Author Archive: paramanp

மஞ்சுமல் பாய்ஸ் தந்த எண்ணம்

பஞ்சு அருணாச்சலம் தன் வாழ்நாள் முழுக்க சொல்லியும் எழுதியும் வந்த ‘ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதைதான் முதல் ஹீரோ’ என்ற கருத்து மறுபடியும் மறுபடியும் நீரூபனமாகிக் கொண்டேயிருக்கிறது ஆண்டாண்டுகளாக. இப்போது ‘மஞ்சுமல் பாய்ஸ்’ மூலமாகவும். வேலை நேரத்தில் வேலை, மீதி நேரத்தில் குடி, கயிறு இழுக்கும் போட்டி என பொழுது போக்கும் எதையும் அசிரத்தையாக செய்யும் கேரளத்தின்… (READ MORE)

பொரி கடலை

வலசைக்கு வந்த ஃப்ளெமிங்கோ

பிசி, எக்ஸ்டி, ஏடி என கணிப்பொறிகள் பயன்பாட்டில் இருந்த எண்பதுகளின் இறுதியிலான என் கல்லூரிக் காலங்களில் ஃப்ளாப்பி டிஸ்க்கள் கோலோச்சின. 360கேபி(கிலோ பைட்ஸ்) அளவு சேமிக்கும் கொள்ளளவு கொண்ட டிடிகே அல்லது ஆம்க்கிட் தயாரிப்பு ஃப்ளாப்பி டிஸ்க்களை நாங்கள் பயன்படுத்தினோம். பேசிக், ஃபோர்ட்ரான் போன்ற நிரல் மொழிகளை இயக்க அன்று அது போதுமானதாக இருந்தது. உள்ளடக்கத்தை… (READ MORE)

பொரி கடலை

பிரார்த்தனை என்பது…

பிரார்த்தனை செய்வதே உங்கள் வேலை. தருவதா இல்லையா என்பது இறைவனின் வேலை. அதையே தருவான் அல்லது அதைவிட சிறப்பானதை பெரிதானதை இறைவன் தருவான். பிரார்த்தனை என்பது இறைவனோடு கொள்ளும் தொடர்பு. பிரார்த்தனை செய்யுங்கள், உங்களுக்காக, உற்றாருக்காக, உடன் இருப்போருக்காக, உலகத்தாருக்காக! உங்களுக்கு பிரார்த்தனை கை கூடட்டும் என்று பிரார்த்திக்கிறேன். – பரமன் பச்சைமுத்து

Spirituality

, , ,

ராமலிங்கம் பிள்ளை உடல் விட்டார்

இறந்தவரின் ஆன்மா வேறு தற்காலிக உடல் தரப்பட்டு எம பட்டினத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 12 நிமிடங்களில் திரும்பவும் சடலம் இருக்கும் இறப்பு வீட்டிலேயே கொண்டு வந்து விடப்படுவதாக சைவ சமயக் குறிப்புகள் சொல்வதை எண்ணிய படியே குயப்பேட்டை கந்தசாமி கோவில் தெருவில் அக்கா வீட்டு வாசலில், நேற்றிரவு உடலை விட்டு அமரராகிப் போன ராமலிங்கம் பிள்ளையை… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில்…

ஒரே உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில் வாழ்கிறோம். அருகருகே இருந்தாலும் அவரவர் வாழ்க்கை வேறாகவே இருக்கிறது. எவர் பற்றியும் பிரஞ்ஞையில்லாமல் தூரத்தில் எதையோ வெறித்தபடி சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்த இந்த மனிதர் நம்மை ஈர்த்தார், மலர்ச்சி வகுப்பெடுக்க திருவண்ணாமலை வந்தடைந்ததும் தேநீருக்காக இறங்கிய போது. ‘டீ குடிக்கறீங்களா?’ ‘இப்பத்தான் குடிச்சேங்க! வேண்டாம்!’ ‘சாப்பாடு இப்ப தருவாங்க… (READ MORE)

பொரி கடலை

, , , ,

சினிமாவின் உச்ச நிலையிலில் இருக்கும் போது நடிப்பை நிறுத்தி விட்டு அரசியலுக்குள் நுழைகிறாரே விஜய்?

கேள்வி: சினிமாவின் உச்ச நிலையிலில் இருக்கும் போது நடிப்பை நிறுத்தி விட்டு அரசியலுக்குள் நுழைகிறாரே விஜய்? பதில்: அமிதாப் பச்சன், எம்ஜியார் இதை செய்தார்கள். இப்போது விஜய் வருகிறார். அவருக்கு வாழ்த்துகள். சினிமாவில் நடிப்பதை அவர் நிறுத்துவது சிறந்த செயல் அல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. கட்சி தொடங்கிய பின்பு எம்ஜிஆர் நடித்த ‘உலகம்… (READ MORE)

பொரி கடலை

, , ,

ஃபெரேரோ ரோச்சர்

‘ஃபெரேரோ ரோச்சர்’ சாக்லேட் பிடிக்குமா உங்களுக்கு? … மதிப்பிற்குரிய சுகி சிவம் அவர்கள் ஒரு நாள் நம்மை அழைத்து, தான் நடத்தும் இணைய தள பயிலரங்கு ஒன்றில் நாம் உரையாற்ற வேண்டுமென்று கேட்டு நம்மை வியப்பிலாழ்த்தினார். பல பேச்சாளர்கள் பங்கேற்ற அந்தப் பயிலரங்கில் ‘உறவுகள்’ பற்றியதாக நிகழ்ந்தது நம் மலர்ச்சி உரை. மிக மரியாதையாக நடத்தினார்,… (READ MORE)

பொரி கடலை

‘மோடி புதுப்பொலிவுடன் டிடி தமிழை தொடங்கினார்’ இந்து தமிழ் தலைப்புச் செய்தி இலக கண பிழைதானே!

‘மோடி புதுப்பொலிவுடன், டிடி தமிழை தொடங்கினார்’ – என்ற பொருள் வருகிறது இதில். ‘புதுப்பொலிவு பெற்ற டிடி தமிழை தொடங்கினார் மோடி’ அல்லது ‘புதிப்பொலிடன் கூடிய டிடி தமிழை தொடங்கினார் மோடி’ என்றிருப்பதுதானே சரி! #HinduTamil #Tamil #Paraman #ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #நல்லதமிழ்

பொரி கடலை

, , , , ,

தேசிய நெடுஞ்சாலையில் ஏ ஆர் ரஹ்மான் பாடல்களோடு…

எந்த பாடலைத் தந்தாலும் அதில் தன்னையே குழைத்து ஊற்றி சின்னதாய் சிரித்து, கொஞ்சி, அழுது, கர்ஜித்து விளாசி விடுவார் எஸ்பிபி என்பதைத் தாண்டி ரஹ்மானின் இசையும் அசரடிக்கிறது ‘அழகான ராட்சசியே’வில். அதனால்தான் ஹரிஹரன் குரலில் வரும் ‘குறுக்கு சிறுத்தவளே…’ என்னை இன்னமும் சொக்கிப் போக வைக்கிறது. அதுவும் ‘கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே’ எனும் முதல் சரணத்திற்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

இந்தியா அசத்தல் கடலிலும் விண்ணிலும்

விண்வெளியில் ஆதித்யா 1 தனது லெக்ராஜியன் பாயிண்ட் எனப்படும் எல் -1 புள்ளியை இன்று அடையப் போகிறது என்று மகிழும் இதே நேரத்தில் வானிலும் கடலிலும் மூன்று நிகழ்வுகள் இந்தியர்களால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டுள்ளன என்று கூடுதல் மகிழ்ச்சி கொள்கிறோம். கருந்துளை எனப்படும் கருங்குழியிலிருந்து வெளிப்படும் கதிர்கள், எரிபொருள் தீர்ந்து வெடித்து சிதறும் விண்மீன்களிலிருந்து உருவாகும் கண்ணுக்குத்… (READ MORE)

பொரி கடலை

IMG-20231229-WA0172

‘தொடங்கு… தொடர்… தொடுவாய் உச்சம்!’

