20180520_232944-1.jpg

போய் வாருங்கள் பாலகுமாரன், உங்கள் ராஜேந்திர சோழன் சென்ற உலகத்திற்கு…

வாழ்க்கை மட்டும் ‘இதுதான் அறிய தருணம், இனி இது திரும்பக் கிடைக்காது!’என்று சப்-டைட்டில் போட்டு நிகழ்வுகளை அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அப்படி மட்டும் இருந்திருந்தால், அன்று என் அடுக்ககக் குடியிருப்பின் முகப்பில் உங்களைப் பார்த்த தருணங்களை இன்னும் பயன்படுத்தியிருப்பேன், ‘பரமனை நமது விழாவிற்கு அழைக்கலாம், கூப்பிடுங்கள்!’என்று ரகுராமிடம் நீங்கள் தகவல் சொன்னபோது ஓடி வந்திருப்பேன்…. (READ MORE)

பொரி கடலை

,

இலங்கை ‘கதிர்காமக் கேள்வி!’

தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் கதைகளாலும் பின்னப்படும் நம்பிக்கைகளாலுமே தலங்களும் அதன் கடவுளர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ‘கதிர்காமத்துல விபூதி செய்யறது இல்ல. அங்க விபூதி வெளையுது. மலையிலேருந்து வெட்டி எடுக்கறாங்க!’ – இது என் ஐந்தாம் வகுப்புக் கோடை விடுமுறையின் போது இலங்கை போய் வந்த என் அப்பா என்னிடம் சொன்னது. ‘எல்லா ஊரிலும் நேரில் போய்… (READ MORE)

ParamanInSriLanka

, , ,

இலங்கை – இலை அப்பம்

இலை அப்பம் வேணுமா? கதிர்காமத்திலிருந்து கொழும்புவை நோக்கிய சாலைப் பயணம் கொஞ்சம் நீண்டதுதான். ஐந்து மணி நேரங்கள் பிடிக்கும். ஒரே பயணத்தில் வியர்க்க வைக்கும் வெயில், வாகனம் ஓட்ட பார்வை மறைக்குமளவிற்கு ‘மவனே… வச்சுக்கோ!’ என்று அடித்துப் பெய்யும் மழை, குளுமை என எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. இருமங்கிலும் பெரும் நீர்நிலைகள், மலைகள், வயல்கள், ரப்பர்… (READ MORE)

ParamanInSriLanka

, , , , ,

இலங்கையின் நெல் வயல்கள்

நீர் வளம் மிகுந்த இலங்கையின் நெல் வயல்கள். நெல் வயல்களில் எருவிட்டு உழுது ( இதன் பெயர் ‘புழுதி ஏர்), நீர் பாய்ச்சி ஊற வைத்து திரும்பவும் ஏர் உழுது சேறாக்கி மட்டப் பலகையை வைத்து சேற்றை ஒரே சீராக்கும் பழக்கம் சோழ தேசத்தில் இன்றும் உண்டு. ‘பறம்படித்தல்’ என்று பெயர் அதற்கு. காவிரி பொய்க்காத… (READ MORE)

ParamanInSriLanka

, , , ,

புத்தரின் பல்

புத்தர் இறந்த பிறகு அவரது நினைவாக இருக்கட்டுமென அவரது பல்லை புத்த பிக்கிணி ஒருவர் எடுத்து வைத்ததாகவும், வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்திய நாட்டினருக்கு புத்தரின் மகத்துவம் புரியவில்லை, மதிக்கத் தெரியவில்லை, மதிக்கப்படும் இடத்தில் இது இருக்கட்டும்!’ என்று கூறி தந்த குமருவும் ஹேமமாலாவும் இலங்கை மன்னனிடம் அந்தப் பல்லைத் தந்ததாகவும் இலங்கையில் நம்பப்படுகிறது. அந்தப்… (READ MORE)

Uncategorized

பின்னவல –

மழைத் தண்ணீர் அடித்துக் கொண்டு செந்நிறமாக ஓடும் ‘மாஒய’ நதியில் வயிற்றளவு நீரில் இறங்கி குதூகலித்து விளையாடும் சிறிதும் பெறிதுமான காட்டு யானைகளின் கூட்டம், சில அடிகள் தூரத்தில் நின்று பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்று, சிறீலங்காவின் ‘பின்னவல’ யானைகள் முகாமில். கொழும்பு நகரிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வழியில் இருக்கிறது இந்த இடம்…. (READ MORE)

Uncategorized

avengers

திரை விமர்சனம் – ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ : பரமன் பச்சைமுத்து:

    ஏழு கடலுக்கு அப்பால், எட்டாவது மலையையொட்டிய பள்ளத்தாக்கில், கோமதி நதியின் முகத்துவாரத்தைத் தாண்டி இருக்கும் சமவெளியையொட்டிய பகுதியில் வாழும் கந்தரவர்களின் ஒருவனின் நெற்றியில் என உலகின் நான்கு சக்தி மிகுந்த கற்கள் இருக்கின்றன. எப்படியாவது அந்தக் கற்களையெல்லாம் எடுத்து வந்து தங்கக் காப்பில்  பதிந்து கொண்டு அதை வலது கையில் அணிந்து கொண்டால்,… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

வித்தியாமில்லா நாள் வீணே

அதிகாலை துயில் நீங்குகையில் போர்வை உதறி எழுந்த அதே படுக்கைதான், இரவு படுப்பதற்கும். எழுந்து போனவனுக்கும் திரும்ப வருபவனுக்கும் வித்தியாசமில்லா நாள் வீணே. இரண்டுக்குமிடைப்பட்ட நாளின் பொழுதுகளில் எவ்வளவு பயணித்திருக்கிறேன், எவ்வளவு அனுபவம் பெற்றிருக்கிறேன், எத்தனை மனிதர்களைத் தொட்டிருக்கிறேன் என்பன உரைக்கின்றன எப்படி இந்த நாளை வாழ்ந்திருக்கிறேன் என்று. பரமன் பச்சைமுத்து 04.05.2018 சென்னை Facebook.com/ParamanPage

Self Help

,

தினமலரில் நான் எழுதிக் கொண்டிருக்கும் ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடரின் அத்தியாயம் – 16. Facebook.com/ParamanPage

Uncategorized

நிசத்தம்

சத்தம் மட்டுமல்ல, அமைதி மண்டிக் கிடக்கும் நிசத்தமும் காதைத் துளைக்கவே செய்கிறது.’ புத்த பூர்ணிமா தினம் கொஞ்சம் கண் மூடி அமர்ந்திருக்கலாமேயென்று மலர்ச்சி அகத்திற்குள் போன போது உணர்ந்தது. -பரமன் பச்சைமுத்து 30.04.2018

Uncategorized

ஒரு கிண்ணம் பிரபஞ்ச சக்தி…

ஒரு கிண்ணம் பிரபஞ்ச சக்தி உச்சந்தலையில் கவிழ்த்து விடப்படுகிறது, நெற்றிக்கும் உச்சிக்கும் நடுவே சில துளிகள் உள்ளிறங்கி விடுகின்றன போலும், தவத்தில் அமர்ந்த கணங்களில். #தவம் #Meditation பரமன் பச்சைமுத்து 30.04.2018 Www.ParamanIn.com

Spirituality

, ,

முதல் பறவை

இன்னும் வெளுக்காத அதிகாலை இருட்டின் பேரமைதியை கிழித்துக் கொண்டு ‘நான்தான் ஊர்லயே ஃபர்ஸ்டு, தெரியுதா!’ என்பது போல பெரும் டெசிபெலில் ‘க்ரீச் க்ரீச் க்ரீச்’ என்று ஒரு லாரியின் ஏர் ஹார்னை விட அதிகமான அளவில் சத்தமெழுப்புகிறது இன்றைய நாளின் முதல் பறவை. சன்னலுக்கு வெளியே இருட்டில் அது இருக்கும் திசை நோக்கித் திரும்பி ‘லவ்… (READ MORE)

Uncategorized

சன்னலுக்கு வெளியே குட்டி மேகங்கள்

சன்னலுக்கு வெளியே வெள்ளை வெளேர் குட்டி மேகங்களாய் சிவப்பு மலர்களாய் காற்றில் மிதக்கின்றன ஏழெட்டு பட்டாம்பூச்சிகள். கருவேப்பிலை மரத்தில் இட்லி கொத்தைப் போல திட்டுத் திட்டாய் பூக்கள். பரமன் பச்சைமுத்து 26.04.2018

