‘டான்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

‘சார் படம் பண்ணலாம் சார்! உங்களுக்கு காலேஜ் டான் ரோல். பிரியங்கா மோகனையே இதிலயும் புக் பண்ணிடலாம் சார்!’ ‘சரி, நான் அனிருத்தை கொண்டு வந்துர்றேன்! கதை?’ ‘காலேஜ் கதை, இன்ஜினியரிங் காலேஜ், படிக்க கஷ்டப்படும் மாணவர்கள், அப்படியே ஜாலி கதை சார்!’ ‘ அமீர்கான் த்ரீ இடியட்ஸ் பாத்தீங்களா? படிப்பு வராத மாணவர்கள், கண்டிப்பான… (READ MORE)

Manakkudi Talkies

இரைச்சலுக்கிடையே அமைதி

‘இதுதான் வாழ்க்கை!’ என்று ஏற்றுக் கொள்ளும் போது, இன்னல்களுக்குக் காரணமான உளைச்சல்கள் உதிர்ந்து விடுகின்றன, ‘இனி செய்ய வேண்டியது என்ன!’ என்பது பற்றி தெளிவும் வழிகளும் தோன்றி விடுகின்றன.  ‘என்னைச் சுற்றி எல்லாமும் சரியாக இருந்தால்தான் என்னால் இயங்கமுடியும், எதையும் செய்ய முடியும்!’ என்பவர்களுக்கு எல்லா நேரங்களிலும் அப்படியான தருணங்களை வாழ்க்கை தந்துவிடுகிறதா என்பது கேள்விக்குறிதான்…. (READ MORE)

பொரி கடலை

எலும்புத் துண்டு

உடைத்து வைத்த பிஸ்கட் துண்டுகள் அதே நிலையில்,வழக்கமாக வரும் காக்கைகள் வரவில்லை… ஞாயிறு – காக்கைகள் விடுமுறை? ஞாயிறு கறி சமைக்கிறான்கீழே குடியிருக்கும் நேபாள செக்யூரிட்டி! 🙂 பரமன் பச்சைமுத்து08.05.2022

ஆ...!

புதுவை சிறப்பு வளர்ச்சிப்பாதை + பேட்ச் 59 பட்டமளிப்பு

அரங்கு நிறைந்த அவையோரோடு அட்டகாசமாக நடந்தது ‘முழுமலர்ச்சி திரள் 59 – பட்டமளிப்பு விழா + சிறப்பு வளர்ச்சிப் பாதை’ புதுச்சேரி, லே ராயல் பார்க் ஹோட்டலில். புதுச்சேரி மலரவர்களுக்கு மறுபடியும் கூடல் என்பதால் மகிழ்வு, மலரவர்களாக பட்டம் பெறும் புதியவர்களுக்கு ‘நாங்கள் இனி மலரவர்கள்!’ என்பதிலும், ‘இதோ, இவர்தான் எங்கள் பரமன், இது எங்கள்… (READ MORE)

MALARCHI, Paraman's Program

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 26வது அன்னதானம்

 நேற்று மிருகசீரிடம் (சித்திரை மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. ( நேற்று வகுப்பில் இருந்ததால் இதை பகிர முடியவில்லை) இறைவனுக்கு நன்றி! வாழ்க!  பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை05.04.2022Currently @Puducherry

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-16513788072136417922580023823367.jpg

அல்ஃபோன்ஸா மாம்பழம் வாங்குகிறீர்களா?

அல்ஃபோன்ஸா என்றதும் ‘ஏக் ஹி சான் ஹே ராத் கேலியே!’ என்றவரின் பின்னிருந்து வந்து ‘ஒரேயொரு சந்திரன்தான் இரவுக்கெல்லாம்… ஒரே ஒரு பாஷாதான் ஊருக்கெல்லாம்!’ என ‘பாட்ஷா’ படத்தின் பாடலில் இடையை காட்டி வரும் நடிகையே மனதில் வருவார் முன்பு எனக்கு. இனி, ஒரு அட்டைப்பெட்டி நிறைய ரத்னகிரியிலிந்து வரவழைக்கப்பட்ட இந்த பழங்களை அனுப்பி வைத்த… (READ MORE)

Uncategorized

, , , ,

29.04.2022 வளர்ச்சிப்பாதை…

சிலவற்றை விவரிக்கவோ விளக்கவோ முடிவதில்லை. நேற்றைய வளர்ச்சிப்பாதையும் அப்படியே என்று உறுதிபடுத்துகின்றன வரிசையாய் மலரவர்களிடமிருந்து வரும் பகிர்வுகள். அரங்கு நிறைந்த மலர்ச்சி அகத்தில், பழைய முகங்கள், புதிய பேட்ச் முடித்தவர்கள் என ஒவ்வொருவராய் கண்டறிந்து காண்பதே ஓர் உற்சாகம் தந்த உணர்வாய் இருந்தது. ‘உழைப்பிற்கு அங்கீகாரம் – பலன்’ ‘மலர்ச்சியோடு இணைந்திருக்க வேண்டிய முக்கிய நேரம்… (READ MORE)

MALARCHI, Malarchi Maanavargal

காஃபி ஒரு பானமல்ல

காப்பிக்காக அல்ல,காப்பி பருகும் போது கொள்ளும் தருணங்களுக்காக! காப்பி பானமல்ல,காரணம்! காஃபி வித் அம்மா@சரவணபவன் பரமன் பச்சைமுத்து28.04.2022 Amirtham AmirthamPachaimuthu ParamanAmma Paraman

Manakkudi Manithargal, ஆ...!

‘பரமன், உங்க அப்பா பேர்ல இருக்கற அறக்கட்டளையிலேருந்து மாதாமாதம் அன்னதானம் பண்றே. அத எதுக்கு ஃபோட்டோ எடுத்து போடறே?’ ‘பாரு பரமன், செய்யற உதவி வெளிய தெரியாம பண்ணனும். இல்லன்னா புண்ணியம் கெடையாது’ ஒவ்வொரு மாதமும் பலரும் எனக்கு சொல்பவை இவை. எந்த பதிலும் சொல்வதில்லை நான்.… 27.04.2022 சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், கர்நாடக பெங்களூருவின்… (READ MORE)

Uncategorized

கோவை வளர்ச்சிப்பாதை

🌸 மலர்ச்சி வணக்கம்! பல ஆண்டுகளாக பலரும் விருப்பப்பட்ட முயற்சித்த‘கோவையில் – வளர்ச்சிப் பாதை’ திடீரென முடிவாகி திரும்பிப் பார்ப்பதற்குள் நிகழ்ந்து முடிந்துள்ளது. ‘பணி நாளில் காலையில்’ ‘மாலையில் வைத்திருக்கலாம்’ ‘திடீர்னு சொல்றீங்களே!’ என பலரும் கேட்டதை அறிந்தோம். (கோவையில் வேறு நிகழ்ச்சிக்கு வந்தவன் விமானத்தை கொஞ்சம் ஒத்திப் போட்டதில் இது நடந்தது). இவற்றைத் தாண்டி…… (READ MORE)

Paraman's Program

wp-1650609481779.jpg

‘யாருக்கு வேண்டும் பன்னீர் டிக்கா சாண்ட்விச்!’

‘எக்ஸ்க்யூஸ் மீ… யூ ஆர் பிகேவிங் ஃபன்னி!’ கருநீல இறுக்கமான உடையணிந்து, சாயாலி என பெயர் பொறித்த பட்டையை மார்பில் அணிந்திருந்த,  கண்ணிமையில் சிவப்பு வண்ணம் பூசியிருந்த விமான பணிப்பெண் சற்று அதிகமான சத்தத்திலேயே கூவினாள்.  தூங்கத் தொடங்கிய நான் அதிர்ந்து கலைந்து எழுந்தேன். கவிஞர் வைரமுத்து கழுத்து இறங்க தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு நேராய்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

மணிமேகலை, காவிரிப்பட்டினம், மணிமாறன்

காவிரிப் பட்டினம், தொடிதோட் செம்பியன் மன்னன், பொதிகை அகத்திய முனி, இந்திர விழா, புகார் நகரத்து நாளங்காடி பூதம், சதுக்கப் பூதம், சித்திராபதி, மகள் மாதவி, தோழி வயந்த மாலை, சுதமதி, சோழ இளவரசன் உதயகுமாரன், யாழ் மீட்டும் எட்டிக்குமரன், அழகிற் சிறந்த மணிமேகலை, அறவணடிகள், வாரணாசி அந்தணர்கள், பசுவின் மகன், பசிப்பிணி தீர்க்கும் அட்சய… (READ MORE)