‘எத்தனை எழுதினாலும் எழுத இன்னமும் இருக்கிறது!’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு எவ்வளவு எழுதினாலும், எத்தனை நூல்கள் எழுதியிருந்தாலும்கூட தன் எழுத்தை அச்சில் பார்க்கும் போது பேருவுகையும் பெருமகிழ்ச்சியும் பொங்குமாம். ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கே அப்படியென்றால், ‘நான் ஓர் எழுத்தாளன்தானா?!’ என்று என்னையே கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு, என் எழுத்து அச்சாகி நூலாக வந்தால்… (READ MORE)

Paraman's Book

, , , , , , , ,

எம்ஜியார்…

சினிமா கொட்டகைகளோ தொலைக்காட்சிப் பெட்டிகளோ இல்லாத அன்றைய மணக்குடியில் படம் பார்க்க வேண்டுமென்றால் 7கிமீயில் இருக்கும் புவனகிரிக்கோ, 12 கிமீயில் இருக்கும் சிதம்பரத்திற்கோதான் போக வேண்டும். பேருந்து வசதியே இல்லாத அக்காலங்களில் மாட்டுவண்டி கட்டிக் கொண்டு அதில் வைக்கோலை பரப்பி அமர்ந்து கொண்டு எப்போதாவது சினிமாவுக்கு கூட்டிப் போனாலும் அது ‘திரிசூலம்’ ‘கௌரவம்’ வகை சிவாஜி… (READ MORE)

பொரி கடலை

,

கஹாங் ஸே பையா…

பழக்கமில்லா தெரியாத உணவகங்களில், எது வயிற்றைக் கெடுக்காதோ அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு வருவதும், தெரிந்த பழகிய உணவகத்தில் புதியதை முயற்சி செய்வதும் என் வெளியூர்ப் பயணங்களில் கடைபிடிக்கப்படும் செய்முறை. ‘சரி! காலை டிஃபனுக்கு இந்த ஒரு வேளைக்கு அரிசி இல்லாத உணவு கிடைக்குதா பாப்போம்!’ என்று இறங்குவது ஓர் உதாரணம். பலமுறை உணவுண்ட சிங்க பெருமாள்… (READ MORE)

பொரி கடலை

திருவாசக மூல ஓலைச்சுவடி

‘மாலிக் காபூருக்கும் மாணிக்கவாசகருக்கும் என்ன சம்மந்தம்?’ ‘பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனுக்கும், சோழ தேச எல்லைக்குட்பட்ட புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம்?’ ……. சென்னையிலிருந்து மணக்குடி நோக்கி விரைகிறது எங்கள் கார். ‘அம்மா, திருவாதவூரர் அருள் பெற்று மாணிக்கவாகசகரா மாறின எடத்துக்கு போனோமே ஞாபகம் இருக்கா?’ ‘திருப்பெருந்துறை!’ ‘கரெக்ட். அந்த மாணிக்கவாசகர் சொல்ல சிவனே சிதம்பரத்தில் எழுதிய… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , ,

அடுத்து செய்ய வேண்டியது

முன் குறிப்பு : உடல் நலத்தை பெரிதும் கவனித்துக்கொள்ளும் நண்பரொருவருக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்தது சில மாதங்களுக்கு முன்பு. வருத்தியெடுத்த அந்த துன்பம் அதோடு போகவில்லை, டைஃபாய்டு அவர் குடலில் செய்துவிட்டுப் போன கோளாறுகளால் இன்னும் தொடர்கிறது துன்பம். குடிநீரில் கழிவுநீர் கலப்புதான் நோய்த்தொற்றுக்கே காரணம் என்பது பிறகே கண்டுபிடித்தார்கள். உள் நுழையும் மொத்த வாட்டருக்கும்… (READ MORE)

Uncategorized

,

அசத்திய சந்தோஷம் டாக்டர்

அண்ணா நகர் ஸ்டார்பக்ஸ் வாசலில் காரில் ஏறப் போனவன், கீழே சாக்கடை பொங்கி வழிவதால் வண்டியை நகர்த்தச் சொல்லி சாலையில் இறங்கி நின்றேன். ‘ஹலோ சார்!’ குரல் கேட்டு திரும்பினால் இன்ப அதிர்ச்சி. அப்பல்லோ, ட்ரிப்பிள் எம் என உயர் ரக பெருமருத்துவமனைகளில் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும், எழும்பூர் சந்தோஷ் செஸ்ட் ஹாஸ்பிட்டலின் தலைமை… (READ MORE)

பொரி கடலை

தவம்

ஆழ் தியானம் ஒரு சாதகருக்குள் கொண்டு வந்து ஊற்றும் சக்தியை எந்த புரத பல்நுண்சத்து பானங்களாலும் தர முடியாது. தியானம் ஒருவரின் உடலையும் உடலைத்தாண்டிய சங்கதிகளையும் உயிர்ப்படைய செய்து விடுகிறது. – பரமன் பச்சைமுத்து 28.11.2023

Uncategorized

, ,

வரலாற்று சுற்றுலா!

இருபதாண்டுகளுக்கு முன்பு வெளிநாடு ப்ராஜெக்டுகள் முடித்து திரும்பிய ராமு பெருமாள், முகுந்தன், நான் ஆகிய மூவரும், ‘பொன்னியின் செல்வன்’ படித்து விட்டு பெங்களூரிலிருந்து காரை எடுத்துக் கொண்டு ‘பொன்னியின் செல்வன் ட்ரிப்’ கிளம்பினோம். கோடியக்கரை குழகர் கோவிலையும், மந்தாகினி ஏறிய கலங்கரை விளக்கத்தையும் சோழ இளவரசர்கள் பயணித்த கடலையும் கண்டு வியந்தோம். ஒரு படகில் ஏறி… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , ,

ஆகச் சிறந்த கலைஞனால் ஆனது எனக்கு…

நெல்வயல்கள், வாய்க்கால், வீடுகள், ஓர் அரசுப்பள்ளி என்றிருந்த மணக்குடியில் என்றுமே திரையரங்குகள் இருந்ததில்லை. ஆறு கில மீ் தூரத்தில் கிழக்கு நோக்கி பாயும் வெள்ளாறு. வெள்ளாற்றின் அந்தக் கரையில் இருக்கும் கீரப்பாளையத்தில் ‘வீஆர்கே டாக்கீஸ்’, வெள்ளாற்றின் இக்கரையில் இருக்கும் புவனகிரியில் ‘ரங்கராஜா திரையரங்கம்’ ஆகிய இரண்டுதான் சுற்று வட்டார ஊர்களுக்கே திரையரங்குகள். எம்ஜியார் அரசு விவி… (READ MORE)

பொரி கடலை

1200-675-19862542--thumbnail-16x9-cdl

காவலருக்கு சல்யூட்!

சில செய்திகளை செய்திகளாகக் கடக்க முடிவதில்லை. செய்தி படித்து முடித்த பிறகும் செய்து விடுகிறது எதையோ. இதுவரை இப்படி நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை! வாகனத்தில் அடிபட்டு சாலையிலேயே இறந்து போனார் டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளியான சக்திவேல் என்பவர். வாகனத்தில் அடிபட்டு இறந்து விட்டார் கணவர், இழப்பீடாவது வாங்கித் தாருங்கள் என்று அழுதபடி விருத்தாசலம் காவல்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , ,

20231029_090831

வைணவத்திற்கு சேவை செய்தவர் குலோத்துங்க சோழர். கமல் சொல்வது தவறோ!

சைவத்தின் பாற்கொண்ட பெரும் பற்றால் வைணவத்தை இகழ்ந்ததாகவும் தில்லை சித்ரகூடத்தில் வணங்கப்படும் கோவிந்தராசர் சிலையை பிச்சாவரம் பக்கத்தில் கடலில் போட்டதாகவும் குலோத்துங்க சோழனுக்கு வடிவம் தந்திருப்பார் கமல்ஹாசன் தனது ‘தசாவதாரம்’ திரைப்படத்தில். குலோத்துங்கரின் காலத்தில்தான் வீரபாண்டியன் மறைந்து வாழ்ந்ததாகவும் அவருடைய மனைவி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் பிரமாதமான புனைவு செய்திருப்பார் அரு. ராமநாதன் தன் ‘வீரபாண்டியன் மனைவி’… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

143764_2_large

‘லியோ’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

முன் குறிப்பு: மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதை பொருள்கள், துப்பாக்கி, ரத்தம் என லோகேஷ் கனகராஜின் படங்களில் வரும் வழக்கமான விஷயங்கள் இங்கும் படம் முழுக்க வருகின்றன. இது பற்றி நாம் இங்கு பேசவில்லை. இவற்றைத் தாண்டி படத்தை பற்றிய விமர்சனம் செய்கிறோம். …. குளு குளு இமாச்சல பிரதேசத்தில் மனங்கவர் மனைவியோடும் குளுகுளு குழந்தைகளோடும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , , , , , ,

கடுதாசி

எதில் எழுதப் பிடிக்கும் என்று எவரேனும் என்னைக் கேட்டால் ‘அஞ்சல் அட்டை’ என்பது என் பதிலாக இருக்கும். ‘ஷீஃபர்’ பிராண்ட் ‘இங்க் பால் பென்’ அதுவும் கருப்பு மையில் 1.0 அல்லது 0.8 அளவில் எழுதும் பேனா, அது இல்லையென்றால் குறைந்த பட்சம் ‘யூனிபால்’ தயாரிப்பின் யுஎம்153எஸ், யுபி157 அல்லது அதற்கும் மேலுள்ள 1.0 பேனாக்கள்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

