Tag Archive: Paraman Pachaimuthu

பிரார்த்தனை என்பது…

பிரார்த்தனை செய்வதே உங்கள் வேலை. தருவதா இல்லையா என்பது இறைவனின் வேலை. அதையே தருவான் அல்லது அதைவிட சிறப்பானதை பெரிதானதை இறைவன் தருவான். பிரார்த்தனை என்பது இறைவனோடு கொள்ளும் தொடர்பு. பிரார்த்தனை செய்யுங்கள், உங்களுக்காக, உற்றாருக்காக, உடன் இருப்போருக்காக, உலகத்தாருக்காக! உங்களுக்கு பிரார்த்தனை கை கூடட்டும் என்று பிரார்த்திக்கிறேன். – பரமன் பச்சைமுத்து

Spirituality

, , ,

தேசிய நெடுஞ்சாலையில் ஏ ஆர் ரஹ்மான் பாடல்களோடு…

எந்த பாடலைத் தந்தாலும் அதில் தன்னையே குழைத்து ஊற்றி சின்னதாய் சிரித்து, கொஞ்சி, அழுது, கர்ஜித்து விளாசி விடுவார் எஸ்பிபி என்பதைத் தாண்டி ரஹ்மானின் இசையும் அசரடிக்கிறது ‘அழகான ராட்சசியே’வில். அதனால்தான் ஹரிஹரன் குரலில் வரும் ‘குறுக்கு சிறுத்தவளே…’ என்னை இன்னமும் சொக்கிப் போக வைக்கிறது. அதுவும் ‘கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே’ எனும் முதல் சரணத்திற்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

IMG-20231229-WA0172

‘தொடங்கு… தொடர்… தொடுவாய் உச்சம்!’

‘எத்தனை எழுதினாலும் எழுத இன்னமும் இருக்கிறது!’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு எவ்வளவு எழுதினாலும், எத்தனை நூல்கள் எழுதியிருந்தாலும்கூட தன் எழுத்தை அச்சில் பார்க்கும் போது பேருவுகையும் பெருமகிழ்ச்சியும் பொங்குமாம். ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கே அப்படியென்றால், ‘நான் ஓர் எழுத்தாளன்தானா?!’ என்று என்னையே கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு, என் எழுத்து அச்சாகி நூலாக வந்தால்… (READ MORE)

Paraman's Book

, , , , , , , ,

கடுதாசி

எதில் எழுதப் பிடிக்கும் என்று எவரேனும் என்னைக் கேட்டால் ‘அஞ்சல் அட்டை’ என்பது என் பதிலாக இருக்கும். ‘ஷீஃபர்’ பிராண்ட் ‘இங்க் பால் பென்’ அதுவும் கருப்பு மையில் 1.0 அல்லது 0.8 அளவில் எழுதும் பேனா, அது இல்லையென்றால் குறைந்த பட்சம் ‘யூனிபால்’ தயாரிப்பின் யுஎம்153எஸ், யுபி157 அல்லது அதற்கும் மேலுள்ள 1.0 பேனாக்கள்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

wp-1687437768955522814222534623991.jpg

நினைவெல்லாம் நாரத்தை

கடாரங்காயை பார்க்கும் போதெல்லாம் ராஜராஜ சோழனும், நார்த்தங்காயை பார்க்கும் போதெல்லாம் மணக்குடியும் என் அம்மாவும் அப்பாவும் நினைவுக்கு வருவர் எனக்கு. கடாரங்காய்க்கும் நார்த்தம் காய்க்கும் வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு?  எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, குடை ஆரஞ்சு எனும் கூம்பு ஆரஞ்சு எனும் கமலா ஆரஞ்சு, நார்த்தம், கடாரம் எல்லாம் ஒரே வகையில்தான் வருகின்றனவாம் என்றாலும் அவைகள்… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-1686239896347.jpg

இப்படி தரலாமே திருமண பரிசுகள், அட…!

திருமணத்திற்கு வருவோர் மணமக்களுக்கு என்ன பரிசு பொருள் தருவர்? பேனா, கடிகாரம், நகை, பொன்னாடை, கண்ணாடி – பீங்கான் வேலைப்பாடுகள் கொண்ட அழகுப் பொருள்கள், சாமி சிலைகள், நூல்கள், இவைதானே? கோவையில் நடைபெற்ற நம் மலர்ச்சி மாணவர்கள் ஜவகர் சுப்ரமணியம் – பத்மாவதி தம்பதியினரின் மூத்த மகள் ஸ்வர்ணபிரபா திருமணத்திற்கு சென்றிருந்த எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , ,

wp-1684470137111.jpg

80 அடி நீளத் திமிங்கிலமும் 9 ஒளி ஆண்டுகள் தூர எல்பி 791-18 கிரகமும்

சோழமண்டல கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலத்தை கட்டி போராடி இழுத்துச் சென்று ஆழ் கடலில் விட்டனர் நூறு மீனவர்கள் என்றொரு செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது சென்ற வாரம்.  ‘நூறு மீனவர்களா!’ என்று விவரம் பார்த்ததும் வியப்பு வந்தது. திமிங்கிலத்தின் நீளம் 80 அடி! நமக்குப் பத்துக் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கடலுக்குள் என்னென்னவோ இருக்கின்றன. கடல் என்பது… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , , , ,

தெற்கில் வாழும் குமரியடி பாப்பா

நான்காம் வகுப்புப் படிக்கும் போது, நண்பர்களுக்கு பொருள்களை பரிசாகத் தரலாமென்ற பிரஞ்ஞை கூட எனக்கு இல்லாத அவ்வயதில், பலராம ஐயர் வீட்டு நட்ராஜ் ‘சிவா! எங்கப்பா வாங்கிட்டு வந்தாங்க. இந்தா இது உனக்குதான்!’ என்று கண்ணாடியும் மரச்சட்டமும் போடப்பட்ட, ஒரு கையளவு உயர அகலம் கொண்ட அம்மன் படமொன்றைத் தந்தான். மணக்குடியிலிருந்து சபரிமலைக்குப் போகிறவர்களின் குருசாமியாக… (READ MORE)

Paraman Touring

, , , , , , ,

wp-1678433210475.jpg

ஒரு ஜீவன்தான், உன் பாடல்தான்…

கணவனை புலியடித்துக் கொன்று விட, காடும் காட்டு வாழ்க்கையும் கசந்து போன காட்டுநாயக்கன் பழங்குடி இன பெல்லி, அதே முதுமலை புலிகள் காப்பக மலை காப்புக்காட்டுப் பகுதியில் இருக்கும் பொம்மனோடு இணையத் தொடங்குகையில் அவர்களது வாழ்வுக்குள், மின்சார வேலியில் அடிபட்டு பெற்றோர்கள் இறந்து போய், என்ன ஏது என்று புரியாத சோகத்திலிருக்கும் சிறு ரகு வருகிறான். … (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ… : மலர்ச்சி ஃபவுண்டேஷன் + பிஎன்ஐ கோரல், புதுச்சேரி

‘கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை!’ என்று எழுதிய ஒளவை, இன்றிருந்தால், ‘கொடிது கொடிது புற்று கொடிது, அதனினும் கொடிது குழந்தைகளுக்கு புற்று!’ என்று எழிதியிருப்பார். என்ன எது என்று தங்களைப் பற்றியே தனக்கு வந்துள்ள நோய் பற்றியோ விவரம் அறிய முடியா குழந்தைகளுக்கு புற்று வந்துள்ளதை காண்பது கொடுமை. பெங்களூருவிலிருந்து,… (READ MORE)

MALARCHI Foundation

, , , , , , , , , ,

தகதக தகதகவென ஆடவா…

‘தகதக தகதகவென ஆடவாசிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…’ என் தந்தை மேடைகளில் அதிகம் பாடிய பாடல் இது. சிவாஜி கணேசனுக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ மேடை நாடகம் போல, என் தந்தைக்கு ‘காரைக்கால் அம்மையார்’.  1970களின் இறுதியிலேயே ஒரு வில்லுப்பாட்டு இசைக் குழுவைத் தொடங்கி சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்தார் ஆரம்பப் பள்ளி ஆசிரியரான என் தந்தை. கீழமணக்குடி… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , ,

முன் உழைப்பு

‘ஜக்கியை பதற வைத்து விட்டார் சமஸ்!’ ‘சமஸின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் தந்துள்ளார் ஜக்கி!’ என்றெல்லாம் இரு வகையாக செய்யப்படும் விவாதங்களுக்கு வெளியே நின்று ஒன்றைப் பார்க்கிறேன். ஒருவரை நேர்காணல் செய்யும் முன் அவரைப் பற்றி மேய்ந்து ஆராய்ந்து விவரம் சேகரித்துக் கொண்டு போவது மொத்த நேர்காணலையும் சத்தானதாக மாற்றிவிடும். கேள்விகளும் ஆழமாகும், கடைவதால் வரும்… (READ MORE)

