aadukalam

தன் மீது நம்பிக்கை கொண்டவன்…

The one who beleives on himself will never hide, from where and whom he learnt what. How he sees things is his strength. அட்ட காப்பி அடிப்பவர்களெல்லாம் அசல்தான் என்பதாக காட்டிக்கொள்ளும் உலகில், மெக்சிகோவின் ‘அமோரஸ்பெரோஸ்’ நாய் சண்டையை மனதில் கொண்டு சேவல் சண்டையை செய்தேன் என்று… (READ MORE)

Self Help, பொரி கடலை

நடிகர் சூர்யாவின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த…

நடிகர் சூர்யாவின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த இளைஞர் என்ற அந்த செய்தி கவனம் ஈர்த்தது என்பதைவிட சூர்யாவின் மீதான மரியாதையை உயர்த்தியது என்றே சொல்வேன். அந்தப் பெண்மணி தன் காரில் பிரேக் போட்டார், பின்னே வந்த இளைஞரின் பைக் இடித்தது. இருபக்கமும் பாதிப்பு. வண்டியை நிறுத்தி சண்டை. சூரியா தாக்கினார் என்று அந்த… (READ MORE)

பொரி கடலை

சென்னைப் புத்தகக் கண்காட்சி

பெங்களூரில் அவ்வளவாக தமிழ் நூல்கள் கிடைக்காத அந்நாட்களில், அங்கிருந்து பயணித்து வந்து அள்ளிப் போவோம் நூல்களை. அமெரிக்காவிலிருந்து திரும்பி அப்படியே காயிதே மில்லத் கல்லூரியில் இருந்த கண்காட்சியில் புதையல்களை அள்ளிக் கொண்டு, நண்பர்களோடு இரவுக்காட்சி ‘ஆளவந்தான்’ பார்த்து விட்டு நள்ளிரவிற்கு மேல் தந்தை பெரியார் போக்குவரத்துக் கழக பேருந்து பிடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. இரண்டான்டுகளுக்கு… (READ MORE)

பொரி கடலை

Great teacher is

Great teacher is one who gives great learning from simple things! An ordinary student become extraordinary when he goes in the hands of a great teacher! சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்களை கற்பிக்கிறார்கள் சிறந்த ஆசிரியர்கள். ‘எது விஷயம்?’ என்று பார்க்கும்போது மாணவனாய் இருப்பவன், அதை… (READ MORE)

Self Help

சீனப் பயணி …

17 வருடங்கள் காடு, மலை, பேரறுவி, பேய்ப் பள்ளத்தாக்கு, ரத்தம் உறையச் செய்யும் குளிர், வழிப்பறி கொள்ளை, கொடிய மிருகங்கள், விஷ ஜந்துக்கள், வரும் வழிகளில் பிடித்து வைத்துக் கொண்டு விடமுடியாது என்று சட்டம் பேசிய மன்னர்கள், பசி, பாலைவனம், கடக்க முடியா நீர் மண்டலம், உயிருக்கு ஆபத்தான பேராசை பிடித்த மனிதர்கள் என எல்லாவற்றையும்… (READ MORE)

பொரி கடலை

Paraman Parotta Ooty

அக்னி நட்சத்திர வெய்யிலில்

அக்னி நட்சத்திர வெய்யிலில் அடுப்பைப் பற்ற வைத்து சத்துமாவைக் கொதிக்க வைத்து உருண்டை பிடிக்காமல் கிண்டிக் கிண்டி இறக்கி கஞ்சியாக்கும் போது… மனைவியின் மீது மரியாதை பெருகுகிறது! ‪#‎மனைவி‬ ஊரில் இல்லை.

பொரி கடலை

24 one

’24’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இந்த மணித்துளியிலிருந்து இருபத்தி நான்கு மணி நேரம் முன்னும் பின்னும் பயணிக்க வைக்கும் ஒரு கால எந்திர கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டால், அதை களவாடி கைப்பற்றித் தனதாக்கிக் கொள்ள ஒருவன் முயற்சித்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை இருபத்தியாறு வருடங்கள் கழித்து இருவர் சரி செய்யும் முயற்சியில் பின்னோக்கிப் பயணித்தால்… எப்படி இருக்கும்? அந்த ’24’லிருந்து ’26’ என்பதே… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

o-LIFE-AFTER-DEATH-facebook

உலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன்…

வாழ்க்கை, உலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன். ஒவ்வொரு நாளும், பல நிகழ்வுகளை நாம் நடந்து போகும் பாதையில் வைத்து கடந்து போக வைத்து அதில் அனுபவம் கொள்ளச் செய்து நம்மை வார்க்கிறது, வளர்க்கிறது. நான் என்பவன், நான் கடந்து வந்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவன். நீங்கள், நீங்கள் பயணித்த பாதையில் சந்தித்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவர்.

Self Help

, , , , , ,

TheManWhoKnewInfinity_Trailer

திரை விமர்சனம் : ‘த மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி’ : பரமன் பச்சைமுத்து

  கணிதத்தின் அறிந்துகொள்ள முடியா பெரு முடிச்சுகளின் ஆதாரங்களை அவிழ்த்துப் போடும் சூத்திரங்களை உள்ளே வைத்துக் கொண்டு, அதை நிரூபிக்க வெளியே தினம் தினம் போராடிய நம் தமிழ் மண்ணின் கணித மேதை ராமானுஜத்தைப் பற்றிய ஹாலிவுட் படம். (‘த மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி’ – ‘முடிவிலியை முன்பே கண்டவன், முன்னமே அறிந்தவன்’ !!!?) சிறுவயதிலேயே… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

exclamation

வியப்பில்லா இயந்திரங்களைக் கண்டு வியக்கிறேன்

ஒரு பயணித்தின் இடையே புதுச்சேரியில் உணவருந்திவிட்டு திரும்ப தொடர்ந்த போது, ஒரு வெண்ணிறக் கட்டடத்தைப் பார்த்து என் மகள்கள் ஒரு சேரச் சொன்னது, ‘வாவ்!’ வியக்குமளவிற்கு இதில் என்ன இருக்கிறது? இது ஒரு கட்டிடம் அழகாக இருக்கிறது. அவ்வளவுதான்! ‘வாவ்’ எதற்கு? – என்பதே என் எண்ணமாக இருந்தது. ‘எந்திரன்’ திரைப்பட சிட்டி ரோபோவிற்கு வியப்பு… (READ MORE)

Self Help, பொரி கடலை

, , ,

House_Crow_in_Kolkata

காக்கை அணிலோடு மதிய உணவு

எட்டு காக்கைகளோடும், ஓர் அணிலோடும் பகிரும் அனுபவமாய் அமைந்தது என் இன்றைய மதிய உணவு! ஆறு மணிக்காக்கைகள் கீரைச்சோற்றையும், இரு அண்டங்காக்கைகள் தயிர் சோற்றையும், இவைகள் கொத்தி விட்ட மற்ற எல்லாவற்றையும் அணிலும் உண்டன. என் தட்டைக் கழுவி, நீர் நிரப்பி வைத்ததும் ஒன்பது உயிர்களும் பருகின என்பது என் பரவசம்.  (மலர்ச்சி அலுவலகம் மேலே)… (READ MORE)