ரத்தினகிரி மலையடிவார அலங்கார்…

வேலூர் ஆர்யாஸ் காஃபி பற்றி நாம் பதிவிட்டதைப் பார்த்துவிட்டு அவரவர் ஊர் உணவகங்கள் தொடங்கி திருவரங்கம் ‘முரளி காஃபி’ வரை அன்புப் பரிந்துரைகள் அனுப்பித் தள்ளிவிட்டனர் அன்பர்கள். ‘ஆமாம்! கரெக்டா சொன்னீங்க!’ ‘இப்பல்லாம் அந்த அளவுக்கு இல்ல!’ ‘விலை அதிகம்!’ ‘நான் கால்டாக்சி டிரைவர், 5 முறையும் அங்கதான் சாப்ட்டேன்!’ என தனித் தகவல்கள் இன்னும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

வேலூர் ஆர்யாஸ் காஃபி

மாயவரம் காளியாகுடி காஃபி, பெங்களூர் எம்டிஆர் காஃபி, பெங்களூரு அடிகாஸ், ஒரு காலத்தைய சரவண பவன் காஃபி போல குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சுவையான காஃபி வேலூர் ஆர்யாஸ் காஃபி. இன்றும் அதே சுவை மாறாமல் கிடைக்கிறது. உள்ளே உட்கார்ந்து அவர்கள் கொண்டு வரும் காஃபியை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு வெளியே காஃபி போடுமிடத்திலேயே சுடச்சுட… (READ MORE)

பொரி கடலை

மணக்குடிகள் மாறவில்லை…

சிறுவனாக இருந்த போது மனைப்பலகையையும் கிண்ணத்தில் எண்ணெய்யையும் தந்து ‘போய் புள்ளையார் வாங்கிட்டு வா! இந்தா எட்டணா!’ என்று தருவார்கள். கொழுக்கட்டையை விட இந்த மண் பிள்ளையாரை வீட்டுக்குக் கொண்டு வரும் நிகழ்வே ஒரு உற்சவம் போல குதூகல களிப்பு தரும் அரைக்கால் சட்டையணிந்த அவ்வயதில். பிள்ளையார் கொண்டு வருவது ஒரு சிறுவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ,… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

ஆரஞ்சு வண்ண கோலி சோடாவை குடித்திருக்கிறீர்களா, நீங்கள்?

ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் கோலி சோடாவை குடித்திருக்கிறீர்களா, நீங்கள்? கோலி சோடா பாட்டில்களே வித்தியாசமாக இருக்கும். லெகர் போன்ற கம்பெனி சோடா பாட்டில்கள் காக்கைகள் என்றால், கோலி சோடா பாட்டில்கள் அண்டங்காக்கைகள் போன்று வித்தியாசமானவை, கொஞ்சம் அழகானவையும் கூட. வெள்ளை வண்ணத்தில் பளிங்கு போல வரும் சோடா, கருப்பு வண்ணத்தில் வரும் கலர் சோடா என… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, இந்த எம்ஜிஆர் படத்தை?

புவனகிரி ரெங்கராஜா திரையரங்கில் ‘சேர்’ டிக்கெட்டில் போய் அந்தப் படத்தைப் பார்த்தோம். ‘மேடை’ டிக்கெட், ‘பெஞ்ச்’ டிக்கெட் என்று குறைந்த விலை டிக்கெட்டிலேயே திரைப்படங்களை பார்த்திருந்த சிறுவர்களான எங்களுக்கு ‘சேர்’ டிக்கெட் ஒரு பேரனுபவம். எம்ஜியார், பானுமதி, சரோஜா தேவி, நம்பியார், எம்ஜி சக்கரபாணி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருந்த மூன்றே கால் மணி… (READ MORE)

பொரி கடலை

wp-1691719554316.jpg

‘ஜெயிலர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

வயது முதிர்ந்து பேரப்பிள்ளையோடு விளையாடுதல் வீட்டுக்கு காய்கறி வாங்குதல் என அப்பிராணியாய் வாழும் ஓய்வுபெற்ற காவல்துறை சிறைத்துறை அதிகாரி நேர்மையான தன் பிள்ளைக்கு ஆபத்து வந்ததும் ரத்த ருசி கண்ட ‘டைகர்’ ஆக மாறி கோதாவில் இறங்கும், ஏழு கடல் ஏழு மலை தாண்டிய மந்திரக் கூண்டில் கிளியின் உயிர் எடுக்கும் கதையாக கிரீடம் எடுக்கும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , , , ,

எம்எல்ஏ பெஸரேட்

எம்எல்ஏவாக இல்லாமலேயே ‘எம்எல்ஏ பெஸரேட்’ சாப்பிடலாம்! விஜயவாடாவிலிருந்து காக்கிநாடா பயணித்த போது ஒரு முறை மலர்ச்சி மாணவர்கள் வலுக்கட்டாயமாக வாங்கித் தந்து சுவைக்கச் செய்தது ‘எம்எல்ஏ பெஸரேட்டு’. ‘அது என்ன எம்எல்ஏ பெஸரேட்டு? இந்த ஊரு எம்எல்ஏக்கி அது ச்சால இஷ்டமோ?! ஏமிரா… ஏமிரா… ஏய் ஏமிரா அது?’ என்று ராஜமௌலி பட வில்லன்கள் போல… (READ MORE)

பொரி கடலை

பறவை சூழ் உலகு…

பறவைகள் என்று மொத்தமாய் சொன்னாலும் எல்லா பறவைகளும் ஒன்றல்ல. தரைக்கு மேலே வானுக்குக் கீழே என்ற வெளியில் வசிப்பவை பறவைகள் என்றாலும் உற்றுக் கவனித்தால் நிலைகள் புரியும். மிக மிக உயரத்தில் மட்டுமே பறக்கும், உயரத்தில் மட்டுமே கூடு கட்டி வசிக்கும் பறவைகள் (செங்கழுகு, கருங்கழுகு), அதற்கு அடுத்த நிலையில் பறக்கும் வசிக்கும் பறவைகள் (நாரை,… (READ MORE)

பொரி கடலை

திருவானைக்காவல்

இருபதாண்டுகளுக்கு முன்பு பெங்களூர் வாழ் இந்தியா டாட் காம் பொறிஞனாக இருந்த போது என் மகள்களைத் தூக்கிக் கொண்டு திருச்சியில் காவிரியில் இறங்கிக் குளித்து, வயலூருக்கும் திருவானைக்கா கோவிலுக்கும் போயிருந்தேன். இன்று இறை பற்றிய புரிதலும் நம்பிக்கையும் வேறு வடிவம் பெற்றிருந்தாலும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கு உரையாற்ற திருச்சி வந்ததும், வண்டியை திருவானைக்காவிற்கு விட்டேன்…. (READ MORE)

பொரி கடலை

ஒன்லி காஃபி

‘விமானமேறும் முன் முடித்துவிடுவோமே!’ என்று ஒதுங்குமிடத்திற்குள் ஒதுங்க நுழைகையில், முகப்கில் யாரிடமோ செல்லிடப் பேசியில் பேசிக்கொண்டிருந்தவர் அதை நிறுத்திவிட்டு நம்மிடம் வருகிறார். ‘பரமன் சார்!?’ ‘எஸ்!’ ‘சார்… நான்….!’ ‘அடடா! ஆகா!’ ‘கத்தார்லேருந்து எறங்கி கோவை போறேன்!’ ‘வாங்க! அதே ஃப்ளைட்லதான் நானும்!’ நான் எழுதிய ‘உண்மையான மகளிர் தினம்’ என்ற கவிதையை மிகப்பெரிய பலகையில்… (READ MORE)

பொரி கடலை

(தென் துருவ)சந்திரனைத் தொட்டது யார், நாம்தானே, அடி நாம்தானே!

