எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணியும், வீடும்… அருமை!

👏👏நடந்தே விட்டது அது! குமுதத்தில் ‘ஸ்டாலினுக்கு கடிதம்’ எழுதியிருந்த எழுத்தாளர் சாருநிவேதிதா, ‘மலையாளம், வங்காளம், கன்னடம் ஆகியவற்றில் இருப்பது போல எழுத்தாளர்களுக்கு மரியாதை உயர்த்தப்பட வேண்டும். எழுத்தாளன் வாழ்நாள் முழுக்க சேகரித்த நூல்களை இடம் இடமாக வாடகை வீடுகளுக்கு மாற்றி மாற்றி செத்தே போகிறான். பெரிய எழுத்தாளர்களுக்கு வீடு ஏற்பாடு செய்து தர வேண்டும். பத்தோடு… (READ MORE)

Politics

, , ,

wp-16227322188062523304432770968332.jpg

நன்றி எலந்தங்குடியாரே!

வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு, செய்யும் வேலையில் தன்னையே மறந்து தற்காலிக சோதனைகளை கடந்து விடும் மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகளை எப்போதும் எனக்கு வழங்கிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. அடையாறு மலர் மருத்துவமனையிருக்கும் பிரதான சாலையையொட்டிய உள்வட்டச் சாலையில், ‘அடுத்தது யாருக்கு கொடுக்கலாம் உணவு!?’ என்ற தேடலோடு போய்க் கொண்டிருந்த நம் கண்களுக்கு அவர் தெரியவேயில்லை (ஊரடங்கு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

இதை நடத்துவதற்கு பணம் இருக்கிறது. நன்றி!

மலர்ச்சி மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும்… மலர்ச்சி வணக்கம்! ஊரடங்கின் முதல் வாரத்தில் ஒரு நாள், மயிலை குளத்தினருகே பேருந்து நிறுத்தத்தில் தஞ்சம் புகுந்திருந்த சிலரை பார்க்கையில், ‘உணவு வேண்டுமே இவர்களுக்கு!’ என்ற எண்ணம் வந்து, ‘மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கம்’ வழியே முன்னெடுத்ததே, ‘உதவலாமே!’ வீதியோர மனிதர்களுக்கு மதிய உணவு விநியோகித்தல். சேர்ந்து நாம் செய்வோம் என்று அறிவித்த… (READ MORE)

பொரி கடலை

பள்ளிகளில் தமிழ் கட்டாயமாகட்டும்

சிங்கப்பூரில் தமிழ் வாழ்கிறது, இனியும் வாழும் என்பதற்கான காரணம் தொடக்கக் கல்வி தொடங்கி மேல்நிலை வரை தாய் மொழிக் கல்வியாக தமிழ் இருக்கிறது.  என்னதான் நூல்கள், இலக்கியத்துறை என பார்த்துப் பார்த்து செய்தாலும், அடுத்த தலைமுறை தாய்மொழியை கைவிட்டால் அம்மொழி நலிவடைந்து விடும். இளம் தலைமுறை தாய்மொழியை வெறும் பேச்சு மொழியாக மட்டுமே கொண்டால், அவர்களின்… (READ MORE)

Politics

, , , , , ,

தமிழ் எழுத்துலகிற்கு…

‘மலையாளம், வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இலக்கியத்திற்கும் எழுத்தாளர்களுக்கும் அரசும் பொதுவெளியும் மரியாதை தருகிறது. தமிழில் சினிமா தாண்டி கலை குறிப்பாய் எழுத்தாளர் மதிக்கப்படுவதில்லை. வாடகை வீட்டில் சேகரித்த நூல்களோடு செத்துப் போகிறான் எழுத்தாளன். எழுத்தாளர்களை உயர்த்தி தமிழுக்கு ஞானபீடம் கிடைக்க வழி செய்யுங்கள், வரலாற்றில் நிற்பீர்கள்’ என்று குமுதத்தில் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார்… (READ MORE)

Uncategorized

எல்லாமும் கொடுத்தும் விடுகிறது வாழ்க்கை.’

நாம் சிலரை உற்றுக் கவனிக்கும் போது, நாம் அழைக்காமலேயே உள்ளுணர்வு எழுப்ப சடக்கென்று நம்மை நோக்கி திரும்புவார்கள், கவனித்திருக்கிறீர்களா? அப்படித்தான் எழுந்தாரவர். நாகேஸ்வரராவ் பூங்காவின் ஓரமுள்ள கல் இருக்கையில், கைப்பையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருக்கும் ஒருவரைப் பார்த்துவிட்டு வண்டியை நிறுத்தி இறங்குகிறோம் (ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு விநியோகிக்கும், மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கங்கத்தின்… (READ MORE)

Food, பொரி கடலை

, , , , , , ,

wp-1622621401566.jpg

உதவலாமே!: வீதியோர மனிதர்களுக்கு மதிய உணவு

இன்று ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா பகுதியில் மதிய உணவு விநியோகம். ‘உதவலாமே!’ – ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு வழங்க மலர்ச்சி மாணவர் நற்சங்கம் முன்னெடுப்பு. உதவி செய்த அனைவருக்கும் பிரார்த்தனைகள்! பரமன் பச்சைமுத்துவாலண்டையர் –மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கம்02.06.2021 Udhavalaamey LockDown LockDiwnTimes FoodForPeople Food Malarchi MalarchiMaanavargal Facebook.com/ParamanPage

Uncategorized

, , , ,

தமிழக அரசிற்கு பாராட்டுகள்

கடந்த வாரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்கின்றன. ஆக்ஸிஜன் கிடைக்கின்றன. உள் கிராமங்களில் சில இடங்களில் இன்னும் பிரச்சினைகள் உள்ளன என்றாலும் சமாளிக்கும் நிலைக்கு வந்தாயிற்று. இனி நிலைமை முன்னேறவே செய்யும். கட்சி சார்பு – எதிர்ப்புகளை ஒத்தி வைத்துவிட்டுப் பார்த்தால், சமாளித்து சரியாக செயல்பட்டிருக்கிறது ஸ்டாலின் அவர்களின் தமிழக அரசு என்பதை… (READ MORE)

Politics

கப்பா… அடங்’கப்பா’!

கப்பா, டெல்டா, ஆல்ஃபா, பீட்டா, காமா, ஜீட்டா, எப்சிலான், லோட்டா – நல்லவேளை பெயர்களை வைத்தார்கள்! போன நூற்றாண்டின் பெருந்தொற்று ஸ்பெயினில் முதல் முதலில் கண்டறியப்பட்டாலும், அது சீனாவிலிருந்தே பரவியதாக சிங்கப்பூர் நண்பர் ஒருவர் சில தரவுகளின் அடிப்படையில் பகிர்ந்தார். ஆனால்  கண்டறியப்பட்ட இடத்தைப் பொறுத்து சூட்டப்பட்ட பெயரான ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ நிலைத்து விட்டது. கொரோனாவை… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

wp-16224785173645093509496326166161.jpg

ஊரடங்கு நேரத்தில் ஒருவர்

உறக்கம் என்பது உடலின் இயல்புத் தேவை என்பதைத் தாண்டி அது மனிதனுக்கும் இன்னும் சில உயிர்களுக்கும் இறைவன் கொடுத்த கொடை என்றே கருதுபவன் நான். இன்று ஒரு மனிதன் உறக்கத்தில் அமிழ்த்து கிடப்பதைப் பார்க்க நேரிட்ட போது, இந்தக் கருத்து கூடுதல் உறுதி பெற்றது. ஊரடங்கு காலத்தில் வீதியோரம் வசிக்கும் மனிதர்களுக்கு உணவளிக்கலாமே என்று மலர்ச்சி… (READ MORE)

பொரி கடலை

images-18.jpeg

நெல்லி மோர் – அடிச்சி குடிங்க!

