரி கடலை

, ,

சில கணங்கள் கிடைக்கப்பெற்றாலும்…

‘சென்னை என்பது ஒரு நகரமல்ல, வெவ்வேறு உலகங்களைக் கொண்ட இரு நகரங்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் கதைக்களனைப் பற்றிப் பேசுகையில் விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குநர் செல்வராகவன்.  என் உணர்வுகளை வார்த்தையாகப் பிரதிபலித்தன அவரது வார்த்தைகள்.  பிழைப்பிற்காக முதலில் வந்த போது அறிந்த சென்னையின் உலகமும், பெங்களூரு – கலிஃபோர்னியா… (READ MORE)

Margazhi, பொரி கடலை

, , , ,

பசுஞ்சாண பூசணிப்பூ

நம் வீட்டு வாசலில் திடீரென்று கையளவு பெரிய மஞ்சள் பூ ஒன்று முளைத்து சிரித்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?  அதுவும் நீங்கள்  அரைக்கால் சட்டையணியும் சிறுவன் என்றால்! அதிகாலை வாசல் திருத்தி தெருவடைக்கும் வகை பரந்து விரிந்த பெரும் மாக்கோலம் இட்டு அதன் ஓர் ஓரத்தில் பசுஞ்சாணியில் பாத்தி கட்டி அதன் குழிவில் ஆலக்கரைசலை… (READ MORE)

Margazhi, பொரி கடலை

, ,

சில மனிதர்கள்…

‘இந்நேரம் பாடத் தொடங்கியிருப்பார்…!’ அதிகாலை நீராடி வேட்டியுடுத்தும் போதே அப்பா நினைவுதான். மார்கழி என்றால், ஊரை எழுப்பும் மணக்குடியின் சேவலையே அப்பாவின் பதிகம்தான் எழுப்பும். ஐந்து மணிக்கு முன்னேயே ஆர்மோனியத்தின் இசையும் அப்பாவின்  ‘போற்றியென் வாழ் முதலாகிய பொருளே… புலர்ந்தது பூங்கழற்கிணை துணை மலரடி…’ பாடலும் மணக்குடியின் வெளியில் நிறையும். ஐந்தரை மணி பேருந்துக்கு நிற்பவர்கள்,… (READ MORE)

Margazhi, பொரி கடலை

சில கதவுகள் திறக்கின்றன

பரமன் ரெண்டு நிமிஷம் பேசனும். உங்க கிட்ட ஒண்ணு சொல்லனும்!’ என்று அழைத்த மலரவன், சென்னை பெருநகரை தூய்மையாக வைத்திருக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் உயர்நிலை இரண்டாம் கட்ட பொறுப்பு அதிகாரி. ‘சொல்லுங்க! ஆமாம் இன்னைக்கு வீட்லதான் இருக்கேன். சொல்லுங்க!’ ‘எங்க ஜோன்ல துப்புறவு பணியாளர் வேலைகள் காலி இருந்துச்சி. அதுக்கு,  மேல பேசி ட்ரான்ஸ்ஜென்டர… (READ MORE)

பொரி கடலை

, ,

ஓதுவாரோடு வீதியில் நடந்தது

இரண்டாண்ணுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வில் என்னை அதிரச் செய்த காஞ்சிபுரத்து நிகழ்வு, இன்று திரும்பவும் அதிர வைக்கிறது. மலர்ச்சி மாணவர் கீர்த்திநாதனின் கந்தன் எஸ்டேட்டின் புதிய லே அவுட் திறப்புவிழா மரம் நடுதலுக்கு போனபோது,நீரணிந்த சிவநெறி ஓதுவார்கள் இருவர் திருமுறைகளை ஓதிய படியே நம் இருபக்கமும் நடந்து வரும் படி செய்திருந்தார். ‘ஐய்யோ, இது ஓவர்…. (READ MORE)

பொரி கடலை

செப்பரம்பாக்கம் திறந்தால் நல்லது

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி நகைப்பு மீம்ஸ் போடுவோருக்கும், அதைக் கண்டு பீதியடைவோர்க்கும்… வணக்கம். ஏரியைத் திறந்து விட வேண்டும். திறந்து விடுவதே நல்லது. 2015ல்…ஒரே நாளில் 50cm மழை பெய்து ஏரி நிரம்பி உடைந்தது. இன்று 2020ல்…தற்போது வரை 20cm பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தை இப்போதே திறந்து கொஞ்சம் நீரை வெளியேற்றுவது நல்லது. ஏரியையும் மக்களையும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு…

காவல்துறையில் பணி புரிவோருக்கு சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்று சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செய்துள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. (சேலத்திலோ எங்கோ ஒரு காவல் ஆணையர் இதை முன்பு முயன்று பார்த்ததாக நினைவு) காவல்துறையினரின் மனவழுத்தத்தைக் குறித்து எழுதி மனு தாக்கல் செய்த அந்த மனிதருக்கு நன்றி.அதை விசாரித்து… (READ MORE)

பொரி கடலை

சென்னை நிலத்தடி நீர் உயர்வு…

அக்டோபரில் பெய்ய வேண்டிய அளவுக்கு குறைவாகவே பெய்துள்ளது மழை என்ற போதிலும் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பகுதிவாரியாக உயர்ந்துள்ள அளவு வெளியாகியிருக்கிறது. கோயில் குளங்களை, ஏரிகளை, பயன்படுத்தாத கிணறுகளை என நீர்நிலைகளை மழை நீர் சேமிப்பிற்காக செப்பனிட்ட மாநகராட்சியின் பணிக்கு கிடைத்த பரிசு இது. வீடுகள், அடுக்ககங்கள், கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேமிப்பு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1603905485062.jpg

கண்ணே நீ கமலப்பூ…

‘அன்னமிடுவாருண்டோ அனாயாதையான இந்த ஏழை அரும் பசிக்கு… அன்னமிடுவாருண்டோ…’ இந்தப் பாடலை, தான் நடத்தும் ‘காரக்காலம்மையார்’ வில்லுப்பாட்டில் என் தந்தை பாடும் பாங்கை ஒரு முறை நீங்கள் கேட்டிருந்தால், மறக்கவே முடியாதபடி மனதினுள்ளே ஓடி வந்து ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். ‘வள்ளித் திருமணம்’ கதையில் குறிஞ்சித் திணை வயலில் வள்ளிக் கிழங்குத் தோட்டத்தில் வளர்ந்த குழந்தை வள்ளியை… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , ,

wp-16023323413513965127511241191532.jpg

யிப் மேன் – பெரும் மாஸ்டர்

யிப் மேன் மிகப்பெரிய மாஸ்டர். நம் தலைமுறையினரின் வாழ்வு தொடங்கிய காலத்தில், நெருப்புச் சக்கரமென சுழன்று வெம்மையும் ஒளியையும் தந்து அடங்கிங்கொண்டிருந்தார். தன்னுள் எழுந்த தீரா ஒளியினாலும் ஆர்வத்தாலும் தான் கற்ற பாரம்பரிய சீனக் கலையான வின்ச்சுன்னை உணர்வு வழியில் மெருகேற்ற முயன்றதில், தான் குருவாக மதித்தவராலேயே தனது மனமுவந்த பள்ளியிலிருந்து வெறுத்து விலக்கப் பட்டவர்…. (READ MORE)

பொரி கடலை

, , ,

கொரோனா : ட்ரம்புக்கு புது மருந்து

அமெரிக்க மருத்துவர்கள் உறுதி செய்யாத போதும், ‘ஹைட்ராக்ஸிகுளோரோகுயீன்’தான் கொரோனாவிற்கான மருந்து, இந்தியப் பிரதமரை அழைத்து உடனடியாக அந்த மருந்தை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் என்றெல்லாம் பெரும் ஒலி எழுப்பிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் கொத்துக் கொத்தாய் கோவிட் தீ நுண்மி தொற்றால் செத்து வீழ்ந்தபோதும், ‘சீட் பெல்ட்டா… அதெல்லாம் நான் போட மாட்டேன்!’… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-16016357826491550252133250517878.jpg

கட்சிகளைக் கடந்தல்லவா காணப்பட வேண்டியவர் காந்தியார்

ஊரே போற்றி மதிக்கும் சில அப்பாக்களை அவர்களது சொந்தப் பிள்ளைகளே அறியாமலிருப்பது போல காந்தியை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தாமல் விட்டுவிட்டோம். அவர்களுக்கு அத்தனை கோடிகளை அள்ளித்தந்து விட்டார் என்பது போன்றவற்றை மட்டுமே எடுத்தியம்பி இளந்தலைமுறைக்கு முன்னே சில திரைகளை எழுப்பி காந்தியின் முக்கிய மற்ற பண்புகளை பார்க்கவிடாமலே செய்து விட்டோம். டால்ஸ்டாய் பண்ணை உருவான விதமும்,… (READ MORE)

Politics, பொரி கடலை

சிறுவர்களுக்கு வெய்யில் தெரிவதே இல்லை.