பொரி கடலை

‘பீஸ்ட்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தனது முந்தைய தாக்குதல் ஒன்றின் தொடர்பில் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவரிடம் போகும் சகல வித்தைகளும் தெரிந்த அசகாயசூர ‘ரா’ உளவாளி ஒருவன் காதல் தொடர்பினால் நகரின் வணிக வளாகம் ஒன்றிற்குள் நுழைந்த வேளையில், மக்கள் நிறைந்த அந்த வணிக வளாகத்தைவல்லமை கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினால், நம் உளவாளி தீவிரவாதிகளுக்கே தீவிரவாதியாக எழுந்து… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

wp-16493315866315944067076977724616.jpg

செக்யூரிட்டி செக்கின்

மணக்குடி போகும் போதெல்லாம் இது நடக்கும். வீட்டின் வெளிச்சுவரையொட்டிய படியே செல்லும் ஒன்றரையடி  நீள் சிமெண்ட் மேடையில் செருப்பை அழகாக கழற்றி வைத்து விட்டு உள்ளே போவோம். மாலை வெளியில் வந்தால் செருப்பு இருக்காது. வாசல் தெளித்து இருபது புள்ளி அரிசி மாவு கோலம் போடும் அம்மா, அப்படியே நீண்ட சிமெண்ட் மேடையிலும் நீர் விட்டடித்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

wp-16492538636646380278259803578736.jpg

காவல்துறை நண்பன்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பார்கள், காவல்துறையில் நண்பர்களும் உண்டு என் நண்பர்களில் சிலர் காவல்துறையிலும் உண்டு. திரைப்படங்களில் மிகையாக காட்டப்படுவது போல உண்மை உலகில் காவலர்கள் எப்போதும் இல்லை என்பது நமக்கே தெரியும். ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்ரா… பாக்கறியா… பாக்கறியா?’ என்று கத்துகிற காவலர் நிசத்தில் இருக்க மாட்டார்தான்.‘மூன்று முகம் – அலெக்ஸ்பாண்டியன்’ ‘விக்ரமார்குடு… (READ MORE)

பொரி கடலை

,

காவல்துறை நண்பன்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பார்கள், காவல்துறையில் நண்பர்களும் உண்டு என் நண்பர்களில் சிலர் காவல்துறையிலும் உண்டு. திரைப்படங்களில் மிகையாக காட்டப்படுவது போல உண்மை உலகில் காவலர்கள் எப்போதும் இல்லை என்பது நமக்கே தெரியும். ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்ரா… பாக்கறியா… பாக்கறியா?’ என்று கத்துகிற காவலர் நிசத்தில் இருக்க மாட்டார்தான்.‘மூன்று முகம் – அலெக்ஸ்பாண்டியன்’ ‘விக்ரமார்குடு… (READ MORE)

பொரி கடலை

,

‘மன்மதலீலை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

பெண்கள், பெண்கள் என எதிர்பாலினத்தின் மீது ஆசை கொண்டு திரியும் அதே நேரம் வாழ்வில் கனவுகளோடு வளரும் ஒரு பருவ வயது இளைஞனின் வாழ்வில் பத்தாண்டுகளில் நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து பின்னப்பட்ட களத்தை எடுத்துக் கொண்டு முதல் பாதியில் ‘அடல்ட்ஸ் ஒன்லி’யை தடவி, இரண்டாம் பாதியில் த்ரில்லர் மிளகாய் பொடி தூவி வெங்கட் பிரபு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

wp-1648475879805.jpg

ஆர் ஆர் ஆர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

1920களில் பிரித்தானிய ஆதிக்க இந்தியாவில், தன் லட்சியத்தை அடைவதற்காக காடு மலை ஆறு என பலதையும் கடந்து பயணித்து வந்த ஒரு மலைவாழ் பழங்குடி இன மனிதனும்,  தன் குடும்பமே சிதைந்து போய் விட ஊர் மக்களுக்கு வாக்குக் கொடுத்து விட்டு புறப்பட்ட தன் லட்சியத்தை அடைவதற்காக எந்த வழியிலும் பயணிக்கலாமென செயல்கள் புரியும் கோதாவரி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , ,

wp-1648197244922.jpg

உயரம் என்பது எதை வைத்து?

உயரம் என்பது எதை வைத்து? மனித உடலின் அளவை வைத்தா, உள்ளிருக்கும் உள்ளத்தின் அளவை வைத்தா,  மனிதன் ஆற்றும் அளவை வைத்தா? உடல் உயரம் கொண்டவர்கள் உயர்ந்தவர்களாக ஆகாமல் போகலாம், உயர்ந்த உன்னத மனிதர்கள் உடலளவில் உயரமாக இல்லாமலும் போகலாம்.  ஓடும் உசேன் போல்ட்டின் ஓட்ட வேகத்திற்கும் உடல் உயரத்திற்கும் சம்மந்தம் இருக்கலாம். கர்மவீரர் காமராஜுக்கும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

குறுந்தொகை ஆடிப்பாவை – மாலன்

🌸 இவ்வார குமுதமில் மாலனின் கட்டுரை மிக நன்று. உலகில் முதன் முதலில்கண்ணாடியை உருவாக்கியவர்கள் துருக்கியர்கள், மெருகேற்றியவர்கள் எகிப்தியர்கள், இல்லை சீனம்தான் முதலில் என்று கூகுளில் கதைகள் பல இருக்க, கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ‘குறுந்தொகை’யில் ஆலங்குடி வங்கனார் ‘ஆடிப்பாவை’யில் கண்ணாடியைப் பற்றியும் அதில் தெரியும் பிம்பத்தை உவமையாக வைத்தும் எழுதியிருக்கிறார் என்று… (READ MORE)

பொரி கடலை

, , ,

ஆம் ஆத்மியின் சின்னமோ

ஹாரி பார்ட்டரின்துடைப்பமோ பஞ்சாபில் வென்றஆம் ஆத்மியின் சின்னமோ குனிந்து நிற்கும்முள்ளம்பன்றியின் முதுகோ சீனத்துப் பெண்ணின் சிகை போல வேண்டுமென்று ஸ்ட்ரெயிட்னிங் செய்தஉள்ளூர் சிங்காரியின் காற்றில் பறக்கும் சிகையோ மருத்துவக் கல்லூரி பதிவாளரின் கையொப்பமாம்! வழுக்கைத் தலை வரப்பெற்று கையெழுத்திலாவது இருக்கட்டும் மயிரென்று வரைந்தாரோ! 樂 – பரமன் ( பொறுப்புத் துறப்பு: பகிர்வில் வந்த பதிவுக்கு… (READ MORE)

ஆ...!, கவிதை

ஆனை ஆனை அழகர் ஆனை

சிறுவர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் எழுதுவது எளிதில்லை என்பதை பல ஆண்டுகளாக ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் சிறுவர்களுக்கான சித்திரக்கதை பகுதியில் எழுதி வருவதால் அடிக்கோடிட்டு சொல்ல முடியும்.(சிறுவர்களுக்காக நாம் செய்யும் அந்தப் பகுதியை பெரியவர்களே அதிகம் ரசிக்கின்றனர் என்பது வேறு கதை) இயல்பாக வருவதை சிறுவர்களுக்கான எளிய நடையில் மாற்றிதான் நாம் எழுதுகிறோம் என்று நாமே… (READ MORE)

பொரி கடலை

வசுதேவனுக்காக நண்பன் கம்சன்!?

பர்சானபுரியின் தேவகர் தனது செல்ல மகள் தேவகியை, குலத் தொழில் மாறி நூல் கற்று அமைச்சனாகிப் போன வசுதேவனுக்குத் தந்து விடக் கூடாதென்பதற்காகவே, திமிலும் திமிறும் கொண்ட ஏறுவை மன்றிலில் அடக்குபவனே மகள் கொண்டு போவான் என்றறிவிக்க, வசுதேவனால் முடியாதிது  என்றெல்லோரும் எண்ணியிருக்கும் வேளையில் களத்தில் குதித்து காளையையடக்கி தங்கையைத் தூக்கிச் சென்றானாம் ஆளும் கம்சன்… (READ MORE)

பொரி கடலை

, ,

25ஆவது அன்னதானம்: மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 இன்று மிருகசீரிடம் (மாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை10.03.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1646903254254346934298526907611.jpg

ஆண்ட்ராய்டு பாட்டி

‘அத்தை! இது என்ன சட்னி!?’ என் மனைவியின் அம்மாவான, என் அப்பாவை அண்ணன் என்று விளித்த அத்தை, பைபாஸ் சர்ஜரி, கல்லீரல் செயலிழப்பு காரணங்களால் மாமா இறந்ததிலிருந்து எங்களோடுதான் வசிக்கிறார். அத்தைக்கு வயது 75. என் வீட்டில் அதிகாலைப்பறவைகள் என்றால் நானும் அத்தையும்தான். மற்றவர்கள் எழும் முன்னே எழுந்து ‘மெட்ராஸ் மில்க் ஏ2 மில்க்’ பாட்டிலை… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