பொரி கடலை

aram1

ஆழ்ந்து அசந்து போக வைத்த எழுத்து – ஜெயமோகன்

நாடகம் போடும், நிறைய எழுதும், சாமி கும்பிடுதல் என்ற ஒன்றே இல்லாத வாழ்வைக் கழித்த ஒரு முற்போக்கு எழுத்தாளன் முதுமைக்குள் நுழையும் போது அடி முதுகில் திருகு வலி வந்து நிற்க முடியாமல் நடக்க முடியாமல் படுக்க முடியாமல் பெரும் அவதியில் அல்லல்படுகிறான். உள்ளே வெறுமை வந்து தின்ன, எழுந்து நிற்கவே முடியாத நிலை கொண்ட,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

நாலு முழமா எட்டு முழமா – பழசு

நாலு முழமா, எட்டு முழமா என்று அளவு கேட்ட கடைக்காரரை, 28-30ஆ 30-32ஆ என்று சைஸ் கேட்க வைத்துவிட்டன ‘ஒட்டிக்கோ, கட்டிக்கோ’ வெல்குரோ வேட்டிகள்! #ராம்ராஜ் வெல்குரோ

Uncategorized

Theri - Copy

‘தெறி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் ஒரு ‘நிர்பயா’ இறக்கும் தருவாயில் ‘அண்ணே’ என்று சொல்லி உயிர் விட, அண்ணனாக பொறுப்பேற்ற நாயகன் அந்த அபலையின் சம்பவத்திற்கு காரணமானவனை கண்டுபிடித்து அதேவிதமாகத்  தண்டிக்க, அதனால் வெகுண்டெழுந்த அவனது பெரும்புள்ளி அப்பா பதிலுக்கு என்னவெல்லாம்  செய்கிறார், எப்படியெல்லாம் எதிர்கொள்ளப் படுகிறார் என்பதைச் சொல்லும் கதைக் களம். விஜய்யின் உடையலங்காரம் மிக… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

மனதில் நீர்வார்த்த வானிலை அறிக்கை!

வட இந்தியாவில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர்ப் பஞ்சம், நீரின்றி தவித்து வறட்சியால் கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது, சட்லஜ் – பாக்ரா நங்கல் நீர்ப் பிரச்சினை பெரிதாக வெடிக்கிறது, ‘ஐபிஎல்’ஐயே தடை செய்யவேண்டும் என்ற பொதுநலவழக்குப் போடுமளவிற்கு மகாராஷ்டிரத்தில் தண்ணீர்ப் பஞ்சம் என்று தினம் வரும் செய்திகளைப் படித்து விட்டு மாநில செய்திகளைப்… (READ MORE)

பொரி கடலை

வேலூர் சரவணபவன்

நேற்று முன்தினம் பெங்களூரூவிற்குப் பயணிக்கும் போது மதிய உணவு சாப்பிட வேலூர் சரவணபவன் வந்தேன். இன்று சென்னை நோக்கிப் பயணிக்கும் வழியில் மதிய உணவிற்காக அதே வேலூர் சரவணபவன். இரண்டுக்குமிடையே நிறைய நடந்துவிட்டன. ஒரு மலையில் ஏறியது, ஒரு அனுபவக் கட்டுரை, உறவினர் ஒருவர் வீட்டில் தடாலடியாக புகுந்து மகிழச்செய்தது, உயிர் நண்பனோடு ஓரிரவு தங்கி… (READ MORE)

Uncategorized

‘மலைகள் அழகானவை’ அல்லது ‘மலேய்டா…!’

மலைகள் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. ‘குணா’ பார்த்து விட்டு ‘புண்ணியம் செய் மனமே’ அந்தாதி சொன்ன கமலஹாசன் பாத்திரம் நம்மைப்போலவே இருக்கிறதே என்று வியந்திருக்கிறேன்.  கர்நாடகாவில் இருந்த காலங்களிலெல்லாம் மலைமுகடுகளில் திரிந்திருக்கிறேன். சென்ற ஆண்டு சாவன்துர்கா, மேற்குத் தொடற்சியின் கல்கொத்தி மலை மற்றும் போளூர் அடுத்த பர்வதமலை ஏறிய போது கால்கள் விரையும் வேகங்கண்டு ‘மனிதக்… (READ MORE)

Uncategorized

cicketposter - Copy

Life Vs Cricket #India-WestIndies

#India-WestIndies match வரையறை என்பது ஒரு மெல்லிய கோடு;  நாம் கோட்டிற்கு உள்ளே இருந்துகொண்டு நம் வீச்சு கோட்டைத் தாண்டி பயணிக்கும்படி செய்யும்போது பெரும் வெற்றி , நாமே கோட்டைத் தாண்டிப் போகும்போது நமது முயற்சிகள் முழுதும் வீண் என்பது கிரிகெட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும். – பரமன் பச்சைமுத்து 01.04.2016 சென்னை    

Self Help

, , ,

london_has_fallen_2015_movie-wide - Copy

‘லண்டன் ஹேஸ் ஃபாலன்’ – திரை விமர்சனம்

அமெரிக்கர்களைப் பொறுத்தவரை வெள்ளை மாளிகையும், அதிலிருக்கும் அதிபரும் அவர்களது பெருமை. தேசியக்கொடியை உள்ளாடையில் பிரிண்ட் செய்து போடுவதைக் கூட ஏற்றுக் கொள்ளும் அவர்கள், வெள்ளை மாளிகைக்கோ, அமெரிக்க அதிபருக்கோ அந்நிய தேசத்தால் ஒரு கரும்புள்ளி வருவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலத் திரைப்படம். பிரித்தானிய பிரதமரின் மறைவிற்கு இரங்கல் செலுத்த ஏகப்பட்ட… (READ MORE)

Manakkudi Talkies

, ,

அமெரிக்க அதிபர் கியூபா பயணம் பற்றி அன்றே சொன்ன ஃபிடல் காஸ்ட்ரோ

‘கருப்பின மகனொருவன் அமெரிக்க ஜனாதிபதியாகவும், லத்தீன் அமெரிக்க மனிதரொருவர் ‘போப்’ ஆகவும் இருக்கும் நாளில்… அமெரிக்கா நம்மிடம் வந்து பேசும்!’ என்று ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து மூன்றிலேயே சொன்ன ஃபிடல் காஸ்ட்ரோ பிரமிக்க வைத்துவிட்டார்! ‪#‎American‬ President in Cuba after 88 years. Present Pope is from ‪#‎Argentina

பொரி கடலை

, ,

அறுபத்து மூவர் இன்று…

‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன், திருநீலகண்ட குயவனார்க்கு அடியேன்…’ என்று பதிகத்தில் பதிவு பெற்ற சிவனடி நிழல் பெற்ற நாயன்மாறர்களுக்கென்றே நடக்கும் பெரு உற்சவம் இன்று இங்கே.  மயிலைத் தெருக்களில் தொடங்கி மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் என் வீடு வரை சாலையோரத்தில் மோர் விநியோகிக்கிறார்கள், நீர் தருகிறார்கள், உணவு சமைக்கிறார்கள்.  எந்த அரசியல் அல்லது… (READ MORE)