எல்லாக் காலங்களிலும் சிறுவர்களுக்கு வெய்யில் தெரிவதே இல்லை. மணக்குடிக்கு வந்த உடனேயே, பாப்பாக்குளத்தில் தண்ணீர் இருக்கிறதா என பார்க்க வந்தேன். தூர் வாரப்பட்டதில் தாமரைக் கொடிகள் இன்றி,  வீராணத்திலிருந்து வந்த புது நீரால் நிறைந்திருக்கிறது குளம்.‘இந்த வெய்யில்ல ஏம்ப்பா, போற!’ என்ற மீன்கொத்தியார் வீட்டக்காவின் குரலைத் தாண்டி படித்துறைக்குப் போனால், இரண்டு தூண்டிகளோடு மூன்று வாண்டுகள்… (READ MORE)

பொரி கடலை

திருவள்ளுவரின் தந்தை யார்?

புத்தகங்கள் அறிவு விருத்திக்கு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான ஆவணமும் கூட. இணையதளங்களும் விக்கிபீடியாவும் இல்லாக் அக்காலத்தே பெரும் பதிவுப் பொருளாகவும் இருந்துள்ளன. திருவள்ளுவர், கடல் கொண்டு போன குமரிக்கண்டத்தில் பிறந்தார், மயிலாப்பூரில் வாழ்ந்தவர் என்ற தகவல்கள் நாம் கேட்டவையே. திருவள்ளுவரின் தந்தையின் பெயர் ‘பேராழி மாமுனிவன்’ என்கிறது 1874ல் யாழ்ப்பாணம் அச்சக தமிழ்மொழி அகராதி. வள்ளுவர் சமணரே… (READ MORE)

பொரி கடலை

, ,

திறந்த வெளி உடற்பயிற்சி கூடங்கள்

தமிழகத்தில் போதிய இடவசதி உள்ள 147 பூங்காக்களில் திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க அனுமதி என்று ஒரு செய்தி வந்துள்ளது.  வேறு வேறு காலகட்டங்களில் நான் பயன்படுத்திய கோவை பந்தயச் சாலை திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடமும், பெங்களூரு பிடிஎம் லேஅவுட் பூங்காவும், சென்னை 28ன் மாநகராட்சி மைதான ‘டிப் பார்’ரும், சிங்கப்பூர் ஹோகாங்க்… (READ MORE)

பொரி கடலை

,

சில நூல்களை இன்று நம்மால் உள்வாங்க முடிவதில்லை, அவ்வளவே!

கேள்வி: ஒரு நூலை வாசிக்கத் தொடங்கினேன். எவ்வளவு முயன்றாலும் என்னால் சில பக்கங்களைத் தாண்டிப் போகவே முடியவில்லை. நீங்கள் பாட்டுக்கு அடுத்து அடுத்து என்று இத்தனை நூல்களை வாசித்துத் தள்ளுகிறீர்களே! பரமன்: ஐயா, நான் வாசிப்பது மிக குறைவு ஐயா. வகுப்புகள் எடுப்பது, பத்திரிக்கை வேலை என முக்கிய பெரிய வேலைகளை முடித்தவுடன் கொண்டாடுவதற்கு நான்… (READ MORE)

பொரி கடலை

வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படட்டும்!

தனி நபர் இடைவெளி, பாதுகாப்பு நடவடிக்கைகளோடு கடைகள் அலுவலகங்கள் இயங்க அனுமதி தந்தாயிற்று. வரிசையில் நின்று கைகளில் கிருமிநாசினி தெளித்து டாஸ்மாக்கில் வாங்குவது அனுமதித்தாகி விட்டது. கோவில் – மசூதி – தேவாலயங்களிலும் இறையை வணங்க மக்கள் அனுமதிக்கப் பட வேண்டும். அதே தனிநபர் இடைவெளி அதே பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கும் கடைபிடிக்கப்படலாம். அரசு பரிசீலக்க… (READ MORE)

பொரி கடலை

வானமெங்கும் வௌவால்கள்

ஒவ்வொரு முறை வௌவால்களைப் பார்க்கும் போதும் ஒரு வியப்பு வந்து போகும் எனக்கு. புவனகிரி பள்ளியில் ஏழாம் வகுப்பு ஆர்கே வாத்தியார் எங்களுக்குள் விதைத்ததில் தொடங்கிய அது இன்னும் தொடர்கிறது. தொண்டையிலிருந்து பல்லாயிரம் கேளாஒலி அலைகளை எழுப்பிய வண்ணமே இருக்கும் வௌவால்கள், அந்த ஒலியலைகளை வைத்தே பொருள்களை கண்டறிந்து மோதாமல் பறக்கின்றனவாம். வௌவால்களைப் படைக்கும் போது,… (READ MORE)

பொரி கடலை

”தாராவியில் நடந்தது தரமான சம்பவம்!”

‘இத்தனையோண்டு சதுரடிக்குள் இவ்ளோ பேர்!’ என்றளவு மக்கள் நெருக்கம் மிகுந்த தனிநபர் இடைவெளியே சாத்தியமில்லை என்ற நிலை கொண்ட ராயபுரம், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளை உள்ளடக்கிய வடசென்னையில் கொரோணா தீ நுண்மி தீயின் நாவுகளைப் போல நாலாபுறமும் பற்றிப் பரவும் கொழுந்து விட்டு வளரவே செய்யும் என்கிறார்கள் ஊடகவியலாளர்களும் மருத்துவர்களும். வடசென்னையே இப்படியென்றால் அதைப்போல… (READ MORE)

பொரி கடலை

, , ,

பறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்

பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கிய அங்கம் பறவைகளும் பறவைகள் வாழும் இடங்களும். பறவை கூடும் இடங்களை பறவைகளுக்காகவென்று ஒதுக்கி வைப்பதே பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் மனித குலத்திற்கும் நாம் செய்யும் பேருதவி. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள நிலத்தை தொழிற்சாலைக்கு ஒதுக்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவை மதிப்பிற்குரிய முதல்வரும் அரசும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பறவை சூழ் உலகு பாதுகாக்கப்… (READ MORE)

பொரி கடலை

,

ஆலோலம்…

‘ஆலோலம்…’ : ஆலோலம் அடுத்த நிலை வேளிர் குலத் தலைவன் தமிழ்க்கடவுள் முருகன் பல குன்றுகள் கடந்து வந்து கொடிகுலத்து வள்ளியை காண வருகையில், குறிஞ்சில நில திணை புரத்தில் பயிர்களின் மேல் அமைக்கப்பட்ட பரணில் அவள் உட்கார்ந்து கொண்டு ‘ஆலோலம் ஆலோலம்’ பாடி சத்தமெழுப்பி புள்ளினங்களை விரட்டியதாக கதைகள் சொல்கின்றன.(‘கருணை மிக்கவள் வள்ளி, பறவைகளை… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

wp-1589609035155372820356105562670.jpg

வைரமுத்து அவர்களோடு சில கேள்விகள்…

கனவு என்பது நம் விருப்பம்தானே. எதையும் எப்படியும் காணலாமே!  கவிப்பேரரசு வைரமுத்துவின் எதிரில் அமர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்டு விடை வாங்க வேண்டுமென்பது என் பலநாள் கனவு. காலை விடியலிலேயே கதவைத் தட்டிக்கொண்டு வந்து நின்றது வாய்ப்பு, ‘ஒரு கேள்வி கேட்கலாம் பரமன் நீஙக்கள்!’ என்ற குறிப்போடு. விடவா முடியும்! நேரலையில் வெப்பினாரில் கலந்து கொண்டு… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, , , , , ,

இன்றைய தலையங்கத்திற்கு ஒரு கொட்டு, உரிமையோடு!:

  இன்றைய தலையங்கத்திற்கு ஒரு கொட்டு, உரிமையோடு!:   இன்று வெளியான இந்து தமிழ் திசையில் ‘செயல்பாட்டின் வழி நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம்’ என்ற தலைப்பிலான தலையங்கம் நன்று. மருத்துவர்களும், அதிகாரிகளும், களப்பணியாளர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றி வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. வணங்கத்தக்கவர்கள் அவர்கள். தலையங்கத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு சங்கதி நெருடலாக இருக்கிறது…. (READ MORE)