மனோஜ்பவனில்

டிரைவருக்கு காலையுணவு, நமக்கு காப்பி!’ என்ற முடிவோடு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் பாலம் கடந்து நிறுத்தி மனோஜ் பவனில் நுழைந்து, ஓர் இருக்கையில் ( ஓரிக்கை அல்ல, அது பெருமாள் இருக்கும் இடம்) அமர்ந்து, ‘சுடு தண்ணீர், காப்பி… பில்லு அந்த டேபிள்ள சாப்பிடறாரு பாருங்க அவர்ட்ட!’ என்று டிரைவரை காட்டி ஆர்டர் தருகிறேன்…. (READ MORE)

MALARCHI

, ,

பச்சையப்பாஸ் சில்க்ஸ் திருவண்ணாமலை

🌸 ‘திருவண்ணாமலை வகுப்புக்கு வர்றீங்க! அப்படியே நம்ம புது ஷோருமூக்கு வரணும்!’ என்று நம் மலர்ச்சி மாணவரின் அழைப்பின் பேரில், திருவண்ணாமலை ‘பச்சையப்பா சில்க்ஸ்’க்கு போயிருந்தேன். (அவர்கள் விரும்பியபடி அங்கிருந்த பிள்ளையாருக்கு தீபம் காட்டினேன். நான் விரும்பிய படி கண் மூடி பிரார்தனை செய்தேன்) உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அசந்து போனேன். ஒரு திருமணத்திற்கு என்று… (READ MORE)

பொரி கடலை

மீன் கத்தரிக்கா

சுத்த சைவம்தான்,சாப்பிட உட்கார்ந்தேன்வதக்கித் தாளித்த கத்தரிக்காயை தட்டிலிருந்து எடுத்துக் கடிக்கையில்மீன் வறுவல் வாசனை வருகிறது… அடுத்த மனை கீழ்வீட்டில் வறுக்கிறார்கள்! – பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, ,

இயக்குநர் வசந்த் : புத்தகக் கண்காட்சியில்

இயக்குநர் சிகரம் பாலசந்தர் சாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்பதைத் தாண்டி, ‘எஸ்பிபியை இப்படிப் பார்க்கிறாரே இவர்!’ என்று வியக்க வைத்து, அதை நமக்கும் கடத்தி எஸ்பிபி மீதான நம் பார்வையின் அடர்த்தியையும் கூட்டிவிட்டுப் போன திரைப்பட இயக்குநர் வசந்த் அவர்களோடு, நேற்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  ஜீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கொண்ட அளவளாவுதல் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

ஆசிரியனாக அகமகிழ்கிறேன்

‘நிறைய பண்ணிப் பாத்துட்டேன். எதையும் சரியா பண்ண முடியலை. மனசு கஷ்டமா இருக்கு. எதில போறதுன்னே வழி தெரியல! எனக்கு எது வரும்ன்னே எனக்குப் புரியல!’ சில ஆண்டுகளுக்கு முன்பு மனக்குமுறலோடும் கண்ணீரோடும் மாணவனாக வந்து நின்று நம்மிடம் செய்யப்பட்ட பகிர்வு இது.  சில சந்திப்புகள், சில முடிவுகள், புதிய பாதை தீர்மானிப்பு,  புதிய இலக்குகள்,… (READ MORE)

MALARCHI, Malarchi Maanavargal, பொரி கடலை

, , , ,

wp-16452038669085980429362768020932.jpg

என்னது திருக்கோஷ்டியூரா…!

பிள்ளையார்பட்டி கோவிலிலிருந்து வெளியே வந்து காரிலேறி ‘சிவனையும் பெருமாளையும் வணங்குவோர்க்கேயுள்ள திமிர்…’ என்ற முந்தைய பதிவை செல்லிடப் பேசியில் மூழ்கி எழுதி பதிவிட்டுவிட்டு நிமிர்கையில், ‘இறங்குங்க சார்!’ என்கிறார்கள். ‘இது என்ன ஊரு?’ ‘திருக்கோஷ்டியூர்?’ ‘அடடா! ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் கத்துகிட்டாரே, அதை மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்தாரே… அந்த ஊரா?’ ‘ஆமாம்!’ ‘ரெண்டு நாள் முன்னால… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1645200769336.jpg

வணக்கம் பிள்ளையார்பட்டி

சிவனை பெருமாளை வணங்குவோர்க்கேயுள்ள திமிர் நமக்கும் கொஞ்சம் இருக்கிறது. ‘பிள்ளையாரைப் போய் பாக்கனுமா? சரி, நமக்காக ஸ்பெஷல் ஏற்பாடுகள் பன்றாங்க, போயிடுவோம்!’ என்றுதான் பிள்ளையார்பட்டி போனேன். அற்புதமான கட்டமைப்பு உள்ள கோவில். நேராக பிள்ளையார் அருகிலேயே கொண்டு போய் உட்கார வைத்தார்கள். விஐபி தரிசன ஏற்பாடுகள்! மாலை போட்டார்கள், பெரிய ஃப்ரேம் போட்ட படம் தந்தார்கள்…. (READ MORE)

பொரி கடலை

, , ,

21: புவனகிரி பள்ளி: நிறைவுபுவனகிரி பள்ளி: நிறைவு

*21* *புவனகிரி பள்ளி: நிறைவு* திரவியம் தேட திரைகடல் ஓடி, அனுபவங்களோடு திரும்ப வந்து ஊரெல்லாம் சுற்றி,முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் திடீரென்று உள்ளெழுந்த ஓர் உந்துதலால் புவனகிரிப் பள்ளியில் உடன் படித்த மாணவர்களைத் தேட, ஜெகன், சங்கர், பாலு, ராஜாராமன் என நால்வர் அகப்பட, வாட்ஸ்ஆப் குழுவொன்றைத் தொடங்கி வைத்தோம். ‘பள்ளி நினைவுகளை… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

,

20:‘புவனகிரி பள்ளி : புவனகிரி டுடோரியல் சென்டர்கள்’

*’20’* *’புவனகிரி பள்ளி:’* ( சென்ற பதிவில் ஜனார்த்தனன் சார் பற்றிப் படித்து விட்டு அவர் நினைவுகளை சிறிதும் பெரிதுமாக பலர் எழுதியிருந்தனர். ‘தறி வாத்தியார் ஒருவரல்ல, இருவர்!’ என்று தகவல்களும் அனுப்பியிருந்தனர்.  புவனகிரி பள்ளி பற்றிய தொடர் பதிவு ஓர் அனுபவமாக உள்ளது என்று பலரும் மின்னஞ்சல் செய்திருந்தனர். தொடர்ந்து வாசிப்பதற்கும், வாசித்து வந்த… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

,

கப்பக்காரத் தாத்தா : வெள்ளை முயல்

‘முயல் ரத்தம் குடிச்சிட்டு மைலுக்கு மைலு ஓடனும்!’ கப்பக்காரத்தா சொல்லிதான் இதை முதன்முதலில் கேட்டேன். கப்பக்கார தாத்தா முயல் வளர்த்தார். பள்ளியிலும் கதைகளிலும் அறிந்திருந்த முயலை வாழ்வில் முதன் முறையாக சிறுவனாக பார்த்தது அவர் வீட்டில்தான். கப்பக்காரத் தாத்தா என்று என் வயது சிறுவர்களும், ‘கப்பக்காரர்’ என்று மொத்த மணக்குடியும் அழைத்த அந்த தாத்தாவின் உண்மை… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

சார்பதிவாளர் அலுவலகங்கள் அசத்தல்

குடும்ப சொத்து ஒன்றை முறைப்படி எங்களுக்குள் பதிவு செய்து கொள்வதற்காக புவனகிரி சார் பதிவாளர் அலுவலகம் வந்தேன். வெளியில் பத்திரம் விற்பனையாளர், பத்திரம் எழுதித் தருபவர் என அந்த நிலை பணிகளும் பணியாளர்களும் அப்படியேதான் உள்ளனர். ஆனால், அரசின் பதிவாளர் அலுவலகம் அசத்துகிறது. ‘இந்த நேரத்திலிருந்து இந்த நேரம் உங்கள் வேலை, அப்போது வந்தால் போதும்!’… (READ MORE)

பொரி கடலை

,

19: புவனகிரி – பள்ளி : ஆசிரியர் நினைவுகள்’புவனகிரி – பள்ளி : அடிக்கும் வாத்தியார்’

19 புவனகிரி – பள்ளி : ஆசிரியர் நினைவுகள்’ 🌸 புவனகிரி பள்ளியில் அடிக்கும் வாத்தியார் எவரையாவது நினைவில் வைத்திருக்கிறீர்களா? அடி வாங்கியிருக்கிறீர்களா அல்லது எவனாவது அடி வாங்குவதை பார்த்து ஒடுங்கி நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறீர்களா? ‘கொசகொச’வென்று பேசிக் கொண்டிருக்கும் வகுப்பில், ஒருவனுக்கு ‘பொளிச்’சென்று அடி விழுந்தால், மொத்த வகுப்பும் சப்தநாடிகளும் ஒடுங்கி முதுகின் முள்ளந்தண்டு ‘சர்க்’கென்று… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

‘வாட் ஈஸ் எக்ஸ்டஸி?’