Uncategorized

வளர்ச்சிப் பாதை @திருவண்ணாமலை

🌸🌸 மொத்தம் இரண்டு மணி நேரம் என்று முன்பேயே அறிவித்து நடத்திய வளர்ச்சிப்பாதை இன்று திருவண்ணாமலையில். ஆரணியிலிருந்து சுரேஷ், சத்யா, வேலூர் குடியாத்தத்திலிருந்து சரளா ஆனந்த், திருக்கோவிலூரிலிருந்து நாமதுரை, சென்னையிலிருந்து விஜயகுமார், கார்த்திகேயன் என வேறு ஊர்களிலிருந்தும், போளூரிலிருந்தும், திருவண்ணாமலையிலிருந்து தொண்ணூறு சதவீத மலர்ச்சி மாணவர்களும் என நிறைந்ததிருந்தது வளர்ச்சிப் பாதை. சிரிப்பு, அடி, ஆழம்… (READ MORE)

Uncategorized

unnamed.jpg

அயலூர் சினிமா: ‘பரத் அனே நேனு…’ : பரமன் பச்சைமுத்து

ஒரு மாநிலத்தில் ஆட்சியையும் பெரிய கட்சியையும் தங்களிடம் வைத்திருக்கிறார்கள் உடன்பிறவா சகோதரர்கள் இருவர். திடீரென உடல்நலம் குன்றி மருத்துவமனைப் படுக்கையில் வீழ்ந்த முதல்வர் நண்பர் இறந்து விட , கட்சித் தலைமையை கையில் வைத்திருக்கும் பிரிய சிநேகிதருக்கு நெருக்கடி வருகிறது. பிரச்சினையை சரி செய்யலாம் என்று மறைந்த முதல்வரின் அபிமானத்திற்குரியவரைத் தேர்ந்தெடுத்து தனது கைப்பாவையாக இருக்கட்டுமென்று… (READ MORE)

Uncategorized

, , ,

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அப்படியென்றால் உங்கள் திருமணத்தில் இந்தப் பாடல் இசைக்கப் பட்டிருக்கலாம்.

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அப்படியென்றால் உங்கள் திருமணத்தில் இந்தப் பாடல் இசைக்கப் பட்டிருக்கலாம். இன்னும் ஆகவில்லையா? உங்கள் திருமணத்தில் இது பாடலாகவோ நாதஸ்வரத்திலோ இசைக்கப்படும். அறுபத்தியேழு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்தேறும் பெரும்பான்மையான திருமண வைபவங்களில் மண அரங்கிற்கு மணப்பெண்ணை அழைத்து வரும் வேளையில் இதுதான் ஒலிக்கிறது. இன்று வரை மாற்றவே முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது ‘வாராயென்… (READ MORE)

Uncategorized

மிஷன் இம்பாஸிபிள் : 2

‘டை ஹார்ட்’டின் ஜான் மெக்லைன் பிடிக்குமென்பதற்காக, ‘மிஷன் இம்பாஸிபிள்’ளின் ஈத்தன் ஹண்ட்டை பிடிக்கக் கூடாதா என்ன! ஜான் மெக்லைன் கிழ சிங்கமென்றால், ஈதன் ஹண்ட் அதைவிட இம்மியளவு வயது குறைந்த நவீன தொழில் நுட்பம் தெரிந்த புலி. ‘காக்கி சட்டை’ கமல்ஹாசன் – சத்யராஜ் – ராஜீவ் படகுத் துரத்தல்களை நினைவூட்டும் பைக் துரத்தல்கள், கப்ஸாக்கள்… (READ MORE)

Uncategorized

முத்தத்தி – நீச்சல்

‘பாபா’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? எதனை நினைத்தாலும் அது உடனேயே இப்போதே நடந்து விடவேண்டும் என்ற மனநிலை கொண்ட பாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கும் ஆஷிஸ் வித்யார்த்தி ஏற்று நடித்திருக்கும் வில்லன் பாத்திரம். ‘இப்போ ராமசாமி’என்ற பெயர் கொண்ட அவர் அடிக்கடி ‘இப்போ…இப்போ… இப்போ!’ என்று பரபரத்துக்கொண்டே இருப்பார். ராமு பெருமாளும், முகுந்தனும் நானும் அந்நாட்களில் கிட்டத்தட்ட இப்போ ராமசாமிகளாகவே… (READ MORE)

Uncategorized

, , , , ,

கண்களுக்கான ஆயுர்வேத சிகிச்சை

கண்களுக்கான முதல் நிலை ஆயுர்வேத மருத்துவம் (கண்களில் ஒரு பாயிண்ட் குறைந்துள்ளது. கண்கள் பொலிவு பெற்றுள்ளன) முடித்து, இரண்டாம் நிலை மருத்துவம் தொடங்கியது இன்று. வைணதீய க்ரதம் ( ஒரு வித நெய்), வர சூரணம் ஆகியவற்றுடன் இனிதே ஆரம்பம் இன்று. கொஞ்சம் கசப்பு! நல்லது தொடக்கத்தில் எப்போதும் கசக்கத் தானே செய்யும்! 🌸🌸😀 –… (READ MORE)

Uncategorized

யாரைக் குற்றம் சொல்ல…

மன்னம்பந்தலில் கல்லூரி விடுதியின் பின்பக்க வேலி திறந்து நடந்தால் வாழைக் கொல்லை. வாழைக் கொல்லையை ஊடறுத்து கொஞ்சம் போனால் எப்போதும் நீரோடும் காவிரி. இப்படியொரு வழியிருக்கிறதென்று எனக்கு ‘கேட்டீ’தான் எனக்குக் காட்டினார். பெண்ணாடம் பழனிவேலு, இன்னும் சிலரோடு நாங்கள் காவிரிக்குள் பாய்ந்து ஊறித் திளைத்து மகிழ்வோம். நீச்சல் தெரியா நெய்வேலி ஜமுக்குப் பாண்டியன் ஆழமில்லா கரையோரம்… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, ,

‘வாழ்க்கை – ஒரு கொண்டாட்டம்’ – பரமன் பச்சைமுத்து – அண்ணா பல்கலை கழகம் – ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக ஆனந்தம் ஃபவுண்டேஷன்ஸ் நிகழ்ச்சி

மன நிறைவான ஓர் உணர்வெனக்கு! கிராமப்புற ஏழை மாணவர்களின் மேற்படிப்பிற்காக உழைத்து வரும் ஆனந்தம் அறக்கட்டளையின் சார்பாக நிதி திரட்டுவதற்காக ‘வாழ்க்கை – ஒரு கொண்டாட்டம்!’ என்ற வாழ்வியல் பயிலரங்கை செய்தோம், நேற்று மாலை அண்ணா பல்கலைக்கழகத்தின் அரங்கம் ஒன்றில். முன்னூற்றியைம்பது பேர் என்று எப்போதோ செல்வக்குமார் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு அரங்கில் நுழைந்தால் அறுநூற்றியைம்பது… (READ MORE)

Paraman's Program

மனித மன நிமிர்த்திகள்…

ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த், பேட்மிட்டன், டென்னிஸ் என்று தனி மனித ஆற்றலின் எல்லை உடைக்கும் விளையாட்டுக்கள் என்னுள் உற்சாகத்தை ஊற்றி என்னை முழுதும் உயிர்ப்பித்து விடுகின்றன. இந்த மாதிரி நேரங்களில் என்னால் உலகையே மறந்து விடக் கூட முடிகிறது. ஒரு நாள் இவற்றை நேரில் பார்த்து ரசிக்க வேண்டும். எவ்வளவு உழைத்திருப்பார்கள் இந்நிலை கைவர! அடுத்த மனிதனுக்கு… (READ MORE)

Self Help

, , , , , , , , , , ,

கோபி சந்த் – சாய்னா நேவால்

‘இவர் விளையாட்டு வீரங்கனையா இல்லை திரை நட்சத்திரமா!’ என்று பார்க்குமளவிற்கு அழகாக இருக்கும் பாகிஸ்தானின் இளம்பெண் மஹூரை இந்தியாவின் சாய்னா நேவால் முதல் செட்டில் துவைத்து எடுப்பதைப் பார்ப்பது அழகென்றால், அதை விட அழகு கிடைக்கும் சிறு இடைவெளியில் பயிற்சியாளர் கோபி சந்த் கொடுக்கும் திருத்தங்களைப் பார்ப்பது. #CommonWealth2018