பொரி கடலை

wp-15860251707551544230341540481640.jpg

‘நாலாவது சார்’ – தி ஜானகிராமன்

‘பொட்டமாரி’ ‘ஆத்தா சார்’ ‘அக்கா சார்’ என்று கேலி பேசும் தன் பள்ளியின் நாலாவது சாரை நாயகனாகப் பார்க்கிறான் சின்னஞ்சிறு முத்தப்பன். நாலாவது சாரின் கை விரல்கள் பட்டால் தென்னை ஓலைகளில் பொம்மைகளில் கிளி உருவாகும், பாம்பு நாக்கை நீட்டிக் கொண்டு கண்ணை உருட்டிக் கொண்டு எழும். ‘கொண்ணுப்புடுவேன் கொண்ணு’ என்றே மூணாவது சாரும் இரண்டாவது… (READ MORE)

பொரி கடலை

,

டேய் வானரங்களா…

டேய் வானரங்களா…   அன்பழகன் சார் கால்களை மடித்து சம்மணமிட்டு உட்கார்ந்து ‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்…’ என்று தொடங்கினால், ஊரே அடங்கிக் கேட்கும்.  அப்படித்தான் ஒவ்வொரு நாளும் தொடங்குவார் அவர். அதுவும் ‘அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே!’ என்று அந்தக் குரலில் அவர் முடிக்கும்போது ஏழாவது படிக்கும் சிறுவனான நான் சொக்கிக் போயிருப்பேன். மார்கழி… (READ MORE)

பொரி கடலை

விழிப்புணர்வோடு வெல்லுவோம் கொரோனாவை! :
பரமன் பச்சைமுத்து

ஹாங்காங்கில் பல ஆண்டுகள் வசித்து விட்டு இப்போது சென்னை திருவான்மியூரில்  வசிக்கும் தொழில் முனைவரான நண்பர் முத்து ரகுபதி, இன்றும் முகத்தைத் துடைக்க புறங்கையையே பயன்படுத்துகிறார்.  உள்ளங்கையை முகத்துக் கொண்டு செல்வதேயில்லை. அனிச்சை செயலாகவே அடிக்கடி கையைக் கழுவுகிறாராம்.  சார்ஸ் வைரஸ் தொற்று வந்த போது ஹாங்காங்கே எதிர்த்துப் போராடிய போது கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

TCM

இரண்டும் கைகோர்த்து இணைந்து செயல்பட வேண்டும் இப்போது – பரமன் பச்சைமுத்து

  பீஜிங்கிலிருந்து சாங் யாங்ஃபேய், வுஹானிலிருந்து வு யோங் ([email protected]) ஆகிய பத்திரிக்கையாளர்கள் எழுதி சீன தினசரியான ‘சைனா டெய்லி’யில் வெளியான ஒரு கட்டுரை நம் கவனத்தைக் கவருகிறது. ……. “   ….கொரோனா புயலின் மையப் பகுதியான வுஹானில் உள்ள லேய்ஷென்ஷான் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோய்த் தாக்குதலிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 16 பேரில் 6… (READ MORE)

Politics, பொரி கடலை

, , , , ,

பசிப்பதும் பசி போக்குவதும் நன்று

சூர்ய நமஸ்காரம் போன்ற வயிற்றைப் பிழிந்து நிமிர்த்தும் சில ஆசனங்களை இரண்டு சுற்று செய்து முடிக்கும் போதே வயிறு கபகபவென்று பசிக்கும். வெறும் வயிற்றில் ஒரே மூச்சில்ல்லாமல் நிதானமாக ஒரு சிறு செம்புத் தண்ணீரை உறிஞ்சும் பழக்கம் கொண்டவன் நான். ஹெல்த் பாஸ்கட் நிறுவனரும், மலர்ச்சி மாணவருமான திருமதி சுதா கதிரவன் ‘வெறும் வயிற்றில் இதைக்… (READ MORE)

பொரி கடலை

என் குரங்காசனக் காரணம்…

வள்ளியம்மைப் பாட்டி நல்ல உயரமும் திடகாத்திரமான உடலமைப்பும் கொண்டவர். உழவு தவிர நெல் விதை விதைத்தல்,  நடவு, களை பறித்தல், அறுவடை, உளுந்து – பயிறு விதைத்தல், உளுத்தஞ்செடி பிடுங்குதல் என எல்லா வேலைகளிலும் ஆட்களோடு சேர்ந்து தானும் இறங்கிச் செய்பவர். அறுவடை முடிந்த கோடை கால வயல்களில் மாடுகளைக் கூட்டிப் போய் மேய விடுபவர்…. (READ MORE)

Manakkudi Manithargal, Spirituality, பொரி கடலை

, , , , , , , , ,

wp-15830787348501990811816643332254.jpg

பெரிய பழுவேட்டரையர் சரத்குமாருடன்…

‘பொன்னியின் செல்வனுக்காக காத்திருக்கிறோம்! சுந்தர சோழனா உங்களை பாக்க!’ கைகளை பற்றிய படியே பதில் சொன்னார், ‘சுந்தர சோழரா பண்றது அமிதாப் பச்சன். நான் பெரிய பழுவேட்டரையர்!’ ‘ஓ… ஆகா, பெரிய பழுவேட்டரையரா?! இன்னும் சிறப்பான வீரமான பாத்திரமாச்சே. நந்தினியின் கணவர் வேறு!’ ‘ஆமா…ம், அதுக்காகத்தான் இவ்ளோ உடற்பயிற்சி!’ என் ஒரு கை அவரது வலக்கையைப்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , ,

மலையாளக் கரையிலிருந்து பறம்புநில பாரியின் கதை

நிலம் கொள்ள பொன் கொள்ள புகழ் பெருக்க படை கொண்டு இயற்கையை அழித்தவர்கள் தமிழ் மூவேந்தர்கள் என்று சு.வெங்கடேசன் எழுதிய போது சோழக்காதலர்கள் அதிர்ந்து போயினர். ஆயினும் பறம்பின் பாரியை தோழமையின் கபிலரை குறிஞ்சி நில இயற்கையில் அவர் நனைத்துக் கொடுத்த விதம் நெஞ்சில் இறங்கி நின்றது (இன்னும் நிற்கிறது!). ராபர்ட் டௌனி ஜூனியரின் உருவத்தில்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , ,

பெரு நகர காவல் துறைக்கு மலர்ச்சி வணக்கம்!

நகரின் உள்ளே நுழையும் வாகனங்களின் பதிவு எண்ணைப் படமெடுக்குமளவிற்கும்,விதி மீறல் வாகனங்களைக் கண்டறியும் வகையிலும் துல்லியமாகப் படமெடுக்கும் நவீன கேமராக்களை நந்தனம் சிக்னல் போன்ற இடங்களில் நிறுவி கலக்குகிறது பெருநகர காவல் துறை. விதிகளை மீறும் வாகனங்களை தானாகவே படமெடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வசதிகள் கொண்டவையாம் இந்த கேமராக்கள்.  சபாஷ்! இது போன்ற மிகத்… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-15811451877651185453074450219831.jpg

இளநீர்… இளநீர்!

இலங்கையின் கொழும்பு நகரில் கிடைக்கும் இளநீர், சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கிடைக்கும் மலேசியா இளநீர், தானே புயலுக்கு முன் கிடைத்த புதுச்சேரி இளநீர்,  தமிழகத்தின் பிற ஊர்களுக்கு அனுப்பப்பட்டு சில தினங்கள் கழித்துப் பருகப்படும் பொள்ளாச்சி இளநீர்,  பறித்த அன்றே குடிக்கும் போது ‘சுருக்’ என்று இருக்கும் பொள்ளாச்சி இளநீர் என ஒவ்வொரு இளநீரும் ஒவ்வொரு… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-15793510869645133351545504007296.jpg

வீட்டுக்கு வந்த சாரைப் பாம்புக் குட்டி

பாம்புகள் என்றதும் என்ன தோணும் உங்களுக்கு? ‘வீட்டுக்குள்ள வந்துது, அடிச்சித் தூக்கிட்டோம்!’  நீண்ட கழியொன்றின் நுனியில் ஒரு பாம்புக் குட்டியை மாட்டித் தூக்கிக் கொண்டு வந்தார் எதிர் வீட்டு முருகதாஸ்.  ‘என்ன பாம்பு இது?’ ‘சாரை, குட்டி!’ தெருவில் தரையில் கிடத்தப்பட்டது பாம்பு. ‘செத்துப் போச்சி, தூக்கிப் போட வேண்டியதுதான்!’ ‘ஆமாம், செத்திடுச்சி!’ ‘திடீர்னு இப்படி… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , ,