சந்திரனில் 1 நாள் பொழுது என்பது பூமியின் பொழுதில் எத்தனை நேரம் என்று கேள்விப்பட்டீர்களா? (விடை – கடைசியில்) இருட்டும் உறைய வைக்கும் அதீத மைனஸ் 200 டிகிரி குளிரும் கொண்ட இதுவரை யாருமே நுழையாத நிலவின் தென் துருவத்திற்குள் இறங்கி ஆராய்ச்சி செய்ய இருக்கிறது நம் சந்திரயான் – 3.  தற்போது வானவெளியில் பயணித்துக்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1689002721486.jpg

‘மாமன்னன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

முன் குறிப்பு 1: ‘மாமன்னன்’ சொல்லும் அரசியல், அதன் பின்னே இருக்கும் வேறு செய்திகள் என நிறைய பகிரப்படும் வேளையில் இந்த விமர்சனத்தை எழுதுகிறோம். திரையில் பார்த்த ‘மாமன்னன்’ திரைப்படத்தை மட்டுமே குவியமாகக் கொண்டு செய்யப்பட்ட விமர்சனம் இது. படத்திற்கான விமர்சனம்!  நன்றி! முன் குறிப்பு 2: இப்படமே உதயநிதியின் கடைசிப் படம் என்று பேச்சு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , ,

புவனகிரி நினைவுகள்

புவனகிரி நினைவுகள்: நெடுஞ்சாலைப் பயணத்தில் இருக்கிறேன். பண்பலையில் ‘ஏய்ய்ய்…. உன்னைத்தானே!’ பாடல் ஒலிபரப்பாகிறது. எஸ்பிபியை வித்தியாசமாக வெளிப்பட வைத்த இளையராஜாவின் சூப்பர் இசைப் பாடல். புவனகிரி பள்ளி, பத்தாம் வகுப்பு, ஏகே சீனிவாசன், கோவிந்தராஜூலு சன்ஸ் ஜோ, போலீஸ்காரர் மகன் பரமகுரு, பாலு, இலைக்கடை சங்கர், மணக்குடி பாலசரவணன், பாளையக்காரத் தெரு செந்தில், அவல்பட்டறை சோலையப்பன்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

wp-1688555464473.jpg

‘போர்த் தொழில்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

புலன் விசாரணை பற்றி புத்தகங்களில் மேய்ந்த ஏட்டுச்சுறைக்காய் சிறுசும், ரத்தமும் சதையாக துண்டு துண்டாய் வெட்டி மசாலா தூவி கறி சமைத்து சமைத்து கைகள் காய்ப்பு காய்த்த கதையாக அனுபவம் கொண்ட பெருசும் விருப்பம் இன்றி இணைந்து ‘சைக்கோபாத்’  தொடர்கொலைகளில் துப்பு துலக்க போகிறார்கள். கயிறு பிடித்து கண்டறிந்தார்களா, கண்டறிந்தார்களா என்பதை சிறப்பான படமாக தந்தால்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

wp-1688525934247.jpg

தலைவா! #Thalaiva #Wimbledon

விம்பிள்டன் சென்டர் கோர்ட்டில் ஃபெடரர் கௌரவிக்கப்பட்டதும், மனைவியோடு எழுந்து நின்று அவர் அதை ஏற்றதும் சிறப்பான தருணங்கள். ஆனால், அதைத் தாண்டியவொரு தருணம் காண்கிறேன் நான் இப்போது! ‘வாட்! அட! ஒஓஓஒ! ஊவ்!’ என்று நிற்கிறேன்! ‘பாட்ஷா’ திரைப்படத்து இடைவேளை பின்னணி இசை ஓடுகிறது மனதில். எத்தனை பேர் வந்தாலும் ரோஜர் ஃபெடரெர்தான் இன்று வரை… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

சென்னை காவல்துறை இந்தியாவில் முதல்முறையாக…

சென்னை காவல்துறை செய்திருக்கும் இந்த முன்னெடுப்பு, வரப் போகிற பல முன்னேற்றங்களுக்கு புதிய மைல் கல் ஆக இருக்கும். இந்தியாவில் முதன் முயற்சியாக சென்னையில், மிக நுட்பமான கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமான (ட்ரோன்) தொழில்நுட்பம் காவல் கண்காணிப்பு பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முகத்தை கண்டறியும் (‘ஃபேஸ் டிடெக்டிங் கேமாரா’) தகவமைப்பு  கொண்ட கேமராக்கள் என்பதால் பல… (READ MORE)

பொரி கடலை

wp-1687437768955522814222534623991.jpg

நினைவெல்லாம் நாரத்தை

கடாரங்காயை பார்க்கும் போதெல்லாம் ராஜராஜ சோழனும், நார்த்தங்காயை பார்க்கும் போதெல்லாம் மணக்குடியும் என் அம்மாவும் அப்பாவும் நினைவுக்கு வருவர் எனக்கு. கடாரங்காய்க்கும் நார்த்தம் காய்க்கும் வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு?  எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, குடை ஆரஞ்சு எனும் கூம்பு ஆரஞ்சு எனும் கமலா ஆரஞ்சு, நார்த்தம், கடாரம் எல்லாம் ஒரே வகையில்தான் வருகின்றனவாம் என்றாலும் அவைகள்… (READ MORE)

பொரி கடலை

, , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை :40வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (ஆனி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் இன்று மதியம் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை18.06.2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை

,

எழுதுவது நன்றே…

அவ்வப்போது தோன்றும் சிந்தனைகளை, வகுப்புக்கான சிந்தனைகள் வந்தால், வகுப்பு எடுத்த பிறகு சிலவற்றை என சில நேரங்களில் குறிப்பு எழுதுவதுண்டு நோட்டுப் புத்தகத்தில். பள்ளி நாட்களிலிருந்து எழுதுவது பிடிக்கும். லினக்ஸ், மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ, சிவபுராணம் என பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். எழுதுவதற்காகவே விதம் விதமாக நல்ல நோட்டுகளை வாங்கி வைத்திருப்பேன். நல்ல நீளமான… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

wp-1686239896347.jpg

இப்படி தரலாமே திருமண பரிசுகள், அட…!

திருமணத்திற்கு வருவோர் மணமக்களுக்கு என்ன பரிசு பொருள் தருவர்? பேனா, கடிகாரம், நகை, பொன்னாடை, கண்ணாடி – பீங்கான் வேலைப்பாடுகள் கொண்ட அழகுப் பொருள்கள், சாமி சிலைகள், நூல்கள், இவைதானே? கோவையில் நடைபெற்ற நம் மலர்ச்சி மாணவர்கள் ஜவகர் சுப்ரமணியம் – பத்மாவதி தம்பதியினரின் மூத்த மகள் ஸ்வர்ணபிரபா திருமணத்திற்கு சென்றிருந்த எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , ,

எந்த கல்லூரி டாப் ?

கேள்வி: பரமன், எந்த கல்லூரி சிறந்தது? பரமன்: நான் ஆகச் சிறந்த கல்லூரியில் படிக்கவில்லை. சுமாரான கல்லூரியில் படித்தவன். கல்வியின் தரம், ஆய்வுக் கூடம், படித்து வெளியேறியவர்கள் பெற்றிருக்கும் வேலை மற்றும் வளர்ச்சி, கல்வி முடித்து எந்த அளவுக்கு உலகிற்கு தயாராகி வருகிறார்கள் என பல அளவுகோல்களை வைத்து விகடன் பெரும் சர்வே ஒன்றை செய்தது…. (READ MORE)

Uncategorized, பொரி கடலை

சிரிப்பு ஓர் அழகு

சிரிப்பு ஓர் அழகு. சிரிப்பு சிரிப்பவருக்கு தருகிறது ஓர் அழகு. சிரிப்பு அழகாக அடுத்தவரையும் தொற்றுகிறது. சிரிப்பு, சிரிப்பவரின் முகத் தசைகளை சீராக்குகிறது.  சிரிப்பு, இதயத்தை இலகுவாக்குகிறது. ‘அழகாக இருக்க ஆசையா? அப்படியானால் சிரியுங்கள்!’ என்கிறது என் பழைய கவிதை (நூல்: மனப்பலகை). சிரிப்பு, சக்தி தந்து புத்தி சீர் செய்யப்படுகிறது. சிரிப்பு, உயிரினத்தை மனிதனாக… (READ MORE)

பொரி கடலை

சிறப்பு வளர்ச்சிப்பாதை ஆன்லைன் கனெக்ட்

சிங்கப்பூர், யுஎஸ், யுகே, திருவண்ணாமலை, கடலாடி, செங்கல்பட்டு, குடியாத்தம், காட்பாடி, வேலூர், கல்லுப்பட்டி மதுரை, திருப்பூர், கோவை, சிதம்பரம், புதுச்சேரி, கடலூர், பெங்களூர், குஜராத்தின் வதேரா, மயிலாடுதுறையின் கோமல், திருக்கோவிலூர், சங்கரன் கோவில், திருநெல்வேலி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், உத்திரமேரூர், திருச்சி ஸ்ரீரங்கம், பொள்ளாச்சி, என பல இடங்களிலிருந்தும் 218 மலரவர்கள் இணைய அட்டகாசமாக… (READ MORE)

MALARCHI, Paraman's Program

கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

பாலாசோரில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் நற்கதியடைய பிரார்த்தனைகள். விபத்து நடந்த இடத்திற்கு உடனே போய் வெளிச்சமில்லா இருட்டில் மொபைல் ஃபோன் விளக்கில் பாதிக்கப்பட்டோருக்கு முதல் கரம் தந்த உள்ளூர் மக்களும், காயம்பட்டு மருத்துவமனையில் அவசரப்பிரிவில் கிடப்பவர்களுக்கு ரத்தம் கொடுக்க தாமாகவே குவிந்த அந்த உள்ளூர் மக்களும் நெஞ்சம் நனைக்கிறார்கள்.   அவர்கள் வாழட்டும், அவர்கள்… (READ MORE)