Uncategorized

screenshot_20180330-143804791243021.jpg

ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’

‘ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’ என் அடுக்ககத்தின் அடித்தளத்தில் மின் தூக்கிக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்மணி அருகிலிருந்த சுவற்றிடம் தன் அங்கலாய்ப்பைக் கொட்டிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டே இரண்டாவது மாடி நோக்கி நடக்க படிகளில் ஏறுகிறேன் ‘மிஸ்டர் கூல்’ஆக. திருவண்ணாமலை செங்கத்தின் வெக்கை உமிழும் 41 டிகிரியையே பார்த்தவனுக்கு, சென்னை ஆர் ஏ புரத்தின்… (READ MORE)

Self Help, Uncategorized

, , , ,

சரணடையும் பொழுதில்…

அதிகாலையிலெழுந்து அவனை சரணடைவதில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது. பாசுரங்கள், பதிகங்கள், பாமாலைகளென்ற எந்த சத்தங்களுமின்றி, எதுவுமிலா இவன் எல்லாமுமான அவனை நோக்கி வெறுமனே இருத்தலிலிருந்து குவிப்பது ஓர் உணர்வின் உன்னதம். அங்கே கிடைக்கும் பிணைப்பு அவனருள்! ஆழ்வோம்! #தவம் #தியானம் #சரணடைதல் – பரமன் பச்சைமுத்து திருவண்ணாமலை 31.03.2018 www.ParamanIn.com

Spirituality

, , , , , , , ,

பரமன், நீங்கள் சித்த – ஆயுர்வேத மருத்துவத்தை அதிகம் பரிந்துரைப்பதாக ஓர் எண்ணம்

  கேள்வி: பரமன், நீங்கள் சித்த – ஆயுர்வேத மருத்துவத்தை அதிகம் பரிந்துரைப்பதாக ஓர் எண்ணம் (வளர்ச்சி இதழில் வரும் கட்டுரைகளில் உட்பட). நீங்கள் ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவரா? பரமன்: ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவன் அல்ல என்பதை முதலில் தெளிவு படுத்திவிடுகிறேன். இரண்டு நிகழ்வுகளை பகிர்கிறேன். நிகழ்வு – 1: படிப்பதற்கு கண்ணாடி அணியும் என்னை… (READ MORE)

Uncategorized

‘முக்கால் எம்எல்ஏ’

‘முக்கால் எம்எல்ஏ’ சோமாசிப்பாடி திருமலை மாமாவை சுப்புராய உடையார் மாமா இப்படித்தான் விளிப்பார் அக்காலங்களில். ‘பஉச’வும், ‘விவிஎஸ்’ஸும், ‘கலைமணி’யும் கட்சியில் களைகட்டிய அந்தக் காலங்களில் கட்சியில் கலகலவென்று வளைய வந்தார் அவர். எப்போதும் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியில் பளிச்சென்று இருக்கும் அவர் அப்போதெல்லாம் சோமாசிப்பாடி அரசமரத்தடி அருகிலிருக்கும் சோடாக்கடையில் அதிகம் தென்படுவார். திருமலை மாமாவிற்கு… (READ MORE)

Uncategorized

ஏழுநிமிடத்தில் ஷெனாய் நகர்

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் இருந்துகொண்டு ஷெனாய் நகரில் இருக்கும் அலுவலகத்திற்கு அழைத்து, ‘வெங்கட், என்னோட லஞ்ச் பாக்ஸ ஆன் பண்ணி சூடு பண்ணேன். ஏழு நிஷத்துல வந்துடுவேன்.’ என்று சொல்லமுடியுமா? சொன்னாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் – திருமங்கலம் – அண்ணா நகர் கிழக்கு – அண்ணாநகர் டவர் வழியாகப் பயணித்து ஷெனாய் நகருக்கு… (READ MORE)

Uncategorized

அகரம் ஃபவுண்டேஷன்ஸில் வாலண்டையர்களுக்கு மலர்ச்சி உரை

ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு உதவும். ( நடிகர் சூர்யாவின்) ‘அகரம் ஃபவுண்டேஷன்ஸ்’ இயக்கத்தின் தன்னார்வல செயல் வீரர்களுக்கு வாழ்வியல் பயிற்சி அளித்து வலிமையேற்றும் வாய்ப்பு வாய்த்தது இன்று. பல்வேறு துறைகளில் பணியாற்றும் வெவ்வேறு வயதினர்கள் சமுதாயம் மீது கொண்ட நல்லெண்ணத்தால் களமிறங்கி தொண்டு செய்ய ஒன்று கூடி இருந்த சபையது. நம்மால் முடிந்ததை… (READ MORE)

Uncategorized

உள்ளே… வெளியே

(சன்னலுக்கு) வெளியே உயர்ந்து நிற்கும் திருவண்ணாமலை மலை, உள்ளே அகழ்ந்து ஆழ்ந்து போகச்செய்யும் மலர்ச்சி மகா முத்ரா… உன்னத அனுபவத்தோடு தொடங்குகிறது இன்றைய காலைப் பொழுது. பரமன் பச்சைமுத்து 24.03.2018 திருவண்ணாமலை

Uncategorized

மனிதரோடு மனிதர்…

மனிதன் என்பவன் நினைவுகளாலும் ஆசைகளாலும் செய்பாடுகளாலும் ஆனவன். அப்படியானால்… உயிருக்குயிரான ஒருவரின் ஆசைகளை நாம் செயல்படுத்தும் போது, அவரின் நினைவுகளை நாம் கொண்டிருக்கும் போது… அவரோடே வாழ்கிறோம்! பரமன் பச்சைமுத்து 18.03.2018 Www.ParamanIn.com

Uncategorized

என்ன பதில் சொல்லிவிட முடியும்!

ஓடிக்கொண்டேயிருந்தவள் மீளா ஓய்வுக்குப் போய் விட்டாள். மாராத்தான், ட்ரையத்லான், ட்ரெக்கிங், சைக்கிளிங் என்று ஓடித் துடித்த கால்களும் மூச்சும் இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. குரங்கணி காட்டில் தீ நாக்குகளால் தீண்டப்பட்ட அனுவித்தியா கண்ணாடிப் பேழைக்குள் வெறும் உடலாக. ‘பரமன்ன்ன்ன்…. ஏன் பரமன்? நெறைய சாதிக்கனும்ன்னு ஆசைப்பட்ட பொண்ண, சாதனை பண்ண அனுமதிச்சது தப்பா பரமன்? இமயமலையை… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

நடிகர் விசுவிடமிருந்து பரமன் பச்சைமுத்து பற்றி குறுஞ்செய்தி…

👏👏👏👏👏👏 🌸🌸 நடிகர் இயக்குனர் விசு அவர்களிடமிருந்து பரமன் பச்சைமுத்து பற்றி வந்துள்ள உணர்வுப் பகிரல்!!! ஹியூமர் கிளப் இண்டர்நேஷனல் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு மாலை நான் உரையாற்ற நேர்ந்த போது, நடிகர் இயக்குனர் விசு அவர்களும் முன் வரிசையில் அமர்ந்து கேட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலர்ச்சி உரையைப் பற்றிய தனது உணர்வை ஹியூமர்… (READ MORE)

Uncategorized

விசு அவர்களோடு ஓர் அனுபவம்

ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் அப்பா சித்தப்பா இலங்கை பயணித்து விட, அவர்களது சைக்கிளை (பழைய ராலே, புதிய ஹீரோ என்று இரண்டு) எடுத்துக் கொண்டு ராஜவேலு சித்தப்பாவிடமும், கருணாகரன் மாமாவிடமும் குரங்கு பெடல் ஓட்டக் கற்றுக் கொண்டேன். இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது ஜப்பானிய ‘டெட்ரெக்ஸ்’ சட்டைத் துணியோடு வாங்கிக் கொண்டு வந்த ‘நேஷனல்’ டேப் ரெக்கார்டர்தான்… (READ MORE)