IMG_20200105_215119_469.jpg

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில்…

ஒரு நாள் அல்ல, ஒவ்வொரு முறையும் வாழ்வின் வேறுவேறு அத்தியாயங்களில் என்னை நெகிழ வைக்கிறார் நடிகர் சூர்யா. அகரம் அறக்கட்டளையோடு கொஞ்சோண்டு தொடர்பு ( மாணவர்களுக்கு சில பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளேன்) உள்ளவன் என்பதால் ஓரளவு தெரியும், தனது சினிமா சங்கதிகளை கொஞ்சம் கூட உள்ளே கொண்டுவராமல் அறக்கட்டளையின் நிறுவனராகவே இருப்பார், நடப்பார் என்று. இன்று… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

images.jpeg

ஷாருக்கான் நேர்காணல் நன்று

‘நான் டெல்லிப் பையன். என் அம்மாவிற்கு மூன்று பெண்கள் அப்புறம் நான். இவர்களுக்கு யாருமில்லையேயென்று என்னை அம்மா தத்துக்கொடுத்து விட்டார்கள். நான் பெங்களூருக்கு அனுப்பப்பட்டேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவிற்கு ஏக்கம் வர நான் திரும்பவும் அழைக்கப்பட்டேன்’ ‘வரிசையாப் படங்கள் எல்லாம் ஊத்திகிச்சி. அதான் ரொம்ப நாளாவே படமே பண்ணாம சும்மா இருக்காரு!’ என்று உலகம்… (READ MORE)

பொரி கடலை

, ,

images-255619014787562127170..jpg

உலகிலேயே மிகச்சிறந்த இடம்…

பூங்கானத்தாயா என்று பேரப்பிள்ளைகளால் அழைக்கப்பட்ட பூங்காவனம் கிழவி இறக்கும் வரை படுக்கவேயில்லை. கம்பும் கேழ்வரகும் களியும் உண்ட திருவண்ணாமலைச் சீமையின் அந்தக் காலத்து உடம்பு கிழவிக்கு, கடைசி நாள் வரை நடமாடிக் கொண்டேயிருந்தது. வயதானவர்களுக்கு வரும் அல்ஜைமர் என்னும் மறதி நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாத அந்நாளில் கிழவி அந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது. எங்காவது புறப்பட்டு நடந்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

, , , , ,

காடை

‘தாய்க் காடை’ : பரமன் பச்சைமுத்து

‘மாமா… இதெல்லாம் எதுக்கு தட்டனும்?’ மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஆதிரையான் மாமாவிடம் கேட்டான். மாமாவோடு இருப்பதென்றால் ஆதிரையானுக்கு அலாதி விருப்பம், கூடவே வயலுக்கு போவதென்றால் கேட்கவா வேண்டும். அந்தி சாயும் வேளையில் தகர டப்பாக்களையும், தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சைக்கிளில் ஆதிரையானை வயலுக்குக் கூட்டி வந்தார் மாமா. மணக்குடியிலிருந்து தச்சக்காடு அய்யனார் கோவில் வரை சைக்கிள்… (READ MORE)

Manakkudi Manithargal, ஆ...!, பொரி கடலை

, , , , ,

Boys2

கடைசியில் ஒரு வகையில் எல்லாமே நினைவுகள்தானே…

மதுரை அண்ணாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு மலர்ச்சி உரையாற்ற பாண்டியன் எக்ஸ்ப்ரெஸில் டிக்கட் போட்ட  போது திருநெல்வேலியில் இறங்கி குறுக்குத்துறை சென்று தாமிரபரணியில் குளிப்போம் என்றேன். குமரன், கார்த்திகேயன், ராமசாமி, நான் என நால்வரும் திருநெல்வேலியில் இறங்கி ‘நாடார் மெட்டல்ஸ்’ என்ற ஒரே பெயரில் பல கடைகள் இருக்கும் அந்தத் தெருவில் இருந்த ‘போத்தீஸ்’ஸின் உள் நுழைந்து… (READ MORE)

பொரி கடலை

images-7.jpeg

பெண் குயில், பட்டாம் பூச்சி… கருவேப்பிலை மரம்

குயிலென்றால் கருப்பாயிருக்கும், கன்னங்கரேலென்று இருக்கும் என்றே நினைத்திருந்தேன். நாற்பது ஆண்டுகளாக இப்படி நினைத்தே வாழ்ந்திருக்கிறேன் என்று நினைக்கையில் கொஞ்சம் அவமானமாக இருக்கிறது, வெட்கம் பிடுங்கித் தின்கிறது இன்னும் என்னை. ‘பெண் குயில் பாத்திருக்கீங்களா? அங்க பாருங்க, வந்து உட்காந்திருக்கு!’ என்று பால்கனிக்கு வெளியே பார்த்தவாறே அத்தை அவசரத்தை குரலில் ஏற்றி அதேசமயம் அதிராமல் மெல்லியதாய் கூப்பிட்ட… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, , , ,

20180613_175723.jpg

லேனா… ஆ…ஆ!

நாம் பார்த்து பார்த்து பெரும் உவமையாகக் கொண்டு வளர்ந்த ஆளுமைகளை, வாழ்க்கை திடீரென்று நம் முன்னே நிறுத்தினால் மகிழ்வில் திளைக்கத்தானே செய்வோம்! கூடவே எதிர்பாரத வகையில் அவர்களுக்கு நம்மைத் தெரிந்திருக்கிறதென்று வேறு அறிந்தால்… அதிர்ந்து போகத்தானே செய்வோம் இன்பத்தில்! கவிஞர் வைரமுத்து ஆய்வுக் கட்டுரையாற்றும் ஜெயகாந்தன் பற்றிய நிகழ்ச்சிக்கு அரங்கம் நோக்கி் நடக்கையில், அரங்கத்தின் வாயிலுக்குள்… (READ MORE)

பொரி கடலை

, ,

plastic

பிளாஸ்டிக் தடை – நல்ல செய்தி!

வரும் ஜனவரி முதல் குறிப்பிட்ட சில பயன்பாடுகளில் பிளாஸ்டிக்கை தடை செய்வதாக அறிவித்திருக்கிறது அரசு. நல்ல செய்தி! சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டால் பல்லுயிர்ச்சூழல் கெடாது காக்கப்படலாம். பிளாஸ்டிக் பைகளை விழுங்கி வயிறு சரிந்து மாயும் யானைகளும், பிளாஸ்டிக்கால் வதைபடும் குரங்குகளும், மீன்களும், மனிதர்களும் மற்ற பிற உயிர்களும் கொஞ்சம் காக்கப்படும். அப்படியே… கர்நாடாகாவிலும், இலங்கையிலும் இருப்பதைப்… (READ MORE)

பொரி கடலை

20180520_232944-1.jpg

போய் வாருங்கள் பாலகுமாரன், உங்கள் ராஜேந்திர சோழன் சென்ற உலகத்திற்கு…

வாழ்க்கை மட்டும் ‘இதுதான் அறிய தருணம், இனி இது திரும்பக் கிடைக்காது!’என்று சப்-டைட்டில் போட்டு நிகழ்வுகளை அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அப்படி மட்டும் இருந்திருந்தால், அன்று என் அடுக்ககக் குடியிருப்பின் முகப்பில் உங்களைப் பார்த்த தருணங்களை இன்னும் பயன்படுத்தியிருப்பேன், ‘பரமனை நமது விழாவிற்கு அழைக்கலாம், கூப்பிடுங்கள்!’என்று ரகுராமிடம் நீங்கள் தகவல் சொன்னபோது ஓடி வந்திருப்பேன்…. (READ MORE)

பொரி கடலை

,

யாரைக் குற்றம் சொல்ல…

மன்னம்பந்தலில் கல்லூரி விடுதியின் பின்பக்க வேலி திறந்து நடந்தால் வாழைக் கொல்லை. வாழைக் கொல்லையை ஊடறுத்து கொஞ்சம் போனால் எப்போதும் நீரோடும் காவிரி. இப்படியொரு வழியிருக்கிறதென்று எனக்கு ‘கேட்டீ’தான் எனக்குக் காட்டினார். பெண்ணாடம் பழனிவேலு, இன்னும் சிலரோடு நாங்கள் காவிரிக்குள் பாய்ந்து ஊறித் திளைத்து மகிழ்வோம். நீச்சல் தெரியா நெய்வேலி ஜமுக்குப் பாண்டியன் ஆழமில்லா கரையோரம்… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, ,

என்ன பதில் சொல்லிவிட முடியும்!

ஓடிக்கொண்டேயிருந்தவள் மீளா ஓய்வுக்குப் போய் விட்டாள். மாராத்தான், ட்ரையத்லான், ட்ரெக்கிங், சைக்கிளிங் என்று ஓடித் துடித்த கால்களும் மூச்சும் இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. குரங்கணி காட்டில் தீ நாக்குகளால் தீண்டப்பட்ட அனுவித்தியா கண்ணாடிப் பேழைக்குள் வெறும் உடலாக. ‘பரமன்ன்ன்ன்…. ஏன் பரமன்? நெறைய சாதிக்கனும்ன்னு ஆசைப்பட்ட பொண்ண, சாதனை பண்ண அனுமதிச்சது தப்பா பரமன்? இமயமலையை… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

எப்படி இருந்திருப்பான் ராஜராஜ சோழன்?