பொரி கடலை

, ,

wp-1674269527392.jpg

பூம்புகார் சிந்துசமவெளிக்கும் முந்தைய உலகின் முதன் 15,000 ஆண்டுகள் பழமையான நகரம்! : ஆய்வறிக்கை

2,500 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னர்களால் நிறுவபட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மறைந்ததாக சொல்லப்படும் பூம்புகார் பற்றிய அகழ்வாராய்ச்சி ஆய்வு திட்ட குழுவின் புதிய தகவல் விழிகளை விரிய வைத்து வாயைப் பிளக்க வைக்கிறது. பூம்புகார் நகரத்தின் வயது 15,000 ஆண்டுகள்!!!! 15,000 ஆண்டுகள் பழமையான நகரம், 70 – 80 கப்பல்களை நிறுத்துமளவிற்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , ,

இயக்குநர் வசந்த் : புத்தகக் கண்காட்சியில்

இயக்குநர் சிகரம் பாலசந்தர் சாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்பதைத் தாண்டி, ‘எஸ்பிபியை இப்படிப் பார்க்கிறாரே இவர்!’ என்று வியக்க வைத்து, அதை நமக்கும் கடத்தி எஸ்பிபி மீதான நம் பார்வையின் அடர்த்தியையும் கூட்டிவிட்டுப் போன திரைப்பட இயக்குநர் வசந்த் அவர்களோடு, நேற்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  ஜீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கொண்ட அளவளாவுதல் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

wp-1618899909136.jpg

‘என்னாது, சம்மர்ல காஃபி குடிக்கக் கூடாதா? அப்புறம்?’

valarchi Summer கேள்வி: கோடையில் காஃபி அதிகம் வேண்டாம் என்று ஒரு முறை நீங்கள் சொன்னதாக நினைவு. குறைத்துக் கொள்ள வேண்டுமா, குடிக்கவே கூடாதா? பரமன்: அடிப்படையை சொல்கிறேன். குறைத்துக் கொள்வதா, குடிக்கவே கூடாதா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். கோடையில் வெப்பம் மிக உயர்ந்து நிற்கும். நம் உடலும் சூடாகும். சரியான வெப்பநிலையில் உடலை… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , ,

wp-1618410412075.jpg

மிர்தாத்தின் புத்தகம் – மிக்கேய்ல் நைமி : பரமன் பச்சைமுத்து

முன் குறிப்பு: ‘உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்று எனக்கு அனுமதிக்கப்பட்ட புத்தகத்தின் பகுதி இதோடு முடிகிறது… மிச்சத்திற்கான காலம் இன்னும் வரவில்லை!’  என்று எங்கோ லெபனானில் ஒரு மூலையில் மிக்கேய்ல் நைமி எழுதி வைத்ததை ‘இதை படியுங்கள், ஒரு முறையல்ல 10,000 முறை படியுங்கள்!’ என்று  வெளி உலகிற்கு சத்தமாக சொல்லிஇப்படியொரு நூலை உலகிற்குக் காட்டிய ஓஷோவிற்கு… (READ MORE)

Books Review

, , , , , , , , , , ,

wp-1617602394335.jpg

குழந்தைகள்

அவர்கள் பார்வை கூட வேண்டாம், நம் பார்வையில் அவர்கள் பட்டாலே போதும், நம்முள் உள்ளே பூக்களும் வெளியே புன்னகையும் பூக்கின்றன. எத்தனை இறுக்கமான மனநிலையையும் சூழலையும், ‘ப்பூவா… மம்மம்’ சொல்லி ‘தத்தக்கா பித்தக்கா’ நடை போடும் ஒரு குழந்தை உடைத்துத் தகர்த்தி விடும். தூக்க முற்படும் போது ஒரு குழந்தை நம் மீது தாவுகிறது. உண்மையில்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , , , , , ,

எப்படி சொன்னார் சுஜாதா என்பது பெரிய வியப்பு

கேள்வி: ஒரு பக்கம் இப்படி வரலாற்றை எடுத்துக் கொண்டு நிகழ்வுகளை சரியாக தந்து அதற்கு இடையில் கதாபாத்திரங்களை வைத்து கதை செய்து பெரிய விருதுகளும் பாராட்டுகளும் செய்கிறீர்கள். திடீரென்று அதற்கு இடையில் இணை பால்வெளி வேற்று கிரக கதைக்களங்களை ‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’ ‘அமில தேவதைகள்’ போன்ற அறிவியல் புனை கதைகளையும் தருகிறீர்கள்! சுஜாதாவுக்கு அடுத்து… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , ,

wp-1605512815279.jpg

‘வைரமுத்து சிறுகதைகள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இருநூறு பக்க நாவல் எழுதுவது எளிது, அதை வெட்டிச் சுருக்கி சிறுகதையாக்குவது பெருங்காரியம் எனும் பொருள்பட சுஜாதா சொல்லியிருந்தார் எப்போதோ.  ஒவ்வொரு சிறுகதையும் உண்மையில் ஒரு நாவலுக்கான உள்ளடக்கமே.  ஒரு பாத்திரம் அல்லது சில பாத்திரங்கள், ஒரு நிகழ்வு இவற்றை வைத்துக் கொண்டு சில பக்கங்களில் வாசிக்கும் வாசகனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அனுபவம் தர… (READ MORE)

Books Review

, , , ,

wp-1589609035155372820356105562670.jpg

வைரமுத்து அவர்களோடு சில கேள்விகள்…

கனவு என்பது நம் விருப்பம்தானே. எதையும் எப்படியும் காணலாமே!  கவிப்பேரரசு வைரமுத்துவின் எதிரில் அமர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்டு விடை வாங்க வேண்டுமென்பது என் பலநாள் கனவு. காலை விடியலிலேயே கதவைத் தட்டிக்கொண்டு வந்து நின்றது வாய்ப்பு, ‘ஒரு கேள்வி கேட்கலாம் பரமன் நீஙக்கள்!’ என்ற குறிப்போடு. விடவா முடியும்! நேரலையில் வெப்பினாரில் கலந்து கொண்டு… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, , , , , ,

wp-15870241563715704037430440531192.jpg

ஜெயகாந்தனின் – ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ – நூல் மீள் வாசிப்பு : பரமன் பச்சைமுத்து

வேட்டியை இடுப்பில் கட்டாமல்  போர்வையைப் போல் மேலுக்குப் போர்த்திக் கொண்டு கோவணத்துடன் திரியும் பல மனிதர்களையும் சில தெருக்களையும் கொண்டபேருந்து கூட நுழையாத ஒரு படு சிற்றூருக்கு நடை உடை வண்ணம் வடிவம் வாழ்க்கை முறை என அந்த ஊருக்கு எதிலுமே சம்பந்தமுமில்லாத வகை மனிதனொருவன் வருகிறான்.   அவன், ஒரு மணியக்காரர் வீடு, போஸ்ட்(ஆஃபீஸ்) ஐயர்… (READ MORE)

Books Review

, , , , , , ,

மயிலாடுதுறை – மலர்ச்சி – பிஸினஸ் முதல்வன்

மலர்ச்சி வணக்கம். சுகாதாரத்துறையும் அரசும் எடுத்து வரும் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நடந்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் காத்திட வேண்டிய தருணமிது என்பதால், *மயிலாடுதுறையில் மார்ச் 29 அன்று நடைபெற இருந்த ‘பிசினஸ் முதல்வன்’ மலர்ச்சி பயிலரங்க நிகழ்ச்சி, 95% பாஸ்கள் விற்று விட்ட போதிலும், தேதி குறிப்பிடப்படாமல்… (READ MORE)

Paraman's Program

, , , , , , , ,

என் குரங்காசனக் காரணம்…

வள்ளியம்மைப் பாட்டி நல்ல உயரமும் திடகாத்திரமான உடலமைப்பும் கொண்டவர். உழவு தவிர நெல் விதை விதைத்தல்,  நடவு, களை பறித்தல், அறுவடை, உளுந்து – பயிறு விதைத்தல், உளுத்தஞ்செடி பிடுங்குதல் என எல்லா வேலைகளிலும் ஆட்களோடு சேர்ந்து தானும் இறங்கிச் செய்பவர். அறுவடை முடிந்த கோடை கால வயல்களில் மாடுகளைக் கூட்டிப் போய் மேய விடுபவர்…. (READ MORE)

Manakkudi Manithargal, Spirituality, பொரி கடலை

, , , , , , , , ,

IMG_20200105_215119_469.jpg

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில்…

ஒரு நாள் அல்ல, ஒவ்வொரு முறையும் வாழ்வின் வேறுவேறு அத்தியாயங்களில் என்னை நெகிழ வைக்கிறார் நடிகர் சூர்யா. அகரம் அறக்கட்டளையோடு கொஞ்சோண்டு தொடர்பு ( மாணவர்களுக்கு சில பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளேன்) உள்ளவன் என்பதால் ஓரளவு தெரியும், தனது சினிமா சங்கதிகளை கொஞ்சம் கூட உள்ளே கொண்டுவராமல் அறக்கட்டளையின் நிறுவனராகவே இருப்பார், நடப்பார் என்று. இன்று… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!