Uncategorized

shape of water - Copy

‘ த ஷேப் ஆஃப் வாட்டர்’ – அன்பின் வழியது ‘உயிர் நிலை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அவள் (வாய்) பேசா மடந்தை. எவ்வளவோ பேர் வாழும் இவ்வளவு பெரிய உலகில் தனியாகவே இருக்கிறாளவள். அமெரிக்கா – ரஷ்ய பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த அந்தக்காலத்தில், ஒரு வார்த்தைக் கூட பேசாத எலிசா என்னும் அவள் எப்போதும் எதைப்பற்றியாவது தொணத்தொணவென்று பேசிக்கொண்டே இருக்கும் செல்டாவுடன்   அரசின் ரகசிய ஆய்வுக்கூடமொன்றில் சுத்தம் செய்பவளாக தன் வாழ்க்கையை ஓட்டுகிறாள்…. (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

என் மனைவி… குளித்துவிட்டு வருகையில் குரோமோசோம்கள், ஜீன்கள் என்கிறாள். டவலை உலர்த்தயில் டெல்லி சுல்தானேட், ஷேர்ஷா என்கிறாள். கடுகு தாளிக்கையில் கங்கைகொண்ட சோழன், கார்டீசியன் ஸிஸ்டெம்ஸ், ட்ரிக்னாமெட்ரி சொல்கிறாள். சோறு இறக்கும்போது சோடியம் குளோரைடின் சமன்பாடு சொல்லிப் பாக்கிறாள். நடந்து செல்லும்போது நியூட்டனின் இயக்க விதி ஒப்பிக்கிறாள். பால் காய்ச்சும்போது பாக்டீரியா, பிதாகரஸ் தியரமென்று எதையோ… (READ MORE)

Uncategorized

எப்படி இருந்திருப்பான் ராஜராஜ சோழன்?

கோப்பரகேசரி சிவபாதசேகரன் அருண்மொழி வர்மன் என்னும் ராஜராஜ சோழன் எப்படி இருந்திருப்பான் என்று சரியாய்க்காட்ட வடிவங்கள் இல்லை. ராஜராஜ சோழன் என்று இணையத்தில் கிடைக்கும் பித்தளைச் சிலை வள்ளுவர் உருவம் போல் அனுமானத்தால் உருவாக்கப்பட்டது என்பது என் எண்ணம் ( மார்ச் 2018 மாத ‘வளர்ச்சி’ இதழின் முகப்புக் கட்டுரைக்கும் அட்டைப் படத்திற்கும் இந்தச் சிலையையே… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , ,

கௌதமியை வைத்து கமலை நோக்கி சமையல் செய்யும் ஊடகங்கள் இனி

‘நான் அவரோடு இணைந்து செயல்படுவதாக சொல்கிறார்கள். இல்லை. நான் என் மகளுக்காகவும் எனக்காகவும் உழைக்கிறேன். அவர் என் சம்பளப் பாக்கியை இன்னும் தரவில்லை. ஆதாரங்கள் உள்ளன’ என சுட்டுரையில் கொளுத்திப் போட்டிருக்கிறார் கௌதமி. ஸ்ரீதேவி மகள்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்ப வந்த கமலிடம் அதைக்கேட்டும் விட்டனர் நிருபர்கள். ‘சம்மந்தம் இல்லை என்று அவர் சொல்லிவிட்டார். சம்பளப்… (READ MORE)

Politics

, , , , ,

யாரை எங்கே இட்டுச் சென்று எங்கே முடிக்கிறது வாழ்க்கை என்பது பெரும்புதிர்…

சிறுவனாக இருந்த போது அக்கா கூட்டிச் சென்று கீரப்பாளையம் விஆர்கே டாக்கீசில் காட்டிய படத்தில்தான் முதன்முதலில் ஸ்ரீதேவியை பார்த்தேன் என்று நினைக்கிறேன். அதில் வரும் ‘பெயரைச் சொல்லவா அது நியாயமாகுமா!’ பாடல் என் மனங்கவர்ந்த பாடல். சென்ற வாரம் கூட ஓர் இரவுப்பயணத்தில் முணுமுணுத்தப் பாடல். என்னைப் போல் பலருக்கு ‘காற்றில் எந்தன் கீதம்…’ என்ற… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

unnamed.jpg

‘நாச்சியார்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சொந்த மகள், ஊரின் பிரபல மருத்துவர், அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபர், அன்றாடங்காய்ச்சிகளின் சமையல் காண்ட்ராக்டர், தனது நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என உலகில் எவரது மனதைப் பற்றியும் சட்டை செய்யாமல் தனது செய்கைகளால் வன்முறை காட்டும், ‘அடிச்சிட்டுத்தான் பேசுவாள், இதயமே இல்லாதவள்!’ என்றே விளிக்கப்படும் ஒரு தடாலடி முரட்டுப் பெண் காவல்துறையதிகாரி… உலகமே வன்முறை காட்டும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

பொன்னியின் செல்வன் போல சரித்திர நாவல் வேண்டுமா?

கேள்வி: சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில்தான் ‘பொன்னியின் செல்வன்’ வாங்கினேன். படித்தேன். அருமை. இது போன்ற இதற்கு ஈடான சரித்திர நாவல்கள் ஏதும்? பதில்: சரித்திர நாவல்கள் என்றாலே சாண்டில்யன் என்று சொல்லும் நிலை இருந்தது ஒரு காலத்தில். அரு ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி,’ சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்த குமாரன் கதை’ ஆகியவை சிறந்த படைப்புகள்…. (READ MORE)

Uncategorized

ஒன்றாகவே ஆனால்..

ஒன்றாகவே ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் பலர், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு உலகத்தில்! நீலகிரி எக்ஸ்பிரஸின் ஒரு கோச்சில் யாராரோ சிலரோடு கோவையை நோக்கி. பரமன் பச்சைமுத்து 17.02.2018 Facebook.com/ParamanPage

Uncategorized

அருமையான புத்தகங்க

‘வணக்கங்க. ‘நதி போல ஓடிக்கொண்டிரு…’ படிச்சேங்க. எட்டு சாப்டர் படிச்சிட்டேன். ரொம்ப பிரமாதமா இருக்கு. ஒரு மனிதனுக்கு, அலுவலகம் போறவனுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவையான எல்லா விஷயங்களையும் கொடுத்து, ஒரு கதை மாதிரி சொல்லி அருமையா இருக்குங்க. இது எல்லாருக்கும் கிஃப்டா தரப்பட வேண்டிய புத்தகம். படிச்ச உடனே சொல்லனும்னு தோணிச்சி அதான் கூப்டேன்ங்க. ரொம்ப… (READ MORE)

Paraman's Book

, ,

கண்டறிவதும், கற்றுக் கொள்வதும்தானே வாழ்க்கை

காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கும் போதே குரல்வளை அடைப்பு நீங்கி தெளிவடைந்ததைப் போலொரு உணர்வு. ‘சிவாய நம’ ‘மலர்ச்சி வணக்கம்’ என்று சொல்லிப் பார்த்தேன். அதே பழைய குரல் வந்ததும் துள்ளிக் குதித்தேன். ‘அம்மா, ஆசை, ஓடை… அனைத்தும் வந்து விட்டது… அனைத்தும் வந்து விட்டது… தாயே…’ என்று பேச்சு வந்ததும் பரவசத்தில் துடிக்கும் ‘சரஸ்வதி சபதம்’… (READ MORE)

Uncategorized

தமிழ்ப்பெயர்கள் – சு வெங்கடேசன் – வேள் பாரியில்…

கொற்றன், அலவன், முடிநாகன், குறுங்கட்டி, அவுதி, மடுவன், உளியன், வண்டன், சங்கவை, ஆதிரை, வாரிக்கையன், நீலன், மயிலா, காலம்பன், தேக்கன், புங்கன், பழையன், திசை வேழன்… இவை (கபிலர், செங்கனச் சோழன், உதியஞ்சேரல், பொதிய வெற்பன், குறுங்கைவாணன், பொற்சுவை போன்ற வரலாற்றுக் கதாபாத்திரங்களோடு) பறம்பு நிலத் தலைவன் வேள்பாரி பற்றிய சரித்திரப் புனைவில் சு. வெங்கடேசன்… (READ MORE)

