Author Archive: paramanp

தவறு தவறுதானே

அவை தொடங்குகிறது. அவைத் தலைவர் பேசத் தொடங்குகிறார். அதற்குள் எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து வேறொரு பிரச்சினை பற்றி பேச வேண்டும் என்று அனுமதி கேட்கிறார். ‘நிச்சயம் நேரம் ஒதுக்கப்படும். அதற்கு முன்பு இந்த முறைமைகளை முடித்து விடுவோம். உங்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்’ என்கிறார். ‘முடியாது, இப்பவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்!’ என்று கூச்சலிடுகிறார். ஏற்கனவே… (READ MORE)

Politics

முக்கியமானதாகப் பார்க்கிறேன்

சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் அதே கையோடு, சுதந்திரத்தின் 75வது ஆண்டை போற்றும் வகையில் காமராஜர் – சிவானந்தா சாலையில் நினைவுத்தூண் ஒன்றை திறந்து வைத்தது இப்போதைய அரசியல் சூழலில் முக்கியமானது என எண்ணுகிறேன். ‘இது வெறும் கல்லாலும் சிமெண்ட்டாலும் கட்டப்பட்டதல்ல, நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தம், சதை, எலும்பினால் கட்டப்பட்டது என்பதை… (READ MORE)

Politics

wp-1629016304303.jpg

குழந்தைகளோடிருக்கையில்…

குழந்தைகளோடிருக்கையில் இருக்கும் இடத்திலிருந்தே வேறோர் உலகிற்கு உடனடியாகக் கடத்தப்படுகிறோம். ஒரு குழந்தையைத் தூக்கும் போது உண்மையில் நாமே தூக்கப்படுகிறோம். (திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலை பயண வழி உணவக வளாகத்தில் மகிழ்ந்திருந்த தருணங்கள்) #Children #Dhuruvan பரமன் பச்சைமுத்து15.08.2021

பொரி கடலை

, , ,

வரலாற்று சிறப்பான நகர்வு

கஸ்தூரி ரங்கன் பரிந்துரைத்த  புதிய கல்விக் கொள்கை மொத்தமும் தேவையில்லை என்று நேற்று எதிர்க்கட்டியாகப் போராடி விட்டு, இன்று புதிய கல்வி கொள்கையை நோக்கி திட்டம் என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. நல்ல செயல். நல்ல மாற்றம். புதிய கல்விக் கொள்கை தேவை.  நல்ல நகர்வு. 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்பதை… (READ MORE)

Politics

,

கலக்குது கல்லக்குடி பேரூராட்சி!

பல ஆண்டுகளாக மலை போல் கொட்டப்பட்டு குப்பைக் கிடங்காக பாழ்பட்டுக் கிடந்த 1.30 ஏக்கர் பகுதியை வளமீட்பு பூங்காவாக மாற்றி மண்புழு உரம், இயற்கை உரம் தயாரித்து விற்று விவசாயிகளுக்கும் உதவி செய்து வருவாயையும் பெருக்கி கலக்கியிருக்கிறார்கள் கல்லக்குடி பேரூராட்சியினர். மீன் கழிவுகளிலிருந்து மீன் அமிலம், முட்டை ஓடுகளிலிருந்து கல்ரோஸ் உரம் தயாரித்து விற்பது, இயற்கை… (READ MORE)

பொரி கடலை

, ,

வெள்ளை அறிக்கை – எங்கு நிற்கிறோம்!

சி பொன்னையன் முன்பு செய்ததைப் போல, ஆந்திர, பஞ்சாப் மாநிலங்கள் வழியில் வெள்ளை அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக நிதியமைச்சர். ஒவ்வொருவர் தலை மீதும் 1.10லட்சம் கடன் உள்ளது, மின்சார வாரியம், சென்னைக் குடிநீர், தமிழ்நாடு குடிநீர் வாரியங்கள், அரசுப் பேருந்து கழகம் ஆகியவை பெரும் நட்டத்தில் உள்ளது என்கிறது அவர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை. நேற்று… (READ MORE)