சில ஆசனங்கள், சில மூச்சுப்பயிற்சிகளை செய்வதற்கு முன்பு இருந்த உடல் உள்ளத்து நிலையும் அவற்றை செய்த பின்பு இருக்கும் உடல் உள்ளத்தின் நிலையும் வேறாக மாறிவிடுகின்றன. யோகப்பயிற்சியை கண்டு பிடித்துத் தந்தவன் உண்மையில் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்! வியந்து போகிறேன்! – பரமன் பச்சைமுத்து 23.08.2019

Uncategorized

, , ,

images-255619014787562127170..jpg

உலகிலேயே மிகச்சிறந்த இடம்…

பூங்கானத்தாயா என்று பேரப்பிள்ளைகளால் அழைக்கப்பட்ட பூங்காவனம் கிழவி இறக்கும் வரை படுக்கவேயில்லை. கம்பும் கேழ்வரகும் களியும் உண்ட திருவண்ணாமலைச் சீமையின் அந்தக் காலத்து உடம்பு கிழவிக்கு, கடைசி நாள் வரை நடமாடிக் கொண்டேயிருந்தது. வயதானவர்களுக்கு வரும் அல்ஜைமர் என்னும் மறதி நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாத அந்நாளில் கிழவி அந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது. எங்காவது புறப்பட்டு நடந்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

, , , , ,

அவேங்கேர்ஸ்

அவெஞ்செர்ஸ் எண்டு கேம் : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

” // எல்லாம் முடிந்தது என்று எல்லோரும் வாழும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ‘ஒரு எலி அசைந்ததால் ஓர் எறும்பு எழுகிறது, எறும்பின் எழலால் மறு எழுச்சி பெறுகிறது உலகம்’ // “ ………….. பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட சக்தி கற்களை போராடிக் கைப்பற்றி தனது கை விரல்களுக்கு மேல் பதித்துக் கொண்ட… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

காடை

‘தாய்க் காடை’ : பரமன் பச்சைமுத்து

‘மாமா… இதெல்லாம் எதுக்கு தட்டனும்?’ மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஆதிரையான் மாமாவிடம் கேட்டான். மாமாவோடு இருப்பதென்றால் ஆதிரையானுக்கு அலாதி விருப்பம், கூடவே வயலுக்கு போவதென்றால் கேட்கவா வேண்டும். அந்தி சாயும் வேளையில் தகர டப்பாக்களையும், தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சைக்கிளில் ஆதிரையானை வயலுக்குக் கூட்டி வந்தார் மாமா. மணக்குடியிலிருந்து தச்சக்காடு அய்யனார் கோவில் வரை சைக்கிள்… (READ MORE)

Manakkudi Manithargal, ஆ...!, பொரி கடலை

, , , , ,

20190206_0633175241252973266149949.jpg

ஓரிடத்தில் விதைத்தது ஓராறு இடங்களில் முளைக்கிறது

வளர்ந்து வரும் மகளிடம் வளர்க்கலாம் ஒரு பண்பையென்று வளர்த்தேன் ஓராசை கொஞ்சி மகளையழைத்து கொஞ்சம் மண் கொஞ்சம் விதைகள் ஈந்தேன் சிறு தொட்டியில் மண்ணையிட்டு சிறு மகளின் கைகளினால் சிறு விதைகளை ஊன்றினேன் வெண்டை வெடித்து முளைத்தது வீடு மகிழ்ந்து திளைத்தது இன்முகம் வந்தது – படம் இன்ஸ்டாக்ராமில் பறந்தது தோழிகளுக்கெல்லாம் ஆசையாம் தோட்டமொன்று மாடியில்… (READ MORE)

Uncategorized

, ,

aquaman-movie-poster

திரை விமர்சனம் : ‘அக்வா மேன்’ : பரமன் பச்சைமுத்து

    நாட்டின் ஓரத்தில் இருக்கும் ஒரு கலங்கரை விளக்கத்தின் காப்பாளரின் கண்களில், கரையில் அடிபட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு பெண் அகப்படுகிறாள். அன்பும், அரவணைப்பும், மருந்தும் புகட்டப்பட்டு  சுயநினைவு பெற்று அவள் எழுந்து உட்கார்ந்ததும் அவள் வேறு ஓர் உலகத்தை சேர்ந்தவள் என்றும், கடலின் அடியில் இருக்கும் அட்லாண்டிஸ் தேசத்தின் ராணி ‘அட்லாண்டா’ அவள் என்றும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

Chekka-Chivantha-Vaanam-Movie-Posters

‘செக்கச் சிவந்த வானம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஆளு, அம்பு, சேனை குவித்து ஊரையே ஆளும் தாதா பெரியவர் சேனாதிபதியின் மெத்துமெத்தென்ற பெரிய இருக்கையில் உட்கார்ந்து கொள்ள ஒவ்வொருக்கும் உள்ளூர ஆசை. வல்லிய பெரியவரைச் சாய்த்து விட தாக்குதல் நடக்கிறது. பெரியவரைக் கொல்ல முயன்றது யார்? உள்ளூரின் போட்டி தாதா சின்னப்பதாசா, இல்லை வெளியூரில் இருக்கும் பிள்ளைகளா, பெரியவரைக் கொன்றால் யாருக்கு ஆதாயம் என்ற… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

IMG-20180709-WA0108.jpg

ஓங்கி உயர ஆசை – பரமன் பச்சைமுத்து

‘ஓங்கி உயர ஆசை’ – பரமன் பச்சைமுத்து எனது அடுத்த நூல். எழுத்துப் பிரசுரம் / ஜீரோடிகிரி பப்ளிஷிங் வெளியீடு. விரைவில்…. https://m.facebook.com/story.php?story_fbid=10216557528196615&id=1410976678

Paraman's Book

, , , , , ,

images-7.jpeg

பெண் குயில், பட்டாம் பூச்சி… கருவேப்பிலை மரம்

குயிலென்றால் கருப்பாயிருக்கும், கன்னங்கரேலென்று இருக்கும் என்றே நினைத்திருந்தேன். நாற்பது ஆண்டுகளாக இப்படி நினைத்தே வாழ்ந்திருக்கிறேன் என்று நினைக்கையில் கொஞ்சம் அவமானமாக இருக்கிறது, வெட்கம் பிடுங்கித் தின்கிறது இன்னும் என்னை. ‘பெண் குயில் பாத்திருக்கீங்களா? அங்க பாருங்க, வந்து உட்காந்திருக்கு!’ என்று பால்கனிக்கு வெளியே பார்த்தவாறே அத்தை அவசரத்தை குரலில் ஏற்றி அதேசமயம் அதிராமல் மெல்லியதாய் கூப்பிட்ட… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, , , ,

kaala-3600x2025-rajnikanth-karikaalan-tamil-telugu-hindi-4k-2018-8104

‘காலா’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

    சிவப்புத் திலகம் தீட்டிக்கொண்டு ‘தூய்மை மும்பை, ஒரே மும்பை’ ‘டிஜிட்டல் மாநிலம்’ என்று இயங்கும் ராமனை துதிக்கும் அதிகார வர்க்கத்தினர், அவர்களது கண்ணிற்கு கருப்பாக அழுக்காக தெரியும் ராவணனையும் அவனது மக்களையும் அழித்து அவர்களது நிலத்தை கைக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்ற களத்தில் திரைக்கதை பின்னி  ரஜினியையும் நானா படேகரையும் வைத்து ப.ரஞ்சித் தந்திருக்கும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

இலங்கை – கட்டுரை நிறைவுப் பகுதி

‘நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி, தாரிடை உறங்கும் வண்டு…’ என்று கோசல நாட்டைப் பற்றிக் கம்ப நாட்டாழ்வான் சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது இலங்கையின் குறுக்கே பயணிக்கும் போது, அப்படி ஒரு செழிப்பு. ‘கேரளாவைப் போல் இருக்கிறதே!’ என்று தொடக்கத்தில் தோன்றினாலும், அதை விட செழிப்பான சூழல் என்று போகப்போக உணர முடிகிறது. அறுவடை… (READ MORE)

Uncategorized

, ,

இலங்கை ‘கதிர்காமக் கேள்வி!’

தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் கதைகளாலும் பின்னப்படும் நம்பிக்கைகளாலுமே தலங்களும் அதன் கடவுளர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ‘கதிர்காமத்துல விபூதி செய்யறது இல்ல. அங்க விபூதி வெளையுது. மலையிலேருந்து வெட்டி எடுக்கறாங்க!’ – இது என் ஐந்தாம் வகுப்புக் கோடை விடுமுறையின் போது இலங்கை போய் வந்த என் அப்பா என்னிடம் சொன்னது. ‘எல்லா ஊரிலும் நேரில் போய்… (READ MORE)

ParamanInSriLanka

, , ,

இலங்கை – இலை அப்பம்

இலை அப்பம் வேணுமா? கதிர்காமத்திலிருந்து கொழும்புவை நோக்கிய சாலைப் பயணம் கொஞ்சம் நீண்டதுதான். ஐந்து மணி நேரங்கள் பிடிக்கும். ஒரே பயணத்தில் வியர்க்க வைக்கும் வெயில், வாகனம் ஓட்ட பார்வை மறைக்குமளவிற்கு ‘மவனே… வச்சுக்கோ!’ என்று அடித்துப் பெய்யும் மழை, குளுமை என எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. இருமங்கிலும் பெரும் நீர்நிலைகள், மலைகள், வயல்கள், ரப்பர்… (READ MORE)

ParamanInSriLanka

, , , , ,

இலங்கையின் நெல் வயல்கள்

நீர் வளம் மிகுந்த இலங்கையின் நெல் வயல்கள். நெல் வயல்களில் எருவிட்டு உழுது ( இதன் பெயர் ‘புழுதி ஏர்), நீர் பாய்ச்சி ஊற வைத்து திரும்பவும் ஏர் உழுது சேறாக்கி மட்டப் பலகையை வைத்து சேற்றை ஒரே சீராக்கும் பழக்கம் சோழ தேசத்தில் இன்றும் உண்டு. ‘பறம்படித்தல்’ என்று பெயர் அதற்கு. காவிரி பொய்க்காத… (READ MORE)

ParamanInSriLanka

, , , ,

avengers

திரை விமர்சனம் – ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ : பரமன் பச்சைமுத்து:

    ஏழு கடலுக்கு அப்பால், எட்டாவது மலையையொட்டிய பள்ளத்தாக்கில், கோமதி நதியின் முகத்துவாரத்தைத் தாண்டி இருக்கும் சமவெளியையொட்டிய பகுதியில் வாழும் கந்தரவர்களின் ஒருவனின் நெற்றியில் என உலகின் நான்கு சக்தி மிகுந்த கற்கள் இருக்கின்றன. எப்படியாவது அந்தக் கற்களையெல்லாம் எடுத்து வந்து தங்கக் காப்பில்  பதிந்து கொண்டு அதை வலது கையில் அணிந்து கொண்டால்,… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

முத்தத்தி – நீச்சல்

‘பாபா’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? எதனை நினைத்தாலும் அது உடனேயே இப்போதே நடந்து விடவேண்டும் என்ற மனநிலை கொண்ட பாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கும் ஆஷிஸ் வித்யார்த்தி ஏற்று நடித்திருக்கும் வில்லன் பாத்திரம். ‘இப்போ ராமசாமி’என்ற பெயர் கொண்ட அவர் அடிக்கடி ‘இப்போ…இப்போ… இப்போ!’ என்று பரபரத்துக்கொண்டே இருப்பார். ராமு பெருமாளும், முகுந்தனும் நானும் அந்நாட்களில் கிட்டத்தட்ட இப்போ ராமசாமிகளாகவே… (READ MORE)

Uncategorized

, , , , ,

யாரைக் குற்றம் சொல்ல…

மன்னம்பந்தலில் கல்லூரி விடுதியின் பின்பக்க வேலி திறந்து நடந்தால் வாழைக் கொல்லை. வாழைக் கொல்லையை ஊடறுத்து கொஞ்சம் போனால் எப்போதும் நீரோடும் காவிரி. இப்படியொரு வழியிருக்கிறதென்று எனக்கு ‘கேட்டீ’தான் எனக்குக் காட்டினார். பெண்ணாடம் பழனிவேலு, இன்னும் சிலரோடு நாங்கள் காவிரிக்குள் பாய்ந்து ஊறித் திளைத்து மகிழ்வோம். நீச்சல் தெரியா நெய்வேலி ஜமுக்குப் பாண்டியன் ஆழமில்லா கரையோரம்… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, ,

மனித மன நிமிர்த்திகள்…

ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த், பேட்மிட்டன், டென்னிஸ் என்று தனி மனித ஆற்றலின் எல்லை உடைக்கும் விளையாட்டுக்கள் என்னுள் உற்சாகத்தை ஊற்றி என்னை முழுதும் உயிர்ப்பித்து விடுகின்றன. இந்த மாதிரி நேரங்களில் என்னால் உலகையே மறந்து விடக் கூட முடிகிறது. ஒரு நாள் இவற்றை நேரில் பார்த்து ரசிக்க வேண்டும். எவ்வளவு உழைத்திருப்பார்கள் இந்நிலை கைவர! அடுத்த மனிதனுக்கு… (READ MORE)

Self Help

, , , , , , , , , , ,

screenshot_20180330-143804791243021.jpg

ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’

‘ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’ என் அடுக்ககத்தின் அடித்தளத்தில் மின் தூக்கிக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்மணி அருகிலிருந்த சுவற்றிடம் தன் அங்கலாய்ப்பைக் கொட்டிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டே இரண்டாவது மாடி நோக்கி நடக்க படிகளில் ஏறுகிறேன் ‘மிஸ்டர் கூல்’ஆக. திருவண்ணாமலை செங்கத்தின் வெக்கை உமிழும் 41 டிகிரியையே பார்த்தவனுக்கு, சென்னை ஆர் ஏ புரத்தின்… (READ MORE)

Self Help, Uncategorized

, , , ,

சரணடையும் பொழுதில்…

அதிகாலையிலெழுந்து அவனை சரணடைவதில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது. பாசுரங்கள், பதிகங்கள், பாமாலைகளென்ற எந்த சத்தங்களுமின்றி, எதுவுமிலா இவன் எல்லாமுமான அவனை நோக்கி வெறுமனே இருத்தலிலிருந்து குவிப்பது ஓர் உணர்வின் உன்னதம். அங்கே கிடைக்கும் பிணைப்பு அவனருள்! ஆழ்வோம்! #தவம் #தியானம் #சரணடைதல் – பரமன் பச்சைமுத்து திருவண்ணாமலை 31.03.2018 www.ParamanIn.com

Spirituality

, , , , , , , ,

shape of water - Copy

‘ த ஷேப் ஆஃப் வாட்டர்’ – அன்பின் வழியது ‘உயிர் நிலை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அவள் (வாய்) பேசா மடந்தை. எவ்வளவோ பேர் வாழும் இவ்வளவு பெரிய உலகில் தனியாகவே இருக்கிறாளவள். அமெரிக்கா – ரஷ்ய பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த அந்தக்காலத்தில், ஒரு வார்த்தைக் கூட பேசாத எலிசா என்னும் அவள் எப்போதும் எதைப்பற்றியாவது தொணத்தொணவென்று பேசிக்கொண்டே இருக்கும் செல்டாவுடன்   அரசின் ரகசிய ஆய்வுக்கூடமொன்றில் சுத்தம் செய்பவளாக தன் வாழ்க்கையை ஓட்டுகிறாள்…. (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

யாரை எங்கே இட்டுச் சென்று எங்கே முடிக்கிறது வாழ்க்கை என்பது பெரும்புதிர்…

சிறுவனாக இருந்த போது அக்கா கூட்டிச் சென்று கீரப்பாளையம் விஆர்கே டாக்கீசில் காட்டிய படத்தில்தான் முதன்முதலில் ஸ்ரீதேவியை பார்த்தேன் என்று நினைக்கிறேன். அதில் வரும் ‘பெயரைச் சொல்லவா அது நியாயமாகுமா!’ பாடல் என் மனங்கவர்ந்த பாடல். சென்ற வாரம் கூட ஓர் இரவுப்பயணத்தில் முணுமுணுத்தப் பாடல். என்னைப் போல் பலருக்கு ‘காற்றில் எந்தன் கீதம்…’ என்ற… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

vetrivagaiAdvt - Copy

வெற்றி வாகை: பரமன் பச்சைமுத்துவின் புதிய நூல் ‘வெற்றி வாகை’