Uncategorized

மயிலை தேர்…

‘ஏங்க எடம் இல்லீங்க… வழியில்லீங்க. இப்படி போக முடியாது’ ‘ஏனு… எல்லி ஹோகி…ஹலோ… மர்த் பிடு’ ‘ஏம்மா நின்னு போனாதான் என்னம்மா’ நெஞ்சு, முதுகு, அடி வயிறு என மொத்த உடம்பையும் எல்லா பக்கங்களிலிருந்தும் எல்லாரும் அழுத்திக் கொண்டேயிருக்க, எல்லாப் பக்கமும் சப்தம், நகரமுடியாது, நினைத்த பக்கமும் போகமுடியாது, கும்பலோடு சேர்ந்து நீங்கள் கடத்தி நகரத்தப்… (READ MORE)

Uncategorized

Sethupathi - Copy

‘சேதுபதி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

வீட்டில் ஒரேயடியாய் குதூகலம், டூட்டியில் ஒரேயடியாய் விறைப்பு என்று இருக்கும் முறுக்கு மீசை போலீஸ்காரர் ஒருவரின் வாழ்க்கையில் ஆள்-அம்பு-சேனை என்று வாழும் எதற்கும் பயப்படாத தாதா ஒருவர் குறுக்கிட்டுவிட்டால் என்னவாகும், அவர்களிடையே நடக்கும் மோதல்கள் என்ற ‘மூன்று முகம்’ காலத்தைய, எல்லா ஹரி படத்திலும் பார்த்த கதைதான். ஆனால் கொடுத்த விதத்தில் வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர்…. (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

visaranai2 - Copy

‘விசாரணை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

  ஆட்டோ ஓட்டும் ஒருவர் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டெழுதிய ‘லாக்கப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட படமாம். நாவல் எழுதியவரை உலகத் திரைப்பட விழாவிற்கே கூட்டிச் சென்றும், படத்தில் பெயர் போட்டும்  கௌரவித்து விட்டார் இயக்குநர். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருக்கும் உயர் அதிகாரம் கொண்டவர்களுக்கு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , ,

Chennai-Copy

‘நம்ம சென்னை’!

அதிகாலைப் பனியில் ‘க்க்கோவ்வ்வ்…’ என்று குரலெழுப்பும் அதே ஆர் ஏ புரத்து மாமரத்துக் குயில்… அரை மணி நேரத்தில்  கடக்கும் ஆயிரம் வாகனங்கள், அவை கிளப்பும் சத்தம், கக்கும் புகை, சுட்டெரிக்கும் சூடு, இவைகளைத் தாண்டி சேத்துப்பட்டு சிக்னல் இடப்புற சுவர்மீது மலர்ச்சியோடு சிரிக்கும் மஞ்சள் மலர்கள்… ‘யோவ் பெருசு, போலீஸ்தான் இல்லியே, போமாட்ட?’ என்று… (READ MORE)

ஆ...!, பொரி கடலை

, , , , , , , ,

கருந்துளைகளைத் தாண்டி கணக்கிட முடியா பெரியவன்’ :

அறிவியல் உலகம் ஆர்ப்பரிக்கிறது. ஊடகங்கள் உற்சாகத் தலைப்புகளிட்டு செய்திகள் தருகின்றன. வானியல் அறிவியலில் அடுத்த கட்டம் இது என்கிறார் டேவிட் ரிட்ஸ், லிகோ அமைப்பின் திட்ட செயல் இயக்குநர் (லேசர் இன்ட்டெர்ஃபெரோமீட்டர் க்ராவிடேஷனல்-வேவ் ஆப்சர்வேட்டரி). இன்டர்ஸ்டெல்லார் திரைப்படம் நினைவுக்கு வருகிறது சிலருக்கு. ‘சூரியனைப் போன்று 29 மற்றும் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள்… (READ MORE)

Uncategorized

, , , ,

கரிகுப்பம் பவர் ப்ளாண்ட்டும், ‘கெயில்’ வயல் வழியும்

நெல் வயல்களின் ஊடே மின்சார கம்பி தூக்கும் மின் மரங்கள் நடப்போவதாகவும், அந்த இடத்தை மட்டும் வெறுமனே விட்டுவிட வேண்டும், பயிர் வைக்கக் கூடாது, இடம் தருவதற்கு இவ்வளவு பணம், கரிக்குப்பம் பவர் ப்ளாண்ட்டிலிருந்து தரகர்கள் வந்து பேசிக்கொண்டுள்ளனர் என எங்கள் கிராமமே பரபரப்பாய் இருந்தது.  அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது கரிகுப்பம் பவர்… (READ MORE)

Uncategorized

stills - Copy

‘இறுதிச் சுற்று’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

சாதனை எதுவென்பது வாழ்வின் நிலையைப் பொறுத்து மாறிவிடுகிறது. விளையாட்டு வீரனாய் இருக்கும்போது அவனது சொந்த வெற்றி சாதனை. ஆசிரியனாய், பயிற்சியாளனாய் மாறும்போது, மாணவனின் வெற்றியே சாதனை! முந்தைய நிலையில் அரசியல் காரணங்களால் விட்ட வெற்றியை பிந்தைய நிலையில் பிடிக்க முயற்சிக்கும், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை திமிர் தெனாவெட்டு கொண்ட, அதைவிட அதிகமாய் குத்துச் சண்டை விளையாட்டு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,

திருமண நாள்

‘ப்பா… ஹாப்பீ எய்ட்டீன்த் வெட்டிங் அஏன்னிவெர்ஸரி!’ மகள் கட்டிக்கொண்டு சொல்லும் போதுதான் பதினெட்டு வருடங்கள் ஓடியே விட்டன என்பது புரிகின்றது.’எத்தனை பேர் வாழ்த்தி வளர்ந்த திருமண வாழ்க்கை!’ என்று மனம் நெகிழ்கிறது. பயணித்த பாதைகள் மனதில் ஓடுகின்றன. ‘எங்கும் நிறைந்தவனே, எல்லை இலாதானே, எங்கேயும் எப்போதும் என் குலம் காப்பவனே… நன்றி!’ மனம் கை கூப்புகிறது…. (READ MORE)

Uncategorized

mental-hed - Copy

மனநிலை?

‘மனநிலை சரியில்லாத மகனை சுத்தியால் அடித்துக் கொன்ற பெற்றோர்!’ என்ற செய்தி படிக்கையில் எழும் கேள்வி, ‘யாருக்கு மனநிலை சரியில்லை?’

ஆ...!, பொரி கடலை

wpid-images.jpg

அம்மாவின் தவம்…

சிலர் சிலவற்றை செய்யும் போது, வெறுமனே அதை பார்க்கும் நம்மையும் அது தொற்றிக் கொள்கிறது. உணர்ந்திருக்கிறீர்களா? சிலர் பிரார்த்தனை செய்யும் பாங்கு,  வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு உள்ளே வந்து ஒரு இறையுணர்வை ஏற்படுத்திவிடும். ஒரு அழகான குறத்தி அதை செய்துவிட்டாள் இன்று எனக்கு. தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்து விடுதியில் தேநீர் அருந்த இறங்கிய போது… (READ MORE)

Self Help

, , ,

ஏறுமுகம்…

உங்களை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதில் தொடங்குகிறது உங்கள் ஏறுமுகம்.   உங்களுக்கு உங்களிடம் பிடித்த ஒரு விஷயம் என்ன? – பரமன் பச்சைமுத்து Facebook.com/MalarchiPage