‘வாட் ஈஸ் எக்ஸ்டஸி?’ பல்வேறு பணிகளுக்கிடையே, எதை எழுவது எதைப்பற்றி எழுதுவது என்று தெரியாத ஆனால் பத்திரிக்கைக்கு முக்கிய முகப்புக் கட்டுரை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கெடு நிலையில், உட்கார்ந்து ஓர் அலைவரிசையில் ஏதோவொன்று பிடிபட்டு உள்ளுக்குள் அது வடிவமெடுக்க அதை எழுதத்தொடங்கி சுற்றியுள்ள உலகையே மறந்து லயித்து முடிக்கும் போது, மொத்தமாக ஒரு நல்… (READ MORE)

பொரி கடலை

,

18 : ‘புவனகிரி பள்ளி : தறி கூடம்’

*18* *’புவனகிரி பள்ளி : தறி கூடம்’* புவனகிரி பள்ளி அரசுப் பள்ளிதான், ஆனால் அதில் இங்கிலீஷ் மீடியம் இருந்தது தெரியுமா உங்களுக்கு? … (சென்ற பதிவைப் படித்து விட்டு ‘பன்னு ராமலிங்கம் கூரை மேல உட்கார்ந்தது, இந்த ரெண்டு பேரு இறந்து போனது பத்திதான் அப்ப மொத்த புவனகிரியும் பேசிச்சு பரமன்!’ என்று இ… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , ,

‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’17: ‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’

17 ‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’  புவனகிரியில் ஓடுவது சுவேத நதி என்கிறார்களே? உண்மையா?…..  புவனகிரி பள்ளியில் படித்த ஜெயக்குமாரை தெரியுமா உங்களுக்கு? மொத்த புவனகிரிக்கும் தெரியும் அவனை. நான் ஒரேயொரு முறை புவனகிரி பள்ளியில் அவனை பார்த்தாக நினைவு. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்து… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , ,

16: புவனகிரி பள்ளி: புவனகிரியின் கத்தி வெட்டு ‘பெராக்கு’ வைபவம் புவனகிரி பள்ளி: புவனகிரியின் கத்தி வெட்டு ‘பெராக்கு’ வைபவம் ( ‘பரமன், புவனகிரியில் ஏதோ சமீபத்திய அதிசயம் என்று ஒரு பதிவில் குறிப்பிட்டு விட்டு அதை அப்படியே விட்டுவிட்டீர்களே?’ சரி, இந்த பதிவில் எழுதி விடுவோம்!) … சுமாராக 150 ஆண்டுகள் கொண்ட புவனகிரி… (READ MORE)

Uncategorized, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , ,

15: புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார்புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார்

15 புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார் (சென்ற பதிவில் நாராயண ஐயர் ஹோட்டல் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு ‘கணேஷ் பவன்’ ‘துர்கா பவன்’ என வேறு வேறு காலகட்டங்களில் அவ்வுணவகம் கொண்டிருந்த வேறு பெயர்களையும் இயங்கிய வேறு வேறு இடங்களையும் குறிப்பிட்டு நெகிழ்ந்து… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , ,

ஆசிரியரிடம் அடி வாங்கினேன் நேற்று

முப்பத்தியேழு ஆண்டுகள் கழித்து உங்கள் தமிழாசிரியரை ஒரு மேடையில் சந்திக்கிறீர்கள். அங்கேயே மேடையிலேயே கையை நீட்டச் சொல்லி அடிக்கிறார். எப்படியிருக்கும் உங்களுக்கு. எனக்கு பெரும் மகிழ்ச்சி! மேடையிலேயே கையை நீட்டச் சொல்லி ஓங்கி அடிக்கிறார். வலித்து இழுத்து விடுவேன் என்று நினைத்து அடித்தவருக்கு அதிர்ச்சி, ‘வலிக்கலியா உனக்கு?’ என்று மறுபடியும் அடிக்கிறார். இத்தனையாண்டுகள் கழித்து நமக்கு… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

14 புவனகிரி பள்ளி

*14* *புவனகிரி பள்ளி* புவனகிரி ‘நாராயண ஐயர் ஹோட்டல்’ தெரியுமா, உங்களுக்கு? …. (விளையாட்டாக புவனகிரி பள்ளியில் என்னோடு படித்த வகுப்புத் தோழர்கள் கொண்ட கட்செவியஞ்சல் குழுவிற்காக நாம் எழுதத் தொடங்கிய இந்த ‘புவனகிரி பள்ளி’ தொடர் வெளியிலும் பகிரப்பட்டு பல வகையான பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறது. அதில் மிக முக்கியமானவை இரண்டு. ஒன்று – தமிழாசிரியர்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

wp-16410883621398515048242616711124.jpg

சுடச்சுட வெண்ணெய்

அதிகாலை 05.50க்கு அருகில் வந்து ‘சிவா, ஆ… காட்டு! வாயத் தொற!’ என்று ஊட்ட வருகிறார் அம்மா. சுடச்சுட இப்போதுதான் கடைந்த வெண்ணெய்! லேசான புளிப்போடு வாயிலிருந்து, தொண்டையில் வழிந்து நெஞ்சு வரை வழிக்கிக் கொண்டே சூடாய் இறங்குகிறது வெண்ணெய்.  தயிர் நிறைந்த பெரிய பானையை வைக்கோல் பிரி சிம்மாடில் வைத்து, தரையில் தண்டாசனம் இட்ட… (READ MORE)

Manakkudi Manithargal

, ,

wp-1640793438085.jpg

‘மிமி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

பாலிவுட் சினிமா கனவுகளோடும் உற்சாகத் துள்ளலோடும் இளமைத் திமிரோடும், ராஜஸ்தானின் உள்ளூர் அரங்குகளில் நடனமாடிக்கொண்டிருக்கும் ஓர் அழகிய மங்கையின் வாழ்வில் ஒரு டாக்ஸி ஓட்டுநரின் வழியே ஓர் அமெரிக்க தம்பதிகள் வருகின்றனர். முதலில் மிரண்டு எதிர்த்த இளம்பெண் பின்பு பெரிய பேரத்திற்கு மடிகிறாள், அமெரிக்க தம்பதியினரின் குழந்தைக்கு தன் வயிற்றில் இடங்கொடுத்து வளர்க்க ஒன்பது மாத… (READ MORE)

Manakkudi Talkies

13: புவனகிரி பள்ளி  – வேதம் புதிது படமும் தமிழ்மணி டீச்சரும்

*13* ( சென்ற பதிவைப் பார்த்துவிட்டு ‘யார் அந்த சேரன்?’ என்று பெங்களூரில் இருக்கும் ஸ்ரீதர் திரிசங்கு உட்பட பலரும் கேட்டிருந்தனர். ‘சேரன்’ என்பது மாற்றப்பட்ட பெயர் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.  சென்ற வாரம் புவனகிரிக்கு வந்திருந்த போது புவனகிரி பள்ளி மாணவர்கள் பலரை வெள்ளியம்பலம் சுவாமி மடம் கோவிலில் வரவழைத்து ஒரேயிடத்தில் நிறுத்தி இன்ப… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , ,

வாழப்பாடி ஆசிரியர்: தட்றா கைய அவருக்கு!

எவ்வளவு படித்தாலும் எழுதினாலும்  பேச்சில் பயன்பாட்டில் இல்லாத மொழியில் சரளம் வராது. தமிழக மாணவர்களைப் பொறுத்த வரையில் ஆங்கிலத்தில் தவிப்பது இதனால்தான். உரையாடலை கொண்டு வந்து விட்டால் பழகப் பழக மொழி வசமாகும்.  பேசக் கற்றால் எழுதுவதும் படிப்பதும் இன்னும் எளிதாகும் என்னும் வழியை அடிப்படையாக வைத்து, சேலம் வாழப்பாடி அரசுப் பள்ளியில் சிவக்குமார் என்னும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

மு பச்சைமுத்து : 2ஆம் குருபூசை

🌸 என் தந்தை மு. பச்சைமுத்து அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூசை (நினைவு நாள் / அவர் வீட்டிற்கு வரும் நாள்) தினம், திருப்புகழ் இசை அஞ்சலி, கோ பூசை, ஓதுவார்களின் திருமுறைகள் முற்றோதல், அவர் பூசை செய்து வழிபட்ட வேலுக்கு நீராட்டு பூசனைகள், அமுது படைத்தல், அழைத்து விருந்தினர்களுக்கு அன்னம் படைத்தல் என அவர்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1639876840741.jpg

‘அப்பா….!  வாழ்த்துங்கள் அப்பா!’