Uncategorized

சூழலியல் என்பது…

வாசல் திருத்தி கோலமிடுவதென்பது மங்களமென்பதற்காக மட்டுமல்ல, பல்லுயிர்ப்பெருக்கத்திற்காகவும். தனது வீட்டைச் சுற்றி வாழும் உயிர்களை காக்கும் கடமை தனதென்று பொறுப்பேற்றுக் கொள்ளும் செயல். பெண்மகளிட்ட கோலத்தில் கணவன் கால் பட்டால் தாலி தழைக்குமென்ற வகை ஆணாதிக்க இட்டுக்கதைகளைத் தாண்டி ஈக்கும், எறும்புக்கும், காக்கைக்கும், அணிலுக்கும் உணவிடும் உன்னதம். ‘வயிற்றிற்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்!’… (READ MORE)

Uncategorized

தமிழாராய்ச்சி தரவகம்…

உலகம் முழுதும் நடந்துள்ள தமிழாராய்ச்சிக் கட்டுரைகளை ஒரே தரவகத்தில் வைக்க ஏற்பாடு என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். எழுந்து நின்று வரவேற்கிறேன். ProjectMadurai.Orgயைப் போல இன்னும் பெரிதாய் இயங்கட்டும் இது. பேரறிஞர்களின் தமிழ் பற்றிய ஆராய்ச்சிகள் அனைவருக்கும் காணக் கிடைக்கட்டும். கட்சிகள் கடந்த தமிழாராய்ச்சி தரவமாக இது இருக்கட்டும். வாழ்க! வளர்க! Facebook.com/ParamanPage

பொரி கடலை

, , , , ,

இசை ராஜா

‘அமுதே தமிழே அழகிய மொழியே…’ ‘மெட்டி ஒலிக் காற்றோடு…’ ‘தென்றல் வந்து தீண்டும் போது…’ ‘காற்றில் எந்தன்…’ ‘என்னுள்ளே… என்னுள்ளே…’ ‘ஓம்… சிவோஹம்…’ ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல்…’ எந்த உணர்வில் நாமிருந்தாலும், நம்மை முற்றிலும் மாற்றி மனநிலையை நேராக்கிவிடும் பாடல்கள். #Ilayaraja #IsaiRaja Facebook.com/ParamanPage

Uncategorized

imagesJLE35TA2

கருவூர்த் தேவர் ராஜராஜனின் குருவே இல்லை!

  கல்கியைப் படிக்கையில் சோழர்கள் மீது ஏற்படும் பெரும் அபிமானம், அரு. ராமநாதனைப் படிக்கையில், பாண்டியர்களே சாதி மதம் தாண்டிய தமிழ்ப் பார்வை கொண்டிருந்தனர் – சோழர்கள் வடவர்களின் சாதீயத்தை கொண்டு புகுத்தியவர்கள் என்று தகர்ந்து போகிறது. சேர சோழ பாண்டியர்கள் பற்றிய பெருமையெல்லாம் பொடியாகி போகிறது சு வெங்கடேசனின் பறம்பின் வேள்பாரி பற்றிய ஆராய்ச்சிப்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

வீரபாண்டியன் மனைவி

கி.பி. 1180ல் மதுரையில் பறந்த பாண்டியர்களின் மீனக் கொடியையும் அவர்களது நேசப் படையான சிங்களவர்களின் ஈழக்கொடியையும் முறித்து மூன்றாம் குலோத்துங்கச் சோழன் புலிக்கொடியை பறக்க விட்ட காலத்தில் நடந்தவற்றை களமாக கொண்ட சரித்திர புனைவு. எஸ்ராவால் சிறந்த நூல் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கும் இந்த நாவல் நடிகர் திலகம் நடித்த ராஜராஜசோழன் திரைப்படத்துக்கு கதை வசனமெழுதிய… (READ MORE)

Uncategorized

நதி போல ஓடிக்கொண்டிரு… – நூல்

முன்னுரை வாழ்க்கை என்பது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான நிகழ்வுகளைக் கொண்டது. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நிகழ்வுகளைக் கொண்டு வந்து நிரப்பிவிடுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளாலேயே நிகழ்த்தப்படுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளைக் கொட்டி நிரப்பியே வேயப்படுகிறது நம் வாழ்க்கை வழிப்பாதை. ‘நம் வாழ்வில் என்ன நடக்கிறது?’ என்பதைத் தாண்டி, ‘நடப்பதை எப்படிப் பார்க்கிறோம்!’ என்பதே ‘நம் வாழ்க்கை எப்படி இருக்கப்… (READ MORE)

Uncategorized

நான் ஒரு எழுத்தாளனா என்பதில் இன்னும் சந்தேகம் உண்டெனக்கு.

நான் ஒரு எழுத்தாளனா என்பதில் இன்னும் சந்தேகம் உண்டெனக்கு. ஆனால், எழுத உட்காரும் போது மெள்ள மெள்ள எழுத்து என்னை ஆட்கொள்வதும் அந்த வேறோர் உணர்வில் மூழ்கிப் போவதும் பிடிக்குமெனக்கு. அதில் காலக்கணக்கு இல்லை. கடிகாரங்கள் இல்லை. உள்ளே போய் திரும்ப வெளியே வருவதில் நிமிடங்கள் கடந்து போயிருக்கும், மணி கரைந்து போயிருக்கும். இன்று தினமலரின்… (READ MORE)

பொரி கடலை

நதி போல ஓடிக்கொண்டிரு – நூல் – பரமன் பச்சைமுத்து

முன்னுரை வாழ்க்கை என்பது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான நிகழ்வுகளைக் கொண்டது. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நிகழ்வுகளைக் கொண்டு வந்து நிரப்பிவிடுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளாலேயே நிகழ்த்தப்படுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளைக் கொட்டி நிரப்பியே வேயப்படுகிறது நம் வாழ்க்கை வழிப்பாதை. ‘நம் வாழ்வில் என்ன நடக்கிறது?’ என்பதைத் தாண்டி, ‘நடப்பதை எப்படிப் பார்க்கிறோம்!’ என்பதே ‘நம் வாழ்க்கை எப்படி இருக்கப்… (READ MORE)

Paraman's Book

, , , , , , ,

பல்லாயிரம் பெலிக்கன்கள்

படகில் பயணிக்கும் போது பக்கத்து தொட்டு விடும் தூரத்து திட்டில் பல்லாயிரம் பெலிக்கன்கள் முதுகைக் காட்டிக் கொண்டு கோடைகாலத்தில் வரும் டிஸ்னி படங்களில் வருவதைப் போல ஒரே இடத்தில் சேர்ந்து உட்கார்ந்திருந்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு! மலர்ச்சி மாணவர் கார்த்திகேயனோடு ‘டச்சுக்காரர்களின் கல்லரைகளை பார்த்து வருவோம் வா!’ என்று ஒருமுறை பழவேற்காடு ஏரிப்பக்கம் போன போது… (READ MORE)

Uncategorized

இறையே நன்றி

‘என்னோட வீக்னஸ் என்னன்னு தெரிஞ்சுது இப்பதான். இனிமே சரி பண்ணி ஜெயிச்சிடுவேன்’ என்று கை தூக்கிப் பகிர்ந்தாள் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பதின்ம வயது மாணவி ஒருத்தி. அதிகாலை புறப்பாடு, நான்கரை மணிநேரம் போக நான்கரை மணி நேரம் வர என்று ஒன்பது மணி நேர சாலைப் பயணம், மணி நேரம்… (READ MORE)

Uncategorized

vetrivagaiAdvt - Copy

வெற்றி வாகை: பரமன் பச்சைமுத்துவின் புதிய நூல் ‘வெற்றி வாகை’

முன்னுரை: இரண்டாம் வகுப்புப் படிக்கும் போது எப்படியாவது அப்பாவிடம் இருபது பைசா பெற்று ஓடிச்சென்று குணசேகரன் கடையில் அதைத் தந்து கை நிறைய தேன் மிட்டாய் வாங்கி வாயில் போட்டு அது கரைவதை உணர்வது வெற்றியாகப் பட்டது. வளர்ந்த போது, வெள்ளம் புரண்டு ஓடும் மானம்பாத்தான் வாய்க்காலில் மதகின் முன்னே விரைந்து வரும் நீரை எதிர்த்து… (READ MORE)