பொரி கடலை

சரஸ்வதி மகால் நூலகம் காப்கப்படட்டும்

சோழர்கால நூல்கள், நாயக்கர்கள் கால நால்கள், இவற்றைத் தாண்டிய பழந்தமிழ்ப் படைப்புகளை ஓலைச்சுவடிகளாகக் கொண்டிருக்கும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை நடத்துவதற்கு நிதியின்மையால் திணறுகிறார்கள் என்று செய்திகளைப் பார்க்கிறோம். நூலகங்களை போற்றும், பரிசுகளை நூல்களாகத் தரச் சொல்லி அறிவுறுத்தும் முதல்வர் இந்நூலகத்திற்கு உதவட்டும். பழைய நூல்கள் வெறும் நூல்கள் அல்ல, நேற்றைய மரபின் வரலாற்றின் சான்றுகள்…. (READ MORE)

பொரி கடலை

wp-16855162427415291964789283028218.jpg

விமான சேவை பணிப்பெண்ணுக்கு ஒரு பயமென்பது நமக்கு சங்கடம்

ஏர் இந்தியா பணிப்பெண்ணுக்கு பய உணர்வு வந்து விட்டது நம்மால் இன்று.  அந்த வகையில் ஒரு சின்ன சங்கடம்தான் நம் மனதில். ‘சார்… பேட்டரி, பவர் பேங்க், எலக்ட்ரானிக் ஐட்டம் எதுவும் இருக்கா இதில்?’ போர்டிங் பாஸ் தரும் இடத்தில் என் பெட்டியை உள்ளே எடுத்துக்கொள்ளும் முன் ஏர்-இந்தியா ஊழியர் வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் சார்ந்து… (READ MORE)

பொரி கடலை

, , , ,

யாத்திசை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

7 ஆம் நூற்றாண்டில் சேரர்களும், சோழர்களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு முதியவனான அரிகேசரி பாண்டியனை எதிர்த்தபோது, பாண்டிய அரசணையில் ஏறி எதிரிகளை துவம்சம் செய்து, சேரனை யவன தேசத்துக்கு நாடு கடத்தி, சோழனின் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்தே ஆட்சி செய்தான் பெரும் வீரனான மகன் ரணதீர பாண்டியன். இந்த சேர சோழ பாண்டிய பெருங்குடிகளின்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , ,

மெத்த வூடு – சாரதா அம்மா

இன்று காலை சாரதா அம்மாவை பார்க்க போயிருந்தேன். அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க எதேச்சையாக அக்கா உமாவும் கூட வர, உமா – சிவா – சாரதா அம்மா என்ற கோர்வையால் பல பழைய நினைவுகள் பீறிட்டு வந்தன. …. ‘மெத்த வூடு’ என்றால் என்ன தோன்றும் உங்களுக்கு? மணக்குடியில் இருந்தவர்களுக்கு காய்ச்சார் மேட்டின் பாலதண்டாயுதம்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

அப்பா – அம்மா – பிறந்த நாள்

என் அம்மா பிறந்த போது அதை குறிப்பெடுத்து வைக்க எவரும் இல்லையோ, குறிப்பெடுத்தவர் பிறகு இல்லையோ தெரியவில்லை. என் அம்மாவின் பிறந்த நாள் எவருக்கும் தெரியாது.  ‘ஆடி மாசம் பொறந்தான் சிவா! பத்துமாசம் சின்னவன் சரவணன்!’ என்பதே பொதுவான பிறந்த கணக்கு வழக்கு முறை கொண்ட அக்காலமதில், பிறந்த நாள் ஆங்கிலத்தேதி பற்றியே சிந்தனைகளே இல்லை…. (READ MORE)

அம்மா, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 39வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (வைகாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் இன்று மதியம் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை22.05.2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

போர்த்திக் கொள்ள தூக்கம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது இம்மனிதனுக்கு…

இருமங்கிலும் ரயில்களின் பேரிறைச்சல், நடைமேடையில் ஓயாமல் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் பயணிகளின் பெருஞ்சந்தடி, மிக அருகில் ஊர்ந்து கொண்டே இருக்கும் பேட்டரி வாகனங்களின் ஒலிப்பான்கள் என எல்லா சத்தங்களுக்குமிடையே, மனப்பேய்களின் இறைச்சல்களுக்கு நடுவே அமைதி கொண்ட புத்தனைப் போல துயில்கிறான் இம்மனிதன் சென்ட்ரல் ரயில்நிலைய 10 ஆம் நடைமேடையின் நடுவே, ஒரு கொசுவலையைக்  கட்டிக்கொண்டு…. (READ MORE)

பொரி கடலை

wp-1684470137111.jpg

80 அடி நீளத் திமிங்கிலமும் 9 ஒளி ஆண்டுகள் தூர எல்பி 791-18 கிரகமும்

சோழமண்டல கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலத்தை கட்டி போராடி இழுத்துச் சென்று ஆழ் கடலில் விட்டனர் நூறு மீனவர்கள் என்றொரு செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது சென்ற வாரம்.  ‘நூறு மீனவர்களா!’ என்று விவரம் பார்த்ததும் வியப்பு வந்தது. திமிங்கிலத்தின் நீளம் 80 அடி! நமக்குப் பத்துக் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கடலுக்குள் என்னென்னவோ இருக்கின்றன. கடல் என்பது… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , , , ,

wp-1684430993390.jpg

வளர்ச்சிப் பாதை – தொடர்ந்த வளர்ச்சி…

நம்மை நேரியத்தில் வைத்திருக்கும் ஓரிடத்தில், நமக்கு உற்சாகமும் தெளிவும் தரும் ஓரிடத்தில் நம்மை இணைத்துக்கொள்வது நமக்கு பெரும் வளர்ச்சியைத் தந்து நம்மை தொடர்ந்து வழி நடத்தும். மலர்ச்சி மாணவர்களுக்கு மாதாமாதமாக தொடர்ந்து வரும் ‘வளர்ச்சிப் பாதை’ அதை செய்துகொண்டே இருக்கிறது. கடந்த வாரம் திருவண்ணாமலையில், இந்த வாரம் புதுச்சேரியில் நிகழ்ந்த ‘வளர்ச்சிப் பாதை’கள் வந்திருந்த மலரவர்களுக்கு நிறைய… (READ MORE)

MALARCHI

, , , ,

wp-16835722145804110226050559937873.jpg

சிங்கபுர நாடு – காடவர் கோன் கோட்டை

ராஜராஜனை சிறைபிடித்து கைதியாக வைத்த இடம் எது? ‘என்னாதூ!! ராஜராஜனை தோக்கடிச்சி, சிறைப்படுத்தி கைதியா வச்சிருந்தாங்களா!? எப்பேர்பட்ட வீரன் அவர்!’ என்று கேள்வி எழுகிறதா?  கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன். ‘பாதுஷாபாத்’ தெரியுமா? சரி ‘சிங்கபுர நாடு’ எங்கிருக்கிறது தெரியுமா?  ராணி மங்கம்மா முகலாயர்களோடு சேர்ந்து மராத்திய சிவாஜியின் படைகளை எதிர்த்தது எந்த இடத்திற்காக என்று தெரியுமா?… (READ MORE)

Paraman Touring

, , , , , , , , , , , ,

‘ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச் சத்து…!’ : பரமன் பச்சைமுத்து

‘ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச் சத்து…!’ : கேள்வி: பழைய சோறு பற்றி உங்களுடைய பதிவு ஒன்றில் பார்த்தேன். நானும் உண்ணலாமா? பதில்: நாம் உண்ணும் உணவை செரிப்பதற்கு பாக்டீரியாக்களின் உதவி தேவை. நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் என்றழைக்கப்படும் இவை நம் வயிற்றில் இருந்து கொண்டு தங்கள் பணியை செவ்வனே செய்து நமக்கு உதவுகின்றன…. (READ MORE)

பொரி கடலை

,

என் பள்ளி நாட்களில் ரசித்த அந்தத் திரைப்படத்தை…

என் பள்ளி நாட்களில் பரமகுரு போன்ற தோழர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட,  பிறகு இரண்டாம் கட்ட வெளியீடாக சிறு நகரங்களில் திரையிடப்பட்ட போது கீரப்பாளையம் விஆர்கே டூரிங் டாக்கீஸில் பாலசரவணனின் பரிந்துரையில் அவனோடு மணக்குடியிலிருந்து சைக்கிளில் போய் நான் பார்த்த படம் – ‘ஊர்க்காவலன்’ ‘அந்த வானத்துல இருக்கற சூரியன் எழறதுக்கு முன்னாடி எழுந்து, ஆ… ஜில்..சக்…… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

wp-1682706185115.jpg

பொன்னியின் செல்வன் 2′ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சுந்தர சோழரே பழுவேட்டரையர்களின் சிறையில் இருக்கிறார் என்று பேச்சுகள் நிகழும் வேளையில் சுந்தர சோழரால் ஈழத்திலிருக்கும் இளவல் அருண்மொழியை சிறை செய்து வர கட்டளை பிறப்பிக்கப்பட்டு, அப்படி வந்த கலம் புயலில் அடிபட்டு உடைந்து  அருண்மொழி கடலில் மூழ்கினார் என்பதோடு முடிந்த ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ன் தொடர்ச்சியாக விரிகிறது இப்போது வந்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , , , , ,