‘இங்க பாரு! சென்னை 37 டிகிரி, வேலூர் 39 டிகிரி… ஆனா ஊட்டி 21 டிகிரி’ ‘அக்னி நட்சத்திரம் முடிஞ்சாலும் இந்த வெய்ய கொறையுதா பாரேன்!’ ….. கோடை அலாதியான பழங்களை கொடையாகத் தருகிறது என்ற போதும் உடற்சூடு, அதீத வியர்வை வெளியேற்றம், வியர்க்குரு, சிறுநீர் சுருக்கம், கண் எரிச்சல், பார்வை மங்கிய உணர்வு என… (READ MORE)

Food, Uncategorized

, , , , , , ,

20210526_174658

ஆசனங்கள் தரும் பலன் அட்டகாசம்தான்

ஒரு புறம் உறுதி – ஒரு புறம் வளையும் தன்மை என்ற இரு நேர் எதிரெதிர் சங்கதிகளைத் தருவதில் ஆசனப் பயிற்சிகளே சிறந்தவை. இல்லையா! #Workout #Excercise #Yoga #ParamanPachaimuthu #LockDownWorkOuts – பரமன் பச்சைமுத்து 26.05.2021

பொரி கடலை

, , ,

தடுப்பூசி ஸ்பெஷல் பாஸ் தரலாமே

தடுப்பூசி் பற்றி இன்னும் எதிர்ப்பு தகவல்கள் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தி முகாம்களை இயக்குகிறது அரசு. நேற்று வரை 20 கோடிக்கு பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்கிறது செய்தி. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு ஒரு சிறப்பு அட்டை (‘ஸ்பெஷல் வேக்ஸின் பாஸ்’) ஒன்றைத் தந்து, அந்த அட்டைக்கு பல… (READ MORE)

Politics

, , , , ,

20210523_135945

சோயா / மீல்மேக்கர் பிரியாணி

🌸 பிரியாணி என்பது அரபு நாடுகளின் உணவு என்று ஒதுக்கி விட வேண்டியதில்லை. கறியையும், அரிசியையும், உப்பையும், குறு மிளகையும் ஒன்றாய் பாத்திரத்திலிட்டு வேகவைத்து ‘ஊன் சோறு’ என்று மக்கள் உண்டதாக சோழ தேசத்து கதைகள் பல சொல்கின்றன. எப்போதும் வழக்கமான உணவை ஒதுக்கி புதிய உணவை விரும்பும் குழந்தைகளின் கண்களுக்கு பிரியாணி ஒரு கொண்டாட்டம்…. (READ MORE)

Food

, , , ,

கார்பன் உமிழும் பேருந்துகள் போகட்டும்!

சவுதி அரேபியாவின் இளவரசர் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காகவும் கரிமில வாயு உமிழ்வை பெருமளவு குறைக்கவும் ‘சவுதி முழுக்க 1 கோடி மரங்கள் வளர்ப்போம்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். மரங்கள் இருந்த பகுதிகள் பாலைவனமாக மாறி வரும் வேலையில், பாலைவனத்தில் 1 கோடி மரங்கள் என்பது நினைக்கவே மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. வெற்றி பெறட்டும் இத்திட்டம். வாழ்க!… (READ MORE)

Politics

, , , ,

கொரோனாவிற்குப் பின் வரும் சோர்வை சக்தியின்மையை நீக்க

‘பரமன், கொரோனா வந்து குணமானாலும் ஒரு வித சோர்வும் அசதியும் போகவில்லை. சுத்தமா உடம்புல சத்து இல்லை போல உணர்வு. எதுவும் மருந்து?’ பரமன்: நல்ல சத்தான உணவு, மிதமான உடற்பயிற்சி, நல்ல உறக்கம், ஓய்வு, சூரிய ஒளி இவை நல்லதை செய்யும். இருப்பினும் கீழுள்ள மருந்துகள் மிக நன்றாக வேலை செய்கிறது. சித்த மருத்துவர்… (READ MORE)

பொரி கடலை

,

ஆக்ஸிஜன் அளவை உயர்த்துகிறதாம் ‘கிராம்புக் குடிநீர்!’

ஆக்ஸிஜன் குறைபாட்டால் செறிவூட்டிகளையும் சிலிண்டர்களையும் தேடி அலையும் வேளையில், ‘கிராம்புக் குடிநீர்’ என்று ஏற்கனவே சித்தமருத்துவத்தில் பரிந்துரைக் கப்பட்ட பானத்தை நோயாளிக்குத் தந்து ஆக்ஸிஜன் அளவை உயர்த்தியுள்ளார்கள் சேலம், நாமக்கல் மாவட்ட சித்தமருத்துவர்கள் என தகவல் வருகிறது. கிராம்பு 10 கிராம், ஓமம் 20 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், மிளகு 10 கிராம்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

48 மணி நேரத்தில் செய்த நாயகர்கள்!

கோவையில் தொற்று அதிகரித்து விட்டது, மக்கள் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் கோவை அரசு மருத்துவ மனைக்கும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்குமே அதிகம் வருகின்றனர். படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை – இவை எல்லோரும் படித்த, பார்த்த செய்தி. சங்கதி கேள்வி பட்டு தங்களது ‘ஆர்டர் அறக்கட்டளை’ மூலம் 48 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

இதே்நாளில்தான் புலம் பெயர்ந்தேன்

10 ஆண்டுகள் முன்பு இதே நாளில் ராமு – ராதை – முகுந்தன் – ப்ரீத்தியிடம் விடை பெற்று பெங்களூரிலிருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தேன். வேலூரில் நடந்து கொண்டிருந்த தாயம் பேட்ச் 2, பேட்ச் 3 வகுப்புகளுக்கிடையில் பெங்களூரு மந்த்ரி உட்லண்ட்ஸ் வீட்டைக் காலி செய்து சென்னை ஆர் ஏ புரத்திற்கு குடிவந்து விட்டு என்… (READ MORE)

Manakkudi Manithargal

வல்லாரைத் துவையல் ஆசிய பண்ணலாமே

வல்லாரைத் துவையல் எளிதாக செய்யலாம், இதோ வழி! உங்கள் பிள்ளைகளுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது. ….. பாப்பாக் குளத்திலிருந்து நீர் வெளியேறும் வடமேற்குக் கண்ணியின் பெருவரப்பில்சிறுவனாக அப்பாவோடு நடந்த போதெல்லாம் பாட்டையோரத்து கீரையைக் காட்டி, ‘வல்லாரைக் கீரை பாரு, மூளைக்கு நல்லது’ என்று குனிந்து கை நிறைய பறித்து, வலது பக்க கண்ணியின் நீர்முள்ளைக் கவனமாகக்… (READ MORE)

Food

, , , ,

பாரம்பரியம் நவீனம் இரண்டும் இருக்கலாமே

‘திமுக முற்போக்கு சிந்தனையுள்ள கட்சி. அறிவியல் அல்லாத இந்த சித்தமருந்து வேலைகளில் நேரத்தை வீண்டிப்பதை விட்டுவிட்டு வேலையைப் பார்க்க வேண்டும்!’ எனும் பொருள்பட பேசியிருக்கிறார் தருமபுரி திமுக எம்பி எவரும் அவரவர் கருத்தைச் சொல்ல உரிமையுள்ளவர்களே. அது தவறென்றால் அதைச் சுட்டிக்காட்டி சரியான கருத்தை சொல்வதும் நம் உரிமையே என்பதால் இந்தப்பதிவு. தமிழகம் முழுவதிலும் 12… (READ MORE)

Politics

வரும் அந்தக் குழந்தைக்கு தெரியாது

இரவு 2 மணிக்கு ஓர் அழைப்பு, அரை தூக்கத்தில் எடுத்தால், ‘நான் ஜோதி பேசறேன்ப்பா. பாப்பாவுக்கு பனிக்குடம் உடைஞ்சிருச்சி. மகாத்மா காந்தி ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துக்க மாட்றாங்க. கொரோனா டெஸ்ட் எடுக்கனுமாம்! டாக்டர் யாரும் தெரியுமாப்பா?’ அரைத்தூக்கத்தில் சுதாரித்து… ‘டாக்டர்… தெரியுமா தெரியாதேன்னே தெரியல விசாரிக்கனும். இப்ப எங்க இருக்கீங்க?’ ‘என்ன செய்யறதுன்னு தெரியல. நடுதெருவுல நிக்கறோம்ப்பா!’… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

அடடா! அருமை!