முன்னுரை: இரண்டாம் வகுப்புப் படிக்கும் போது எப்படியாவது அப்பாவிடம் இருபது பைசா பெற்று ஓடிச்சென்று குணசேகரன் கடையில் அதைத் தந்து கை நிறைய தேன் மிட்டாய் வாங்கி வாயில் போட்டு அது கரைவதை உணர்வது வெற்றியாகப் பட்டது. வளர்ந்த போது, வெள்ளம் புரண்டு ஓடும் மானம்பாத்தான் வாய்க்காலில் மதகின் முன்னே விரைந்து வரும் நீரை எதிர்த்து… (READ MORE)

Paraman's Book

, , , , , , , , , ,

bruce_lee

ப்ரூஸ் லீ அதில் ஒருவர்…

சிறு வயதில் தொலைக்காட்சி காண்கின்ற அனுபவங்கள் எதுவுமில்லாமலேயேதான் வளர்ந்தேனென்றாலும், அவ்வப்போது மாட்டு வண்டியில் அம்மாவோடு பயணித்து டூரிங் டாக்கீஸில் சிவாஜி முத்துராமன் திரைப்படங்கள் பார்த்தே வளர்ந்தேன். என் வாழ்வில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியவை என்றால் அவை பதின்மவயதில் செம்பனார் கோவில் சிம்ப்ளஸ் திரையரங்கம் மற்றும் சிதம்பரம் லேனா தியேட்டரிலிருந்து என்னுள் நுழைந்த புரூஸ்லீ, ஜாக்கி சான்… (READ MORE)

பொரி கடலை

, , ,

எத்தனையோ கேள்விகள் உணர்வுகள் நம் உள்ளே உருவாகி உள்ளத்தில் தொக்கி நிற்கின்றன

ஓடிக்கொண்டேயிருக்கும் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளிலும் நிகழ்ந்தேறும் எத்தனையோ நிகழ்வுகளினால் எத்தனையோ கேள்விகள் உணர்வுகள் நம் உள்ளே உருவாகி உள்ளத்தில் தொக்கி நிற்கின்றன. சில வினாக்களையும் உணர்வுகளையும் நிதானித்து கண்டறிந்து கொள்கிறோம். சில கவனம் பெறாமலேயே உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில் கிடக்கின்றன. வேறு யாரோ ஒருவர் அதே உணர்வை அல்லது அதே வினாவை வெளிப்படுத்தும்போது,… (READ MORE)

Media Published, VALARCHI Tamil Monthly

, , ,

Emerald Book launch

‘இண்டஸ் வ்வேஆலி தமில் சிவைலைசேஷன்’ நூல் வெளியீடு

வாழ்க்கை சில நேரங்களில் எதிர்பாராத இன்ப அதிர்சிகளைத் தந்து விடுகிறது. உலகத் தமிழாராட்சி கழகத்தின் முனைவர் மருதநாயகம், தமிழ்ப் பேராசிரியர் – இலக்கியத் திறனாய்வாளர் – கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை ( இதர வட்டெழுத்து – பிரம்மி எழுத்து – குறியீடுகள் உட்பட) எப்படிப் படிப்பது… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

aram1

‘அறம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

உப்பு நீர் சூழ்ந்த ஒரு காயல் பிரதேசத்தில் குடிக்க ஒரு சொட்டு நீர் இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்கு வறண்ட பூமியில் முள் வெட்டியும் உப்பங்கழியில் கிளிஞ்சல் அள்ளியும் பிழைப்பு நடத்தும் குடும்பத்தின் குழந்தையின் உயிருக்கு பிரச்சினை என்று வந்து விட்டால், பள்ளிக் கட்டணத்திற்கே சீட்டு எடுத்து செலவு செய்யும் அவர்களால் குழந்தையை காக்க என்ன செய்ய… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே. குமாரவேல் அருமையான மனிதர்

      பெரிய மனிதர்கள் வெற்றியாளர்கள் மிக எளிமையாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் உற்சாகமாக இருக்கிறார்கள். அடுத்த சக மனிதனை உற்றுக் கவனிக்கிறார்கள், மதிக்கிறார்கள், அவனிடமிருந்து கற்க முயலுகிறார்கள். இந்தியாவின் வர்த்தகத்தில் பெரும் மாற்றம் புரிந்தவர் என ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்படுபவரும் ‘சாஷே’ என்ற ஒன்றை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவருமான சின்னிக் கிருஷ்ணன் அவர்களின் புதல்வரும், வெல்வெட்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

20171112_105758806489332.jpg

இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?

‘இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?’ பரி கேட்ட இந்த கேள்வி அறியாமையால் வந்ததல்ல. கண்ணின் முன்னே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கடல் போல் நிறைந்திருக்கும் இப்படி ஒரு ஏரியை கண்டத்தில் எழுந்த வியப்பு. ‘இல்ல பரி, காஸ்பியன் இருக்கு. அதுக்கப்புறம் ஆப்பிரிக்காவின் லேக் சுப்பீரியர், விக்டோரியா ஏரின்னு நிறைய இருக்கு!’ என்று சொல்லவில்லை…. (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

Valarchipaathai - Copy

இந்த மாணவர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இயங்கலாம்!

  வாழ்வில் சில சங்கதிகள் ‘மேஜிக்’கானவை. எப்படி என்று விளக்கவோ விவரிக்கவோ முடியாது! அனுபவித்தவர்களால் உணர மட்டுமே முடியும். கல்லூரிப் பருவத்து செல்வ மகன் நித்தின் நன்பனொருவனது காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிர் துறந்தான். தாங்க முடியா இழப்பு, பெற்ற அந்தத் தாய் உடைந்து போனாள். அந்த நிகழ்வு அந்தப் பெண்மணியை தாங்க… (READ MORE)

Paraman's Program

, , , ,

பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறுவிதமாகவும் தெரியும் காடுகளைப் போலவே ரயிலும்…

ரயில் பயணம் ஒரு சுகம். பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறுவிதமாகவும் தெரியும் காடுகளைப் போலவே ரயிலும் இரவில் வேறு வடிவம் கொண்டுவிடுகிறது. பகல் முழுக்கத் தட தடவென்று உற்சாக குவியலாக ஓடிய அதே ரயில் இரவில் ஒரு தொட்டிலைப் போல வடிவெடுத்து விடுகிறது. ஆடியாடி மிதந்து செல்லும் ஓர் ஓடத்தில் உறங்குவதைப் போன்றதொரு உணர்வைத்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

உடல் நிலை, உடல் கடந்த நிலை

உயிராற்றல் பாய உடலை வைத்திருப்பது வேறு, உள்ளே கரைந்து கிடப்பது என்பது வேறு. முதலானது இரண்டாவதிற்குக் கூட்டிப்போக உதவலாம், ஆனால் அதுவே இதில்லை. வாய்க்கும் போதே விளங்குகிறது சில ஆழமான உண்மைகள். பரமன் பச்சைமுத்து 03.10.2017

Spirituality

, , , , , , ,

திட்டமிட்டு நாம் இயங்குவதும், திட்டமிடாமல் சில நிகழ்தேறுவதும் கலந்ததே வாழ்க்கை…

வாழ்வின் பெரும்பாலான முக்கிய நிகழ்வுகள் நமது முன்கூட்டிய திட்டமிடலை மீறி தானாகவே நிகழ்பவையே. திட்டமிட்டு நாம் இயங்குவதும், திட்டமிடாமல் சில நிகழ்தேறுவதும் கலந்ததே வாழ்க்கை. ‘நானெல்லாம் திட்டமிடுவதே இல்லை. இந்த நேரத்திற்கு இதைச் செய்யணும், இதுக்குள்ள இதை முடிக்கணும் என்ற கட்டுப்பெட்டியான வாழ்வை நான் வாழ்வதில்லை!’ என்று சொல்பவர்களிடம் ‘வீட்டிற்கு இந்த மாதம் முழுதிற்கும் தேவையான… (READ MORE)