புலோத்துங்கன் கால செப்பேடுகள் சீர்காழியில் கிடைத்தவை

கேள்வி: சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் கிடைத்துள்ள சிலைகள், தேவார செப்பேடுகளைப் பற்றி? பரமன்: பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆய்வு செய்யப்பட வேண்டியவை. பல புதிய செய்திகள் கிடைக்கலாம். இந்த செப்பேடுகள் பற்றி நாம் சொல்வது இருக்கட்டும். நாம் மிகவும் மதிக்கும் வரலாற்று ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் சொல்லியிருக்கும் இரண்டு தகவல்களைக் கவனியுங்கள். “சிதம்பரம் கோயிலில் குலோத்துங்கச் சோழனிடமும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை : 38வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (சித்திரை மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் இன்று மதியம் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை24.04.2023( நாகர்கோவிலிலிருந்து)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

தெற்கில் வாழும் குமரியடி பாப்பா

நான்காம் வகுப்புப் படிக்கும் போது, நண்பர்களுக்கு பொருள்களை பரிசாகத் தரலாமென்ற பிரஞ்ஞை கூட எனக்கு இல்லாத அவ்வயதில், பலராம ஐயர் வீட்டு நட்ராஜ் ‘சிவா! எங்கப்பா வாங்கிட்டு வந்தாங்க. இந்தா இது உனக்குதான்!’ என்று கண்ணாடியும் மரச்சட்டமும் போடப்பட்ட, ஒரு கையளவு உயர அகலம் கொண்ட அம்மன் படமொன்றைத் தந்தான். மணக்குடியிலிருந்து சபரிமலைக்குப் போகிறவர்களின் குருசாமியாக… (READ MORE)

Paraman Touring

, , , , , , ,

wp-1681652196139.jpg

‘காக்கை செய்யும் சேட்டை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தெலுங்கானாவில் நகரமும் இல்லாத கிராமும் இல்லாத கலவையான, காலகாலமான நம்பிக்கைகளில் ஊறிப் போய் இருக்கும் ஊரொன்றில் வாழும், வாய் துடுக்கும் குதூகலமும் நிறைந்த முதியவரான நிலக்கிழார் கொமரய்யா திடீரென இறந்து போய் விட, அதைத் தொடர்ந்து இறுதிச்சடங்குகள் எரியூட்டுதல் எல்லாம் முடித்த குடும்பத்தினர் அதன் தொடர்ச்சியான சடங்காக ‘பிண்டம் வைக்கும்’ உணவை காக்கை உண்ண மறுக்கிறது…. (READ MORE)

Manakkudi Talkies

, ,

எதிர்பார்க்கிறேன்

நேற்று ஐபிஎல் டிக்கெட் பற்றி அதிமுக அமைச்சர் கேட்டதற்கு தந்த பதிலால் மட்டுமல்ல, ‘மாவட்டம் தோறும் விளையாட்டு திடல்’ என்ற அறிவிப்பால் மட்டுமல்ல, பதவி ஏற்றதும் ஒரிசா – பீகார் – வங்காளம் – டெல்லி என்று போய் முன்மாதிரிகளை பார்வையிட்ட போதே, மோடியை சந்தித்து கோரிக்கை வைத்த போதே தெரிந்து விட்டது உதயநிதி தன்… (READ MORE)

Politics

,

wp-1681210878363.jpg

பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு?

பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு?  சிறுவயதில் இந்தப் பெயரை என் அப்பா வைத்திருந்த வாரியார் எழுதிய ‘சிவனருட்செல்வர்’ நூலில் படித்த போதே பிடித்தது. ‘பொன் முகலி!’ ‘பொன்முகலி!’ என்று சொல்லிக்கொள்வேன். பலமுறை இந்த நதியை நீங்கள் கடந்து போயிருக்கக் கூடும். ( அதற்கு முன் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது. கேளுங்களேன்) …. கிமு 3102… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , , , , ,

wp-1679809970130.jpg

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

சூரியன் ஓர் அதிசயம்! 152 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு இங்கேயிருக்கும் நமக்கும், செடிக்கும், கொடிக்கும், உயிரினங்களுக்கும் மொத்த பூமிக்கும் ஆற்றலை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறது. அட, ஆமாம் சந்திரனுக்கும் கூட! ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வலம் வருவதாக கொள்கிறது சமய நம்பிக்கை. அதையொட்டியே சூரியனின் அம்சம் பெற்ற சூரியனின்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

wp-1679136635004.jpg

‘நண்பகல் நேரத்து மயக்கம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தமிழ் தெரியாத, தமிழ்நாட்டு உணவே பிடிக்காத, பேருந்து பயணத்தில் கூட தமிழ்ப்பாடலை கேட்க சகித்துக்கொள்ள முடியாத, மது, புகை போன்ற பழக்கங்களை வெறுக்கும் கேரள நாட்டு ஜேம்ஸ் தன் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக மனைவி மகன், உற்றார், உறவினர், ஊர்க்காரர்களோடு வாகனம் ஒன்றை அமர்த்திக்கொண்டு கேரளாவிலிருந்து தமிழகத்தின் வேளாங்கண்ணிக்கு  வருகிறார்.   சாலைப் பயணத்தில் நண்பகல் நேரத்தில்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

wp-1678883705545.jpg

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி…

‘ஹாலாஸ்ய மகாமித்யம்’ என்றொரு வடமொழி நூல் இருக்கிறதாம். நீங்களாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? வியாசர் எழுதிய ‘ஸகந்த புராணம்’ பற்றி ? (நீங்களும் என்னை மாதிரிதானோ!ம்ம்!)சரி, ஏ பி நாகராஜன் இயக்கி நடிகர்திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த ‘திருவிளையாடல்’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? ‘பரமன், இது எல்லாத்துக்கும் என்ன சம்மந்தம்?’ என்கிறீர்களா?  இது அனைத்தையும் சம்பந்தப்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம், மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

உலகின் முதல் சிவாலயம்

அம்மா – ஆலய தரிசனம் : 4 பாண்டியர்களின் போற்றுதலிலும், ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் அரவணைப்பிலும் இருந்த ஆலயமும், உலகின் முதல் சிவன் ஆலயம் என்றும், திருவாசகம் இயற்றிய பின்னர் திருவண்ணாமலை, திருவிடைமருதூர் வழியே சிதம்பரத்தில் போய் கலப்பதற்கு முன்பு முதன் முதலில் மாணிக்கவாசகர் வந்திருந்த ஆலயம் என்றும் திருவாசகத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டது எனப்படும்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம், மு பச்சைமுத்து அறக்கட்டளை

,

wp-16787896261027067601127805240161.jpg

போற்றி என் வாழ்முதலாகிய பொருளே…

கொற்கை பாண்டியர்கள் எல்லாம் முடிந்து காலம் உருண்டு மதுரை பாண்டியர்கள் செழித்திருந்த 9 ஆம் நூற்றாண்டு. பாண்டிய நாட்டை சிறப்புறச் செய்யவும் பாதுகாப்பு கருதியும் ஒரு முக்கிய முடிவு எடுத்து அமைச்சரை அழைத்தார்.…. (கொஞ்சம் இருங்க. 9 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்திலேருந்து அப்படியே பிரிட்டிஷ் இந்தியா காலத்துக்கு போய், ஒண்ண சொல்ல… (READ MORE)

Uncategorized

, , , , , , , , ,

wp-1678433210475.jpg

ஒரு ஜீவன்தான், உன் பாடல்தான்…

கணவனை புலியடித்துக் கொன்று விட, காடும் காட்டு வாழ்க்கையும் கசந்து போன காட்டுநாயக்கன் பழங்குடி இன பெல்லி, அதே முதுமலை புலிகள் காப்பக மலை காப்புக்காட்டுப் பகுதியில் இருக்கும் பொம்மனோடு இணையத் தொடங்குகையில் அவர்களது வாழ்வுக்குள், மின்சார வேலியில் அடிபட்டு பெற்றோர்கள் இறந்து போய், என்ன ஏது என்று புரியாத சோகத்திலிருக்கும் சிறு ரகு வருகிறான். … (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