கேரளம் வெள்ளத்தில் மூழ்கித் தவித்த போது, முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும் இணைந்து செயல்பட்டதை, இந்தியா – பாக் சிக்கலின் போது பி வி நரசிம்மராவ்வும் வாஜ்பாயும் இணைந்து செயல்பட்டதை… நினைக்காமல் இருக்க முடியவில்லை இப்போது. மாநிலத்தின் நோய்த்தொற்று பேரிடரை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள குழுவில், எல்லாக் கட்சியிலிருந்தும் முக்கிய ஆரோசகர்களை தேர்வு செய்து ஒரு சிறந்த உதாரணத்தைக்… (READ MORE)

Politics

ஊரடங்கு நேரத்தில் உணவு

🌸 ஊரடங்கில் சாலையோரம் வாழும் வீடற்ற மனிதர்களுக்கு உணவு தேவைப்படலாமே, எவராவது கொடுப்பார்கள் என்றாலும் கண்டு வைத்தால், வழி சொல்லி இடம் சொல்லி அனுப்பலாமே என்று ஆர் ஏ புரத்திலிருந்து மயிலை கோயில் குளம் வரை நடந்தேன். மந்தவெளிவெளி எல்லையில் மயிலை துவங்கும் இடத்தில் இரட்டை சுவாசக் கவசமணிந்த காவலர்கள் வரும் ஒன்றுரண்டு வாகனங்களை நிறுத்தி… (READ MORE)

பொரி கடலை

தமிழக அரசு பரிசீலிக்கட்டும்

ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி! அதே ரெம்டெசிவிர் மருந்தை ரூ. 400க்குத் தயாரித்துக் காட்டியுள்ளது ஒரு நிறுவனம். ஆனால், உலகளாவிய ஒப்பந்தம், காப்புரிமை என்ற விதிகளால் கைகள் கட்டப்பட்டு நிற்கிறது அம்மருந்து நிறுவனம். இது போன்ற தொற்றுக்காலங்களில் மருந்தின் அடிப்படையை அனைவருக்கும் பகிர்ந்து… (READ MORE)

Politics

மு பச்சைமுத்து அறக்கட்டளை 15வது அன்னதானம்

🌸 🌸 இன்று மிருகசீரிடம் ( சித்திரை மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், வடபழனி மெட்ரோ ஸ்டேஷன் அருகிலும் ( அங்கே தங்கியிருப்போர்களுக்கும்)நடந்தது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை14.05.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

நல்ல ஏற்பாடு

மருத்துவமனைகளில் படு்க்கைகள் இல்லை, மருத்துவமனை வாசலில் வரிசையாக நோயாளிகளோடு ஆம்புலன்ஸ்கள், ஆக்ஸிஜன் கிடைக்காமல் வரிசையில் பல மணி நேரம் காத்திருப்பிலேயே இறப்பு என தமிழக நிலவரம் இருக்கும் வேளையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனை வாசலில் ‘ஆக்‌ஸிஜன் பேருந்து’ என ஒரு அமைப்பை பெங்களூரில் ஏற்படுத்தி கவனம் கவர்ந்தது கர்நாடக அரசு. நோயாளிகள் காத்திருக்காமல் அவசரத்திற்கு… (READ MORE)

Politics

,

வரவேற்கிறோம்!

கடந்த ஆண்டு நோய்த்தொற்றின் போது திருப்பத்தூரில் சித்த மருத்துவர் விக்ரம் குமார், சென்னையில் சித்த மருத்துவர் வீரபாபு ஆகியோரின் கண்காணிப்பில் நடந்த சித்த மருத்துவ மையங்களையும் அவற்றின் பலனையும் கண்ட போது, நம்மைப் போலவே பலரது மனதிலும் எழுந்த கேள்வி, ‘இதையே தமிழகத்தின் மற்ற இடங்களிலும் செய்தாலென்ன?’ புதிய தமிழக அரசு அதை முன்னெடுத்திருக்கிறது.சென்னை வியாசர்பாடியில்… (READ MORE)

Politics

, , , , ,

வளர்ந்து நிற்கிறது தேக்கு மரம்

‘ஐயே, அறிவு இல்ல உனக்கு. நல்ல தீனிதானே திங்கற, இல்ல பீயத்திங்கறியா? சொல்லிட்டே இருக்கன். கேக்க மாட்டேங்கறே!’ வள்ளியம்மைப் பாட்டியின் குரல் உரத்து இப்படி வந்தால் வீட்டின் பின்புறத் தொழுவத்தில் நின்று பசுமாட்டிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.  மனிதர்களிடம் பேசுவது போலவே மாட்டிடம் பேசிக் கொண்டிருப்பார், சில நேரங்களில் உரிமையாக கோபத்தில் திட்டியும் தீர்ப்பார்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , , , ,

இன்று வீட்டில் இருங்களேன்

நாளையிலிருந்து ஊரடங்கு என்பதால் அதிகாலையில் மூக்கில் விடும் அணு தைலம், நாளையிலிருந்து தொடங்கும் மூச்சு ‘ஆன்லைன்’ வகுப்பிற்கு தேவைப்படும் ‘மைக்’கிற்கான AA பேட்டரிகள் வாங்க கடைகளுக்குப் போயிருந்தேன். அடையார் மெர்ஸி எலக்ட்ரானிக்ஸ், திருவான்மியூர் இம்ப்காப்ஸ், ஆர் ஏ புரம் ஏகே டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என எல்லாவற்றிலும் ஏக கூட்டம். திருவான்மியூரிலிருக்கும் சித்த மருந்துக்கடைக்கு ஆர் ஏ… (READ MORE)

பொரி கடலை

முதல் தேர்வு நன்று

சிங்கப்பூரில் ஸ்டேண்டர்டு சார்ட்டண்ட் வங்கியில் நிதித்துறை பணி அனுபவம், அமெரிக்காவில் முதுகலை என்ற அனுபவம் கொண்ட பழனிவேல்ராஜன் தியாகராஜனுக்கு ( பிடிஆர் மகன்) நிதி – மனித வள மேலாண்மை,சென்னைப் பெருநகரின் பேரிடர்களை எதிர்கொண்டு மேயராக இருந்த அனுபவம் கொண்ட மா. சுப்ரமணியனுக்கு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு…. சரியான தேர்வுகளாகத் தெரிகிறது. இவர்களும் மற்ற… (READ MORE)

Politics

நல்ல தொடக்கம்

நடந்ததை ஏற்றுக் கொண்டு ‘அடுத்தது செய்ய வேண்டியது என்ன?’ என்ற மனப்பான்மையில் இயங்குகிறார் மக்கள் நீதி மய்யத்தின் கமல் என்று எண்ணுகிறேன்.  முதல்வர் ஸ்டாலினின் வீடு தேடிப் போய் வாழ்த்து சொன்னதை இப்படியே ‘பார்க்க விரும்புகிறேன்’. ‘பயந்துட்டாரு! ச்சும்மா போய் பாத்து வச்சிக்கறாரு, நாளைக்கு பிரச்சினை ஏதும் வந்துடக்கூடாதுன்னு!’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இருக்கலாம். (அரசியல்… (READ MORE)

Uncategorized

நடந்தேறட்டும் நல் அரசியல்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பான்மை வெற்றி பெற்று முதல்வராக வந்திருக்கிறார் ஸ்டாலின் அவர்கள். அட்டகாசம்! வாழ்க!  தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படட்டும்! வாழ்த்துகள் ஐயா! நியமனம் செய்யப்பட்டவராக நுழைந்து தலைவராக வளர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர்கள். மிக நல்ல எதிர்கட்சியாக அமர்ந்து தன் குழுவோடு அரசியல் செய்யட்டும் அவர். வாழ்த்துகள்! கோவை தொகுதி தவிர கிட்டத்தட்ட ஒட்டு மொத்த… (READ MORE)

Politics

உறுதியோடு உயர்வோம்

திமுக முன்னிலை என்று ஊடகங்கள் செய்தி வெளியிடும் இவ்வேளையில், வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியில் வாழும் நிலையில் இருப்பது சங்கடம்தான் என்றாலும் இருக்கிறோம். கோவிட் பாஸிட்டிவ் வந்த அத்தையை மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். மகள் ஓர் அறையில் தன்னை அடைத்துக் கொண்டு தனிமைப் படுத்திக் கொண்டாள். சுவருக்கு அந்தப்பக்கம் இருப்பவளிடம் செல்ஃபோனில் பேசுகிறோம். கதவருகே… (READ MORE)

Uncategorized

உருத்திரனும் சிவனும் ஒன்றல்ல, திருவருட்பா வரிகள்

இறைவனை ‘ஏகன்’ என்று சொல்லும் நான் ‘அநேகன்’ என்பதையும் மறுப்பதில்லை.  ஆல் அமர் செல்வர் தட்சினா மூர்த்தியையும் குருவையும் ஒன்றென ஏற்கனவே குழப்பியது போதாதென்று, சிவனும் ருத்திரனும் வேறு வேறு என்பது புரியாமல் இருவரையும் ஒன்றெனவும் குழப்பிக் கொள்கின்றனர் பலர் என மணக்குடித் தம்பிகள் சிலரிடம் சில முறை பகிர்ந்திருக்கிறேன்.  மறுக்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல்… (READ MORE)