கோப்பரகேசரி சிவபாதசேகரன் அருண்மொழி வர்மன் என்னும் ராஜராஜ சோழன் எப்படி இருந்திருப்பான் என்று சரியாய்க்காட்ட வடிவங்கள் இல்லை. ராஜராஜ சோழன் என்று இணையத்தில் கிடைக்கும் பித்தளைச் சிலை வள்ளுவர் உருவம் போல் அனுமானத்தால் உருவாக்கப்பட்டது என்பது என் எண்ணம் ( மார்ச் 2018 மாத ‘வளர்ச்சி’ இதழின் முகப்புக் கட்டுரைக்கும் அட்டைப் படத்திற்கும் இந்தச் சிலையையே… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , ,

யாரை எங்கே இட்டுச் சென்று எங்கே முடிக்கிறது வாழ்க்கை என்பது பெரும்புதிர்…

சிறுவனாக இருந்த போது அக்கா கூட்டிச் சென்று கீரப்பாளையம் விஆர்கே டாக்கீசில் காட்டிய படத்தில்தான் முதன்முதலில் ஸ்ரீதேவியை பார்த்தேன் என்று நினைக்கிறேன். அதில் வரும் ‘பெயரைச் சொல்லவா அது நியாயமாகுமா!’ பாடல் என் மனங்கவர்ந்த பாடல். சென்ற வாரம் கூட ஓர் இரவுப்பயணத்தில் முணுமுணுத்தப் பாடல். என்னைப் போல் பலருக்கு ‘காற்றில் எந்தன் கீதம்…’ என்ற… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

தமிழாராய்ச்சி தரவகம்…

உலகம் முழுதும் நடந்துள்ள தமிழாராய்ச்சிக் கட்டுரைகளை ஒரே தரவகத்தில் வைக்க ஏற்பாடு என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். எழுந்து நின்று வரவேற்கிறேன். ProjectMadurai.Orgயைப் போல இன்னும் பெரிதாய் இயங்கட்டும் இது. பேரறிஞர்களின் தமிழ் பற்றிய ஆராய்ச்சிகள் அனைவருக்கும் காணக் கிடைக்கட்டும். கட்சிகள் கடந்த தமிழாராய்ச்சி தரவமாக இது இருக்கட்டும். வாழ்க! வளர்க! Facebook.com/ParamanPage

பொரி கடலை

, , , , ,

imagesJLE35TA2

கருவூர்த் தேவர் ராஜராஜனின் குருவே இல்லை!

  கல்கியைப் படிக்கையில் சோழர்கள் மீது ஏற்படும் பெரும் அபிமானம், அரு. ராமநாதனைப் படிக்கையில், பாண்டியர்களே சாதி மதம் தாண்டிய தமிழ்ப் பார்வை கொண்டிருந்தனர் – சோழர்கள் வடவர்களின் சாதீயத்தை கொண்டு புகுத்தியவர்கள் என்று தகர்ந்து போகிறது. சேர சோழ பாண்டியர்கள் பற்றிய பெருமையெல்லாம் பொடியாகி போகிறது சு வெங்கடேசனின் பறம்பின் வேள்பாரி பற்றிய ஆராய்ச்சிப்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

நான் ஒரு எழுத்தாளனா என்பதில் இன்னும் சந்தேகம் உண்டெனக்கு.

நான் ஒரு எழுத்தாளனா என்பதில் இன்னும் சந்தேகம் உண்டெனக்கு. ஆனால், எழுத உட்காரும் போது மெள்ள மெள்ள எழுத்து என்னை ஆட்கொள்வதும் அந்த வேறோர் உணர்வில் மூழ்கிப் போவதும் பிடிக்குமெனக்கு. அதில் காலக்கணக்கு இல்லை. கடிகாரங்கள் இல்லை. உள்ளே போய் திரும்ப வெளியே வருவதில் நிமிடங்கள் கடந்து போயிருக்கும், மணி கரைந்து போயிருக்கும். இன்று தினமலரின்… (READ MORE)

பொரி கடலை

புத்தகத்தை மூடி வைத்தேன், அவர்கள் உள்ளே எதுவோ திறக்கப் பட்டிருக்கும்

தமிழ் எழுத்து நடையை தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தலாமென்ற எண்ணத்தில் மகள்களை அமர வைத்து, ஒரு நூலை எடுத்துக் கொண்டு, ஒரு கதை சொல்லியாக உருவெடுத்து வரிகளைப் படித்துப் படித்து விளக்கிக்கினேன். மகள்கள் மெல்ல மெல்ல கதையில் ஆழ்ந்து ஒன்றிப் போனார்கள். ‘மறுநாள் அந்திவேளை அழகு பங்களா வீட்டின் அதே திண்ணையில்… ‘ என்று இறுதி… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

விவசாயம் காக்க வேண்டுமானால்

நெல்லுக்கு விலையுயர்வு, நிறைய கொள் முதல் நிலையங்கள் திறப்பு என்றோர் அறிவிப்பை செய்திருக்கிறது தமிழக அரசு. விலையுயர்வு நல்லதுதான் என்றாலும், எங்கள் உண்மை நிலவரப் பிரச்சினை வேறு. அரசு எவ்வளவு கொள்முதல் விலை வைத்தாலும் பல காரணங்களால், இரண்டு காணி மூன்று காணி நிலங்கள் கொண்ட சிறு விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களுக்குள் நுழையவே முடிவதில்லை. கொள்முதல்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

bruce_lee

ப்ரூஸ் லீ அதில் ஒருவர்…

சிறு வயதில் தொலைக்காட்சி காண்கின்ற அனுபவங்கள் எதுவுமில்லாமலேயேதான் வளர்ந்தேனென்றாலும், அவ்வப்போது மாட்டு வண்டியில் அம்மாவோடு பயணித்து டூரிங் டாக்கீஸில் சிவாஜி முத்துராமன் திரைப்படங்கள் பார்த்தே வளர்ந்தேன். என் வாழ்வில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியவை என்றால் அவை பதின்மவயதில் செம்பனார் கோவில் சிம்ப்ளஸ் திரையரங்கம் மற்றும் சிதம்பரம் லேனா தியேட்டரிலிருந்து என்னுள் நுழைந்த புரூஸ்லீ, ஜாக்கி சான்… (READ MORE)

பொரி கடலை

, , ,

நினைவுகளை பதிவதும், பதிந்தவற்றை நினைவு கூறுவதுமே வாழ்க்கையின் ஒரு பகுதியை உன்னதமாக்கிவிடுகின்றன

மார்கழியின் குளிர், வாசல் தெளித்து தெருவடைத்து அன்னையர் இடும் எண்பதுப் புள்ளிக் கோலம், பசுஞ்சாணத்தில் செருகப்படும் பூசணிப்பூ, மிளகும் பாசிப்பருப்பும் நெய்யும் தூக்கலாக இருக்கும் பெருமாள் கோவிலின் பொங்கல் என மார்கழியின் நினைவுகள் உன்னதமான கலவையென்றாலும், என் மார்கழி நினைவுகளுக்கு உன்னதம் சேர்ப்பவை பதிக – பாசுரங்களே. பெண்ணாய் உருவகப்படுத்தி நற்றமிழில் மணிவாசகர் துயிலெழுப்பும் வெம்பாவையை… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

Emerald Book launch

‘இண்டஸ் வ்வேஆலி தமில் சிவைலைசேஷன்’ நூல் வெளியீடு

வாழ்க்கை சில நேரங்களில் எதிர்பாராத இன்ப அதிர்சிகளைத் தந்து விடுகிறது. உலகத் தமிழாராட்சி கழகத்தின் முனைவர் மருதநாயகம், தமிழ்ப் பேராசிரியர் – இலக்கியத் திறனாய்வாளர் – கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை ( இதர வட்டெழுத்து – பிரம்மி எழுத்து – குறியீடுகள் உட்பட) எப்படிப் படிப்பது… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே. குமாரவேல் அருமையான மனிதர்

      பெரிய மனிதர்கள் வெற்றியாளர்கள் மிக எளிமையாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் உற்சாகமாக இருக்கிறார்கள். அடுத்த சக மனிதனை உற்றுக் கவனிக்கிறார்கள், மதிக்கிறார்கள், அவனிடமிருந்து கற்க முயலுகிறார்கள். இந்தியாவின் வர்த்தகத்தில் பெரும் மாற்றம் புரிந்தவர் என ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்படுபவரும் ‘சாஷே’ என்ற ஒன்றை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவருமான சின்னிக் கிருஷ்ணன் அவர்களின் புதல்வரும், வெல்வெட்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

20171112_105758806489332.jpg

இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?