Self Help

wpid-unnamed.jpg

தாரை தப்பட்டை – திரை விமர்சனம்: பரமன்பச்சைமுத்து

சென்ற வருடம் முகநூலில் ஒரு விவாதத்திற்காக ஒரு கேள்வியை கேட்டிருந்தேன். ‘அன்பென்பது என்ன, நீ அழுது கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை நான் பக்கத்திலிருக்க இடம் வேண்டும் என்பதா? அல்லது நான் தூரமாகப்  போனாலும் பரவாயில்லை, நீ நன்றாக இருக்க வேண்டும் என்பதா?’ என்று கேட்டிருந்தேன். அதற்கான இயக்குநர் பாலாவின் பதில் ‘தாரை தப்பட்டை’ திரைப்படம். ராஜாவும்,… (READ MORE)

Manakkudi Talkies

சாமி முன்ன வை…

சுடச் சுட அச்சகத்திலிருந்து வந்த என் முதல் நூலை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்து அப்பாவின் முன் வைத்தேன். ‘எந்த நல்லதையும் சாமிகிட்ட மொதல்ல வைக்கணும்ன்னு தெரியாதா! சிவசிவா’ என்று சொல்லி பூஜையறைக்கு எடுத்துப் போகிறார். ‘சாமி முன்னதான் வைச்சேன்!’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டு புன்னகைக்கிறேன் நான்! பரமன் பச்சைமுத்து மணக்குடி 16.01.2015

Uncategorized

Ethuvum nirpathillai yenbathey - Copy

ஓடிக் கொண்டே இருக்கும் உலகம்…

சிவாஜி – என்ன ஒரு கலைஞன். அவார்டுகளால் அளக்க முடியா ஆளுமை அவர்.  வைரமுத்து தனது நூலொன்றில்,  ‘கட்டபொம்மனை, கப்பலோட்டிய தமிழனை, அப்பரை, காத்தவராயனை கண்டதில்லை நாங்கள். உன்னைத்தான் திரையில் அவர்களாகப் பார்த்தோம்’ என்று எழுதியிருப்பார். அது எப்பேர்ப்பட்ட உண்மை, அவர் எப்பேர்ப்பட்டக் கலைஞன்!  நடிப்பு என்னும் கடலை கரைத்துக் குடித்த குறுமுனி அவர். நடிப்பிற்கு… (READ MORE)

Self Help

, , , , , , , , , , , , , , , , , ,

wpid-images1.jpg

விகடன் விருதுகள்…

அனிருத்தின் தர லோக்கலுக்கு ‘மாரி’ தனுஷ் போட்ட குத்தாட்டத்திற்கு, ‘காக்கா முட்டை’ படத்திற்கு, சிறுவர்களுக்கு மற்றும் இயக்குநருக்கு, ‘மாயா’ மற்றும் ‘காதும்மா’வாக வடிவெடுத்து உயர்ந்து நிற்கும் நயன்தாராவிற்கு, புத்தரின் அமைதியும் அபிமன்யுவின் தீவிர செயல்பாடுகளையும் கொண்ட அபூர்வ கலவை ‘சித்தார்த் அபிமன்யூ’ ‘தனி ஒருவன்’ அர்விந்த் சாமிக்கு, ‘மௌவாலா வா சலீம்’ பாடலுக்காக ஏ.ஆர். அமீனுக்கு,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , ,

Marathinayam - Copy.jpg

மரத் தியானம்…

தியானத்திலிருந்து மெதுவே மீண்டு வெளி வருகையில் பால்கனிக்கு பக்கத்தில் நிற்கும் கருவேப்பிலை மரம் கூட தியானத்தில் உறைந்து நிற்பதாய் தோன்றுகிறது. மேற்பக்க கிளையின் இலைகள் காற்றில் ஆடினாலும் வேப்ப மரம் உள்ளே பெரும் அமைதி கொண்டு நின்று தியானிப்பதாகவே தோன்றுகிறது.  தூரத்து மொட்டைமாடியில் காயவைத்த துணிகளை எடுக்கும் யாரோ ஒரு அக்கா மட்டும் ஏன் இத்தனை… (READ MORE)

Self Help, Spirituality

, ,

Perungu

நல்லதைப் பாராட்டுவோம் – பெருங்குடி ஏரி காக்கும் பேரார்வலர்கள்…

இரண்டு லட்சம் பேர் வெறுமனே புலம்பிக் கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, இருபது பேர் இறங்கிச் செய்தால் எல்லாம் மாறும் என நிரூபித்திருக்கிறார்கள்  ‘பி-எல்-ஏ-என்’ (பெருங்குடி லேக் ஏரியா நெய்பர்ஹூட்) தன்னார்வலர்கள்.  பெருங்குடி ஏரிக்குள் இறங்கி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி ஏரியை சுத்தம் செய்கிறார்கள். ஜனவரி இருபத்தியாறன்று ‘பெருங்குடி ஏரித் திருவிழா’ கொண்டாடுகிறார்கள். பெய்யெனப் பெய்த பேய்… (READ MORE)

பொரி கடலை

opnness

பிரச்சினைகளின் ஆணி வேர்…

‘இதுதான் நான்!’ ‘இப்படி நினைத்திருந்தேன்’ ‘இப்படிச் செய்துவிட்டேன்’ என்று உள்ளதை உள்ளபடி உரைக்காமல் மறைப்பதில் தொடங்குகின்றன வாழ்வின் பெரும்பாலான பிரச்சினைகள். உண்மையை போட்டு உடைப்பவனுக்கு ஒரே ஒரு பிரச்சினை, அதை சொல்லும் தருணத்தில். மறைப்பவனுக்கு ஓராயிரம் பிரச்சினைகள், காலம் முழுக்க. மலர்ச்சி வணக்கம்! -பரமன் பச்சைமுத்து Facebook.com/MalarchiPage

Uncategorized

vetti

வேட்டி ‘தினம்’!

தமி்ழர் பற்றி அதிகம் பேசாதவர் என் தந்தை. தமிழை உயிராகக் கொண்டு தமிழனாகவே வாழ்கிறார் கிராமத்தில் அவர். தமிழர் பற்றி அதிகம் பேசி, ஆங்கிலம் அதிகம் பேசி அவ்வப்போது தமிழில் பேசி தமிழ் வளர்ப்பது பற்றி நிறைய பேசி நகரத்தில் வாழ்கிறேன் நான். அவருக்கு வேட்டி ‘தினம்’. எனக்கு ‘வேட்டி தினம்’! அப்பாவைப் போல, பாட்டனைப்… (READ MORE)

பொரி கடலை

aram - Copy

ஜெயமோகனோடு அதிக பரிச்சயமில்லை எனக்கு. ஆனால்..