Religion, Spirituality

நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும்

கொரோனா நோய்தொற்றின் முதல் அலையை சரியாக கையாளப்பட்டதை பாராட்டும் போது, இரண்டாம் அலையை சரியாக கையாளவில்லை என்பதையும் சொல்லித்தானே ஆக வேண்டும்! ‘தேர்தலை ஒத்தி வைத்திருக்கலாம்!’ என்பது நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் தெரியவில்லை. தேர்தலைத் தள்ளிப் போட அரசியல் நிர்ணய சட்டம் இடம் அளிக்காது என்பதையும் மறக்க இயாலாது. தேர்தலை, 7 கட்டங்கள் 8 கட்டங்கள்… (READ MORE)

Politics

மனிதகுலம் கிமு 6000

கிமு 6000த்தில் வால்கா நதிக்கரையில் வாழ்ந்த ‘இந்தோ ஸ்லாவியா’ இன மனிதர்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். ‘வேள்பாரி’யில் ஆதி மனிதர்கள் தாய் வழி சமூகம் கொண்டிருந்ததாக சு வெங்கடேசன் எழுதியிருப்பாரே, அப்படியிருந்திருக்கிறது இவர்களின் வாழ்க்கை.பத்து பதினாலு பேர் கொண்ட குடும்பத்தின் தலைவி மூத்த தாய் வழியில் குடும்பம் நடத்தப் பட்டிருக்கிறது. அவரின் சந்ததியோடு குடும்பம் நடக்கிறது…. (READ MORE)

Uncategorized

ஏற்கனவே அறிந்த பாத்திரங்களை வேறு வண்ணத்தில் என்னுள்ளே உலவ விட்ட பெரும் எழுத்து சித்திரக்காரர்

நல்ல எழுத்து என்பது ஒரு தவம் என்பது என் கருத்து. ஒரு நிலைக்கு ஓர் அலைவரிசைக்கு நம்மை பொருத்திக் கொள்ளும் போது, நம் உள்ளிருக்கும் படிமங்களை தொட்டுக் கொண்டு,  எழுத்து அதுவாக நம் வழியே நிகழ்த்திக் கொள்ளும். சில எழுத்தாளர்கள் ஒரு சாதகர்களாகவே என் கண்ணுக்குத் தெரிவார்கள்.  இவர் அப்படியொருவர்.  இவரது சித்தாந்தங்களோடு முரண்பட்டு நிற்பவர்கள்… (READ MORE)

பொரி கடலை

, ,

வந்தது கொரோனா ஆயுர்வேத மருந்து!

கொரோனாவிற்கு ஆயுர்வேத மருந்து ஒன்றை அறிவித்து விட்டார்கள், 100 நோயாளிகளுக்கு தந்து சோதித்து வெற்றி கண்டு விட்டார்கள், ஐசிஎம்ஆர் ஒப்புதல் தந்துவிட்டது! மருந்து கொடுக்கப்பட்ட 5 நாளில் 86% தொற்றும், 10 நாளில் 100% தொற்றும் குணமாகியுள்ளதாம். க்ளெவிரா மாத்திரை, சிரப் – என இரண்டு கூட்டு மருந்துகளை அறிவித்திருக்கிறார்கள். பப்பாளி, காட்டுவேம்பு, நில வேம்பு,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

wp-1619008359356.jpg

‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’ – தமிழ்மகன் : பரமன் பச்சைமுத்து

ஆதியில் அண்டப் பெருவெளியில் நிகந்த பெரு வெடிப்பின் (‘பிக் பாங்’) பின் நிகழ்ந்த மாற்றங்களில் இந்தப் பிரபஞ்சம் உருவானது. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் உருவானபோதே இன்னும் சில பிரபஞ்சங்களும் உருவாகியிருக்கலாம், இந்த உலகில் இப்போது நீங்களும் நானும் பேசிக்கொண்டிருப்பதைப் போலவே, அங்கும் ‘இணைப் பிரபஞ்சம்’ எனப்படும் பேரலல் யுனிவர்ஸ்ஸிலும் இருவர் பேசிக்கொண்டிருப்பர் என்பது அறிவியலாளர்கள்… (READ MORE)

Books Review

, , , , , , , , ,

கவனித்த செய்தி

‘கவனித்த செய்தி’ : கோதுமை கொள்முதல் எம்எஸ்பி தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு செலுத்துவதை எதிர்த்து வந்தன பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள். விவசாயிகளின் கோதுமைக்கான எப்சிஐ (உணவுக் கழகம்) தரும் தொகையை இது நாள் வரை தனியார் நிறுவனங்கள் கமிஷன் முறையில் பெற்று வந்தன. அவர்களிடமிருந்து  விவசாயிகளுக்கு பணம் சரியாக தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன. இந்நிலையில்… (READ MORE)

Politics

wp-1618899909136.jpg

‘என்னாது, சம்மர்ல காஃபி குடிக்கக் கூடாதா? அப்புறம்?’

valarchi Summer கேள்வி: கோடையில் காஃபி அதிகம் வேண்டாம் என்று ஒரு முறை நீங்கள் சொன்னதாக நினைவு. குறைத்துக் கொள்ள வேண்டுமா, குடிக்கவே கூடாதா? பரமன்: அடிப்படையை சொல்கிறேன். குறைத்துக் கொள்வதா, குடிக்கவே கூடாதா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். கோடையில் வெப்பம் மிக உயர்ந்து நிற்கும். நம் உடலும் சூடாகும். சரியான வெப்பநிலையில் உடலை… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , ,

தடுப்பூசியால் மாரடைப்பா?

(தடுப்பூசி போட்ட அடுத்த நாளே மாரடைப்பு வர வாய்ப்பில்லை, 21 நாட்களாவது ஆகும் என்கிறார்கள். விவேக் அவர்களுக்கு ஏற்பட்டது மாரடைப்பு. ) இந்தியாவில் கடந்த 92 நாட்களில் 12 கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தனை மக்களுக்கு தடுப்பூசி செலுத்த, அமெரிக்கா, சீனா எடுத்துக் கொண்ட நாட்களை விட குறைவானது இது என்கிறார்கள். மாடர்னா, பைசர்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

சிவமென்பது உருவமா? – பரமன் பச்சைமுத்தெ

சிவமென்பது உருவமா?ஓருருவத்திற்குள்ளே அடைபடுவதா இறை?அது உருவங்கடந்த ஒரு நிறை சிவமென்பது இல்லை சிலை,அது ஓர் உன்னத நிலை.சிவமென்பது உருவமல்ல,சிவமென்பது உணர்வு ‘ஐயாவென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே’ என்னும் திருவாசகத்து வரிகொள்கிறது சிவமென்பது உருவமில்லா நெறி உருவத்தை வணங்கியபோது வெறும்மனிதனாயிருந்தபாண்டிய முதலமைச்சன்உருவமில்லா பெருந்துறையின் கருவறையில் உறைந்தபோதேமாணிக்கவாசகன் ஆனான் உருவங் கடந்தவனே சிவநிலையை நெருங்குகிறான்உள்ளே சமநிலையை தாங்குகிறான் சிவமென்பது… (READ MORE)

Religion, கவிதை

wp-1618649735981.jpg

மு பச்சைமுத்து அறக்கட்டளை 14வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் ( சித்திரை மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கே கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் நிகழ்ந்தது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை17.04.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

எனக்கு ஐஜியத் தெரியும்…

தொண்ணூறுகளின் துவக்கத்தில் ரைட்சாய்ஸில் சர்வீஸ் இஞ்சினியராக வேலை பார்த்த அந்தக் காலங்களில் சரவணபவனில் காலை உணவு உண்ணும் போது, ‘ஏய் பரமன், அந்த டேபிள்ல பாரு நடிகர் விவேக்!’ என்று பாலசந்தர் சுட்டிக் காட்டியது இன்னும் நினைவில் நிற்கிறது. வெள்ளைச் சட்டையும், கண்ணாடியும் அணிந்து வழித்து வாரப்பட்ட தலைமுடி சகிதமாக வெறுமனே உட்கார்ந்திருந்தார் விவேக். உணவு… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-16185797781242867949624672667898.jpg

வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் ஆடுகளுக்கெல்லாம்!