‘இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?’ பரி கேட்ட இந்த கேள்வி அறியாமையால் வந்ததல்ல. கண்ணின் முன்னே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கடல் போல் நிறைந்திருக்கும் இப்படி ஒரு ஏரியை கண்டத்தில் எழுந்த வியப்பு. ‘இல்ல பரி, காஸ்பியன் இருக்கு. அதுக்கப்புறம் ஆப்பிரிக்காவின் லேக் சுப்பீரியர், விக்டோரியா ஏரின்னு நிறைய இருக்கு!’ என்று சொல்லவில்லை…. (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

எனக்கு மீன் பிடிக்கத் தெரியும் பன்னீரு…

சைவனென்றாலும், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் போல வெற்று மார்போடு குளிர் ஏரியில் இறங்கிப் பிடிக்கவில்லையென்றாலும், மீன் பிடித்த அனுபவங்கள் உண்டெனக்கு. வீராணத்தில் தண்ணீர் திறந்து விட்டால் மானம்பாத்தான் வாய்க்கால் வழியே சில தினங்களில் எங்கள் ஊரை வந்தடையும். வாய்க்கால்களில் மதகுகளில் நீர் புறண்டு ஓட, அதைக் காண சிறுவர்கள் நாங்கள் ஓடுவோம். ‘இங்க பாரு, ஆயிவரத்து… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

யார் அந்தப் புண்ணியவானோ, அவருக்கு என் பெரும் வணக்கம்! …

தேவனூர் பகுதியில் வாழும் இருளர்கள் வாழ்வில் திடீரென்று ஒரு ஒளி பாய்ந்துள்ளது. தேவனூர் பகுதியில் திடீரென அதிக அளவில் மீன்களும் நண்டுகளும் வளர்ந்துள்ளன. அதைப் பிடித்து விற்பதில் அவர்களது வாழ்வாதரங்களும் மகிழ்ச்சியும் உயர்ந்துள்ளன. தேவனூர், சாத்தனஞ்சேரி, பழவேரி, சீதாவரம், படூர், அரும்புலியூர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குடிநீர் தேடியலைந்தவர்களும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

பேராவூர் கிராமத்திற்கு பெருவணக்கம்

அரசு செய்யும் அரசு அதிகாரிகள் வருவார்கள் என்று காத்திருக்காமல் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் என்று இறங்கி மொத்த ஊரையும் கூட்டித் துடைத்து கழுவி காயப் போட்டுள்ளனர் ஒரு ஊர் மக்கள். சீமைக் கருவேலத்தையும் வேண்டாப் புதர்களையும் களைந்து குப்பைகளைக் கூட்டி எரித்தும் புதைத்தும் சுத்தப் படுத்தி ஒரு ஊரையே குப்பைகளில்லா ஊராக மாற்றியிருக்கிறார்கள். ராமநாதபுர மாவட்டத்தின்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

ராஜாவும் ரஹ்மானும் சில தலைமுறைகளை காப்பாற்றியிருக்கிறார்கள்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையை நோக்கி பயணிக்கிறோம். பாதையை பார்வையை என என் எல்லாக் கவனத்தையும் சுருட்டி இழுத்துக் கொள்கிறது என் ஓட்டுனர் ஒலிக்க விட்டப் பாடலின் இசைச்கலவை. சுக்விந்தர் சிங், எஸ்பிபி, ஸ்வர்ணலதா என மூவரும் மூன்று திணுசில் பாட இவர்களை மீறி ஆனால் சன்னமாய் வருகிறது தபலா ( ரஹ்மான் என்பதால், டிஜிட்டல்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறுவிதமாகவும் தெரியும் காடுகளைப் போலவே ரயிலும்…

ரயில் பயணம் ஒரு சுகம். பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறுவிதமாகவும் தெரியும் காடுகளைப் போலவே ரயிலும் இரவில் வேறு வடிவம் கொண்டுவிடுகிறது. பகல் முழுக்கத் தட தடவென்று உற்சாக குவியலாக ஓடிய அதே ரயில் இரவில் ஒரு தொட்டிலைப் போல வடிவெடுத்து விடுகிறது. ஆடியாடி மிதந்து செல்லும் ஓர் ஓடத்தில் உறங்குவதைப் போன்றதொரு உணர்வைத்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

பச்சைக் கடல் சிஷெல்ஸ்

இந்துமாக் கடலின் இந்தக் கோடியில் நீர் பச்சையாக இருக்குமென்று அறியேன், சிஷெல்ஸ் வந்திறங்கும் வரை. தமிழ் மன்றத்தில் மலர்ச்சி உரையாற்ற வந்த என்னை ஊர் சுற்றிக் காட்டிய இவ்வூர் நண்பர்கள் இங்கேயும் அழைத்துச் சென்றனர். மலையும் மலையின் பச்சைப் பசேல் காட்டையொட்டிய கடலின் பச்சை நிற நீரையும் பார்த்துப் பரவசப் பட்டேன். இறங்கிக் மூழ்கிக் குளித்துக்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

வைரமுத்துவிற்கு மதிப்பு கூட்டித் தந்த மதன் கார்க்கி…

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழ் மேல் மரியாதையும், கொடுக்கப் பட்ட தலைப்பிற்கு எப்போதும் அவர் மதிப்பு கூட்டுவார் என்பதில் நம்பிக்கையும் உண்டெனக்கு. தி இந்து நாளிதழின் ‘யாதும் தமிழே’ தலைப்பிலிருந்து அரங்கு அதிர ‘தமிழே யாதும்’ என்று மாற்றி உரைத்ததில், நவோதயாப் பள்ளிகள் வந்தால் இருமொழிக் கொள்கையோடு வரட்டும் என்று முழங்கியதில், பாணன் – பாடிணி பற்றிய… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , ,

யாதும் தமிழே…

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் (தினமணி முன்னாள் ஆசிரியர்), வில்லிசைச் கலைஞர் சுப்பு ஆறுமுகம், இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி, கரிசல்காட்டு கதைசொல்லி கி.ரா, திண்டிவனத்து தமிழ்ப்பள்ளி பேராசிரியர் ஆகியோர்க்கு இந்து தமிழ் நாளிதழ் ‘தமிழ் திரு’ விருதுகள் தந்து கௌரவித்தது அட்டகாசம். குடவாயில் பாலசுப்ரமணியம் சொன்ன தமிழக நீர் மேலாண்மையைப் பற்றிய அரிய தகவல்கள் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

ஒவ்வொரு சமூகத்தின் பின்னேயும்…

கேரளத்தில் மன்னர்களுக்கும் கோவில் விக்கரகங்களுக்கும் பல்லக்குத் தூக்கும் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த அந்த சமூகத்தின் அந்நாளைய வலியை, அவர்களது பெண்டிர்களை அடிமையாக்க நடந்த துயரங்களை, அதிலிருந்து மீண்டெழுந்து நின்ற கதையை உணர்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் மலர்ச்சி மாணவர் ஒருவரின் தந்தை அவர்களது கடைக்கு நான் சென்றிருந்த போது. நாடார்கள் வணங்கும் பெரியாண்டவர் பற்றி விவரித்தார் அவர். ‘சாணர்கள்’… (READ MORE)

பொரி கடலை

,

வைரமுத்துவின் உவேசா பற்றிய கட்டுரை அனுபவம்…

எழுத்தாளனை ஆழமாய் தெரிந்து கொள்ளும் போது முன்பு படித்த அதே அவனது எழுத்துக்கள் இன்னும் ஆழமாய் புரியும். அதே எழுத்துக்களை எழுதுபவனே படிக்கக் கேட்க இன்னும் சிறப்பாக விளங்கும், உள்ளே இறங்கும். சிறப்பாய் எழுதவும் அதை வாசித்து வெளிப்படுத்தவும் தெரிந்தவராயிருந்தால்… கிடைக்கும் அனுபவம் ஒரு கொண்டாட்டம். வைரமுத்துவின் ஆழமான ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையை அவர் வாயாலேயே படிக்கக்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

wp-image-889211178.jpg

மாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…

நேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது. ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது… (READ MORE)

Paraman's Program, பொரி கடலை

, , , , , , , ,

wp-image-889211178.jpg

மாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…

நேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது. ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது… (READ MORE)