எவ்வளவு இருந்திருந்தாலும் ‘இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம்!’ என்று நினைப்பதுதானே மனித மனசு! இதுதான் அந்தக் கணம் இப்படியொரு கணம் வாய்க்காது இனி என்று முக்கிய கணங்களில் எவரேனும் சொல்லியிருந்தால் இன்னும் வாழ்ந்திருப்பேனே என எவ்வளவு வாழ்ந்த போதும் வழுக்கி விழுகிறது மனம் வாழ்வதும், வாழ்ந்த கணங்களை எண்ணி வாழ்வதும் தொடர்ந்து மேலே வாழ்வதும்தானே வாழ்க்கை…. (READ MORE)

கவிதை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

12 : ‘புவனகிரி பள்ளி : இவர்கள் இருந்திருப்பார்கள் உங்கள் வகுப்பில்!’

12 ‘புவனகிரி பள்ளி : இவர்கள் இருந்திருப்பார்கள் உங்கள் வகுப்பில்!’  ( சென்ற பதிவில் ‘வாரியார் – கி வீரமணி – புவனகிரி பள்ளி’பற்றிப் படித்துவிட்டு, ‘புவனகிரி இறை பணி மன்றத்தின் நோட்டீஸ்களை எங்கள் ஐயப்பன் அச்சகத்தில்தான் நாங்கள் அடித்துத் தருவோம். உங்கள் தொடர் பல பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது. தொடரட்டும்!’… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , , ,

11. ‘புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்’புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்

*11* *’புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்* (புவனகிரி பள்ளி பற்றிய நம் பதிவுகளை படித்து விட்டு துபாயிலிருந்து கண்ணன் தகவல் அனுப்பியிருந்தார், ‘ரஜினி புவனகிரி வந்த போது, அந்த மேடையில அவருக்குப் பின்னாடி நின்னது நானும் புவனகிரி மெடிக்கல்ஸ் கணேஷும். நாங்க புவனகிரி ரஜினி ரசிகர் மன்றம் நடத்துனவங்க’ என்று. (நாளைக்கு ரஜினி… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புவனகிரி பள்ளி : புவனகிரிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி் வந்த கதை

*10* *புவனகிரி பள்ளி : புவனகிரி வைணவ வரலாற்றில் உள்ளது* வைணவத்தின் பிரிவான மாத்வத்தில் புவனகிரி ஒரு புன்னிய பூமி என்று போற்றப்படுகிறது தெரியுமா? புவனகிரி பள்ளியில் ‘கடவுளை மற, மனிதனை நினை!  அழும் குழந்தைக்குப் பால் இல்லை, பாழுங்கல்லுக்கு பாலா?’ என திராவிடர் கழக பற்றாளராக தீவிர நாத்திகம் பேசிய ஆசிரியர் ஒருவர் இருந்தார்…. (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , , ,

மு பச்சைமுத்து – 2ஆம் குருபூசை

🌸 திருச்சிற்றம்பலம் 🌸 நிகழும் பிலவ ஆண்டு மார்கழி திங்கள் நான்காம் தேதி ஞாயிற்று கிழமை (19.12.2021) மிருகசீரிடம் வின்மீன் கூடிய தினத்தில் எங்கள் குருநாதர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அடிப்பொடி வில்லிசை வித்தகர் திரு. மு. பச்சைமுத்து ஆசிரியர் அவர்களின் 2வது குருபூசை விழா எங்களது இல்லத்தில் காலை கோபூசை, ஆன்மார்த்த பூசை… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1638291489871.jpg

‘மாநாடு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

ஓர் அலப்பரை அரசியல்வாதி உட்பட பயணிகளை ஏற்றிக் கொண்டு ஓடுதளத்தில் புறப்பாட்டிற்குத் தயாராக இருக்கும் கோவை விமானத்தில் கடைசியாக ஓடி வந்து அப்துல் காலிக் ஏறியதும் புறப்படும் அந்த விமானத்தின் பயணம் முடிவேயடையாததாக, திரும்பத் திரும்ப வரும் கால வளையத்துக்குள் சிக்கிக் கொண்டால் என்னவாகும், அப்படியொரு பிரச்சினையை நாயகன் எப்படி எதிர் கொண்டு வெளிவருகிறான் என்னும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

ஆர்யாஸ் காஃபி

மாயவரம் காளியாகுடியைப் போலவே, வேலூர் க்ரீன் சர்க்கிள் ‘ஆர்யாஸ்’ காஃபியும் தனி வகையே! தேசிய நெடுஞ்சாலை வழியே வேலூரை கடக்கும் போதெல்லாம் மேம்பாலத்தில் ஏறாமல் இடதில் இறங்கி க்ரீன் சர்க்கிளை சுற்றி ஆர்யாஸில் நுழைவது ஒரு வழக்கம். தாயம் வகுப்புகள், வேலூர் – குடியாத்தம் – திருப்பத்தூர் மாணவர்கள் பலரின் முகங்கள் எல்லாம் வந்து போகும்…. (READ MORE)

பொரி கடலை

9. புவனகிரி பள்ளி – ஸ்கூல் பெல்:

*9* *புவனகிரி பள்ளி – ஸ்கூல் பெல்:* ( சென்ற பதிவை படித்து விட்டு துபாயிலிருந்து கண்ணன் (புவனகிரி நாராயண ஐயர் ஹோட்டல்) தனது பள்ளி நாட்களை திரும்ப வாழ்ந்ததாகவும் அவரது நண்பரகள் பதிவை படித்து மகிழ்ந்ததாகவும் குரல் பதிவு அனுப்பியிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை தலைவர் முனைவர் சரவணன் மகிழ்ந்து எழுதியிருந்தார். … (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புவனகிரி – பள்ளி : ப்ரேயர் திடல்

8 புவனகிரி – பள்ளி : ப்ரேயர் திடல்  (புவனகிரி பள்ளியின் இதயமான ‘க்ரவுண்ட்’ பற்றிய நம் முந்தைய பதிவைப் படித்து விட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைப் பேராசிரியரும் முனைவருமான சரவணன் (புவனகிரி பள்ளி மாணவர்) தமது வருத்தத்தைப் பகிர்ந்திருந்தார். முந்தைய பதிவுகளில் ஒன்றான ‘அசோக மரமும் பச்சைப் பைப்பும்’ பதிவைப் படித்துவிட்டு,… (READ MORE)

Uncategorized, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

சத்தம்

அருகிலுள்ள ஏதோவொரு வீட்டிலிருத்து முகந்தெரியா மனிதரொருவர் ‘ஆ…’வென்று செய்யும் யோகா உச்சாடனம் பக்கத்து மனை கிணற்றடியில்வேலைக்கார பாட்டியம்மா பாத்திரம் கழுவையில் எழும்‘களங் ப்ளங் டங்’ குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே பக்கத்து வீட்டு ஓய்வுபெற்ற மருத்துவர் சொல்லும், ‘ஆங்… நான் பாத்துக்கறேன். போங்க!’ பலகணிக்கு வெளியே சோறு வைக்கப்பட்டதும் உற்சாகத்தில் தன் இனத்தை அழைக்க காகம்… (READ MORE)

ஆ...!, கவிதை

22வது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 இன்று மிருகசீரிடம் (கார்த்திகை மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை21.11.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

மைக்ரோப்ராஸர் ட்ராஃபிக் சிக்னல் – ஏவிசிசி

இன்று காலை அண்ணாநகர் ரவுண்டானா சிக்னலில் நின்ற போது, வண்டிகளில் இருக்கும் உலோகங்களை வைத்து எடையைக் கணக்கிட்டு எந்தப் பக்கம் நிறைய வண்டிகள் எனக் கணக்கிடும், கல்லூரியில் படித்த ‘மைக்ரோப்ராசர் கன்ட்ரோல்டு எலக்ரானிக் வெய்யிங் ட்ராஃபிக் சிக்னல்’ நினைவுக்கு வர, மனதில் இடிசி லேப், அந்த வி ஐ மைக்ரோ மைக்ப்ராசர் கிட் எல்லாம் நினைவுக்கு… (READ MORE)

AVCCP

wp-1637256468265.jpg

‘அண்ணாத்த’ : திரை விமரசனம்: பரமன் பச்சைமுத்து

முன்குறிப்பு 1: தொடர்ந்த வெளியூர்ப் பயணங்கள், சென்னைப் பெருமழை என பல காரணங்களால் திரைப்படங்கள் பார்ப்பது பின் வரிசைக்குப் போய் ‘அண்ணாத்த’ ‘ஜெய் பீம்’ இரண்டும் பார்க்க முடியாமல் போனது. இப்போதுதான் ‘அண்ணாத்த’ படத்தை பார்க்க முடிந்தது. இத்தனை நாளுக்குப் பிறகு இனி திரைவிமர்சனம் எதற்கு என்றிருந்த என்னிடம் தொடர்ந்து ‘உங்கள் கருத்து வேண்டும்’ என்று… (READ MORE)