Paraman's Book

, , , , , , , , , ,

செம்புலம் கண்காட்சி

கொங்கு மண்டலத்து காங்கேயம் காளைகள், கரூர் சேலத்து போர் மாடுகள், அந்தியூர் பகுதியின் பர்கூர் மலை மாடுகள், நாகை தஞ்சையின் உம்பளச்சேரி மோழை மாடுகள், தேனியின் தேனி மலை மாடு, தென் மதுரையின் பட்டி மாடு என வரிசையாய் கம்பீரமாக காளைகளும் பசுக்களும், கொங்குவின் கோயம்புத்தூர் ஆடு, மைலம்பாடி ஆடு, செங்கம் ஆடு, சேலத்தின் மேச்சேரி… (READ MORE)

Uncategorized

ராஜராஜனை சிலாகித்து நிற்கிறேன்

🌹🌹 🙏 எப்பேர்ப்பட்ட மனிதனவன்! சிவபாதசேகரன் என்று பெயர் கொண்டு, சிவனைத் துதித்தவன், நாலு பனை உயரத்திற்கு சிவனுக்கு கற்றளி எழுப்பியவன்… தன் மகள் சந்திரமல்லி புத்தத்துறவியாகி மாதேவடிகளாக மாறிய போது இணங்கி துதித்திருக்கிறான்! ராஜராஜனைப் பற்றி சிலாகித்து நிற்கிறேன்! 🌹🌹

Uncategorized

புத்தகத்தை மூடி வைத்தேன், அவர்கள் உள்ளே எதுவோ திறக்கப் பட்டிருக்கும்

தமிழ் எழுத்து நடையை தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தலாமென்ற எண்ணத்தில் மகள்களை அமர வைத்து, ஒரு நூலை எடுத்துக் கொண்டு, ஒரு கதை சொல்லியாக உருவெடுத்து வரிகளைப் படித்துப் படித்து விளக்கிக்கினேன். மகள்கள் மெல்ல மெல்ல கதையில் ஆழ்ந்து ஒன்றிப் போனார்கள். ‘மறுநாள் அந்திவேளை அழகு பங்களா வீட்டின் அதே திண்ணையில்… ‘ என்று இறுதி… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

விவசாயம் காக்க வேண்டுமானால்

நெல்லுக்கு விலையுயர்வு, நிறைய கொள் முதல் நிலையங்கள் திறப்பு என்றோர் அறிவிப்பை செய்திருக்கிறது தமிழக அரசு. விலையுயர்வு நல்லதுதான் என்றாலும், எங்கள் உண்மை நிலவரப் பிரச்சினை வேறு. அரசு எவ்வளவு கொள்முதல் விலை வைத்தாலும் பல காரணங்களால், இரண்டு காணி மூன்று காணி நிலங்கள் கொண்ட சிறு விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களுக்குள் நுழையவே முடிவதில்லை. கொள்முதல்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

images-3.jpeg

‘அருவி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

‘இந்த சமூகம் எப்படி இயங்குகிறது? இந்த சமூகம் அப்படி ஆகி விட்டதுப்பா!’ என்று சமூகத்தைக் குறித்து நிறைய கருத்து சொல்லும் மனிதர்களை, ஊடகங்களை செவிட்டில் அறைந்து ‘டேய் சமூகம் என்பது யார்ரா?’ என்று கேள்வி கேட்டு, ‘ நீயும், நானும், இதோ இந்த மனிதனும், அதோ அந்த மனிதனும் என எல்லோரும் சேர்ந்ததே சமூகம். சமூகம்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

ஆருத்ரா தரிசனம்

26.12. 2016 ( சென்ற ஆண்டெழுதியது) ‘என்ட பக்கத்தில வந்து நில்லு! ‘எத்தனைக் குழாந்தைகள்?’ என்ற வேறு ஓர் உச்சரிப்பைக் கொண்ட ஒரு தமிழை முதன் முதலில் கேட்க நேர்ந்தது பல வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான். ஈழத்திலிருந்து வந்திருந்த சிலர் என் பக்கத்தில் நின்று பேசிய போது கேட்ட தமிழ். சிறுவனாய் இருந்த என்னை… (READ MORE)

Uncategorized

bruce_lee

ப்ரூஸ் லீ அதில் ஒருவர்…

சிறு வயதில் தொலைக்காட்சி காண்கின்ற அனுபவங்கள் எதுவுமில்லாமலேயேதான் வளர்ந்தேனென்றாலும், அவ்வப்போது மாட்டு வண்டியில் அம்மாவோடு பயணித்து டூரிங் டாக்கீஸில் சிவாஜி முத்துராமன் திரைப்படங்கள் பார்த்தே வளர்ந்தேன். என் வாழ்வில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியவை என்றால் அவை பதின்மவயதில் செம்பனார் கோவில் சிம்ப்ளஸ் திரையரங்கம் மற்றும் சிதம்பரம் லேனா தியேட்டரிலிருந்து என்னுள் நுழைந்த புரூஸ்லீ, ஜாக்கி சான்… (READ MORE)

பொரி கடலை

, , ,

Velaikkaran-Tamil-2017-20171203115305-500x500

‘வேலைக்காரன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சென்ற முறை மருத்துவ குற்றம் செய்யும் ‘தனி ஒருவன்’ அவனை எதிர்க்கும் தனி ஒருவன் என்று படம் எடுத்த மோகன் ராஜா இந்த முறை நுகர்வோருக்கு குற்றம் செய்யும் ‘தனி ஒருவன்’ பற்றி எடுத்திருக்கிறார். கூலிக்கார குப்பம் என்ற தனது குப்பம் ‘கொலைகாரன் குப்பம்’ என்று மாற்றப்பட்டுள்ளதை எதிர்த்து மாற்றத்தைக் கொண்டு வந்து தன் மக்களை… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

எது பைத்தியக்காரத்தனம்!

கால்கள் தெரியக் கால்சட்டையணிந்தும் மேல் சட்டையின் பொத்தான்கள் சிலதை அவிழ்த்து விட்டும் உடலில் படும் படி வெய்யிலில் காய்கிறேன். வெய்யில் படாமலிருக்க நீண்ட கையுறையும் குடையும் கொண்டு அவ்வழியே போன பெண்மணியொருவர் ‘பைத்தியக்காரத்தனம்!’ என்பது போல் பார்த்துப் போகிறார். எது பைத்தியக்காரத்தனம் என்றெண்ணி சிரிக்கிறேன் நான். பரமன் பச்சைமுத்து 19.12.2017

Uncategorized

sathya - Copy

‘சத்யா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

வேறொருவனுக்கு மணமாகிப் போய்விட்ட தனது முன்னாள் காதலியின் குழந்தை கடத்தப் படுகிறது. கடத்தப் பட்டக் குழந்தையைத் தேடிச் செல்லும் அந்நாள் காதலன், கடத்தப்பட்ட இடம், பள்ளி, காவல் துறை, குடியிருக்கும் இடம் என்று எங்கு தேடியும் அப்படியொரு குழந்தையேயில்லை என்று அறிந்து அதிர்ந்து நிக்கிறான். அப்புறம் என்ன நடக்கிறது? ஏன் அப்படிச் சொன்னாள் அவள்? –… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

நினைவுகளை பதிவதும், பதிந்தவற்றை நினைவு கூறுவதுமே வாழ்க்கையின் ஒரு பகுதியை உன்னதமாக்கிவிடுகின்றன

மார்கழியின் குளிர், வாசல் தெளித்து தெருவடைத்து அன்னையர் இடும் எண்பதுப் புள்ளிக் கோலம், பசுஞ்சாணத்தில் செருகப்படும் பூசணிப்பூ, மிளகும் பாசிப்பருப்பும் நெய்யும் தூக்கலாக இருக்கும் பெருமாள் கோவிலின் பொங்கல் என மார்கழியின் நினைவுகள் உன்னதமான கலவையென்றாலும், என் மார்கழி நினைவுகளுக்கு உன்னதம் சேர்ப்பவை பதிக – பாசுரங்களே. பெண்ணாய் உருவகப்படுத்தி நற்றமிழில் மணிவாசகர் துயிலெழுப்பும் வெம்பாவையை… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