Media Published, VALARCHI Tamil Monthly

, , , , , , ,

sanjeekumar - Copy

தந்தைக்குதவும் தனயன்…

‘எனக்கு எக்ஸாம் இருக்குல்ல, அப்புறம் ஏன் என்னை வேலை செய்யச் சொல்ற?’ ‘அப்பா ஐ ஃபோன் X வருது. நீ எப்ப வாங்குவே?’ ‘பிக் பாஸ் பாக்கறது ஒன்னும் தப்பு கெடையாது’ ‘நான் நல்லாத்தான் படிக்கறேன், அவங்க ஏனோ மார்க் போட மாட்டேங்கறாங்க’ என்று சிணுங்கும் பிள்ளைகள் வளரும் அதே நகரத்தின் மையப்பகுதியில் இது எதற்கும்… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , , , , ,

IMG_5891 - Copy

மாணவர் மலர்ச்சி 2017

பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களும் மாணவிகளுமாக இருநூற்றியைம்பது பேர் தங்களது ஆசிரியப் பெருமக்களோடு கலந்து அமர்ந்திருக்கும் அவையில் ‘படிப்பில் சுட்டி தேர்வில் வெற்றி!’ என்னும் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்புப் பெற்றேன். பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் மலர்ச்சி மாணவர்கள் நிர்வகித்து நடத்தும் ‘மாணவர் மலர்ச்சி’ திட்டத்தின் இவ்வாண்டு வேலைகள் தொடங்கும் இடமாக சென்னை அரும்பாக்கம்… (READ MORE)

Paraman's Program

, , , ,

eating - Copy

‘வயிறு நிறைந்ததை வயிறே சொல்லும், முதல் ஏப்பம் உணர்த்தும்’

கேள்வி: ‘வயிறு நிறைந்ததை வயிறே சொல்லும், முதல் ஏப்பம் உணர்த்தும்’ என்று ஒரு கல்லூரி விழாவில் நீங்கள் பேசியதை கேட்க நேரிட்டது. வயிறு நிறைந்து முதல் ஏப்பம் வருவதே தெரிவதில்லை எனக்கு. எனக்கென்ன வழி? பதில்: வயிறு நிறைந்ததும் ஒரு வித சமிக்ஞை செய்து ‘போதும்டா தம்பீ!’ என்று சொல்கிறது நம் வயிறு. அதுவே அந்த… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, ,

மூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா!’…

மூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா!’ என்று மெல்லியதாய் இயங்கும் மனமும் அடங்கிப் போகும் அந்த நிலை அலாதியானது. எவ்வளவு முயற்சி செய்தாலும் விளக்க முடியா அந்நிலையை அனுபவித்தால் உணரலாம். பரமன் பச்சைமுத்து 13.09.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , ,

தகப்பன் மனசு

‘காலேஜ் ஃபெஸ்ட்’டாம் மலையாள ஓணம் விழாவாம் தலைக்கு ஸ்பா செய்து சேலையுடுத்தி நிற்கின்றன செல்லக்கிளிகள்! ‘இங்க பாரு பொட்டு வச்சிக்கோ, கையில வளையல போடு!’ பரபரக்கிறது அம்மாக்காரியின் மனசு. ‘வளர்ந்து விட்டோம் நாங்களென்று சேலை கட்டி நின்னாலும் குழந்தைகளாத்தான் தெரிகிறார்கள்’ என்கிறது என் தகப்பன் மனசு. 08.09.2017 சென்னை www.ParamanIn.com

பொரி கடலை

, , ,

அனுபவப் பகிரல் என்பது அதிகம் நல்லதையே செய்யும் என்றாலும் …

அனுபவப் பகிரல் என்பது அதிசயங்கள் செய்யக் கூடியது.  அறியாமையால் அடுத்த வர இருந்த தவறுகளை இங்கிருந்தே களையச் செய்து ஏற்றம் தரக்கூடியது. வாழ்க்கைப் பாதையில் பயணித்து ஒரு நிலையை கடந்து நிற்கும் ஒருவனிடம் துவக்க நிலையில் நிற்கும் ஒருவன் செவிமடுக்கும் போது செய்யப்படும் அனுபவப் பகிரல் அசாத்திய விளைவுகளை அவனுள் ஏற்படுத்தி அவனை தூக்கி விட்டுவிடும்…. (READ MORE)

Media Published, Self Help, VALARCHI Tamil Monthly

, , , , ,

Husband scolds

கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார்.

  கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார். இவ்வளவுக்கும் வீட்டில் எல்லா வேலையையும் நான்தான் செய்கிறேன்.   பரமன்: அடிக்கடி அதையே சொல்கிறார் என்றால் இதில் கோவப்பட என்ன இருக்கிறது. மனிதன் வேட்டையாடிய காலத்திலிருந்து பெற்ற குணம் ஒன்று இன்றும் தொடர்கிறது. எதைச் செய்தால் எதிரிலிருப்பவர்களை நிலைகுலையச்… (READ MORE)

Self Help, VALARCHI Tamil Monthly

, , , , , , , , ,

சென்னை - Copy

வாழ்க சென்னை!

    நாயக்கர்கள் காலத்துக்கு முன்பேயே நீ இருந்தபோதிலும், நாவாய்கள் வழியே வந்தவனுக்கு விற்றதிலிருந்தே கணக்கில் வந்தாய்.   மராட்டியர்கள் கொண்டாடும் வீரசிவாஜி உன் மண்ணின் காளிகாம்பாளை வழிபட்டே பெறுவானாம் வெற்றி   வான்புகழ் வள்ளுவனை வளர்த்துத் தந்த மயிலாப்புரி, ஊன் வென்று ஒளியான வள்ளல்பெருமான் வாசம் செய்த ஏழு கிணறு, பெருமாளின் பெயர் சொன்னாலுருகும்… (READ MORE)

கவிதை, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , ,

wp-image-1446808128.jpg

‘Jeyippathu Nijam’ @Kanchi

காஞ்சியில் நடைபெறும் ஒரு பயிலரங்கில் சென்னையிலிருந்தும் செங்கல்பட்டிலிருந்தும் வந்து கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும். திருநெல்வேலியிலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும் வருவார்கள் என்றா எதிர்பார்க்க முடியும்! பண்ருட்டியிலிருந்தும் ஜெயங்கொண்டத்திலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும், மத்தியப்பிரதேச இந்தூரிலிருந்தும் வந்திருந்தார்கள். ‘சார்! பர்மிஷன் குடுக்கல சார் ஸ்க்கூல்ல. லீவ் போட்டுட்டு பையன கூட்டுட்டு வந்திட்டன் சார். இந்த நிகழ்ச்சிக்காவே மதுரைலேருந்து பையன… (READ MORE)

Paraman's Program

, , , , , , , ,

Daily Thanthi Agamum Puramum Review

தினத்தந்தி புத்தக மதிப்புரை – ‘அகமும் புறமும்’

சென்னை கடற்கரை சாலையின் மத்தியில் நிற்கும் கம்பீரமான சிவாஜிகணேசனின் சிலையைப் பார்த்து ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ‘ஹூ ஈஸ் தட் மேன்?’ என்று எழுப்பும் கேள்வியோடு தொடங்கும் எனது முந்தைய நூலான ‘அகமும் புறமும்’ குறித்த புத்தக மதிப்புரையை இன்று ‘தினத்தந்தி’ வெளியிட்டிருக்கும் வேளையில், அந்த சிவாஜி கணேசன் சிலை கடற்கரையில் இல்லை இப்போது. ‘பல்வேறு… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

Agamumpuramum

அமெரிக்க நண்பர் ‘அகமும் புறமும்’ நூல் பற்றி

அதிகாலை வேளையிலேயே அமெரிக்க தேசத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து ஒரு பதிவு ‘அகமும் புறமும்’ நூல் அருமையென்று. நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கட்டாயம் படிக்கவும் என்று பரிந்துரைக்கிறேன் என்று. படித்து பரவசப்பட்ட மென்பொருள் பொறிஞர் நண்பர் கட்செவியஞ்சலின் குழுமத்தில் பரிந்துரைத்து பதிவிட்டிருந்தார். அமேசான் கிண்டில் தொழில் நுட்பத்திற்கு நன்றி! வாழ்க! வளர்க! பரமன் பச்சைமுத்து 17.08.2017

Self Help

, , , , ,

அலாதித் தருணங்கள்

கை விரல்கள் கனத்து மெதுவே கண் விழிக்கும் வேளையில் நமது உடலே வெறும் உடலாகத் தெரிந்து கலைந்து போகும் அந்த சில விநாடிகள் அலாதியானவை! #தியானம் – பரமன் பச்சைமுத்து 17.08.2017 Www.ParamanIn.com