Manakkudi Talkies

,

92 பேட்ச் சரவணக்குமார்

🌸 முதல் முறை சந்திக்கும் போதே பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்த உணர்வு வந்துவிடுகிறது சிலரை சந்திக்கும் போது.ஏவிசிசிபி 92 பேட்ச்சின் சரவணக்குமார் உடன் ஆன சந்திப்பு அப்படியே இருந்தது. வளைகுடாவிலிருந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்தவர், மலர்ச்சி அலுவலகம் வந்து நம்மை சந்தித்து இன்ப அதிர்ச்சி தந்தார். ஏவிசி பாலிடெக்னிக்கில் படிக்கும் போது குத்தாலத்திலிருந்து… (READ MORE)

AVCCP

வெள்ள நீர் வடிகால் – தமிழக அரசின் சூப்பர் முடிவு

தமிழகம் முழுக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் முதல்வர். இதனால் சில சங்கதிகள் நடந்துள்ளன. ( ‘அவரு ஹெலிகாப்டர்ல போவல, நேரில் போனாரு பாரு!’ என்றும், ‘அந்தத்  தொகுதியில் இன்னும் தண்ணி நிக்குது, போட்லதான் போகனும்!’ என்றும் அரசியல் நிலை சார்பு எதிர்ப்பு கொண்டோர்கள் பேசுகிறார்கள், பேசட்டும். நமக்கு வேண்டியதை மட்டும் நாம்… (READ MORE)

Politics

7. புவனகிரி பள்ளி – புவனகிரி பள்ளியின் இதயம்:புவனகிரி பள்ளி – புவனகிரி பள்ளியின் இதயம்:

7 புவனகிரி பள்ளி – புவனகிரி பள்ளியின் இதயம்: புவனகிரி பள்ளியின் இதயம் எது என்று பழைய மாணவர்களைக் கேட்டால், இதையே சொல்வார்கள்! ‘எதை?’ என்று பார்ப்பதற்கு முன் பழைய மாணவர்கள் என்று நாம் குறிப்பிடும் வகையினர் எவர் என்பதை சொல்லியாக வேண்டும். … புவனகிரி கடைத்தெருவில் ஜெயா காப்பிக்கு எதிர்ப்புறம் ஆசியா சைக்கிள் மார்ட்டுக்கு… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

நீலம் – நாவல் வடிவில் பாகவதம்

அங்கொன்றும் இங்கொன்றுமாக துண்டு துண்டாக படித்தும் செவி வழி கதைகள் கேட்டதுமன்றி பாகவதத்தை முழுதுமாக இதுவரை வாசித்தில்லை நான். பாகவதத்தை உள்வாங்கி நாவல் வடிவில் ஜெயமோகன் எழுதியிருக்கும் நூல் நண்பர் மதுவின் பரிசாக நம் வாசல் வந்து சேர, பாகவதம் விரிகிறது என் முன்னே என்னுள்ளே. சில அத்தியாயங்கள் படித்ததுமே வியப்பில் உறைந்து கீழ்வருவனவற்றை சொல்கிறேன்:… (READ MORE)

Books Review, பொரி கடலை

சென்னை – நூர் மேலாண்மை

பொன்னையன், இளங்கோவன்! கேள்விகளுக்கு நன்றி. எனக்கு எந்த கட்சியையும் சார்ந்திருக்கவோ எதிர்த்து நிற்கவோ அவசியம் ஏற்படவில்லை. சிவன் அதை எனக்கு ஏற்படுத்த மாட்டான் என்று நம்புகிறேன். நல்லதென்றால் எவராக எந்த கட்சியாக இருந்தாலும் பாராட்டுவேன். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதிலாக நான் எழுதும் இந்தப் பதிவும் அப்படியே. கட்சிகள் தாண்டி அரசியல் இல்லாமல் கொஞ்சம் பேசுவோம்…. (READ MORE)

Uncategorized

சென்னை – ReEngineering

இப்போது ஆட்சிக்கு வந்த இந்த அரசுக்கு அவகாசம் தேவை என்பதை உணர்வோம். சென்னையில் 16 நீர் வழித்தடங்கள் உள்ளன, அவற்றை முறையாக தூர்வாரவில்லை, ஒவ்வோர் ஆண்டும் 500 கோடி அதற்காக ஒதுக்கப் படுகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். இவர்கள் அவர்களை கை காட்டுகிறார்கள். பதிலுக்கு ‘மத்திய அரசு தந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இவ்வளவு கோடி… (READ MORE)

Politics

6. புவனகிரி பள்ளி – அசோகமரமும் பச்சை பைப்பும்புவனகிரி பள்ளி – அசோகமரமும் பச்சை பைப்பும்

…. சென்ற பதிவில் புவனகிரியைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொன்னதை விட, என்சிசி வாத்தியார் நடராஜன் பற்றி பின்னூட்டம் அனுப்பியவர்களே அதிகம். சிலர் சரியான விடையை எழுதியிருந்தார்கள்.  ‘பள்ளிக்கு வடமேற்கே’ என்று சொன்ன பதில் தவறானது. வடமேற்கே இருந்தது புதர்கள் அடர்ந்த கருவக்காடு. (இன்று அதுவும் இல்லை. அழிக்கப்பட்டுவிட்டது) பள்ளியின் வடகிழக்கே இருந்தது வரலாற்றில் இடம்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , , ,

புவனகிரி பள்ளி – என்சிசி வாத்தியார்

*5* *புவனகிரி – பள்ளி* ( சென்ற பதிவில் புவனகிரி பள்ளியின் டிஜே எனப்படும் ஜெயராமன் ஐயா பற்றி எழுதியிருந்ததை படித்துவிட்டு மகிழ்ந்து அமெரிக்காவிலிருந்து அவரது மகன் ஒளி, குரல் பதிவொன்றை அனுப்பியிருந்தார். அந்தப் பதிவை ஜெயராமன் ஐயாவிற்கு வாசித்துக் காட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். கூடுதல் மகிழ்ச்சி! வாழ்க! ) ‘புவனகிரியின் பெயர் வரலாற்றில் இருந்தது  தெரியுமா?’… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

எப்படி நடக்கிறது இது

என்ன சொல்வது, எப்படி சொல்வது இதை! ஓர் இடத்தில் ஒருவருக்கு உயிர் போய்க்கொண்டிருக்கும் தருணத்தில், அது பற்றி எதுவுமே தெரியாத வேறொரு ஊரில் இருப்பவனுக்கு அவரது நினைப்பே தொடர்ந்து வருமா!? மகனை மகளை கொண்டாடுவதை விட இன்னும் அதிகமாய் பேரன் பேத்திகளை கொண்டாடுவர் தாத்தாக்கள். ஒருவருக்கு எத்தனை பேரன்கள் பேத்திகள் இருப்பார்கள்! ஒன்று, இரண்டு, மூன்று,… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

தமிழ்நாடு தினம்

மெட்ராஸ் ராஜதானியிலிருந்து பிரிந்து போன கர்நாடகமும் ஆந்திரமும் நவம்பர் 1ஐ ‘கர்நாடகா டே’ ‘ஆந்திரா டே’ எனக் கொண்டாடுகிறார்கள். ‘நம்மிடமிருந்து பிரிந்து போனது இழப்பு, எப்படி அந்த நாளை நாம் கொண்டாட முடியும்?’ என்று பலகாலமாக பேசப்பட்டு வந்து கருத்துகள் மாறியுள்ளன இன்று. பழ நெடுமாறன் போன்றோர் நவம்பர் 1ஐ  ‘தமிழ்நாடு தினம்’ எனக் கொண்டாட… (READ MORE)

Politics

தாத்தாவாம்

நாம் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒன்றும் செய்யாமலிருந்தாலும் உலகம் இயங்கத்தானே செய்கிறது. அக்காவின் பையனையே இன்னும் சின்னவன் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அவனது பிள்ளைக்கு இன்று காதுகுத்தல் செய்து பொன்நகை பூட்டும் நிகழ்வு திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவிலில்.  எல்லாக் குழந்தைகளையும் போல மொட்டையடிக்க அழுதான், காது குத்தும் போது கேவினான் சிறுபிள்ளை லித்தீஸ்வரன். அக்காவின் பேரன் என்பதால்… (READ MORE)

பொரி கடலை

ஜென் நிலைக்கு முன் நிலை

‘அந்த பனாரஸ் காட்டுங்க’ ‘மேடம், இது பனாரஸ் இல்லை. கோட்டா’… ‘இதில மொத்தம் மூணுதான் இருக்கு மேடம். அதே பேட்டர்ன், டிசைன். கலர் மட்டும் வேற. இதோ ரெட், க்ரீன், ப்ளூ! மூணு இருக்கு!’ ‘ஓ! வேற கலர்ஸ் இருக்கா?’ … ‘நீங்க கேட்ட அதே புடவை, பெட்டர் மெட்டீரியல் ‘தஸ்ஸாரா’ல இருக்கு பாருங்க. இதோ!’… (READ MORE)

பொரி கடலை

, ,

நீலம் : என்ன விலை கொடுத்தால் தகும்?