Paraman's Program, பொரி கடலை

, , , , , , , ,

தகப்பன் மனசு

‘காலேஜ் ஃபெஸ்ட்’டாம் மலையாள ஓணம் விழாவாம் தலைக்கு ஸ்பா செய்து சேலையுடுத்தி நிற்கின்றன செல்லக்கிளிகள்! ‘இங்க பாரு பொட்டு வச்சிக்கோ, கையில வளையல போடு!’ பரபரக்கிறது அம்மாக்காரியின் மனசு. ‘வளர்ந்து விட்டோம் நாங்களென்று சேலை கட்டி நின்னாலும் குழந்தைகளாத்தான் தெரிகிறார்கள்’ என்கிறது என் தகப்பன் மனசு. 08.09.2017 சென்னை www.ParamanIn.com

பொரி கடலை

, , ,

சேவலும் நாயும் சொல்வதென்ன : காணொளி

எதற்குமஞ்சா துணிவோடு வீறு கொண்டெழுந்துவிட்டால், எதிரில் எவர் வரினும் முடியாது போகும். சிறியோனாயினும் கண்களில் அச்சமின்றி நிற்போன் முன்னே பெரியோனும் அஞ்சுவரே. சிறியோரொல்லாம் சிறியோரல்லர், பெரியோரெல்லாம் பெரியோரல்லர்! அச்சம் கண்ட வலியோன் எளியோனாகி ஓடுகிறான். அச்சம் தவிர்த்த எளியோன் வலியோன் ஆகிறான். அச்சம் தவிர்… ஆளுமை கொள்! பரமன் பச்சைமுத்து 02.09.2017 Facebook.com/ParmanPage

Self Help, Uncategorized, பொரி கடலை

, , ,

சென்னை - Copy

வாழ்க சென்னை!

    நாயக்கர்கள் காலத்துக்கு முன்பேயே நீ இருந்தபோதிலும், நாவாய்கள் வழியே வந்தவனுக்கு விற்றதிலிருந்தே கணக்கில் வந்தாய்.   மராட்டியர்கள் கொண்டாடும் வீரசிவாஜி உன் மண்ணின் காளிகாம்பாளை வழிபட்டே பெறுவானாம் வெற்றி   வான்புகழ் வள்ளுவனை வளர்த்துத் தந்த மயிலாப்புரி, ஊன் வென்று ஒளியான வள்ளல்பெருமான் வாசம் செய்த ஏழு கிணறு, பெருமாளின் பெயர் சொன்னாலுருகும்… (READ MORE)

கவிதை, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , ,

அலாதித் தருணங்கள்

கை விரல்கள் கனத்து மெதுவே கண் விழிக்கும் வேளையில் நமது உடலே வெறும் உடலாகத் தெரிந்து கலைந்து போகும் அந்த சில விநாடிகள் அலாதியானவை! #தியானம் – பரமன் பச்சைமுத்து 17.08.2017 Www.ParamanIn.com

Self Help, பொரி கடலை

, , , , , ,

wp-image-14074033.jpg

பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’…

ஆழ்நிலையில் அமிழத் தொடங்கும் முன்னே கண்ணுக்குத் தெரியா சிறு சிறு வயர்கள் வழியே உடலோடு ஏற்படும் இயற்கை இணைப்பை உணர்ந்திராமல் ‘பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’ பற்றிய அந்தக்காட்சிகளை எழுதியிருக்கவோ படமாக்கியிருக்கவோ முடியாது ஜேம்ஸ் கேமரூனால்! #அவதார் Facebook.com/ParamanPage

Self Help, பொரி கடலை

, , , , ,

அதிகாலை வானம்

ஆகச் சிறந்த ஓவியனின் தூரிகையை விடச் சிறந்திருக்கும் அதிகாலை வானத்தைக் காணாதவர்கள் அதிகம் இழக்கிறார்கள். – பரமன் பச்சைமுத்து, 16.08.2017

பொரி கடலை

,

bigboss

‘நூறு கண்கள்’ கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் ‘பிக்பாஸ்’

இத்தனை நாள்கள் இருந்து ஆக வேண்டும் என்ற குறிப்போடுதான் அனுப்பி வைக்கப்படுகிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா மனிதர்களையும் நாம் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. நாம் விரும்பும் வண்ணமே அவர்கள் அமைவதில்லை. தவறை ஏற்றுக் கொள்ளாத ஆரவ்களையும் சக்திகளையும், தவறென்றாலே ‘தவறுதான் சார்… தவறுதான் சார்!’ என்று எல்லாத்தையும் ஏற்றுக்கொண்டு ஒரு முறை கூட உள்ளே உணராமல்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

ருக்மணியக்கா இன்று உறக்கத்தில் சிரிக்கக் கூடும்

    ருக்மணியக்கா இன்று உறக்கத்தில் சிரிக்கக் கூடும் அல்லது சிரித்துக்கொண்டே உறங்கக்கூடும் மகிழ்ச்சியில். ருக்மணியக்கா மட்டுமல்ல, பரமசிவன் அண்ணா, அதிசயமும் மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த கலவையான பாவனைகளை முகத்தில் கொண்டிருந்த மற்றப் பெண்களும், ஆண்களும் என தீபக் சில்க் வீவர்சின் எல்லா ஊழியர்களும்.   மலர்ச்சி M2 மாணவர் கோபி – பிரவீனாவின் புதிய… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

a rk 1 - Copy

ஏ ஆர் கிருஷ்ணன் என்ற மனிதனை இயற்கை அழைத்துக் கொண்டது.

  எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோல் தோன்றுமே, எல்லோரும் இருக்கும்போதும் யாருமே இல்லாதது போல் உணர்வோமே, அப்போது உடனே அழைத்து பேசுவதற்கு, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது உள்ளம் பூரித்து நிற்கும் அவ்வேளையில் உள்ளே ஒரு தனிமை உருவாகுமே, அப்போது உடனே அழைத்து பேசுவதற்கு, ஒரு பெரும் வெற்றி வரும்போது அதை பகிர்ந்து கொண்டாடுவதற்கு, …… (READ MORE)

பொரி கடலை

IMG-20170423-WA0143.jpg

அந்தப் புத்தகங்கள்…

ஏன் அதைத் தந்தார் என்னிடம் அந்த சித்தப்பா என்று தெரியவில்லை. தனக்குப் பிடித்த பகிரக்கூடிய ஒன்றை தனக்குப் பிடித்தவருக்கும் தருவோமே அப்படியிருக்கலாம். ஆனாலும் அது என் அப்போதைய வயதிற்கு மீறிய உள்ளடக்கம் கொண்டிருந்தது. மேல்நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ராஜவேலு சித்தப்பா ஏழாம் வகுப்பிற்குள்  நுழையும் என்னிடம் அதைத் தந்தார். முத்தையன் சித்தப்பா வாராவாரம் வாங்கிவரும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

சிட்டுக்குருவி1

சிட்டுக்குருவிகளை கொன்றவன்!

அதிகம் சம்பாதிக்கவேண்டுமென்ற அலட்டல்கள் அதிகமில்லா அக்காலமதில் சித்திரை உச்சத்திலும் … உக்கிர வெய்யில் உள்ளிறங்கமுடியா செக்கச்செவேர் ஓடுகள் வேய்ந்த வீட்டில் அறுத்த நெற்கதிர்களை அழகாகக் கட்டி உத்தரத்தில் உயரே தொங்க விட்டாள் பாட்டி அடுத்த அதிகாலை அதிசயமொன்று நடந்தது அகமே ‘கீச் கீச்’சால் நிறைந்தது அரண்டெழுந்ததில் என்னாழ் உறக்கம் கலைந்தது எங்கிருந்தோ வந்து சேர்ந்தன சின்னஞ்சிறிய… (READ MORE)

பொரி கடலை

, , , ,

horse_dog_swimming - Copy

என்ன கொடுத்தாலும் என்ன செய்தாலும் ஈடு செய்யமுடியவதில்லை…

செல்வி வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை நடத்தும் நாற்பத்தியிரண்டு வயது பெண்மணி. தனது கணவனோடு ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருக்கிறார். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த செல்விக்கு மூக்கினுள்ளே குடைச்சல் ஏற்பட்டு அலறி எழுந்து உட்காருகிறார். விடியும் வரை வலி பொறுக்க முடியாதென்று அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துமனைக்கு ஓடுகிறார்கள். விசாரித்து கேட்டு பரிசோதித்து ‘மூக்கு உள்ள சதை வளர்ந்திருக்கும்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

பசு

கோ மாதாவாம்… குல மாதாவாம்…

‘அய்யே… அறிவு இல்ல உனக்கு? ஒழுங்கா தின்னுட்டு ஒழுங்கா வாழ மாட்ட நீ? இப்படி வீணடிச்சு வச்சிருக்க, அறிவு கெட்ட ஜென்மம்! எப்படிதான் வாழப் போறயோ நீ? சிரிப்பா சிரிக்க போவுது உன் கதை.’ இது மனிதர்கள் மனிதர்களிடம் சொல்லும் அறிவுரை என்றுதானே நினைத்தீர்கள்.  இல்லை.  மாட்டிடம் சொல்லப் பட்ட அறிவுரை அது. ‘என்னது, மாட்டிடம்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

ompuri-1

கமல்ஹாசன் சொல்வதுபோல அவர் இன்னும் மறையவேயில்லை…

    தொண்ணூறுகளின் இறுதியில் வந்து இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் நான் பார்க்க நேரிட்டு என்னை மிகவும் கவர்ந்த ஒரு படம் ( நடிகர் சிரஞ்சீவியையும் இது மிகவும் கவர்ந்து விடவே, இந்த நல்ல படத்தின் கதையையும் சில காட்சிகளையும் அப்படியே எடுத்து மசாலா தடவி எண்ணையில் போட்டு வதக்கி பாடல்கள் சண்டைகள் என நிறைய சேர்த்துத்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

jesus

இயேசு பெருமானின் உள்ளத்து உயரத்தில் அசந்து போகிறேன்!