சுந்தரர் நின்ற மகிழம் மரத்தடியில்…

எப்போதும் மார்பில் தொங்கும்படி லிங்கம் கட்டிக் கொண்டு தினமும் அதற்கு பூசனைகள் வழிபாடு செய்பவர் என் அம்மா. ‘அம்மா, சுந்தரமூர்த்தி நாயன்மார் சங்கிலி நாச்சியாரைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு சிவன் முன் சத்தியம் பண்ணது எந்த மரத்தடியில?’ ‘மகிழம்… மகிழம் மரத்தடியில!’ ‘அங்கதான் போறோம் இப்போ! திருவொற்றியூர் போறோம்!’ …. வள்ளலார், ராமலிங்கமாக தன் அண்ணன் வீட்டில்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ… : மலர்ச்சி ஃபவுண்டேஷன் + பிஎன்ஐ கோரல், புதுச்சேரி

‘கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை!’ என்று எழுதிய ஒளவை, இன்றிருந்தால், ‘கொடிது கொடிது புற்று கொடிது, அதனினும் கொடிது குழந்தைகளுக்கு புற்று!’ என்று எழிதியிருப்பார். என்ன எது என்று தங்களைப் பற்றியே தனக்கு வந்துள்ள நோய் பற்றியோ விவரம் அறிய முடியா குழந்தைகளுக்கு புற்று வந்துள்ளதை காண்பது கொடுமை. பெங்களூருவிலிருந்து,… (READ MORE)

MALARCHI Foundation

, , , , , , , , , ,

தகதக தகதகவென ஆடவா…

‘தகதக தகதகவென ஆடவாசிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…’ என் தந்தை மேடைகளில் அதிகம் பாடிய பாடல் இது. சிவாஜி கணேசனுக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ மேடை நாடகம் போல, என் தந்தைக்கு ‘காரைக்கால் அம்மையார்’.  1970களின் இறுதியிலேயே ஒரு வில்லுப்பாட்டு இசைக் குழுவைத் தொடங்கி சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்தார் ஆரம்பப் பள்ளி ஆசிரியரான என் தந்தை. கீழமணக்குடி… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 36வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (மாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை28.02.2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை

வைக்கோல் உருளை

‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்தெல் என்று யானை கட்டிப் போரடித்த…’ என்று சங்கப்பாடல் குறித்தது போய், ‘ஆட்கள் வைத்துப் போரடித்தால் அல்லோலகல்லோலப்படுவோமென எந்திரம் வைத்து நெல்லறுக்கும் காலமிது!’ என்றாகிப் போனது இன்று. மணக்குடி போன்ற ஊர்களில் இரு வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன நெல் அறுவடைக்கு. வளர்ந்த கதிர்களை அப்படியே அறுத்து உள்ளிழுத்து சுழற்றியடித்து  நெல்மணிகளை… (READ MORE)

பொரி கடலை

முன் உழைப்பு

‘ஜக்கியை பதற வைத்து விட்டார் சமஸ்!’ ‘சமஸின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் தந்துள்ளார் ஜக்கி!’ என்றெல்லாம் இரு வகையாக செய்யப்படும் விவாதங்களுக்கு வெளியே நின்று ஒன்றைப் பார்க்கிறேன். ஒருவரை நேர்காணல் செய்யும் முன் அவரைப் பற்றி மேய்ந்து ஆராய்ந்து விவரம் சேகரித்துக் கொண்டு போவது மொத்த நேர்காணலையும் சத்தானதாக மாற்றிவிடும். கேள்விகளும் ஆழமாகும், கடைவதால் வரும்… (READ MORE)

பொரி கடலை

, ,

wp-16770425222136412632115368106978.jpg

துபாய் டெய்ல் பீஸ்: (நிறைவுப் பகுதி)

துபாய் – டெய்ல் பீஸ்: (நிறைவுப் பகுதி) வாகனங்கள் நிறைந்த துபாயின் சாலையோரங்கள், சங்கர் படத்தின் பாடல் காட்சிகளில் வருவது போல வண்ண வண்ண மலர்களும் மலர்க் கொத்துகளும் நிறைந்து மிக அழகாக காணப்படும்.  உற்றுக் கவனித்தால், ‘வேரில்லாமல் எப்படி இவை!’ என்று அதிர்வீர்கள்.  வேறொரு இடத்தில் தோட்டத்தில் பூச்செடிகளை வளர்த்து, மலர்க்கொத்துகளை மட்டும் வெட்டிக்… (READ MORE)

Paraman Touring, Uncategorized, அரேபிய அனுபவங்கள்

, , , , , , ,

அரேபிய அனுபவங்கள்

‘டீ ஒரு ரூவா, பெட்ரோல் ரெண்டு ரூவா, ஆனா தண்ணி ரெண்டரை ரூவாயா!!’ துபாயில் இறங்கியதும் இப்படி அதிர்வீர்களென்றால், துபாய் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளவே வேண்டும்! ….. ஏழு நாடுகள், ஏழுக்கும் ஏழு மன்னர்கள், ஏழு ஆட்சிகள். ஆனால் ஏழு நாடுகளுக்குள்ளும் ‘ஒரே ரத்தம்’ சொந்தம். எழுநாட்டுக் குடிகளுக்கு தங்கு தடையில்லை. அபுதாபி, துபாய்,… (READ MORE)

Paraman Touring, அரேபிய அனுபவங்கள்

குடியேற்றம் நுழைவு

நுழைவு அனுமதி பெற குடியேற்றம் எனப்படும் இமிக்ரேஷன் துறையில் நுழையும் போது பலருக்கும் பலவித அனுபவங்கள் உண்டு நாடுகளைப் பொறுத்து. கமல்ஹாசன் போன்ற நடிகரையே நான்கு மணி நேரம் கனடாவில் உட்கார வைத்தது உண்டு. அமெரிக்காவின் கதவு வரை போய்விட்டு அனுமதி கிடைக்காமல் ‘நோ’ என்று முத்திரை குத்தப்பட்டு விமானத்தில் திருப்பியனுப்பப் பட்டவர்களும் உண்டு. மருத்துவத்திற்காக… (READ MORE)

Paraman Touring, அரேபிய அனுபவங்கள், பொரி கடலை

மாறிவிட்டது மயிலாடுதுறை. ஆனால்…

மயூர நாதர் கோவில், மகாதானத் தெரு, மணிக் கூண்டு, இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திப் போய் தொட்டு விட்டு திரும்பவும் இக்கரைக்கே ஒரே மூச்சில் வந்துவிடலாம் என்னுமளவிற்கான 100 அடி சாலையை விட சிறிய காவிரி ஆறு, ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 400 நாட்கள் ஓடிய அந்த திரையரங்கம், வாழ்வில் முதன் முதலில் ‘ஸ்டோன்வாஷ் பேண்ட்’ வாங்கப் போன… (READ MORE)

AVCCP

, ,

போய் வாருங்கள் பாடகியே

‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்தரிக்கா…’என் தந்தை போகிற போக்கில் பாட அவர் வழியாகவே அந்தப் பாடலை முதன் முறை கேட்டதாக என் நினைவு. ரேடியோவும் இசைத்தட்டுகளுமே இருந்த டேப் ரெக்கார்டர் இன்னும் வந்திராத அந்த மணக்குடி காலங்களில், இந்தக் குரல் கேட்டே வளர்ந்தோம். மஞ்சள் நீராட்டு, திருமணம் என நற்காரியங்களில் பந்தலிட்டு,… (READ MORE)

பொரி கடலை

,

அட்சதை…

திருமணத்தில் மணமக்கள் மீது தூவி வாழ்த்த தரப்படும் அட்சதை தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிய சிறுவன் ஒருவனைப் பார்த்தேன் நேற்று காலையில் நிகழ்ந்தவொரு திருமணத்தில். கையில் தந்ததும் அப்படியே அதை வாயிலிட்டுத் தின்று நம்மை சிரிக்க வைத்துவிட்டான் அவன். சிரிப்போடு, ‘இவனது வயதில் நாம் என்ன செய்தோம் அட்சதையை கையில் வைத்துக் கொண்டு?’ என்று… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 35வது அன்னதானம்

 இன்று மிருகசீரிடம் (தை மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க!  பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை01.02.2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

wp-1674269527392.jpg

பூம்புகார் சிந்துசமவெளிக்கும் முந்தைய உலகின் முதன் 15,000 ஆண்டுகள் பழமையான நகரம்! : ஆய்வறிக்கை

2,500 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னர்களால் நிறுவபட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மறைந்ததாக சொல்லப்படும் பூம்புகார் பற்றிய அகழ்வாராய்ச்சி ஆய்வு திட்ட குழுவின் புதிய தகவல் விழிகளை விரிய வைத்து வாயைப் பிளக்க வைக்கிறது. பூம்புகார் நகரத்தின் வயது 15,000 ஆண்டுகள்!!!! 15,000 ஆண்டுகள் பழமையான நகரம், 70 – 80 கப்பல்களை நிறுத்துமளவிற்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , ,