தமிழகத்தின் அரசிலை கொஞ்ச காலமாக கவனித்து வருபவர் என்றால் உங்களுக்கு ஸ்டாலின் அவர்களின் பேச்சு நினைவுக்கு வரும், ரொம்ப காலமாக கவனிப்பவர் என்றால் அண்ணாவின் வரிகள் நினைவுக்கு வரும். ராஜா அண்ணாமலைபுரத்தின் தெருவொன்றில் ஒரு வீட்டின் பெண்மணி இட்ட சோற்றைத் தின்னும் இந்த ஆட்டையும், அதன் தாடியையும் பார்த்ததும் எனக்கு இரண்டு பேரின் பேச்சுகளும் நினைவில்… (READ MORE)

பொரி கடலை

wp-1618410412075.jpg

மிர்தாத்தின் புத்தகம் – மிக்கேய்ல் நைமி : பரமன் பச்சைமுத்து

முன் குறிப்பு: ‘உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்று எனக்கு அனுமதிக்கப்பட்ட புத்தகத்தின் பகுதி இதோடு முடிகிறது… மிச்சத்திற்கான காலம் இன்னும் வரவில்லை!’  என்று எங்கோ லெபனானில் ஒரு மூலையில் மிக்கேய்ல் நைமி எழுதி வைத்ததை ‘இதை படியுங்கள், ஒரு முறையல்ல 10,000 முறை படியுங்கள்!’ என்று  வெளி உலகிற்கு சத்தமாக சொல்லிஇப்படியொரு நூலை உலகிற்குக் காட்டிய ஓஷோவிற்கு… (READ MORE)

Books Review

, , , , , , , , , , ,

கடும் போட்டி தேர்தல் 2021

காலையில் மாலனின் கட்டுரையை படிக்க நேர்ந்தது. தமிழகத்தின் வாக்கு சதவீதம், எடப்பாடி தொகுதி, கொளத்தூர் தொகுதி சதவீதம், கடந்த தேர்தல், பொதுப்புத்தி என நிறைய கணக்கிட்டு ஆய்வு செய்திருக்கிறார் அவர்.  அதன் கடைசிப் பத்தியை இப்படி முடித்திருக்கிறார். //  திமுக தரப்பில்,  கடந்த மக்களவை தேர்தலில் வாக்கு சதவிகிதம் இதே போன்று 72 சதவிகிதம் இருந்ததையும்… (READ MORE)

Uncategorized

ஒரு வேட்டியை எடுத்துப் பிரித்துக் கட்டும் போது…

ஒரு வேட்டியை எடுத்துப்  பிரித்துக் கட்டும் போது உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?  வேட்டிகளில் ஒருபுறம் சிவப்பு வண்ண பார்டரும் அதற்கு் நேரெதிர் கீழே பச்சை வண்ண பார்டரும் இருந்தால், எதை இடுப்பிலும் எதை கால்பக்கமும் வைத்துக் கட்டுவீர்கள்?….. நெருங்கிய வட்டத்தில் பொதுவாகவே ‘இந்தத் திசையிலும் சிந்திக்கலாமே!’ என்று மறுபக்க ‘கவுண்ட்டர்’ கருத்துகளை வைப்பது என்… (READ MORE)

Manakkudi Manithargal

, ,

‘கர்ணன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

சுதந்திரமாக ஓடி விடக்கூடாது என்பதற்காகவே முன்னங்கால் இரண்டையும் இணைத்து கட்டி வைக்கப்பட்ட நடக்க முடியாமல் விந்தி விந்தி நகரும் ஒரு கழுதைக்குட்டி வாழும், சரியான பாதையோ இணைப்போ இல்லாத சீமைக்கருவேல புதர்கள் மண்டிய, உலகை விட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு சிற்றூருக்கு ஆற்றல் மிகு பொலிவான ஓர் இளங்குதிரை கொண்டு வரப்படுகிறது. ஒரு நாள் ஊரே நினைத்திரா… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள்

இந்தியாவின் ஏதோவொரு மூலையில் பணியிலிருக்கும் ராணுவ வீரர் ஒரேயொரு நாள் வாக்குப்பதிவிற்காக தன் உள்ளூருக்கு பயணித்து வந்து திரும்புவது சிரமம் என்பதால் அவர்களுக்கு மட்டும் சிறப்பு அறிமுகமாக தபால் ஓட்டு என்று ஒன்று வந்தது.  அது உரிமை என்பதைத் தாண்டி ஒரு சிறப்பு மரியாதை அன்று. வாக்குச் சாவடிகளுக்கு அலுவலர்களாக செல்லும் ஆசிரியர்கள் / அரசு… (READ MORE)

Politics

ஐ ஃபோன் – பாட்டி

அந்தக் காலத்தில நாங்கல்லாம் இப்படி…’ என்று பகிர்வதில் தவறில்லை, அதையே சொல்லிக் கொண்டு இன்றைய நடைமுறைக்கு மாற விரும்பாமல் எதிர்ப்பிலேயே நிற்பது எதிரியத்தை வளர்த்து விடும் தவறு. தான் கொண்ட பழக்கங்களை அது நல்லதென்றால் இன்றைய நடைமுறைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வேன், ஆனால் அதைத் தொடர்வேன் என்பது வாழ்வோடு இயைந்து வளரும் இன்றைக்குத் தேவையான நன்னெறி…. (READ MORE)

பொரி கடலை

,

எத்தனையாண்டுகள் ஆனாலும் தொடர்கிறது குமுதத்தில் குறுக்கெழுத்து முடிக்கும் இந்த விளையாட்டு! சிறுவனாக இருந்த போதுசித்தப்பா வாங்கி வரும் குமுதத்தில் தொடங்கி, கல்லூரி காலத்தில் தினமலர் வாரமலரிலும் என கூடி, இத்தனையாண்டுகள் ஆன பின்னும் தொடர்கிறது விருப்பமாக. இதனால்தானோ என்னவோ, இதற்கு முன்பு ஆசிரியாக பணி செய்த தமிழ் இதழில் வலுக்கட்டாயமாக குறுக்கெழுத்துப் பகுதியை சேர்ந்தேன். ‘வளர்ச்சி’… (READ MORE)

Uncategorized

wp-1617689855881.jpg

வாக்கு செலுத்தும் படலம்

‘வெய்ய வர்றதுக்குள்ள போய் ஓட்ட போட்டுட்டு வாயேன்!’ ‘கூட்டம் கம்மியா இருக்கும் போது போவோம்!’ இந்த இரண்டுதான் தேர்தலில் வாக்களிப்பதை இயக்குகிறது என்று நினைக்கிறேன்.  மணக்குடியிலும் இதே கதைதான். பல தேர்தல்களாக புவனகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்த (கீழ)மணக்குடி இப்போது சில தேர்தல்களாக சிதம்பரம் தொகுதியில் இருக்கிறது. படித்த பள்ளிக்கே திரும்பிப் போவது என்பது தேர்தல்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , ,

wp-1617602394335.jpg

குழந்தைகள்

அவர்கள் பார்வை கூட வேண்டாம், நம் பார்வையில் அவர்கள் பட்டாலே போதும், நம்முள் உள்ளே பூக்களும் வெளியே புன்னகையும் பூக்கின்றன. எத்தனை இறுக்கமான மனநிலையையும் சூழலையும், ‘ப்பூவா… மம்மம்’ சொல்லி ‘தத்தக்கா பித்தக்கா’ நடை போடும் ஒரு குழந்தை உடைத்துத் தகர்த்தி விடும். தூக்க முற்படும் போது ஒரு குழந்தை நம் மீது தாவுகிறது. உண்மையில்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , , , , , ,

பாகுபலி என நினைத்துக்கொள்வானா!

பச்சை பூவரசங்கழிகளை ஒடித்து இழுத்து சணல் கொண்டு கட்டி வில்லாக்கி, தென்னை ஈர்க்குச்சிகளை (விளக்கமாற்றுக் குச்சிகளை) அம்புகளாக்கி அர்ச்சுனானாக ராவணனாக ராமனாக உருமாறி விளையாடியிருக்கிறேன், சரவணனோடும் ஆளவந்தாராடும் சிறுவனாக இருந்த போது. அதன் பிறகு இத்தனையாண்டுகளில் வில் வைத்து விளையாடிய சிறுவர்கள் சொற்பமாய் இருந்திருக்கலாம் என்றாலும், நான் பார்க்க நேரிடவில்லை. ‘அவெஞ்சர்ஸ்’ வகை ‘பிளாஸ்டிக் போ… (READ MORE)

பொரி கடலை

அம்மா – குளோபல்

ரேடியேஷன் டிபார்ட்மெண்ட்,Dr வனிதா கிருஷ்ணமூர்த்தி அறை: ‘அமிர்தம் அம்மா, இந்த ஸ்கேன் படத்தப் பாருங்க. உள்ள எந்த பிரச்சினையும் இல்ல. நல்லா இருக்கீங்க. சர்ஜரி பண்ணி ரேடியேஷன் மருந்து குடுத்து ஸ்கேன் பண்ண எல்லாருக்கும் ஒரு ரேடியேஷன் ட்ரீட்மெண்ட்டாவது குடுக்கற மாதிரி வரும். உங்களுக்கு எந்த ட்ரீட்மெண்ட்டும் தேவையில்லை.உங்களுக்கு வந்த கட்டிய சர்ஜரி பண்ணி எடுத்த… (READ MORE)