Self Help, பொரி கடலை

, , , , , ,

wp-image-14074033.jpg

பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’…

ஆழ்நிலையில் அமிழத் தொடங்கும் முன்னே கண்ணுக்குத் தெரியா சிறு சிறு வயர்கள் வழியே உடலோடு ஏற்படும் இயற்கை இணைப்பை உணர்ந்திராமல் ‘பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’ பற்றிய அந்தக்காட்சிகளை எழுதியிருக்கவோ படமாக்கியிருக்கவோ முடியாது ஜேம்ஸ் கேமரூனால்! #அவதார் Facebook.com/ParamanPage

Self Help, பொரி கடலை

, , , , ,

அதிகாலை வானம்

ஆகச் சிறந்த ஓவியனின் தூரிகையை விடச் சிறந்திருக்கும் அதிகாலை வானத்தைக் காணாதவர்கள் அதிகம் இழக்கிறார்கள். – பரமன் பச்சைமுத்து, 16.08.2017

பொரி கடலை

,

images.jpg

ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கேஉத்வேகம் தந்தவனே…

மனித ஆற்றலின் மகத்துவத்தை மாந்தர்க்குக் காட்டிய மின்னல் வீரனே ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கே உத்வேகம் தந்தவனே. ஒவ்வொரு முறை உன் இயங்குதலைப் பார்க்கும் போதும், உன்னைப் பற்றிப் படிக்கும் போதும் உள்ளே உயிர்த்தெழுந்தேன் நான். இறுதி விளையாட்டில் நீ இடறி விழுந்த போது இதயம் நின்றுபோய் எழுந்து நின்றோம் நாங்கள் உன்னத வீரனே, போய்… (READ MORE)

Self Help, கவிதை

, , , ,

karkai-nandrey-original-imaewgye3scbkrf2

‘Karkai Nandrey’ Book authored by PARAMAN PACHAIMUTHU available in Amazon.in, Flipkart.com now…

‘Karkai Nandrey’ authored by Paraman Pachaimuthu Published by Emerald Publishers is avaiable in amazon and Flipkart : Flipkart: https://www.flipkart.com/karkai-nandrey/p/itmewk6fhnnj997z?pid=9788193454336 Amazon http://www.amazon.in/dp/8193454332 Emerald Publishers: http://emeraldpublishers.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87/   Flipkart https://www.flipkart.com/karkai-nandrey/p/itmewk6fhnnj997z?pid=9788193454336 Amazon http://www.amazon.in/dp/8193454332 Website http://emeraldpublishers.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87/

Karkai Nandrey - Book, Media Published

, , , , , , , , ,

Karkai Nandrey - Copy

“கற்கை நன்றே” – : எனது ஆறாவது நூல் : ‘வாழ்வின் மாணவனாகிய நான்… ‘

      வாழ்வின் மாணவனாகிய நான்… ‘…. ….. …இன்று திரும்பிப் பார்க்கையில் ஒன்று புரிகிறது. வாழ்க்கையில் எல்லாமே யாரிடமோ கற்றவையே. நாம் பயணிக்கும் பாதையில் மனிதர்கள், மரங்கள், நிகழ்வுகள் என எதையாவது அனுப்பிக் கற்பித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. கற்றல் இல்லாதபோது தேக்கம் வருகிறது. கற்றல் தொடரும் போது வளர்ச்சி வருகிறது. வாழ்வு உயர்கிறது……. (READ MORE)

Karkai Nandrey - Book, Media Published

, , , ,

bigboss

‘நூறு கண்கள்’ கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் ‘பிக்பாஸ்’

இத்தனை நாள்கள் இருந்து ஆக வேண்டும் என்ற குறிப்போடுதான் அனுப்பி வைக்கப்படுகிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா மனிதர்களையும் நாம் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. நாம் விரும்பும் வண்ணமே அவர்கள் அமைவதில்லை. தவறை ஏற்றுக் கொள்ளாத ஆரவ்களையும் சக்திகளையும், தவறென்றாலே ‘தவறுதான் சார்… தவறுதான் சார்!’ என்று எல்லாத்தையும் ஏற்றுக்கொண்டு ஒரு முறை கூட உள்ளே உணராமல்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

dunkirk1 - Copy

‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

      அண்டப் பெருவெளியின் அடையமுடியா கருந்துளைக்குள் மாட்டிக்கொண்டு புகுந்து வெளியேறும் அதிபுத்திசாலி நாயக நாயகியர்களைப் பற்றியும், உறங்கச் செய்து கனவுக்குள் மூழ்கி அதன் வழியே அடுத்தவனின் கனவுக்குள் புகுந்து உள்ளே ஆழ்மனதை சரி செய்துவிட்டு தனது கனவுக்குத் திரும்பி வட்டத்தை முடித்து மெதுவாக உறக்கத்திலிருந்து வெளியேறி விழித்து உட்காரும் புத்திசாலி நாயக நாயகி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

ருக்மணியக்கா இன்று உறக்கத்தில் சிரிக்கக் கூடும்

    ருக்மணியக்கா இன்று உறக்கத்தில் சிரிக்கக் கூடும் அல்லது சிரித்துக்கொண்டே உறங்கக்கூடும் மகிழ்ச்சியில். ருக்மணியக்கா மட்டுமல்ல, பரமசிவன் அண்ணா, அதிசயமும் மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த கலவையான பாவனைகளை முகத்தில் கொண்டிருந்த மற்றப் பெண்களும், ஆண்களும் என தீபக் சில்க் வீவர்சின் எல்லா ஊழியர்களும்.   மலர்ச்சி M2 மாணவர் கோபி – பிரவீனாவின் புதிய… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

‘கவலையா, அதெதுக்கு?’

வீட்டில் இப்படி இருக்கிறது நாட்டில் இப்படி நடக்கிறது உலகம் இப்படிப் போகிறது என்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஓராயிரம் கவலைகள் ஊறிப் பெருகும் இந்தக் காலவெளியில், பெரிய மனிதர்களும் ‘வல்லான்’களுமே கவலைகளில் கனத்துப் போகும் நிலையில், கவலைகளை அப்படிச் சட்டெனக் கடந்து போகும் ஒரு சாமானிய மனிதரைக் கண்டால் பிரமிப்பாக இருக்கும்தானே! இவரிடம் கற்றுக்கொள்ள சங்கதி இருக்கிறது… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

‘சிவகாமியின் சபதம்’ : நாடகம்

ஏழாம் நூற்றாண்டுக்கே போய் இருந்துவிட்டு வந்த திகைப்பு வந்தது எனக்கு நேற்று மாலை. ‘ராஜராஜசோழன்’ எடுத்து முடித்த வெற்றிக்களிப்பில் சிவாஜியை வைத்து உமாபதி எடுக்க விரும்பியதும், தானே தனது சொந்தத் தயாரிப்பில் எடுக்கிறேன் என்று எம்ஜியார் விரும்பி அறிவித்து எடுக்கமுடியாமல் போனதுமான, அமரர் கல்கியின் மூன்று முத்தாய்ப்பான படைப்புகளில் ஒன்றான ‘சிவகாமியின் சபதம்’ புதினத்தை மூன்று… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , ,

DinaThanthi Review - Udal Valartheney - Copy

எனது நூலை மதிப்புரை செய்து வெளியிட்டிருக்கிறது இன்றைய தினத்தந்தி நாளிதழ்.

    எனது நூலை மதிப்புரை செய்து வெளியிட்டிருக்கிறது இன்றைய தினத்தந்தி நாளிதழ். ‘சிறந்த மருத்தவ நூல்’ என்று குறிப்பிட்டிருக்கிறது.   பெரும் மகிழ்ச்சி!   –        பரமன் பச்சைமுத்து –          03.05.2017

Media Published

, , ,

Maanagaram-2016

‘மாநகரம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பிழைப்புக்காக பலர் வந்துகொண்டேயிருக்கும் பெருநகரில் பிழைப்புக்காக எதையும் செய்யும் சில மனிதர்களின் பிழையால், பிழையில்லாமல் போய்க்கொண்டிருக்கும் சிலரது பிழைப்பில் மண் விழுகிறது. எதிரேபார்த்திராத அந்த அனுபவங்களை அந்த சாமான்ய மனிதர்கள் எப்படி எதிர் கொள்ளுகிறார்கள் என்பதை பக்கத்திலிருந்து பார்ப்பது போல படமாக்கித் தந்திருக்கிறார்கள்.   ‘ஊருக்கே போயிடறேன்’ என்பவனையும் ‘ஊரைவிட்டுப் போக விருப்பமில்லை’ என்பவனையும் இரண்டு நேர்கோடுகளில்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,

சிட்டுக்குருவி1

சிட்டுக்குருவிகளை கொன்றவன்!