சில நேரங்களில் நமக்கு தரப்படும் சிலவற்றை எதைக் கொண்டும் அளவிட முடியாது.  தாகத்தில் தவிப்பவனுக்கு தரப்படும் ஒரு குவளை நீரைப் போன்று, வேண்டிய நேரத்தில் வரும் அவை விலைமதிப்பற்றவை, என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாதவை. வாங்கி வைத்திருந்து வாசிக்காமலே இரண்டாண்டுகள் கடந்து, பிற்பாடே கையிலெடுத்த ‘வெண்முரசு’ வரிசையின் ‘முதற்கனல்’ மெல்ல மெல்ல என்னை… (READ MORE)

Books Review, பொரி கடலை

, , ,

ஜெயராமன் ஐயா : புவனகிரி பள்ளி

*4* *புவனகிரி – பள்ளி* ( புவனகிரியின் பெயர் வரலாற்றில் இருந்தது தெரியுமா?. சரி பாதியில் விட்ட ஜெயராமன் ஐயா பற்றியதை முடித்து விட்டு வருவோம் முதலில்) ஆற்றல் உள்ளிருந்தும் எதனாலோ குவியம் பெறாமல் ஏனோதானோ என்று பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருக்கும் மாணவனை, எங்கிருந்தோ வந்து சில ஆசிரியர்கள் ‘படக்’கென்று பொருத்தி திருத்தி உள்ளே… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

தமிழக அரசின் அறிவிப்பை எழுந்து நின்று பாராட்டுகிறேன்!

தமிழக அரசின் அறிவிப்பு ஒன்றை எழுந்து நின்று பாராட்டுகிறேன்! …. ஆர் ஏ புரத்தில் அடுத்தடுத்து 6 பள்ளிகள் இருக்கும் பகுதியொன்றின் முக்கிய வீதியில் இருந்த அடுக்ககம் ஒன்றில் குடியிருந்தேன். 2015ல் நிகழ்ந்த சென்னைப் பெருவெள்ளத்தின் போது நிறைய பகுதிகள் வெள்ளத்தில் மிதந்த போதும், எங்கள் வீதியிலும் அடுக்கக வளாகத்திலும் நீர் தேங்கவில்லை. மாநகராட்சியின் வெள்ள… (READ MORE)

Politics

,

அட இவர் பேசுகிறார்!

பேசும் விதத்தால் தன் பேச்சு வன்மையால் எதிரில் கேள்வி கேட்பவரை விவாதத்தில் எதிரில் இருப்பவரை சாமர்த்தியமாக நிறுத்தி ‘லெவல்’ காட்டுவது பெரியாரிய திராவிட தலைவர்களிடம் பொதுவாகவே இருக்கும் பல காலமாகவே நாம் கண்டு வரும் இயல்பு. ஆ ராசா, சுபவீரபாண்டியன் என பலரை குறிப்பிடலாம். அதிலும் என்ன கருத்துக்களை பேசினாலும் சுபவீ ‘சம்பூகன்’ சங்கதியைக் கொண்டு… (READ MORE)

Politics

இரு திரையரங்குகள் : புவனகிரி – 3

*3* *புவனகிரி – பள்ளி* போன பதிவைப் படித்து விட்டு புவனகிரி ‘ஆபிதா வீடியோ விஷன்’ பற்றி  ‘மணி ஜூவல்லர்ஸ்’ ஜெகன் உட்பட சிலர் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள்.  ‘இப்படி ஒன்று இருந்ததா?’ என்று கேட்டும் எழுதியுள்ளனர். இதற்கு பதிலாக சிறு குறிப்பு வரைய வேண்டுமானால் ஆபிதா வீடியோ விஷன் இருந்த காலத்தை முதலில் சொல்லியாக வேண்டும்…. (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புத்தர் சிரிக்கிறார்…

புத்தர் சிரிக்கிறார்,சிலுவையிலறையப்பட்ட ஏசு கிறிஸ்துவுக்கும்பௌத்தம் தந்த புத்த பகவானுக்கும்பூமாலை சூட்டி ஆயுதபூசை பொட்டிட்டதொழிலாளியின் வெள்ளந்தி மனம் கண்டு! – பரமன் பச்சைமுத்து15.10.2021 #AyuthaPoojai#Paraman

கவிதை

போற போக்கைப் பார்த்தால், பிரியங்கா வதேராவை காங்கிரஸ் தலைவராக்கிடுவாங்களோ! நடக்கறதெல்லாம் பாத்தா அப்படித்தான் தெரியுது! – மணக்குடி மண்டு 14.10.2021

Politics

புவனகிரி பள்ளி – 2

*2* *புவனகிரி பள்ளி* ( சாயப்பு வாத்தியார் பற்றிய முந்தைய பதிவு பல்வேறு குழுக்களுக்கும் பகிரப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றதாக அறிகிறோம். ‘பரமன், சாயப்பு வாத்தியார்ன்னா அந்த +2 கெமிஸ்ட்ரி வாத்தியாரா?’ என்று கேள்வி அனுப்பியிருக்கிறான் பங்காருபேட்டையிலிருந்து முன்னாள் புவனகிரி மாணவன், இந்நாள் ரயில்வே ஊழியன். பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புக்கு வேதியல் எடுத்தது, ’16 வயதினிலே’… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புலம் பெயர்ந்தோர் நலம்

பிழைப்பிற்காக வெளிநாட்டுக்குச் சென்று அங்கேயே வாழும் புலம் பெயர் தமிழர்களுக்கு என திட்டங்கள் அறிவித்து அசத்தியிருக்கிறது தமிழக அரசு! வாழ்க!  வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் தமிழ் கற்றுத்தருதல், அங்குள்ள ஆசிரியர்களை தமிழ் கற்ற ஊக்கப்படுத்துதல் என்பன மிகச் சிறப்பானவை. அதே மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் மொழித் தொடர்பு அற்றுப் போன அந்த சந்ததியினருக்கு… (READ MORE)

Politics

, ,

wp-1633974077591.jpg

டாக்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தனது திருமணத்தை உறுதி செய்ய பெண் வீட்டுக்கு வந்த ராணுவ மருத்துவரை ‘உன்னோட செட் ஆகாது போப்பா!’ என்று சொல்லி அதிர்ச்சி தரும் அந்தக் குடும்பத்தினரே கொஞ்ச நேரத்தில் அதிர்ச்சியடைந்து நிற்க, இவர்  உதவ இறங்கி ‘ஹ்யூமன் ட்ராஃப்பிக்கிங்’ எனும் சிறுமிகளைக் கடத்தி விற்கும் கும்பலின் நூல் பிடிக்கிறார். உலக அளவில் பலம் மிக்க அந்த… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , , ,

‘சாயப்பு வாத்தியார்’ என்னும் ‘பாய் வாத்தியார்’:

‘சாயப்பு வாத்தியார்’ என்னும் ‘பாய் வாத்தியார்’: புவனகிரி பள்ளியில் தினமும் ‘ஷூ’ அணிந்தவர், அந்தக் காலத்திலேயே அப்படியொரு ‘ஷூ’ அணிந்தவர் என்றால் அது அவர்தான். இந்த ஊருக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லை என்பது போன்ற தோற்றம் கொண்டவர் சாயப்பு வாத்தியார். நல்ல உயரம், அது தெரியாத அளவிற்கு பருமனான உடல், நீளமான முகம். பாகிஸ்தான் முஸ்லீம்கள்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புரட்டாசி சனி

பிஜேபியா திமுகவா என்பதற்குள் நுழையவில்லை, விரும்பவுமில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு குழந்தைகள் பள்ளி வருவதற்குக் கூட ஏற்பாடுகள் அறிவித்துள்ளது அரசு, சிறப்பான முன்னேற்பாடுகளோடு. திரையரங்குகள், வணிக வளாகங்கள் என எல்லாமும் செயல்பாட்டில். பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கும் ஏற்பாடு செய்திருக்கலாம். புரட்டாசி சனியில் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசிப்பது அவர்களுக்கு காலம்காலமான ஒரு விருப்பம், வேண்டுதல்…. (READ MORE)

Politics

நெடுஞ்சாலை வழி நிறுத்த உணவகத்தில் நமது நூல்கள்

நெடுஞ்சாலைப் பயணத்தில் தேநீருக்காக இறங்கிய உணவகத்தில் மருமகனின் நூல்கள் வைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து பரவசப்படும் அத்தை! அதுவும் ‘அப்பாவின் 75வது பிறந்த நாளுக்கு அர்ப்பணம்!’ என்று வந்த ‘வாழ்க்கை பாசறையில்…’ நூலைப் பார்த்ததும் பல உணர்வுகள் அவருக்கு! பரமன் பச்சைமுத்துஅச்சரப்பாக்கம்06.10.2021