ஜெயமோகனோடு அதிக பரிச்சயமில்லை எனக்கு. பெங்களூர் வாழ் காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருக்கிறேன். மணக்குடியான் டாட் காம் தளத்தில் வந்திருந்த அப்போது வெளியான ‘நான் கடவுள்’ படத்தின் எனது விமர்சனத்தை தனது இணைய தளத்தில் அவர் இணைத்திருந்தது அப்போதைய பெரும் மகிழ்ச்சி எனக்கு அந்நாளில்.  ‘கடல்’ படத்தின் ஆரம்ப காட்சி வசனங்கள் (அர்விந்த் சாமி, சின்னப்… (READ MORE)

பொரி கடலை

பிஜேபி, காங்கிரஸ், தீவிரவாதிகள்…

காலையில் தில்லியில் காப்பி, மதியம் லாகூரில் லஞ்ச், இரவு காபூலில் உணவு என்று கனவு காண்பதாக அன்று மன்மோகன் சிங் சொன்னபோது கைதட்டி மகிழ்ந்தவர்கள், இன்று அதையே ‘காபூலில் காலை உணவு, லாகூரில் லஞ்ச், டில்லியில் டின்னர்’ என்று மாற்றி செய்திருக்கும் போது எதிர்க்கிறார்கள்.  காங்கிரஸைத் தவிர, உலகத் தலைவர்கள் உட்பட அனைவரும் பாராட்டுகின்றனர் என்பது… (READ MORE)

Uncategorized

தண்ணீர் கஷ்டம் – உள்ளே, வெளியே

‘ஏங்க பவர் வராதாம். தண்ணியே இல்லை!’ உள்ளிருந்து மனைவி சொன்னதை கேட்டான் வெளியே முழங்கால் அளவு தண்ணீரில் நின்றவன்! ‪#‎சென்னை‬ தெருக்களில் ‪#‎வெள்ளம்‬ – பரமன் பச்சைமுத்து

பொரி கடலை

,

‘சென்னை மீளும்!’

அடுக்ககக் குடியிருப்புக்கு வெளியே ஆறுபோல் சுழித்து ஓடும் நீர். ‘ஐயய்யோ தண்ணி, ஆட்சியாளர்கள் அக்ரமம், ஆக்ரமிப்பால் அவதி’ என்று அலறலாம் அல்லது நீரில் நடந்து வெளியே யாருக்கேனும் உதவமுடியுமா என்று பார்க்கலாம். இரண்டாவதை தேர்ந்தெடுத்து முழங்காலளவு நீரில் இறங்கிப் போகிறேன். போகப் போக இடுப்பளவு ஆழம், போகமுடியாது என்று போலீஸ் ஒருவர் தடுக்க வேறு புறம்… (READ MORE)

Self Help, பொரி கடலை

, ,

அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு…

தற்சமயம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘உப்புக்கருவாடு’ (மிக வித்தியாசமான தரமான ரசனைக்கான படம்) படத்தில் ஒரு காட்சி. இளம் இயக்குஞர் ஒருவர் தன் படத்தை எடுக்க தொடங்குவதற்கு முன்பே ஒரு சில சாதி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்து ரகளையில் ஈடுபடும். ‘அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு எடுக்கவே உட மாட்டறீங்களே. தப்பா… (READ MORE)

Politics

, ,

பள்ளி – மழை

பள்ளி திறந்தால் பெய்யெனப் பெய்வேன், விடுமுறை விட்டால் வெயிலடிப்பேன் ‘இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க! வெவ்வேவ்வே’ என்று பம்மாத்து காட்டுகிறது சென்னை வானம்! -பரமன் பச்சைமுத்து

Uncategorized

naanum rowdythaan2

‘நானும் ரௌடிதான்’ : திரை விமர்சனம்

தாயைக் கொன்ற ரவுடியை வஞ்சம் தீர்த்து அழிக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளும், போலீஸ் அதிகாரியின் ரவுடியாய் இருக்கும் (நடிக்கும்) மகனும் சேர்ந்தால்… என்னவாகும்? காதல், நிறைய காஸ்ட்யூம், மலேசியாவில் பாட்டு, படம் முழுக்க ரத்தம் வெட்டு குத்து? அதுதான் இல்லை.  அழகான நகைச்சுவை திரைக்கதை செய்து, தேர்ந்த நடிப்பை கலந்து ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள். ‘காமெடிப்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

M2

அடுத்தவருக்கு காட்ட நினைத்து…

  அடுத்தவருக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே செயல்புரிபவன், உள்ளே சமநிலை இழப்பான், விழுந்து அடிபட நேரிடும். அடுத்தவருக்காக அல்ல, உங்களுக்காக செயல் புரியுங்கள்.  உன்னதம் தேடி வரும் – பரமன் பச்சைமுத்து

Self Help

, , , ,

wpid-20151022_120149.jpg

விஜயதசமியாம்…

அப்போதெல்லாம் விஜயதசமியில் பள்ளியில் சேர்ப்பார்கள். ‘பர்த் சர்ட்டிஃபிகேட்ஸ்’ எல்லாம் இல்லாத அந்நாளில், கையை தலைக்கு மேல் வைத்து காதைத் தொடச் சொல்வார்கள். அப்படித் தொட்டால், ஐந்து வயதென்பது அப்போதைய கணக்கு. ஒண்ணாம் வகுப்பில் உட்கார வைத்து ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா…’ ஆரம்பித்து விடுவார்கள் (டீச்சர் கிள்றான் டீச்சர் எல்லாம்… (READ MORE)

Uncategorized

செலவை குறைக்க செலவு…

சில நேரங்களில் செய்யப்படும் சில செலவுகள், தொடர் பெருஞ்செலவுகளைக் குறைக்கும். செலவுகளைக் குறைக்க செலவு செய்யவேண்டியிருக்கிறது என்பதே உண்மை. இங்கே செலவென்பது முதலீடு! News:  Govt. Distributes 2 crores LED bulbs to replace CFLs and saves Rs. 1,000cr a year – பரமன் பச்சைமுத்து

Uncategorized

அனைத்து நாளும் ஆயுதபூஜையே…

செய்தொழிலை சீர்பட ‘புனிதமாய்’ செய்பவனுக்கு, செல்வம் வந்து சேரும், சிறப்பு வந்து கூடும்! உற்ற தொழிலை உயர்வாய் எண்ணுபவனுக்கு, அனைத்து நாளும் ஆயுதபூஜையே! – பரமன் பச்சைமுத்து #AyuthaPooja

Uncategorized

Nadigar Vishal 2

ரீல் ஹீரோ vs ரியல் ஹீரோ!

முப்பதாண்டுகளாக நடிகர் சங்கம் தன் வசம் என்று வைத்திருந்த ராதாரவியை, அரசியல் ஆள் பலமுள்ள கிட்டத்தட்ட அசைக்கமுடியாத சக்தியாக இருந்த சரத்குமாரை, இளம் விஷால் அணி வீழ்த்தியிருப்பது விழி விரியச்செய்கிறது. தனிப்பட்ட நபர்களை குறிவைத்துத் தாக்குதல், வாக்குப் பதிவின் போது நடந்த தள்ளு முள்ளு, ‘கமல்ஹாசனால என் பேண்ட்ட கூட கழட்ட முடியாது’ என்று ராதாரவி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , ,

nadigar-sangam-elction1

நம் ஞாயிறு நடிகர் சங்கத்திற்கல்ல…

நடிகர்கள் வாக்களிக்க வருவார்கள், ஊடகங்கள் இடைமறித்துக் கருத்துக் கேட்டு ஒளி பரப்பும், ரஜினி கருத்திற்கெதிராக கமல் கருத்தென்பார்கள், இரண்டு மார்க்கெட் இல்லாதவர்களை அழைத்து விவாதிப்பார்கள், விளம்பர இடைவேளை தருவார்கள், இதையேப் பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் ஞாயிறு தீர்ந்து விடும். மாலை முடிவு எப்படியும் தெரியும், ஞாயிறை இதில் வீணடிக்காமல் உங்கள் நாளை பயனுள்ளதாக்குங்கள்! … வாழ்க!… (READ MORE)