அதிகம் சம்பாதிக்கவேண்டுமென்ற அலட்டல்கள் அதிகமில்லா அக்காலமதில் சித்திரை உச்சத்திலும் … உக்கிர வெய்யில் உள்ளிறங்கமுடியா செக்கச்செவேர் ஓடுகள் வேய்ந்த வீட்டில் அறுத்த நெற்கதிர்களை அழகாகக் கட்டி உத்தரத்தில் உயரே தொங்க விட்டாள் பாட்டி அடுத்த அதிகாலை அதிசயமொன்று நடந்தது அகமே ‘கீச் கீச்’சால் நிறைந்தது அரண்டெழுந்ததில் என்னாழ் உறக்கம் கலைந்தது எங்கிருந்தோ வந்து சேர்ந்தன சின்னஞ்சிறிய… (READ MORE)

பொரி கடலை

, , , ,

Ethuvum nirpathillai yenbathey - Copy

ஓடிக் கொண்டே இருக்கும் உலகம்…

சிவாஜி – என்ன ஒரு கலைஞன். அவார்டுகளால் அளக்க முடியா ஆளுமை அவர்.  வைரமுத்து தனது நூலொன்றில்,  ‘கட்டபொம்மனை, கப்பலோட்டிய தமிழனை, அப்பரை, காத்தவராயனை கண்டதில்லை நாங்கள். உன்னைத்தான் திரையில் அவர்களாகப் பார்த்தோம்’ என்று எழுதியிருப்பார். அது எப்பேர்ப்பட்ட உண்மை, அவர் எப்பேர்ப்பட்டக் கலைஞன்!  நடிப்பு என்னும் கடலை கரைத்துக் குடித்த குறுமுனி அவர். நடிப்பிற்கு… (READ MORE)

Self Help

, , , , , , , , , , , , , , , , , ,

அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு…

தற்சமயம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘உப்புக்கருவாடு’ (மிக வித்தியாசமான தரமான ரசனைக்கான படம்) படத்தில் ஒரு காட்சி. இளம் இயக்குஞர் ஒருவர் தன் படத்தை எடுக்க தொடங்குவதற்கு முன்பே ஒரு சில சாதி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்து ரகளையில் ஈடுபடும். ‘அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு எடுக்கவே உட மாட்டறீங்களே. தப்பா… (READ MORE)

Politics

, ,

Kakka muttai - Copy

‘காக்கா முட்டை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு! சிரிக்க வைக்கிறது, நெகிழ வைக்கிறது, கைதட்ட வைக்கிறது, படத்தின் அந்த சிறார்களுக்காக வருந்த வைக்கிறது, இப்படி எல்லாம் செய்கிறது படம். … ப்ரகாஷ் ராஜ் பணியில் சொல்வதானால், ‘ஏய்… யார்ரா நீ?’ என்று பிடித்துக் கேட்கவேண்டும் படத்தின் இயக்குநரை. ‘ஊசிப் போனாதாண்டா நூல் நூலா வரும்!’ ‘சிம்பு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

IMG-20150214-WA0013

ஆதலினால் அன்பு காட்டுங்கள்…

  அன்பு காட்டுங்கள், அன்பு காட்டுங்கள், அடுத்தவர் மீது அன்பு காட்டுங்கள்.   ஒன்றாயிருந்ததை பிரித்து வைத்து இரண்டாய் செய்யும்  ஆசை, இரண்டாயிருந்ததை இணைத்து ஒன்றாய் ஆக்கும் உயிர் சிமென்ட் அன்பு.   அருகில் இருப்பவரை தூரமாக்கி விடுவது ஆசை, தூரத்திலிருப்பவரை அன்மையில் உணரவைப்பது அன்பு.   அன்பு ஊறும் அகத்தில் அழுக்குகள் அகற்றப்படும். கழுவித்… (READ MORE)

Self Help, ஆ...!, கவிதை

, ,

Formal dress

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 4

பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் என் தொடர்வின் பகிர்வு: நான்கு: நம் சோழ மாமன்னன் ராஜேந்திர சோழன் பற்றியும், ஜப்பானின் டோக்யோ நகரில் எனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும், ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவு அல்ல!’ ‘தாழ்ந்தவர்கள் சிலர் தமிழில் பேசியிருக்கலாம். தமிழில் பேசுவது தாழ்ந்ததல்ல’ ‘ஆங்கிலம் அறிந்துகொள்ள வெறும் 30 மணிநேர பயிற்சியே… (READ MORE)

Self Help, அச்சம் தவிர் ஆளுமை கொள்

, ,

aalumai3.jpg - Copy

அச்சம் தவிர், ஆளுமை கொள் – Part 3

பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் தொடர்: ‘எல்லாம் தெரிந்தவர் என்று எவருமே கிடையாது,’ ‘நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி,’ ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,’ அதற்கு தயாராவது எப்படி ஆகிய முக்கிய மூன்று விஷயங்களை சென்ற வாரம் பார்த்தோம். “பரமன் பச்சைமுத்து அவர்களுக்கு, வணக்கங்கள். தங்கள் தொடர் எனக்குள்ளே ஒரு தெம்பை தருகிறது. பெரிய… (READ MORE)

Media Published, Self Help, அச்சம் தவிர் ஆளுமை கொள்

, , , , , , , , , , , ,

PK - Copy

‘PK’ – Movie review

வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வரும் கடவுளின் சக்தி வாய்ந்த ரிமோட்டை சிங்காரச் சென்னையில் யாரேனும் அபகரித்துக் கொண்டால், என்னாவாகும்? ‘அறை எண் 305ல் கடவுள்’ இருப்பார். வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வரும் வேற்றுகிரகவாசி ஒருவனின் சக்தி வாய்ந்த ரிமோட்டை ராஜஸ்தான் பாலைவனத்தில் யாரேனும் அபகரித்துக் கொண்டால், அவன் தலைநகர் தில்லிக்குப் போனால், என்னவாகும்? அவனது தேடலும், அவனது விகல்பமில்லா… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

Xmas1 - Copy

வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே…

மாக்களாயிருந்தோரை, மக்களாய் மாற்றிடவே மரதச்சன் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் மலர்ந்தவனே…   வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே வணங்குகிறோம்!   தன் கருத்துக்களை நிலைநாட்ட எவர் உயிரையும் எடுக்கலாம் என்ற விதிகொண்ட உலகில், தன் உயிரையே கொடுத்து உயர் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்தவனே…   எபிரேயம் இயம்பிய எருசலேமின் ஏசுவே…   முப்பது வெள்ளிக்காக உன்னைக் காட்டிக்… (READ MORE)

Religion, Spirituality, கவிதை

, , , , , ,

ஸெல்ஃப் மேட் மேன்…

“நான் யார் உதவியும் இன்றி நானாகவே உருவானவன், சுயம்பு, ஸெல்ஃப் மேட் மேன்,” என்று கரவொலிக்கிடையில்  மேடையில் முழங்கியவன் வீட்டிற்குள் வந்ததும் சொன்னான் , மனைவியிடம் – “ரொம்பத் தல வலிக்குது டீ போடேன்” மகனிடம் -“நின்னு நின்னு கால் வலிக்குது, கொஞ்சம் பிடிச்சி விடேன் ப்ளீஸ்” மகளிடம் -” அப்பா கார்ல பேக்ஐ வச்சிட்டு… (READ MORE)

ஆ...!, கவிதை

, , ,

இதோ இந்த மழைத் துளி,

இதோ இந்த மழைத் துளி, இதற்கு முன்பு ஆறாகவோ, ஏரியாகவோ, கடலாகவோ, மழையாகவோ இருந்தபோது என்றாவது என் மீது பட்டு என்னைத் தழுவிக் கழுவிச் சென்றிருக்குமோ, இப்படி ஒரு அன்யோன்யம் எழுகிறதே! :பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, , , ,

நரகாசுரன் நினைவுகள்

இருக்கும் வரை இன்னல்களே புரிந்திருந்தாலும், இறக்கும் தருணத்தில் ‘இன்புற்றிருக்கட்டும் உலகம்,’ என்று நினைத்தவன் இறைவனே அழித்தாலும்கூட கொண்டாடப்படுவான்! #நரகாசுரன் நினைவுகள் #தீபாவளி கொண்டாட்டங்கள் ( Got published in ‘infini’ Nov issue ) :பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality, ஆ...!, கவிதை

, , , ,