Paraman's Book

, , , ,

wp-1633404586787.jpg

உள்ளே கனல் – Malarchi Online Course

பலரின் உள்ளத்தில் கனல் மூட்டி உந்தித் தள்ளி புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி நேற்று நிறைவு பெற்றது ‘உள்ளே கனல்’ MALARCHI Online Course. பல நாடுகளிலிருந்து பல ஊர்களிலிருந்து பங்கேற்ற மாணவர்கள், ஆழமான மாற்றங்கள், நிறைவான உணர்வுகள் என நிறைவு பெற்றது ‘உள்ளே கனல்’. இறையை நோக்கி ததும்பும் நன்றியுணர்வோடு நான்! – பரமன் பச்சைமுத்து05.10.2021… (READ MORE)

Paraman's Program

, , , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை ‘சிவ்வழிபாட்டு மாலை’நோக்கம் ஒன்று நிறைவேறுகிறது

மு பச்சைமுத்து அவர்களின் முதல் குருபூசையில் மு பச்சைமுத்து அறக்கட்டளையில் வெளியிடப்பட்ட நூல் ‘சிவ வழிபாட்டு மாலை’. மணக்குடி (மணியார் வீட்டு) நடராஜன் ஐயரின் மகள் வயிற்றுப் பேரன் சென்னை சைதாப்பேட்டையில் இந்த நூலிலிருந்து சிவபுராணம் கற்றிருக்கிறான். எல்லோரையும் சிவபுராணம் சொல்லச் சொல்லும் அப்பா, இதோ இதைத்தான் விரும்பியிருப்பார்! இந்நூலின் நோக்கம் என்று அதன் முன்னுரையில்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

wp-1633322887231.jpg

‘நோ டைம் டு டை – 007 ‘ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

‘நோ டைம் டு டை – 007 ‘ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து நீண்ட காலத்துக்குப் பிறகு திரையரங்கில் ஜேம்ஸ்பாண்ட் 007 படம் என்பதே சுவையான உணர்வுதான், அதுவும் முப்பரிமாணத்தில் கண்களுக்கருகில் படம் விரிய நல்ல பின்னணி இசை தெறிக்க. டேனியல் கிரெய்க் வந்ததிலிருந்தே பியர்ஸ் ப்ராஸ்னன் காலம் வரையிலிருந்த ஜேம்ஸ் பாண்டிற்கென்று… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

பணம் இல்லாத போது

மாநிலங்களிடம் குறிப்பாய் தென்னிந்திய மாநிலங்களிடம் நிதி இல்லை என்பது தெரிந்ததே. இந்நிலையில் கொரோனா உயிரிழப்புகளுக்கு மாநில அரசே இழப்பீடு தரவேண்டும் என்று மத்திய அரசு சொல்வது சரியில்லை. மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும் இந்தப் பொறுப்பை. – மணக்குடி மண்டு01.10.2021

Politics

பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள்

வளரும் வெளியே ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், பிற குழந்தைகளோடு கலந்து விளையாட வேண்டிய பருவத்தில் நோய்த்தொற்று பொது முடக்கம் வந்து நீண்ட காலத்திற்கு வீட்டிலேயே முடக்கப்பட்டனர் இளம் சிறார்கள். உளவியல் ரீதியாகவும், கற்றல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிள்ளைகளிடையே சரி செய்ய முடியா சரிவு ஏற்பட்டுள்ளது. பழக்க வழக்கங்கள் உணவு முறை என எல்லாமே… (READ MORE)

Politics, பொரி கடலை

, ,

wp-1632816024215.jpg

20ஆவது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 இன்று மிருகசீரிடம் (புரட்டாசி மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை28.09.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

தமிழக அரசுக்கு ‘சபாஷ்!’

தடுப்பூசி செலுத்த பதிவு செய்து விட்டு கேரளாவில் மக்கள் காத்திருக்க, இங்கே தமிழகத்தில் தடுப்பூசி முழுநாள் முகாம்கள் நடத்தி செப்டம்பர் மாதம் மட்டும் 70.71 லட்சம் தடுப்பூசி செலுத்தி கலக்கியிருக்கிறது தமிழக அரசு. முழுநாள் தடுப்பூசி முகாம்களுக்கு அரசு ஊழியர்கள் களப்பணியாளர்கள் ஞாயிறு காலை 7 மணியிலிருந்து இரவு வரை பணி புரிய வேண்டும் என்பது… (READ MORE)

Politics

மொத்த நாட்டிற்கும் ‘சபாஷ்!’

ஆகஸ்ட் மூன்றாம் வாரம் கொரோனா மூன்றாம் அலை உச்சத்தில் இருக்கும் என்றது ஐசிஎம்ஆர், செப்டம்பர் இரண்டாம் வாரம் இந்தியாவில் மூன்றாம் அலை உச்சத்தில் இருக்கும் என்றது உலக சுகாதார மையம். இவற்றுக்கு நேர்மாறாக கட்டுக்குள் இருக்கிறது நோய்த்தொற்று. நாணு முழுக்க கொரோனாவே இல்லையென்று சொல்ல முடியாவிட்டாலும் கட்டுக்குள் இருக்கிறது. சிக்கிம், ஹிமாச்சல் பிரதேஷ், லடாக், கோவா,… (READ MORE)

Politics

முதல் நாள்

படித்து தேர்வாகி  வென்று வேலைக்கு போவது ஓர் உணர்வு என்றால் நம் பிள்ளைகள் வேலைக்கு போவது வேறொரு நிலை, வேறோர் உணர்வு. தனது ப்ரொஃபஷனல் வாழ்வில் முதல் அடி எடுத்து வைக்கும் என் மகள், இண்ட்டர்ன்ஷிப்பிற்காக ஒரு நிறுவனத்தில் சேரும் முதல் நாளான இன்று நாமே சேர்வது போல பயபக்தியோடு போய் அவளை விட்டு வந்தேன்…. (READ MORE)

பொரி கடலை

வெள்ள நீர் வடிகால் பணிகள் – சபாஷ்!

பாடி மேம்பாலத்திற்கு வடமேற்கேயுள்ள கொரட்டூர் போன்ற தாழ்நிலை பூமி பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக ‘எல்லா தெருவையும் தோண்டி தோண்டி போட்டுறாங்க. வண்டி போக முடியல’ என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள். ஆனால், சங்கதி வேறு. வெள்ள நீர் வடிகாலுக்காக பெரிய ஆழ் குழாய்கள் பதிக்கும் வேலை மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இவ்வளவு… (READ MORE)

Politics

, , ,

சில பாடல்களின் வரிகளினிடையே

சில பாடல்களின் இடையே ஊடுபயிர் போல பழைய வேறு பாடலின் துண்டை வைத்து அனுப்புவது இசையமைப்பாளரின் சித்து. ‘ஹம் ஆப் கே ஹேன் கவுன்’ பாடல்களில் நடு நடுவே ‘மைனே ப்யார் க்யா’ பாடல்கள் வைத்தது, நதியாவை கேட்டு ‘மாமா உன் பொண்ணக் குடு, ஆமாம் சொல்லிப்புடு’ என்று ரஜினி ஆடிப்பாடும் பாடலில் இடையில் ராஜா…… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , ,

சரியான தேர்வு போல

கோயில் நிலத்தை ஆக்ரமித்துக் கட்டப்பட்ட குயின்ஸ்லேண்ட் தீம் பார்க் அப்புறப்படுத்தப்படும். மதுரவாயல் மார்க்கசகாயேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கடை வைத்திருந்த 23 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு…. பல செய்திகள் இப்படி. அமைச்சராக சேகர்பாபு சரியான தேர்வு எனத் தோன்றுகிறது. சபாஷ்! 👏👏👏👏

Politics

, ,

wp-1632332717868.jpg

மனிதர்கள் மீதான என் வியப்பு கூடிக்கொண்டேதான் போகின்றது

ஒவ்வொரு மனிதனிடமும் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றனதான். வடுக்கள், படிப்பினைகள், பூக்கள், அனுபவங்கள், நினைவுகள் என எவ்வளவோ இருக்கின்றன ஒவ்வொரு மனிதனிடமும்.  ஒவ்வொரு மனிதனும் உண்மையில் ஒரு புத்தகம். சில புத்தகங்கள் பலராலும் புரட்டப்பட்டும், சில புத்தகங்கள்  திறக்கப்படாமலேயும் இருக்கின்றன. மறையும் ஒவ்வொரு மனிதனையும் சிங்களர்களால் கொளுத்தப்பட்ட யாழ்ப்பானத்து நூலகமாகவும், ஆப்கானியர்களின் படையெடுப்பால் அக்காலத்தில் எரிக்கப்பட்ட நாலந்தா… (READ MORE)

VALARCHI Tamil Monthly, பொரி கடலை