Manakkudi Talkies, Self Help, பொரி கடலை

, , , , ,

martian1 - Copy

‘மார்ஷியன்’ – ‘செவ்வாய்க் கிரகத் தனிமை’ : பரமன் பச்சைமுத்து

‘மார்ஷியன்’ – ‘செவ்வாய்க் கிரகத் தனிமை’ : பரமன் பச்சைமுத்து பயணித்துச் சேர்வதற்கே பல மாதங்கள் ஆகும் தூரத்திலிருக்கும், உயிர்வாழக் காற்று, உணவு, உயிர்கள் என எதுவுமில்லாக் கிரகத்தில் ஒருவன் மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும்? உயிர்வாழ இருக்கும் உணவும் சொற்ப நிலை, தொலைத் தொடர்போ அற்ப நிலை என்றால் அவனுக்கு எப்படி இருக்கும்? ‘திரும்பிப்… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

Manorama - Copy

ஜாம் பஜார் ஜக்கு…

  ‘ஜாம் பஜார் ஜக்கு, நான் சைதாப்பேட்டை கொக்கு!’ என் அப்பா பாடினார், சிறுவனான நான் கேட்டு வளர்ந்தேன்.   ‘ட்ரியோனா… ட்ரியோனா… ட்ரியோனானா னானா, மெட்ராச சுத்திப் பார்க்கப் போறேன்!’ நான் பாடினேன், என் மகள்கள் கேட்டனர்.   நாளை என் மகள்கள் அவர்கள் பிள்ளைகளுக்குப் பாட? ‪ #‎RIP‬  Manorama aachi

பொரி கடலை

,

Bangalore-to-Chennai - Copy

வாழ்க்கை வழிப் பயணம்…

இரண்டாண்டுகளுக்கு முன்பு இன்ஃபினி ஆல்ஃபா பேட்ச் 9 எடுக்க பேங்களூரை நோக்கிப் பயணித்த போது, அப்போது என்னிடம் இருந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டி கிருஷ்ணகிரிக்கு அருகில் டயர் பஞ்ச்ர் ஆகி நின்றது. ஆள் கூட்டி வர சில கிலோ மீட்டர் நடத்தார் குத்தாலிங்கம். ஜாக்கியை எப்படிப் பயன்படுத்தி ஸ்டெப்னி மாற்ற வேண்டும் என்று நாங்களே… (READ MORE)

Self Help, பொரி கடலை

, , , , ,

mAAYA2

‘மாயா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பணம் தந்துவிட்டு பயப்படத் தயாராக இருப்பவர்களை, எவ்வளவு பயம் காட்டி அனுப்புகிறார்கள் என்பதை வைத்தே பேய்ப் படங்களின் வெற்றி தீர்மானிக்கப் படுகிறது. ஆரம்பத்தில் இழுவையாக இருந்தாலும், சில சீன்கள் சரியாக இருந்தால் போதும் படம் தூக்கி நிறுத்தப்படும் என்ற லாஜிக் படி வந்திருக்கும் படம் ‘மாயா’. ஒதுக்குப் புறமான வீடு, அதைத் தேடி வந்து பேயிடம்… (READ MORE)

Manakkudi Talkies, Media Published

, , , ,

மாடு துன்பப் படக்கூடாது, மனிதன் துன்பப்படலாமா?: பரமன் பச்சைமுத்து

மாட்டிறைச்சி உண்டார் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை, மற்ற சிலர் கூடி அடித்துத் தாக்கியுள்ளனர். இடம், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை. தாக்கப் பட்டவர் ரஷீத் என்னும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர். தாக்கியவர்கள், பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள். … மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒருவனை, அவ்வளவு பேர் முன்னிலையில் கூடி அடிப்பது மிருகச் செயல். மாட்டை… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , ,

Masinagudi2 - Copy

‘யானை, மனிதன் – யார் தவறு?’ – யானை புகுந்த ஊரில்…:

‘ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம், பயிர்கள் நாசம்’ என்று அடிக்கடி செய்தியில் வருவதை பார்க்கிறோம். பாதிக்கப் பட்ட இடத்திலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? நீலகிரி மலைத்தொடரில் இருக்கும் பந்திப்பூர் – முதுமலை வனச்சரகத்தில், மசினகுடியை ஒட்டியமைந்துள்ள கிராமங்கள் தொட்டலிங்கி, பொக்காபுரம், தெப்பக்காடு. … காட்டு முயல்களும், கடைமான்கள் என்று சொல்லப்படும் சாம்பா மான்பளும், புள்ளி மான்களும்,… (READ MORE)

பொரி கடலை

, ,

Kakka muttai - Copy

‘காக்கா முட்டை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு! சிரிக்க வைக்கிறது, நெகிழ வைக்கிறது, கைதட்ட வைக்கிறது, படத்தின் அந்த சிறார்களுக்காக வருந்த வைக்கிறது, இப்படி எல்லாம் செய்கிறது படம். … ப்ரகாஷ் ராஜ் பணியில் சொல்வதானால், ‘ஏய்… யார்ரா நீ?’ என்று பிடித்துக் கேட்கவேண்டும் படத்தின் இயக்குநரை. ‘ஊசிப் போனாதாண்டா நூல் நூலா வரும்!’ ‘சிம்பு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

Lee quan yu2

எம் இனத்து இளைஞர்களை ஏற்றி விட்டவரே

இப்படி ஒரு தலைவன் என் தேசத்திற்கு கிடைக்கமாட்டானா என பலதேசத்து இளைஞர்களை ஏங்க வைத்தவர், சொற்பமாய் இருந்ததை சொர்க்கமாய் மாற்றியவர், தமிழ்நாட்டின் பல குடும்பங்களில் வறுமையொழியக் காரணமானவர், ஒன்றுமில்லாத ஓர் ஊரில் உழைப்பை ஊற்றி ஒளிரச்செய்தவர், உலகத்தையே அதை நோக்கி வரச் செய்தவர், மனிதனின் மகத்தான ஆற்றலுக்கு முன் மாதிரி, ஒரே வாழ்நாளில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு… (READ MORE)

பொரி கடலை

,

அதிக ஆசைகள் கொண்டவன் நான்…

அதிக ஆசைகள் கொண்டவன் நான். என் ஆசைகளைப் பட்டியலிட்டால்,  ‘பறவையாய் பிறந்திருக்க வேண்டியவன் பரமனாய் பிறந்து விட்டான்,’ என்று சொல்லத் தோன்றும். ஈழத்தீவிற்கு படகில் போக, இமயத்துப் பனியை இமைக்காமல் பார்க்க, நைல் நதியில் நனைந்து நிற்க, திரும்பப் போய் டோக்கியோ தெருக்களில் திரிய, சுமிதா நதியில் சுகமாய் சவாரி செய்ய,  யுரால் மலையில் ஆசியாவில்… (READ MORE)

பொரி கடலை

Ulley oru

உள்ளே ஒரு மாணவன்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ‘மாடர்ன் டீச்சர் – நியூ ஐடியாஸ் ஆன் எஜுகேஷன்’  போட்டியில், தேசிய அளவில் 700க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி ஆசிரியர்களிடையே நடந்த பங்கேற்பில், ஆன்ட்ராய்டை வைத்து ஆங்கிலம் கற்பிப்பது எப்படி என்று காண்பித்து முதலிடத்தை வென்றுள்ளார், விழுப்புரம் சத்தியமங்கலம் அரசுப் பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப். நம் மாநிலத்து அரசுப்… (READ MORE)