Manakkudi Manithargal, மு பச்சைமுத்து அறக்கட்டளை

அம்மா – குளோபல் மருத்துவமனை

சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலேயே முடித்திருக்க வேண்டிய, உடல் ஆரோக்கிய சோதனை ஒன்றை,உலகம் தழுவிய பொது முடக்கத்தால் ஓராண்டு கழித்து இந்த மார்ச்சில் செய்துவிட்டு வெளியே வருகிறோம்! (சென்னை, பெரும்பாக்கம் – குளோபல் மருத்துவமனையில்) 30.03.2021

Uncategorized

wp-1617080021159.jpg

சாய்ந்து கொள்ள ஒரு தோள்…

மகிழ்வான தருணங்கள், துயரமான நேரங்கள், இவை எதுவுமில்லாமல் வெறுமனே இருக்கும் சமநிலையான நேரங்கள் என எதுவாயினும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் இருப்பது வாழ்வின் பெரும் வரம். அம்மா மடி, அப்பாவின் தோள், வாழ்க்கைத்துணையின் நெஞ்சு, ஆசானின் தாள், தோழமையின் அரவணைப்பு என மனிதர்க்கு சாய ஓரிடம் தேவைப்படவே செய்கிறது.  ‘சாய்ந்து கொள்ள ஒருவர்’ என்பது… (READ MORE)

பொரி கடலை

, , , ,

எப்படி சொன்னார் சுஜாதா என்பது பெரிய வியப்பு

கேள்வி: ஒரு பக்கம் இப்படி வரலாற்றை எடுத்துக் கொண்டு நிகழ்வுகளை சரியாக தந்து அதற்கு இடையில் கதாபாத்திரங்களை வைத்து கதை செய்து பெரிய விருதுகளும் பாராட்டுகளும் செய்கிறீர்கள். திடீரென்று அதற்கு இடையில் இணை பால்வெளி வேற்று கிரக கதைக்களங்களை ‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’ ‘அமில தேவதைகள்’ போன்ற அறிவியல் புனை கதைகளையும் தருகிறீர்கள்! சுஜாதாவுக்கு அடுத்து… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , ,

கோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள்

 கருவமரத்து சாலை பனஞ்சாலைசோளக் கொல்லை ஈச்சம்புதர் அடர் ஒத்தயடிப்பாதையென மணக்குடிக்கும் புவனகிரிக்குமான இடைவெளியை கோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள் மக்களித்துக் கொண்டதால் மாவுக்கட்டில் புகுந்திருக்கு தூளியிலிருந்த பிள்ளையைதூக்கையில்தரை வழுக்கிய போதும்தம்பியை விடாமல் தாங்கியதில்தடம் பிசகி மடங்கின கால்கள் சில நாட்கள் சங்கடம்சில வாரங்கள் பறந்தோடும்சீக்கிரமே குணம் வரும் ஒரே இடத்தில் நீவீடு… (READ MORE)

Manakkudi Manithargal, கவிதை

என் ‘கோவேக்ஸின்’ உட்புகும் படலம்.

கூட்டமே இல்லையென்றும் கூற முடியா பெருங்கூட்டம் என்றும் கூற முடியா எப்போதும் 20 பேர் இருந்தார்கள் என்று சொல்லலாம். 18 பேர் சரியாக சுவாசக்கவசம் அணிந்திருந்தாலும், வாயை மறைக்க வாய்க்கட்டாக அதை அணிந்திருந்த 2 பேரும் இருக்கவே செய்தனர். ‘ பரமன் பச்சைமுத்தூ…’ ‘யெஸ்!’ ‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா?’ ‘வாட்…  கோவாக்ஸினையும்  கோவிஷீல்ட்டயுந்தான் இப்படி… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

தடுப்பூசி போட்டுட்டோம்ல்ல!

கூட்டமே இல்லையென்றும் கூற முடியா பெருங்கூட்டம் என்றும் கூற முடியா எப்போதும் 20 பேர் இருந்தார்கள் என்று சொல்லலாம். 18 பேர் சரியாக சுவாசக்கவசம் அணிந்திருந்தாலும், வாயை மறைக்க வாய்க்கட்டாக அதை அணிந்திருந்த 2 பேரும் இருக்கவே செய்தனர். ‘ பரமன் பச்சைமுத்தூ…’ ‘யெஸ்!’ ‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா?’ ‘வாட்…  கோவாக்ஸினையும்  கோவிஷீல்ட்டயுந்தான் இப்படி… (READ MORE)

பொரி கடலை

, , , ,

13 ஆவது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

 இன்று பங்குனி- மிருகசீரிடம், தந்தையின் பெயரால்வடபழனியில் வழக்கமாக செய்யும் இடங்களில், மதிய உணவு வழங்கப்பட்டது. இறையருள் மிகப் பெரிது  பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை20.03.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ…

‘பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ…தங்கக் கட்டிப் பாப்பாவுக்கு தாலேலோ…’ சில பாடல்கள், அவை இடம் பெற்ற திரைப்படங்களை நாம் பார்க்க வில்லையென்றாலும், நம்மை வேறு சில நினைவுகளுக்கு கூட்டிப் போய் விடுகின்றன. அந்தப் படங்களைப் பார்த்திருந்தால் படக்காட்சிகளின் நினைவுகள்தான் வரக்கூடும், பார்க்காததாலேயே நம் வாழ்வின் நிகழ்வுகள் நினைவில் வருகின்றன என்ற வகையில் பார்க்காததே வரம்தான். பகலில் பொதுவெளியில்… (READ MORE)

Manakkudi Manithargal

wp-1615802964512.jpg

ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா…

ஊஞ்சலிலாடாத குழந்தைகள் கூட இருக்கலாம், ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா என்பது என் கேள்விக்குறி. ஊஞ்சல் வீடுகளின் அழகை கூட்டுகிறது, தமிழ் திரைப்படங்களில் கேஎஸ் ரவிக்குமாரின் நாயகர்களின் பிம்பம் உயர்த்தப் பயன்படுவது என்பனவன்றைத் தாண்டி ஊஞ்சலைக் காண்கையில் உள்ளே குதூகலம் வருகிறது, உள்ளிருக்கும் குழந்தைமை விழிக்கிறது என்பனவும் உண்மை. மயிற்பீலியணிந்து கண்கள் மூடி  குழலூதும் கண்ணனும்,… (READ MORE)

பொரி கடலை

, ,

wp-16151251877117480122333963145405.jpg

மஞ்சளாறு பாயும் அந்த ஊரு

‘பச்சக் கிளி பாயும் ஊருபஞ்சு மெத்தப் புல்லப் பாருமஞ்சளாறு பாயும் அந்த ஊரு…’ இந்தப் பாடலைக் கேட்டிருக்கிருக்கிறீர்களா?  ‘கருத்தம்மா’ படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள் இவை. …. கடல்மட்டத்திலிருந்து 2133 மீ (கிட்டத்தட்ட 7000  அடி) உயரத்தில் இருக்கும் கொடைக்கானல் மார்ச் மாத காலை 6 மணிக்கு 11 டிகிரியில் இருக்கிறது. சங்க… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

,

என்னை வரவேற்பவர்…

என்னை வரவேற்பவர்… இரவெல்லாம் பயணித்து கொடைக்கானல் மலையேறி எனக்கான அறையை திறந்து பின்கட்டின் கதவைத் திறந்தால்… 11 டிகிரியிலும் நடுங்காமல், என்னைக் கூர்மையாக பார்த்தபடி வரவேற்கிறார் இவர் ( இவள்!?) ‘வந்தாச்சா… மலர்ச்சி வணக்கம்! என்ன? படம் எடுக்கறியா? சரி எடு, நீ நம்மாளு, நான் ஓட மாட்டேன். ஒழுங்கா எடுத்துக்கோ! எடுத்தாச்சா… வர்ட்ட்டா!’ பரமன்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

மேற்படிப்பு

முப்பத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியூரி்ல் தங்கி கல்லூரியில் படிக்கப் போனபோது, என் அம்மா அழுதார்களாம், சில நாட்கள் தொடர்ந்து. நான் சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போனேன். இன்று என் மகளை படிப்பிற்காக வெளியூர் அனுப்பும் வேளையில் என் கண்களில் எட்டிப்பார்க்கிறது கண்ணீர். சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போகிறாள் மகள்! பரமன் பச்சைமுத்து06.03.2021

Uncategorized

சசிகலா துறப்பு – 2

(சசிகலா – தொடர்ச்சி) அதிமுக பற்றிய அவரது வழக்கு மார்ச் 15 வரை நீதிமன்றத்தில் இருக்கிறது. அது வரை தேர்தலை எதிர்கொள்வதில் அவருக்கு நிலைப்பாடு குறித்து சிக்கல் இருக்கலாம். அமமுகவில் இறங்கி வேலை செய்தால், அவர் அதிமுக இல்லை என்றாகிவிடும். அதிமுகவில் அவர் இறங்கினால் சட்டச் சிக்கல்கள், ஈபிஎஸ் ஓபிஎஸ் அணி மற்றும் அமைச்சர்கள் பாய்வர்…. (READ MORE)

Uncategorized

சசிகலா அரசியல் துறப்பு!

அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.விவரங்கள் முழுதாகத் தெரியாமல் கருத்து சொல்ல முடியவில்லை. முழுதும் துறப்பா, தேர்தல் வரையா… என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும். ஆனால்… இதே நிலையை டிடிவி தினகரன் முன்பு எடுத்தது தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது இப்போது. ‘நான் தொந்தரவா இருக்கேன்னு சொன்னாங்க. வேணாம்னு ஒதுங்கிட்டேன்!’ என்று பேட்டியெல்லாம்… (READ MORE)

Uncategorized

பெருமாள் கவுண்டர்

🌸 மூப்பின் அல்சைமர் மறதி நோய் முடங்கிப் படுக்கையிலேயே வாழ்க்கை முதுகில் ‘பெட் சோர்’ புண்கள் முடிந்தது எல்லாம்பெருமாள் கவுண்டருக்கு உடலின் சிறுமை உடைத்துஉயிரின் சுதந்திரம் இனி புன்னை பூலைமலர்கள் இட்டேமகள்கள் வழியனுப்ப தலைமழித்த மகன் ராமுதந்தையை ஏந்திச் சென்றார் கணப்பொழுதில் அஸ்தியானவரைகரைத்தாயிற்று காவிரியில் காலையில் இறந்த கவுண்டருக்குகருக்கலில் கருமாதியும் முடித்தாயிற்றுகாக்காய்க்கு சோறும் இட்டாயிற்றுகாதில் ஒலிக்கிறதுகடைசி… (READ MORE)

கவிதை

கட்சி கடந்த பாராட்டுவிழாவில்

அழைத்தது திராவிட பாரம்பரியம் கொண்டவரும் திமுக நண்பர் என்பதாலும், மக்கள் நீதி மய்யத்தின் சிகே குமரவேலு, வைரமுத்து பேரவை நண்பர்கள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள் என்று உறுதியானதாலும், இன்று வெல்கம் ஹோட்டலில் ( பழைய சோழா செரேட்டன்) நடந்த, வானதி சீனிவாசனுக்கு நண்பர்களால் நடத்தப்பட்ட விழாவிற்கு சென்றிருந்தேன். பல ஆண்டுகள் கழித்து பல… (READ MORE)

Uncategorized

wp-1614525167039.jpg

காமுட்டி விழா

‘மன்மதன்’ என்றதும் உங்களுக்கு யார் நினைவில் வருவார்கள்? (சிம்பு என்று சொல்லாதீர்கள்) மணக்குடியில் ‘மன்மதன்’ என்றால் நாங்கள் மந்தான் அவர்களையே நினைப்போம். ‘முத்துவோட அப்பா’ ‘தர்மலிங்கம்’ என பல பெயர்கள் இருந்தாலும் ‘மந்தான்’ என்பதே அவரின் பொது வழக்குப் பெயர். நல்ல உயரமாக வாட்டசாட்டமாக உடலும் நீண்ட முகமும் கொண்டவர் மந்தான். நாசிக்கும் தடித்த உதட்டிற்கும்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , , ,

wp-1613998808585.jpg

‘த்ரிஷ்யம் – 2’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

எல்லா மொழிகளிலும் மக்களால் கொண்டாடப்பட்ட மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்திற்கு  இரண்டாம் பாகம் எடுப்பதென்பது கத்தி மேல் நடப்பது போன்றது. அதை அநாயாசமாக செய்திருக்கிறார்கள். முந்தைய ‘த்ரிஷ்யம்’ (தமிழ் ‘பாபநாசம்’) நடந்ததிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து நடக்கும் நிகழ்வுகளால் ஆனது கதை. கேபிள் டிவி வைத்திருந்த சினிமா பைத்தியமான ஜார்ஜ்குட்டி, இப்போது வளர்ந்து சொந்த… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

wp-1613978192362.jpg

‘என்னைக் கடவுளாக்கி வணங்காதீர்கள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

உலகின் மிகச் சிறந்த தலைவர்கள் என்று பட்டியல் செய்தால் அதில் தவிர்க்கவே முடியாதவர் முதலில் வருபவர் என்று இறைத்தூதர் முகம்மது நபி அவர்களை சொல்வார்கள். அவரை இறைத் தூதராகவும், இஸ்லாம் மார்க்கத்தை தந்தவராகவும் மட்டுமே தெரிந்து கொண்டவர்களுக்கு, அவரது பிறப்பிலிருந்து 63 வயதில் அவருக்கு நிகழ்ந்த இறப்பு வரை உள்ள முக்கிய சங்கதிகளை தொகுத்து எளிதில்… (READ MORE)

Books Review

, , , , ,

12 ஆவது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸🌸 இன்று மாசி – மிருகசீரிடம், தந்தையின் பெயரால்வடபழனியில் வழக்கமாக செய்யும் இடங்களில், மதிய உணவு வழங்கப்படுகிறது. இறையருள் மிகப் பெரிது 🌸🌸 பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை21.02.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

ஆண்டுகள் ஆன பின்னும் அடுத்தவரையே இன்னும் குறை சொல்வது ஆட்சியாளருக்கு அழகல்ல.

‘இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியைக் குறைப்பதில் முந்தைய அரசு கவனம் செலுத்தத் தவறியதே பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் இப்போது பாதிக்கப்படுவதற்குக் காரணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மோடி. சென்ற முறை ஆட்சிக்கு வந்த போது சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்து விட்டு, அதற்கும் முந்தைய ஆட்சியை இப்போது இழுத்து… (READ MORE)

Politics

wp-1613544469103.jpg

‘மாஸ்க்’கோடு மகிழ்ந்து குலாவி…

முகத்தைப் பார்த்தே ஒருவரை அடையாளம் காண்போம் என்ற நிலை மாறி முன்னேறி விட்டது உலகம்.  பாதி முகத்தை மறைத்து சுவாசக் கவசம் அணிந்து கொண்டு ஆர் ஏ புரத்தின் தெருவொன்றில் இளநீர் வாங்க போனாலும், ‘ஹலோ பரமன் சார்!’ என்கின்றனர் எதிரே போகிறவர்கள்.  முழு முகமும் தெரியாவிட்டாலும் மொத்த உடலமைப்பை கண்டு நொடியில் மூளையில் பதிந்திருக்கும்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

Tiruvarur Meet – 91 Batch Avccp : Final episode

*3* ’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 ( நிறைவுப் பகுதி) மதிய உணவு முடித்து டீ பார்ட்டீ ஹாலுக்கு வந்த போது, அலங்கரிப்பு மேடையில் கீர்த்தனாவோடு கவிதாவும் அழகாக நின்று ஃப்ரேம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள முயல, நாங்கள் உள்ளே… (READ MORE)

AVCCP

, , ,

‘Tiruvarur Meet – 2021’ – 91 batch -Avccp

2 2 ’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 ( சென்ற பகுதியின் தொடர்ச்சி) ‘செம்மனார் கோவில்’ பிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும்.( முன்கதை: சென்ற ஆண்டு டிசம் 28 நம் ‘சவேரா மீட்’ படங்களை நான் ஃபேஸ்புக்கில் பகிர, அதைப் பார்த்து விட்டு ‘அடடா…… (READ MORE)