வெள்ளாடு vs கருப்பு ஆடு

ஓர் ஆடு நான்கு கால்களில் இருக்கும் இயல்பான நிலையிலிருந்து மாறி பின்னங்கால்களை தரையில் ஊன்றி இருத்தி ஒரு குதிரையைப் போல மெலெழும்பி முன்னங்கால்களை காற்றில் நிறுத்தினால்… இரண்டு காரணங்கள். ஒன்று – மகிழ்ச்சியாகவும் அதீத சக்தியோடும் இருக்கிறது. இரண்டு – வேறோர் ஆட்டை சண்டைக்கு அழைக்கிறது. (புதிர்: படத்தில் இருக்கும் அந்த ஆடுகள் என்ன வகை… (READ MORE)

Uncategorized

மு பச்சைமுத்து குருபூசை

🌸 இன்று மிருகசீரிடம் (மார்கழி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும், (சிதம்பரம்) புவனகிரி வள்ளலார் தரும சபையிலும், மு பச்சைமுத்து அவர்களின் குருபூசை நிகழ்வுகள், திருமுறை முற்றோதல், சிவனடியார்களை போற்றி உணவளித்தல் ஆகியவை… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , ,

wp-1672893421062.jpg

அப்பா…

அப்பா… தவறு சரி பார்க்காமல்தன் பிள்ளைகளுக்காகஎதையும் செய்யும் சீவன் இதயத்திலிருந்து எழும்பும் அன்பைகழுத்துப் பகுதியில் கண்டிக்கும் வார்த்தையாக மாற்றியனுப்பும் கால எந்திரம் தனக்கிணை ஒருவரும் தரணியிலேயேயில்லையென்று தலைகனத்து இறுமாந்திருந்தாலும்தன் பிள்ளைகளிடம் தன்னையே பாரக்கும் முரண் பெற்றோர் வைத்த தன் பெயரை காலாகாலத்துக்கும் நிற்கும் படிபிள்ளைகளின் நெற்றியில் எழுதிப் போகும் தலை (தலைப்பெழுத்து) எழுத்தாளன் வானகம் புகுந்த… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

wp-1672289809192.jpg

அட காக்கையே!

சோறு வைத்தால் மறுத்து ஓடும் நொறுக்குத்தீனி வைத்தால் ஓடி வரும் சிறு பிள்ளையைப் போலவே செய்கிறது தினமும் காலையில் பால்கனியில் பிஸ்கட் துண்டுகள் கொத்தியுண்ண வரும் காக்கை. வைக்கும் சில பிஸ்கட் துண்டுகளை தின்றுவிட்டு அடுத்த நாள் மட்டுமே வரும் இப்பறவை, பிஸ்கட் தீர்ந்துவிட்டதே வெறும் (கையோடு!) அலகோடு அனுப்பக்கூடாதேயென்று சில துண்டுகள் மந்தைவெளி ‘சுஸ்வாத்’… (READ MORE)

Self Help, பொரி கடலை

,

Experience PALLAVAS with PARAMAN PACHAIMUTHU

‘முழுநாள் பரமனோடு!’ என்ற உற்சாகத்தில் அவர்களும், ‘களப்பிரர்களின் முடிவிலிருந்து அபராஜிதன் வரையில் இல்லையென்றாலும், இது போன்ற வரலாற்றுப் பதிவு இடங்களை எப்படிப் பார்க்க வேண்டுமென்றாவது அனுபவம் மூலமாக கொடுத்து விட வேண்டும்!’ என்ற அடிப்படை எண்ணத்தில் நானும் என மலர்ச்சி வாலண்ட்டியர்கள் நாங்கள் முப்பது பேர் மாமல்லபுரம் இன்பச் சுற்றுலா போனோம். இருட்டு விலகாத அதிகாலையில்… (READ MORE)

Paraman's Program

ஆர் எம் ராஜேந்திரன் மணிவிழா

பூசம் நட்சத்திரம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுபகிருது ஆண்டு பிறந்தார் இராம. இராஜேந்திரன்.  எதற்கு இது என்பதை சொல்லும் முன் ஒரு சங்கதியைப் பார்த்துவிட வேண்டியிருக்கிறது. அறுபது நாழிகைகள் கொண்டது ஒரு நாள்,  அறுபது ஆண்டுகள் கொண்டது ஒரு சுழற்சி என்பது இங்கு காலகாலமாக நம் நாட்காட்டிகளும் பஞ்சாங்கங்களும் கொள்ளும் கணக்கீடு…. (READ MORE)

பொரி கடலை

சபாஷ் சென்னை மாநகராட்சி!

அண்ணா நகரின் வீதிகளில் காண்கிறேன். சென்னையில் பிற பகுதிகளில் வாழும் நண்பர்கள் மூலமும் அறிகிறேன். மாண்டஸ் புயலில் இரவு நிறைய மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் விழுந்து விட்டன. ஆனால், முக்கிய வீதிகளில் அதிகாலையே பணிகளைத் தொடங்கி மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை கூடுமானவரை இயல்புக்குக் கொண்டு வந்து அசத்தியிருக்கிறது சென்னைப் பெருநகர மாநகராட்சி! 👏👏👏… (READ MORE)

Politics

, , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை 34வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (கார்த்திகை மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் கனமழையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை09.12.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

முதலை இருக்கு, பாத்து…

‘முதலை இருக்கு, முந்தா நாள் குளிச்சிட்டு இருந்த பசங்களை இழுத்துட்டு போயிருச்சு. பாத்து பரமன்! எறங்க வேண்டாம்!’ என்று எச்சரித்தார் உள்ளூர்வாசியும் கிராமநிர்வாக அலுவலருமான அன்பு நண்பர். ….. சோழதேசத்தின் தானாதிகாரி பெரிய பழுவேட்டரையர் பழுவூரிலிருந்து படகில் பயணிக்கும் போது கரைபுரண்ட வெள்ளத்தின் நீர்ச்சுழலில் சிக்கி நீரில் அடித்துச்செல்லப்பட்டார் என்று கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’… (READ MORE)

பொரி கடலை

wp-1669082489126.jpg

போய் வாருங்கள் அவ்வையாரே!

‘பொதுவெளியில் மக்கள் பணி, மொழிப் பணி செய்பவர் எப்படி இருக்க வேண்டும்?’ என்று நானே கேட்டுக் கொண்ட என் கேள்விக்கு நாமே கொடுத்துக் கொண்ட உதாரணம் ‘ஐயா அவ்வை நடராசன்’ .  கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா என எதிரெதிர் கட்சிகள் ஆட்சிக்கு வந்த போதும் மொழித்துறை, உலகத் தமிழ் மாநாடு என பெரும் செயலாற்றும் உச்சிப்… (READ MORE)

பொரி கடலை

,

ஒற்றுமை உள்ளே வேண்டும்

நெல்லை ரூபி மனோகரன் கோஷ்டிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கும் நடந்த சண்டை தாக்குதல் நிலைக்குப் போய்விட்டது. கே எஸ் அழகிரியை மாற்ற வேண்டும் என்று எதிர்த்து ஈவிகேஎஸ் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி கார்கேவிடம் முறையிட தில்லிக்கு சென்றிருக்கிறது. எதிலும் சேரமாட்டேன் என தனியாக நிற்கிறது சிதம்பரம் கோஷ்டி. ராகுல் காந்தி ‘ஒற்றுமை நடைபயணம்’ செய்வதற்குப் பதிலாக… (READ MORE)

Politics

wp-1668487305219.jpg

வாட்ஸ்ஆப் வொண்டர்ஸ்!

நாளெல்லாம் கடும் வேலஅந்தி சாயவும் அசந்து தூங்கிட்டேன் காலை கண்முழிச்சிகாய்ஞ்சு போய் நிக்கறேன் நல்லவர் ஒருத்தரு ஆரம்பிச்சாருநடுராத்திரியில க்ரூப் ஒண்ணு அவராவே முடிவெடுத்துஅல்லாரையும் சேத்தாரு ஆரோடயோ சண்டையாம்அவராவே போய்ட்டாரு வெளிய காலை கண்முழிச்சிகாய்ஞ்சு போய் நிக்கறேன் என்ன க்ரூப்புஎதுக்கு இந்த க்ரூப்பு எதுவும் தெரியலஎவர்ட்ட கேப்பேன்! ‘ஐயா!  யாருய்யா  நீங்கல்லாம்?’ – பரமன் பச்சைமுத்துமணக்குடி15.11.2022 #Paraman… (READ MORE)

ஆ...!, கவிதை