Self Help

, , , , ,

Backbiting - Copy

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 5

பிரபல வாரப் பத்திரிகையில் வரும் எனது ‘ அச்சம் தவிர், ஆளுமை கொள்’ தொடரிலிருந்து ஒரு பகுதி [Part 5 ] …………………………………… கேள்வி: “வணக்கம் பரமன். நான் உண்மையாய் வேலை பார்க்கும் ஊழியன். என் வேலைகளை மிகப் பொறுப்பாக பார்க்கிறேன். ஆனால் என் அலுவலகத்தில் சிலர், தங்களது வேலையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மேலிடத்தில்… (READ MORE)

Media Published, Self Help

, ,

IMG-20150214-WA0013

ஆதலினால் அன்பு காட்டுங்கள்…

  அன்பு காட்டுங்கள், அன்பு காட்டுங்கள், அடுத்தவர் மீது அன்பு காட்டுங்கள்.   ஒன்றாயிருந்ததை பிரித்து வைத்து இரண்டாய் செய்யும்  ஆசை, இரண்டாயிருந்ததை இணைத்து ஒன்றாய் ஆக்கும் உயிர் சிமென்ட் அன்பு.   அருகில் இருப்பவரை தூரமாக்கி விடுவது ஆசை, தூரத்திலிருப்பவரை அன்மையில் உணரவைப்பது அன்பு.   அன்பு ஊறும் அகத்தில் அழுக்குகள் அகற்றப்படும். கழுவித்… (READ MORE)

Self Help, ஆ...!, கவிதை

, ,

Shamitabh - Copy

‘Shamitabh’ – Movie Review : Paraman Pachaimuthu

பிறவி ஊமையாய் பிறந்தபோதும், பிறவி எடுத்ததே பெரும் நடிகனாக வேண்டும் என்பதற்காகவே என்றிருக்கும் இளைஞனொறுவனும், என் அடிக் குரலின் வசீகரம் அத்தனைபேரையும் கட்டிப் போடும் என்று இறுமாப்பில் இருக்குமோர் முதியவனும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும், பெயர், பணம், புகழ், இவற்றோடு போதையும் சேர்ந்தால் என்னவாகும் என்று போகும் (‘மைக் மோகன் – எஸ் என் சுரேந்தர்’… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , ,

Formal dress

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 4

பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் என் தொடர்வின் பகிர்வு: நான்கு: நம் சோழ மாமன்னன் ராஜேந்திர சோழன் பற்றியும், ஜப்பானின் டோக்யோ நகரில் எனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும், ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவு அல்ல!’ ‘தாழ்ந்தவர்கள் சிலர் தமிழில் பேசியிருக்கலாம். தமிழில் பேசுவது தாழ்ந்ததல்ல’ ‘ஆங்கிலம் அறிந்துகொள்ள வெறும் 30 மணிநேர பயிற்சியே… (READ MORE)

Self Help, அச்சம் தவிர் ஆளுமை கொள்

, ,

எதைப் பார்க்க வேண்டும்

கண்ணுக்கு முன்னே பரந்து விரிந்த அலையடித்து ஆர்ப்பரிக்கும் அழகுக் கடல், காலுக்கு சில அடி தூரத்தில் சகதி. இப்போதைக்கு இங்கே எதையும் மாற்ற முடியாது என்ற நிலையில், எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்த்தால் உங்களுக்கு நன்மை என்று முடிவு செய்து செயல்படுங்கள். வாழ்க! வளர்க!  –  Paraman Pachaimuthu Facebook.com/MalarchiPage

Uncategorized

I - Copy

‘ஐ’ – Movie Review – பரமன் பச்சைமுத்து

வாழ்வின் குறிக்கோளே வடிவழகு, உடற்கட்டு காப்பதுதான் என்று வாழும் ஒருவன், புற அழகை வைத்துப் புகழ் பொருள் சேர்க்கும் ஒரு புதிய உலகத்திற்குள் வரும்போது, கனவிலும் நினையாக் காதலும் கைகூடும் வேளையில், வாழ்வாய் நினைத்த வடிவமே சிதைந்துபோனால்… என்னவாகும்? ‘உடலழகை தாண்டி உள்ளத்தழகு பார்க்கப்படுமா?’ (‘அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை, மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா!’ என்ற… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

Bhogi1 - Thumbnail

போகி என்றொரு பெயரில்…

  போகி என்றொரு பெயரில், போன வருஷத்து குப்பைகளைப் போட்டுத் தீயிலிட்டுக் கொளுத்தி பெரும்புகைக் கிளப்பி, பெரியவர்கள் மூச்சுத் திணற, பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்!   புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து, தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும்.   அழுக்காறை, கெடும் அவாவை, இன்னாச் சொல்லை, புறங்கூறும் போக்கத்தப் பொழப்பை,… (READ MORE)

Self Help, ஆ...!

, , , ,

Taken3 - Copy

‘Taken 3’ – Movie review

திரைக்கதை சரியாய் இருந்தால் யார் நடித்தாலும் படம் மின்னும், சரியான பாத்திரத்தில் கூடவே, சரியான ஆளும் அமைந்தால்…பட்டையைக் கிளப்பும். அதுதான் நடக்கிறது இப்படத்தில். ‘போர்ன் ஐடென்டிடி, சுப்ரிமசி’ வரிசை படங்களுக்கப்புறம், ‘இப்படி ஒரு ஆக்ஷன் படம் பார்த்து எவ்வளவு நாளாச்சி!’ என்று நினைக்கச் செய்யும் படம். மகளுக்காக எதையும், எதையுமென்றால் எதையும் செய்யும், முந்தைய ‘டேக்கன்’… (READ MORE)

Manakkudi Talkies

Thiruppugazh - Copy

ஆழ்ந்த வரிகள் – திருப்புகழ்

  ‘அறிவால் அறிந்து உன்னிருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே!’ – திருப்புகழ் வரிகளின் ஆழமான அர்த்தம் ஆடிப்போகச் செய்கிறது!

Religion, Spirituality

, ,

Nataraja - Copy

திருவாதிரை திருநாள் இன்று!