தேசம் மாறுமென்று தினம்தோறும் கனவு காண்பவன் நான்

தேசம் மாறுமென்று தினம்தோறும் கனவு காண்பவன் நான் ஒரு நாள் விடியும் கரிநாள் முடியும் என்று காத்திருக்கும் குடிமகன் நான் வறுமைகள் ஒழிக்கப்படும் வெறுமைகள் தீர்க்கப்படும் இன்னல்கள் இந்தியாவைவிட்டேயகலும் என்றே நம்பித் துயிலப் போகிறேன், நம்பியே துயிலெழுகிறேன் கான்க்ரீட் ஜங்கிள் நகரத்தின் நடுவே தட்டான்கள் பறக்கும் சிட்டான்கள் கிறீச்சுக்கும் என்று இச்சை வளர்க்கிறேன் பறம்பு நில… (READ MORE)

கவிதை

பொதிகை முதல் அனுபவம்

அந்த மலர்ச்சி மாணவர்களைப் பொறுத்த வரை ‘ஒரு நாளு முழுக்க பரமன் கூடவே இருந்தோம், நெறைய்யா வயிறு வலிக்க சிரிச்சோம், ஒண்ணா சாப்டோம், நடுவுல ஒரு ப்ரோக்ராம் பண்ணோம்!’ ‘ஐ… நாங்கல்லாம், டிவியில வரப்போறோம்!’ என்பதான குதூகலங்கள். அந்தச் சானலின் தொழிட்நுட்ப நிர்வாகிகளுக்கு, ‘ச்சே… யப்பா! அய்யோ! நாங்க நிறைய்ய பேரை இந்த ஸ்டுடியோல பாத்திருக்கோம்…. (READ MORE)

Uncategorized

வளர்ச்சி தந்து வளர்ச்சி பெற்றுள்ளது ‘வளர்ச்சி’ இதழ் வளர்ச்சி

‘ஐ… வந்துவிட்டதா!’ என்று அறுபத்தியைந்து வயதுடைய பெண்மணி, அப்போதுதான் சுடச்சுட புதிதாய் வந்த ‘வளர்ச்சி’ இதழை நோக்கி ஒரு விடலைச் சிறுமியைப் போல ஓடியதைப் பார்க்க நேர்ந்தது இன்று. இதழை கையிலெடுத்தவர் அடுத்த பதினைந்து நிமிடத்திற்கு உலகோடு கொண்ட இணைப்பைப் துண்டித்துக் கொண்டு ‘வளர்ச்சி’ இதழோடு மூழ்கி வாசித்ததையும் கவனிக்க நேர்ந்தது. ‘முதுமையைக் கொண்டாடுவோம்… ரொம்ப… (READ MORE)

Uncategorized

எத்தனையோ கேள்விகள் உணர்வுகள் நம் உள்ளே உருவாகி உள்ளத்தில் தொக்கி நிற்கின்றன

ஓடிக்கொண்டேயிருக்கும் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளிலும் நிகழ்ந்தேறும் எத்தனையோ நிகழ்வுகளினால் எத்தனையோ கேள்விகள் உணர்வுகள் நம் உள்ளே உருவாகி உள்ளத்தில் தொக்கி நிற்கின்றன. சில வினாக்களையும் உணர்வுகளையும் நிதானித்து கண்டறிந்து கொள்கிறோம். சில கவனம் பெறாமலேயே உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில் கிடக்கின்றன. வேறு யாரோ ஒருவர் அதே உணர்வை அல்லது அதே வினாவை வெளிப்படுத்தும்போது,… (READ MORE)

Media Published, VALARCHI Tamil Monthly

, , ,

Emerald Book launch

‘இண்டஸ் வ்வேஆலி தமில் சிவைலைசேஷன்’ நூல் வெளியீடு

வாழ்க்கை சில நேரங்களில் எதிர்பாராத இன்ப அதிர்சிகளைத் தந்து விடுகிறது. உலகத் தமிழாராட்சி கழகத்தின் முனைவர் மருதநாயகம், தமிழ்ப் பேராசிரியர் – இலக்கியத் திறனாய்வாளர் – கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை ( இதர வட்டெழுத்து – பிரம்மி எழுத்து – குறியீடுகள் உட்பட) எப்படிப் படிப்பது… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

aram1

‘அறம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

உப்பு நீர் சூழ்ந்த ஒரு காயல் பிரதேசத்தில் குடிக்க ஒரு சொட்டு நீர் இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்கு வறண்ட பூமியில் முள் வெட்டியும் உப்பங்கழியில் கிளிஞ்சல் அள்ளியும் பிழைப்பு நடத்தும் குடும்பத்தின் குழந்தையின் உயிருக்கு பிரச்சினை என்று வந்து விட்டால், பள்ளிக் கட்டணத்திற்கே சீட்டு எடுத்து செலவு செய்யும் அவர்களால் குழந்தையை காக்க என்ன செய்ய… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

‘தீரன் அதிகாரம் -்ஒன்று’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக அறிவித்து ஊரைவிட்டே ஒதுக்கி வைக்க, பொது மக்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கக் காடுகளில் ஒளிந்து வேட்டையாடி வாழ்ந்த அம்மக்கள், ஒரு நாள் ஊருக்குள் திரும்ப வந்து மக்களை வேட்டையாடி கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஹவேரியாக்கள் என்றழைக்கப்படும் இவர்கள் மகாராஸ்டிரம், உத்தரபிரதேசம், ஆரவல்லி மலைத்தொடர்கள், ஆந்திரம், கர்நாடகம், கும்பகோணம் என இப்போது… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே. குமாரவேல் அருமையான மனிதர்

      பெரிய மனிதர்கள் வெற்றியாளர்கள் மிக எளிமையாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் உற்சாகமாக இருக்கிறார்கள். அடுத்த சக மனிதனை உற்றுக் கவனிக்கிறார்கள், மதிக்கிறார்கள், அவனிடமிருந்து கற்க முயலுகிறார்கள். இந்தியாவின் வர்த்தகத்தில் பெரும் மாற்றம் புரிந்தவர் என ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்படுபவரும் ‘சாஷே’ என்ற ஒன்றை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவருமான சின்னிக் கிருஷ்ணன் அவர்களின் புதல்வரும், வெல்வெட்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

மணிவாசகர் பதிப்பகம் சென்றிருந்தேன்

வருமானம் என்று பார்க்காமல் தமிழுக்காக சில பதிவுகள் காக்கப்படவே வேண்டும் என்று இறங்கி தமிழ் ஆராய்ச்சி நூல்களை, தமிழறிஞர்களின் நூல்களை பெருமளவில் வெளியிட்ட சிதம்பரம் ஊரின் பெருமைமிகு பெரியவர் முனைவர் ச.மெய்யப்பன் அவர்களையும் அவரது மணிவாசகர் பதிப்பகத்தையும் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும். அந்த நல்ல நினைவுகளோடு இன்று மணிவாசகர் பதிப்பகத்தின் சென்னை அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது…. (READ MORE)

Uncategorized

20171112_105758806489332.jpg

இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?

‘இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?’ பரி கேட்ட இந்த கேள்வி அறியாமையால் வந்ததல்ல. கண்ணின் முன்னே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கடல் போல் நிறைந்திருக்கும் இப்படி ஒரு ஏரியை கண்டத்தில் எழுந்த வியப்பு. ‘இல்ல பரி, காஸ்பியன் இருக்கு. அதுக்கப்புறம் ஆப்பிரிக்காவின் லேக் சுப்பீரியர், விக்டோரியா ஏரின்னு நிறைய இருக்கு!’ என்று சொல்லவில்லை…. (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

எனக்கு மீன் பிடிக்கத் தெரியும் பன்னீரு…

சைவனென்றாலும், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் போல வெற்று மார்போடு குளிர் ஏரியில் இறங்கிப் பிடிக்கவில்லையென்றாலும், மீன் பிடித்த அனுபவங்கள் உண்டெனக்கு. வீராணத்தில் தண்ணீர் திறந்து விட்டால் மானம்பாத்தான் வாய்க்கால் வழியே சில தினங்களில் எங்கள் ஊரை வந்தடையும். வாய்க்கால்களில் மதகுகளில் நீர் புறண்டு ஓட, அதைக் காண சிறுவர்கள் நாங்கள் ஓடுவோம். ‘இங்க பாரு, ஆயிவரத்து… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