AVCCP

, ,

Tiruvarur Meet – Batch 91 – Avccp – Feb 2021

’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 பல பகுதிகளிலிருந்தும் 91 பேட்ச் கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்புத் தோழர்கள், திருவாரூரில் ஒரே இடத்தில் குவிந்து கலந்து களித்து மகிழ்ந்தோம். தம்பதி சமேதராய் மணிமாறன், நப்பின்னை, மீனாட்சி சுந்தரி, வசுமதி, ராஜவேல் ஆகியோர் வந்திருந்து அசத்த, நெடிதுயர்ந்த மகனோடு… (READ MORE)

AVCCP

,

wp-1613342951117.jpg

ராஜேந்திர சோழனின் தலைநகரத்தில்

பாண்டிய ஆபத்துதவிகளும் ஒற்றர்களும் நெரிசலும் மிகுந்த நகராகிவிட்டது இது. நிர்வாகத்திற்காகவும் என் விருப்பத்திற்காகவும் புதிய தலைநகரை நிர்மாணிக்கிறேன், மொத்தமாக புலம் பெயர்ந்து போகிறேன்!’ என்று முடிவெடுத்து சோழப் பேரரசன் ராஜேந்திர சோழன் நிர்மாணித்த சோழத் தலைநகரத்தை கடந்த போது ஒரு படமெடுத்துக் கொண்டேன். இந்த நகருக்கு வெளியேதான் தந்தை வழியில் சிவனுக்கு கற்றளி அமைத்து வடக்கிலிருந்து… (READ MORE)

AVCCP

, , ,

wp-1613342486301.jpg

ஏவிசிசி பி – திருவாரூர் மீட்

வகுப்புத் தோழியின் மகள் திருமணத்திற்கு வகுப்புத் தோழர்கள் குவிந்தோமே, திருவாரூரில்! வனிதா மகள் விஷ்ணுப்பிரியா திருமணத்தில், 91 பேட்ச் ஏவிசிசிபி மக்கள்.

AVCCP

, , ,

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

AVCCP, Uncategorized

, , , , ,

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

இளையாராஜா விகடன் பேட்டி

சில மனிதர்களின் நேர்காணல்களை சில பக்கங்களில் அடைத்து சுருக்கி விட முடியாது, சுருக்கி விடவும் கூடாது.  புதிய ஒலிப்பதிவுக் கூடத்தைத் திறந்து விட்ட இளையராஜாவின் பேட்டி வந்திருக்கிறது இன்று காலை வந்த விகடனில். உங்கள் பாடல்கள் ஆழ்ந்த மனநிலையைத் தருகின்றன. இதை அடையும் மாயநிலை என்ன? பாடலின் தன்மையை எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? பிண்ணனிக்குரலின் பங்கு என்ன?… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-1612976248501.jpg

சித்தப்பா மணிவிழா

‘முத்தையனுக்கு மணி விழா பண்ணிடனும்!’  வெவ்வேறு சமயங்களில் என அப்பா மூன்று முறை சொன்னார் இதை. ‘மாமன் ஆசைப்பட்டத நாம செஞ்சிடனும்டா தம்பீ!’ அம்மா இது குறித்து சொல்லிக்கொண்டேயிருந்தது. (அப்பாவை மாமன் என்றே குறிப்பிடுவார் அம்மா). இனைவனருளால் மலர்ச்சி ஐம்பதாவது பேட்ச்சின் ஏழாவது வகுப்புக்கும் எட்டாவது வகுப்புக்கும் இடையே இன்று புதன் கிழமை மிக மிக… (READ MORE)

Manakkudi Manithargal

கண்ணெதிரே ஓர் ஏரி

கண்ணெதிரே அழிகிறதே ஓர் ஏரி! இனியேனும் கவனம் கொள்ள வேண்டும், இருப்பதையாவது காக்க வேண்டும். நீர் வெளியேறும் வழி, நீர் வரத்து வழி, ஏரியின் பகுதி என தாம்பரம் பெரிய ஏரியில் 436 இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளனவாம். இவை ஒரு நாளிலா நடந்திருக்கும், ஆண்டாண்டு காலங்களாக நடந்திருக்கும்! இந்தக் கட்சி, அந்தக் கட்சி… (READ MORE)

Uncategorized

wp-1612289262845.jpg

வரட்டும் சிட்டு இங்க…

தைமாசம் பொறந்ததுமேதைதைன்னு குதிக்கும் ஆத்தா வயலெல்லாம் வெளஞ்சி நிக்கும்ஆத்தா மனசெல்லாம் நெறஞ்சி நிக்கும் தகதகன்னு தங்கமாதலை சாய்ஞ்சி நிக்கும் கதிரு ஆளுங்கள கூட்டியாந்துஅறுப்ப ஆரம்பிக்கும் மானத்த காக்கும் சேலையையெடுத்து சொருவும்வானத்த பாக்கும் கையெடுத்து கும்புடும் அறுவாள எடுத்துகிட்டுஆத்தா வயலில் இறங்கும் ‘சளக் புளக்’ சேத்துல காலு‘சரக் சரக்’ கதிருல அறுவாளு மொத கதிரு முருகன்சாமிக்குரெண்டாங் கதிரு… (READ MORE)

கவிதை

, , ,

திரை விமர்சகனை கூப்பிட்டார்கள்

சன் டிவி வானிலை மோனிகாவிடமிருந்து அழைப்பு. ‘இந்த நிகழ்ச்சிக்கு நீங்க வரணும் பரமன்!’ ………. சுஜாதா குமுதம் ஆசிரியராக இயங்கிய காலம் நிறைய வாசகர்களுக்கு பொற்காலம் என்பது போல் எனக்கும். அப்போது வெளியாகியிருந்த ‘இருவர்’ படத்திற்கு அவர் பெயரிலேயே அவர் எழுதியிருந்த சிறப்பு விமர்சனத்தை 20 முறையாவது படித்திருப்பேன். எழுத்தாளன் என்பதை விட சினிமா விமர்சகன்… (READ MORE)

Uncategorized

The book of Mirdad

‘ …..தனது அந்திமக் காலத்தில் நோவா தன் மகனை அழைத்து, ‘மகனே… இனி வரும் மனிதர்கள் ஆதிப் பெருவெள்ளத்தையும், அதன் ஆழத்தையும்,நூற்றியைம்பது நாட்கள் அதில் நாம் தத்தித் தவித்து வெற்றி கண்டதையும் மறந்து விடுவார்கள் என்று பயம் வருகிறது. இந்தப் பகுதியின் உயர்ந்த சிகரத்தில் ஒரு பலிபீடம் கட்டு. அதன் எதிரிலேயே கப்பல் வடிவில் ஒரு… (READ MORE)

Books Review

டீசல் கக்கும் பழைய வண்டிகள்…

குறிப்பட்ட கால இடைவெளி கடந்த பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்பது மத்திய அரசால் இப்போது கொண்டு வரப்படுகிறதாம். மேற்கத்திய நாடுகள் போல ‘இத்தனை ஆண்டுகளுக்கு மேற்பட்ட வண்டிகளை வைத்துக் கொள்ளக்கூடாது, நசுக்கி அழித்து விட வேண்டும்’ எனும் வகையில் நேரடியாக சொல்லி கட்டுப்படுத்தும் சட்டங்கள் இந்தியாவில் இது வரையில் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை… (READ MORE)

Uncategorized

எருக்கூர் மக்களுக்கு வணக்கம்

பணத்திற்கு ஆசைப்பட்டு திட்டம் போட்டு ராஜஸ்தானிலிருந்து நண்பர்களை வரவழைத்து சீர்காழியில் தான் பணிபுரியும் வீட்டிலேயே இரட்டைக் கொலைகள் செய்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்த கொள்ளையர்களை நான்கு மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டுக்கள். காரை பாதி வழியில் நிறுத்தி விட்டுநகையையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு வயல் வழியே போன கொள்ளையர்களை ‘யார்ரா நீங்க? இங்க என்ன… (READ MORE)

Uncategorized

wp-1611759628982435312528921141961.jpg

நின்று கொண்டிருக்கிறது புளிய மரம்

காஞ்சி நகரின் உள்ளே பயணிக்கும் போது, கீழே நீரோடிக்கொண்டிருக்கும் அந்த சிறு பாலத்தைக் கார் கடந்தாலும், அந்த வேகவதி ஆற்றை சற்றென்று கடந்து வந்துவிட முடிவதில்லை. நீண்ட தூரம் போன பின்பும் மனம் மட்டும் வேகவதியிலேயே நின்று, மகேந்திர பல்லவன், இரண்டாம் புலிகேசி, காஞ்சி நகர் வெளிப்புறம் தீக்கிரையாதல், சாளுக்கிய வாதாபி, பதின்ம வயது நரசிம்ம… (READ MORE)

பொரி கடலை

, , , ,