  வட இந்திய சிறு நகரம் ஒன்றிக்கு புதிதாக சென்ற ஒரு கணவனும் அவனது இளம் மனைவியும் அவ்வூரின் தெருவிலிறங்கி விலாசம் விசாரிக்கிறார்கள். இளம்பெண்ணைக் கண்ட ஒருவன் பின் புறத்திலிருந்து தவறாகத் தொட முயற்சிக்கிறான், அவளது துப்பட்டாவைப் பிடித்திழுக்கிறான். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று நியாயம் கேட்ட கணவனை அடிக்க வருகிறான் அவ்வூர் இளைஞனொருவன். அவனைத்… (READ MORE)

Religion, Self Help, பொரி கடலை

, , , , , ,

ஆன்மீக குருக்கள் செய்ய முடியாததை…

வந்தோர் அனைவரும் வரிசையாய் அமர்ந்து கண்மூடி மௌனமாய், ஒரு வித தியான நிலையில்… அட… ஆன்மீக குருக்கள் செய்ய முடியாததை கண் மருத்துவர்கள் செய்து விடுகிறார்கள், இரண்டு சொட்டு மருந்து போட்டு! #கண்மருத்துவமனை  :பரமன் பச்சைமுத்து சென்னை 07.12.2016 Www.ParamanIn.com

பொரி கடலை

,

man

அனுபவங்களால் ஆனவன் மனிதன்

வாழ்க்கை எல்லா மனிதர்களின் வாழ்விலேயும் எண்ணற்ற பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டேதான் இருக்கிறது. சில நிகழ்வுகள் கவனிக்கப்படுகின்றன. சில நிகழ்வுகள் வெளிச்சம் பெறாமலேயே போய் விடுகின்றன. அந்த நிகழ்வுகள் மனிதர்களை என்ன செய்கின்றன, அந்த நிகழ்வுகளுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பனவற்றைக் கொண்டே சிலசமயம் அவர்களது வாழ்வு மாறிவிகிறது. ஒவ்வொரு மனிதனும் சில பல அனுபவங்களால்… (READ MORE)

பொரி கடலை

,

e

எழுத்து என்பது…

எழுத்து என்பது நாம் எழுதி வருவதில்லை. அது எழுதுபவனின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. எழுதுபவனின் உள்மன அடுக்குகளில் படிந்திருக்கும் துகள்களை பூசிக்கொண்டு அது வெளி வருகிறது. இடம், நிலை, சுற்றுச்சூழல், காலம் என எதுவும் உண்மையில் அதைக் கொண்டு வருவதில்லை. மாறாக அதை வெளிப்பட வைக்கும் ஒத்த ஓர் அலைவரிசையில் உள்ளம் இருக்கும் தருணங்களில்… (READ MORE)

பொரி கடலை

பொள்ளாச்சி

மழை வந்தால் பனி இருக்காது என்பது மற்ற ஊர்களுக்கு எப்படியோ, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளுக்கு அது பொருந்தாது போல. நகரில் இறங்கும்போது ‘நேத்து முச்சூடும் பேஞ்சுதுங்க!’ என்று யாரோ சொன்னதை நம்பமுடியவில்லை. ‘சூரியன் வரட்டும், அப்புறம் போறேன் நான்!’ என்பதுபோல இறங்கி அப்படியே நகரின் மேலேயே நிற்கிறது பனி, ‘இப்போதைக்கு நான் வர்றதா இல்லையே!’… (READ MORE)

பொரி கடலை

paraman-trans-pollachi

இசை ஒரு மாய நதி…

பொள்ளாச்சியில் ‘வளர்ச்சிப் பாதை’ தொடங்குவதற்கு முன்பாக இளையராஜாவின் இசைத் துண்டு ஒன்றில் நாங்கள் கரைந்து கொண்டிருந்தோம். இருக்குமிடத்திலிருந்து எங்கேயோ ஓர் ஆழத்திற்கு எங்களை எடுத்துப் போய்விட்டது அந்த இசை. மூழ்கிக்கிடந்த போது முன்னே வந்து பதிவு செய்திருக்கிறார் படமெடுப்பவர். பதிவின் நோக்கம் படத்தை காட்டுவதல்ல; இசையின் ஆழம் என்னவெல்லாம் செய்கிறது என்பதை சொல்வது. இசை ஒரு… (READ MORE)

பொரி கடலை

aadukalam

தன் மீது நம்பிக்கை கொண்டவன்…

The one who beleives on himself will never hide, from where and whom he learnt what. How he sees things is his strength. அட்ட காப்பி அடிப்பவர்களெல்லாம் அசல்தான் என்பதாக காட்டிக்கொள்ளும் உலகில், மெக்சிகோவின் ‘அமோரஸ்பெரோஸ்’ நாய் சண்டையை மனதில் கொண்டு சேவல் சண்டையை செய்தேன் என்று… (READ MORE)

Self Help, பொரி கடலை

நடிகர் சூர்யாவின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த…

நடிகர் சூர்யாவின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த இளைஞர் என்ற அந்த செய்தி கவனம் ஈர்த்தது என்பதைவிட சூர்யாவின் மீதான மரியாதையை உயர்த்தியது என்றே சொல்வேன். அந்தப் பெண்மணி தன் காரில் பிரேக் போட்டார், பின்னே வந்த இளைஞரின் பைக் இடித்தது. இருபக்கமும் பாதிப்பு. வண்டியை நிறுத்தி சண்டை. சூரியா தாக்கினார் என்று அந்த… (READ MORE)

பொரி கடலை

சென்னைப் புத்தகக் கண்காட்சி

பெங்களூரில் அவ்வளவாக தமிழ் நூல்கள் கிடைக்காத அந்நாட்களில், அங்கிருந்து பயணித்து வந்து அள்ளிப் போவோம் நூல்களை. அமெரிக்காவிலிருந்து திரும்பி அப்படியே காயிதே மில்லத் கல்லூரியில் இருந்த கண்காட்சியில் புதையல்களை அள்ளிக் கொண்டு, நண்பர்களோடு இரவுக்காட்சி ‘ஆளவந்தான்’ பார்த்து விட்டு நள்ளிரவிற்கு மேல் தந்தை பெரியார் போக்குவரத்துக் கழக பேருந்து பிடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. இரண்டான்டுகளுக்கு… (READ MORE)

பொரி கடலை

சீனப் பயணி …

17 வருடங்கள் காடு, மலை, பேரறுவி, பேய்ப் பள்ளத்தாக்கு, ரத்தம் உறையச் செய்யும் குளிர், வழிப்பறி கொள்ளை, கொடிய மிருகங்கள், விஷ ஜந்துக்கள், வரும் வழிகளில் பிடித்து வைத்துக் கொண்டு விடமுடியாது என்று சட்டம் பேசிய மன்னர்கள், பசி, பாலைவனம், கடக்க முடியா நீர் மண்டலம், உயிருக்கு ஆபத்தான பேராசை பிடித்த மனிதர்கள் என எல்லாவற்றையும்… (READ MORE)

பொரி கடலை

Paraman Parotta Ooty

அக்னி நட்சத்திர வெய்யிலில்

அக்னி நட்சத்திர வெய்யிலில் அடுப்பைப் பற்ற வைத்து சத்துமாவைக் கொதிக்க வைத்து உருண்டை பிடிக்காமல் கிண்டிக் கிண்டி இறக்கி கஞ்சியாக்கும் போது… மனைவியின் மீது மரியாதை பெருகுகிறது! ‪#‎மனைவி‬ ஊரில் இல்லை.

பொரி கடலை