தேம்பாவனித் தந்த முனிவன்

இத்தாலியிலிருந்து தன் மதத்தைப் பரப்ப இம்மண்ணிற்கு வந்தானொருவன். உள்ளூர் மொழி தெரிந்தால்தான் முடியுமென்றெண்ணி தமிழைத் தொட்டவன், உள்ளூர குளிர்ந்ததிர்ந்தான், உள்நாக்கைத் தாண்டியும் தித்தித்த தமிழ்ச்சுவையில் அகமும் புறமும் மலர்ந்தான். தன்னைத் தொட்டவனைத் தாய்த் தமிழ் இழுத்து வாரி அணைத்துக் கொண்டது. மதப் பற்றாளன் தமிழ்ப்பற்றாளனானான். மதத் தொண்டு புரிய வந்தவன், தமிழ்த்தொண்டு செய்து மலர்ச்சி கண்டான்…. (READ MORE)

Uncategorized

இறைவா நன்றி

வேறு வேறு தேடல்கள் வேறு வேறு இலக்குகள் கொண்டு வேறு வேறு தளங்களிலிருந்து மனிதர்கள் மலர்ச்சிக்குள் வருகிறார்கள். மெதுவே மாணவர்களாய் மலர்கிறார்கள், மலர்ச்சி அவர்களுக்குள் நுழைகிறது. வளர்ச்சி வருகிறது. ஒவ்வொரு பேட்ச்சிற்கும் இது இயல்புதானென்றாலும், ஒவ்வோரு பேட்ச்சும் சிறப்பென்றாலும், இறையருளால் இது இன்னும் சிறப்பு! ‘முழுமலர்ச்சி இருபத்தியைந்தாவது பேட்ச்!’ இறையருளோடு இன்று மாலை இனிதே தொடங்குகிறது… (READ MORE)

Paraman's Program

மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே…

‘மாமழை போற்றுதும்!’ என்று காப்பியம் செய்த சேர சோதரா, ‘நீர்இன்று அமையாது உலகெனின்’ என்றெழுதிய வள்ளுவப் பேராசானே, மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே, தேர்வுக்காக மட்டுமே படித்த உங்கள் வரிகளை தேர்வோடே விட்டுவிட்டோம் நாங்கள். மழையைக் கொண்டாடி வரவேற்ற முன்னோரே, மாரியை அம்மனாக வழிபட்ட மூத்தோரே, மன்னிக்கவும். மழை என்றால் ‘சங்கடம்’ என்றே பதம் கொள்ளும்… (READ MORE)

கவிதை

, , ,

முழங்கால் வரை நீர் கொண்டிருந்த பகுதிகளில் நீரே இல்லை.

அத்யாவசியப் பொருள்கள் வாங்குவதற்குத் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் சொன்னதைக் கேட்காமல் அலுவலம் கிளம்பிவிட்டேன் நான். நேற்று இரவு வீட்டிற்குத் திரும்புகையில் கனமழையில் வெள்ளக்காடாக இருந்த காரில் நீந்திச் செல்லும்படி இருந்த வீதிகளா இவை என்று எண்ணுமளவிற்கு தண்ணீர் வடிந்து இருந்தன நான் வழக்கமாக வரும்… (READ MORE)

Uncategorized

நல்ல செய்தி!

மழை வெளுத்துக் கட்டியது. நாகை மாவட்டத்தில் சிதம்பரம் காட்டு மன்னார்குடியில் நெற்பயிர்கள் மூழ்கின, வைத்தீஸ்வரன் கோயிலின் ஒரு பகுதியில் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது, சென்னைப் பெருநகரில் வேளச்சேரி, அம்பத்தூரில் சில பகுதிகளில் என சில இடங்களில் வீட்டுக்குள் நீர் புகுந்தது போன்றவை நிகழ்ந்துள்ளன. கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டிற்குள் நீர் புகுந்தது. இந்த பாதிப்புக்களுக்கு மீட்பு நடவடிக்கை… (READ MORE)

Uncategorized

நானற்றுக் கிடந்த பொழுதுகளில்…

நானற்றுக் கிடந்த அந்த பொழுதுகளில் நான் எங்கே போயிருந்தேன், எப்படித் திரும்ப வந்தேன்! பரமன் பச்சைமுத்து 01.11.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , ,

யார் அந்தப் புண்ணியவானோ, அவருக்கு என் பெரும் வணக்கம்! …

தேவனூர் பகுதியில் வாழும் இருளர்கள் வாழ்வில் திடீரென்று ஒரு ஒளி பாய்ந்துள்ளது. தேவனூர் பகுதியில் திடீரென அதிக அளவில் மீன்களும் நண்டுகளும் வளர்ந்துள்ளன. அதைப் பிடித்து விற்பதில் அவர்களது வாழ்வாதரங்களும் மகிழ்ச்சியும் உயர்ந்துள்ளன. தேவனூர், சாத்தனஞ்சேரி, பழவேரி, சீதாவரம், படூர், அரும்புலியூர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குடிநீர் தேடியலைந்தவர்களும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

மேயாத மான் - Copy

‘மேயாத மான்’ திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

புனல் ரேடியோ கட்டிக்கொண்டு திடீர்க் ‘கானா’ப் பாடல்களையும் சினிமாப் பாடல்களையும் பாடும் இசைக்குழு நடத்தும் ஒரு அக்மார்க் வடசென்னை ராயபுரத்து இளைஞனுக்கும், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் காதல் வந்தால், அதைப் பீறாய்ந்து வழிக்குக் கொண்டு வருவதற்குள் அவனது தங்கையின் மனதில் காதல் என்று ஒரு முடிச்சு விழுந்தால்… என திரைக்கதை கட்டி அதில்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

கண்ணுக்குள்ளே கருந்திரை

வெளியே இலகுவாக மூடப் பட்ட இமைகளுக்கு உள்ளே கருந்திரை போர்த்தப்படும் கண்கள் இறுகும் அந்தக் கணம் தொடங்குகிறது உள்முகப்பயணம்! #தவம் #தியானம் பரமன் பச்சைமுத்து 24.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , ,

பேராவூர் கிராமத்திற்கு பெருவணக்கம்

அரசு செய்யும் அரசு அதிகாரிகள் வருவார்கள் என்று காத்திருக்காமல் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் என்று இறங்கி மொத்த ஊரையும் கூட்டித் துடைத்து கழுவி காயப் போட்டுள்ளனர் ஒரு ஊர் மக்கள். சீமைக் கருவேலத்தையும் வேண்டாப் புதர்களையும் களைந்து குப்பைகளைக் கூட்டி எரித்தும் புதைத்தும் சுத்தப் படுத்தி ஒரு ஊரையே குப்பைகளில்லா ஊராக மாற்றியிருக்கிறார்கள். ராமநாதபுர மாவட்டத்தின்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

கில் த புத்தா…

‘ஈஃப் யூ மீட் அ புத்தா, கில் த புத்தா’ என்று சொன்னவன் எப்பேர்ப்பட்ட ஆசானாக இருந்திருக்கக் கூடும்! #தவம் #தியானம் பரமன் பச்சைமுத்து 20.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , ,

செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால்…

// செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால் எத்தை தின்னும் ?…எங்கே கிடக்கும் ? கேள்வி :மதுரகவிஆழ்வார் “அத்தை தின்னும் அங்கே கிடக்கும் ” பதில் : நம்மாழ்வார் இதற்கு அர்த்தம் தெரிய வேண்டும் நண்பரே …! உதவி செய்ய முடியுமா? // பரமன் பச்சைமுத்து: கேட்டதற்கு நன்றி வனிதா! இது பிறந்ததிலிருந்து பேசாதிருந்த நம்மாழ்வாருக்கும், அவரை… (READ MORE)

Uncategorized

images1199586415.jpg

‘மெர்சல்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அப்பா கமலை வில்லன்கள் குழாம் நயவஞ்சகமான முறையில் கொடூரமாகக் கொன்றுவிட, சின்னாபின்னமாகி சிதறிப்போகிறது குடும்பம். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தன் குடும்பத்தை சிதைத்த எதிரிகள் ஒவ்வொருவரையும் தினுசு தினுசான முறையில் கொன்று பழிதீர்ப்பார் வித்தைகள் காட்டும் மகன் கமல். உருவ ஒற்றுமையால் பிரச்சினையில் சிக்குவார் அவரைப் போலவே இருக்கும் இன்னொரு கமல். தனது மூலமும், உண்மையான… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,