அடைமழை பெய்தபோதும் ஆடற்பெருமான் அவனாகவே சென்று அடியார் சேந்தனார் குடிலில் களி உண்டு களித்தத் திருவாதிரை திருநாள் இன்று! ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடி ஆடி வருவதை காணக் கண் ஆயிரம் வேண்டும். அழகிய சிற்றம்பலத்தான் அருள் மழை பொழியட்டும்,… அகிலத்தோர் வாழ்வு சிறக்கட்டும். அமைதி வரட்டும்! : பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality

, , , ,

aalumai3.jpg - Copy

அச்சம் தவிர், ஆளுமை கொள் – Part 3

பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் தொடர்: ‘எல்லாம் தெரிந்தவர் என்று எவருமே கிடையாது,’ ‘நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி,’ ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,’ அதற்கு தயாராவது எப்படி ஆகிய முக்கிய மூன்று விஷயங்களை சென்ற வாரம் பார்த்தோம். “பரமன் பச்சைமுத்து அவர்களுக்கு, வணக்கங்கள். தங்கள் தொடர் எனக்குள்ளே ஒரு தெம்பை தருகிறது. பெரிய… (READ MORE)

Media Published, Self Help, அச்சம் தவிர் ஆளுமை கொள்

, , , , , , , , , , , ,

Screen shot 2 - Copy

‘அச்சம் தவிர், ஆளுமை கொள்!’ – Part 2

பிரபல வாரப் பத்திரிகையில் பிரசுரமாகி வரும் தொடர்: சென்ற இதழில் பெங்களூருவில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தைப் பார்த்தோம். அதில் பார்த்த கார்த்திக், அருண் கதையில் மட்டுமல்ல, இவ்வுலகத்தின் நிதர்சனமான உண்மை – ‘படிப்பு மட்டுமே போதாது!’. ‘படிச்சவன் பாட்டக் கெடுத்தான், எழுதனவன் ஏட்டைக் கெடுத்தான்,’ என்று நீட்டி முழக்கி குத்திப் பேசும் பாரதிராஜா பட… (READ MORE)

Media Published, அச்சம் தவிர் ஆளுமை கொள்

, , , ,

PK - Copy

‘PK’ – Movie review

வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வரும் கடவுளின் சக்தி வாய்ந்த ரிமோட்டை சிங்காரச் சென்னையில் யாரேனும் அபகரித்துக் கொண்டால், என்னாவாகும்? ‘அறை எண் 305ல் கடவுள்’ இருப்பார். வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வரும் வேற்றுகிரகவாசி ஒருவனின் சக்தி வாய்ந்த ரிமோட்டை ராஜஸ்தான் பாலைவனத்தில் யாரேனும் அபகரித்துக் கொண்டால், அவன் தலைநகர் தில்லிக்குப் போனால், என்னவாகும்? அவனது தேடலும், அவனது விகல்பமில்லா… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

Xmas1 - Copy

வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே…

மாக்களாயிருந்தோரை, மக்களாய் மாற்றிடவே மரதச்சன் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் மலர்ந்தவனே…   வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே வணங்குகிறோம்!   தன் கருத்துக்களை நிலைநாட்ட எவர் உயிரையும் எடுக்கலாம் என்ற விதிகொண்ட உலகில், தன் உயிரையே கொடுத்து உயர் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்தவனே…   எபிரேயம் இயம்பிய எருசலேமின் ஏசுவே…   முப்பது வெள்ளிக்காக உன்னைக் காட்டிக்… (READ MORE)

Religion, Spirituality, கவிதை

, , , , , ,

K Balachander - Copy

மின்பிம்பங்களுக்கு உயிர் தந்தவர், மின் எரியூட்டலுக்கு உடல் தந்துவிட்டார்!

  நன்னிலம் பகுதியில் பிறந்தவர், நானிலம் போற்ற வாழ்ந்தவர், தமிழ் நிலம் தவிக்கப் போய்விட்டார்! ஏஜீஸ் ஆஃபீஸில் நாடகத்தை தொடங்கியவர், நேற்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார். பல பாத்திரங்களுக்கு வாழ்வளித்து ஏற்றிவிட்டவர், தன் பாத்திரங்களை மட்டும் உலகிற்கு விட்டுவிட்டு உலகை துறந்து விட்டார். காலத்தை மீறிய படங்களைத் தந்தவர், காலதேவனிடம் போய் சேர்ந்துவிட்டார். அடடா,… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

ஸ்க்ரீன் ஷாட் 1

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 1 : பரமன் பச்சைமுத்து

பிரபல வாரப் பத்திரிகையில் வெளிவரும் தொடர்: “படித்தால் மட்டும் போதுமா?” சமர்ப்பணம்: சிறுகச் சிறுகச் சேர்த்ததையெல்லாம் மொத்தமாய் கொட்டியும், விளைநிலங்களை விற்றும், வியர்வையோடு தங்கள் ரத்தத்தையும் தந்து தங்கள் சக்திக்கு மீறி தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட்டு முன்னுக்கு வந்துவிடுவான் என்று காத்திருக்கும், தமிழகத்தின் தகப்பன்மார்களுக்கும், ‘ஆணிபோயி ஆவணி வந்தா என் புள்ள டாப்புல… (READ MORE)

Media Published, Self Help

2014-12-23 23.38.38

தினமணி – “கம்ப ராமாயணம் படித்தால் கடவுளை உணரலாம் – பரமன் பச்சைமுத்து”

      கம்பன் கழகம், திருப்பத்தூர்    First Published : 07 September 2014 04:04 AM IST கம்ப ராமாயணத்தைப் படித்தால் கடவுளை உணரலாம் என திருப்பத்தூர் கம்பன் விழாவில் பரமன் பச்சைமுத்து பேசினார். திருப்பத்தூர் கம்பன் கழகத்தின் சார்பில் 36ஆம் ஆண்டு கம்பன் விழா ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி அரங்கில்… (READ MORE)

Media Published

, ,

சூரியப் பிள்ளைக்கு சுகமில்லையாம்…

சூரியப் பிள்ளைக்கு சுகமில்லையாம், ‘ஒரு நாள் ஓய்வெடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது, போ!’ என்று கூறி எட்டு ஆகியும் எழாமல் இருக்கட்டும் என்று இழுத்துப் போர்த்திவிட்டு விட்டாள் இயற்கை அன்னை, இருண்ட வானம் அழுகிறது! தழிழகத்தில் மழை. – பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

Happy Birthday

ரஜினி என்னும் மனிதனே…

    மனிதனே… அந்த வயதில், ‘‘இந்தப் பீடி முடியறதுக்குள்ள உன் தலைவன முடிக்கிறேன் பாரு!’ என்று சொல்லி தீக்குச்சித் தெறிக்கப் பத்தவைத்து நீ சண்டையிட சென்றபோது, சண்டை போடுவதற்கு முன்பே எங்களை ஜெயித்தாய். … ‘கண்ணா நாம வாங்கனத எப்பவுமே வச்சிக்கமாட்டோம், திருப்பிக் குடுத்திடுவோம், இப்புடுச் சூடு,’ என்று கூறி புரட்டியெடுத்த போது தியேட்டரில்… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

சிதம்பரத்தில் - Copy

சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது!

நிலத்தடி நீர் குறைகிறது, நீர் ஆதாரங்கள் சுருங்குகிறது என்றே எல்லோரும் பேசிக்கொண்டேயிருந்தால், எல்லாம் சரியாகிவிடுமா, நீர் பெருகி ஓடி வருமா? சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது. நெஞ்சில் நம்பிக்கை பிறக்கிறது. சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர் குறைந்தது என்ற கதை போய், சுனாமிக்கப்புறம் உப்பு நீர் வருகிறது என்பது விசனமாய் போனது. எல்லோரும் கவலை கொண்டிருக்கும்… (READ MORE)

பொரி கடலை

, ,

Tumb

அகப் பிளவு நோய்

  முகப் பிளவு நோய் கொண்ட பாகிஸ்தான் பிள்ளைக்கு சென்னையில் முகச்சீரமைப்பாம், அகப் பிளவு நோய் கொண்டோர்க்கு அகச் சீரமைப்பு எங்கே?  

Uncategorized