Politics

இந்தியாவும் மேலெழட்டும்

முதல், இரண்டு, மூன்று என மூன்று இடத்தையும் பிடித்து அசத்திய  ஜமைக்கா வீராங்கனைகளின் ஓட்டத்தை பார்த்தவன், நீரஜ் சோப்ராவின் அதகளத்தை தவற விட்டு, மறு ஒலிபரப்பிலேயே பார்த்தேன். சிரஞ்சீவி படங்களில் பார்ப்பதைப் போன்ற ஒரு காட்சியை உண்மையாகவே நிகழ்த்திக் காட்டிவிட்டார் நீரஜ் சோப்ரா.  தான் பணிபுரியும் ராணுவத்திற்கும் மொத்த இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்து இளைஞர்களின்… (READ MORE)

பொரி கடலை

, ,

தலமரக்கன்றுகள் – நல்ல திட்டம்

👏👏 ‘கோயில்களில் 1 லட்சம் தல மரக்கன்றுகள் திட்டம் – தமிழக அரசு’ இதைத்தான் சில ஆண்டுகளாக சிதம்பரம் பகுதியில் செய்து வருகிறோம் நான் பங்கேற்கும் ஓர் அமைப்பின் மூலமாக. கோவில் குளம் தூர்வாருவதும் தல விருட்சங்களை காப்பாற்றி அதிக அளவில் வைப்பதும் அதன் முக்கிய பணிகள். இதை அரசே செய்வதால், மாநிலம் முழுக்க இது… (READ MORE)

Politics

,

கண்ணப்பர் நிகழ்வு நடந்த ஊர்

சென்னைக்கு வந்திருந்த அந்நாட்களில் ஞாயிறு அல்லது தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறை வந்தால் செந்தில் பாபு போன்ற நண்பர்களோடு சேர்ந்து மேக்ஸ் 100 ஆர் பைக்கில் நெடும்பயணம் செய்யக் கிளம்பிடுவது உண்டு. ஆந்திர மாநிலத்தின் காளகஸ்தி அந்நாளைய அடிக்கடி தேர்வுகளில் ஒன்று.  நெடும் பயணத்திற்கு தோதான தூரத்தில் ஓர் இலக்கு வேண்டும், குறைந்த செலவில் வெளிமாநிலத்திற்கு… (READ MORE)

பொரி கடலை

wp-1627654482828.jpg

மாலை மஞ்சள் வெயிலும்…

மாலை மஞ்சள் வெயிலும்நீள நீல வானும்அறுவடை முடிந்த அன்னவயலும்ஓங்கி வளர்ந்த ஒத்தப் பனையும்ஆளரவமே இல்லா வெளியில்ஆட்காட்டி குருவியின் ஆரவாரமும் எனவாய்க்காங்கரையில் வாயெல்லாம் பல்லாக நான் கொண்டது நாட்படு தேறல் அனுபவம்! பரமன் பச்சைமுத்துமணக்குடி30.07.2021 Manakkudi Keezhamanakkudi Vayal Chakrasana Yoga

பொரி கடலை

, , ,

நல்ல மடைமாற்றம்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம் என்றொரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.  இந்தத் திட்டத்தைத் தாண்டி வரவேற்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது இதன் பின்புலத்தில். தனியார் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகத்திற்கும் மக்களுக்கும் என்று குறிப்பிட்ட அளவிற்கு ஒரு நல்ல தொகையை ‘சமூகப் பொறுப்பு நிதி’ என்று ஒதுக்கி நற்செயல்களை செய்கின்றன. சென்னை நகரின்… (READ MORE)

Politics

, , , ,

நல்ல மடைமாற்றம்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம் என்றொரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.  இந்தத் திட்டத்தைத் தாண்டி வரவேற்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது இதன் பின்புலத்தில். தனியார் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகத்திற்கும் மக்களுக்கும் என்று குறிப்பிட்ட அளவிற்கு ஒரு நல்ல தொகையை ‘சமூகப் பொறுப்பு நிதி’ என்று ஒதுக்கி நற்செயல்களை செய்கின்றன. சென்னை நகரின்… (READ MORE)

Politics

, , , ,

நல்ல மடைமாற்றம்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம் என்றொரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.  இந்தத் திட்டத்தைத் தாண்டி வரவேற்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது இதன் பின்புலத்தில். தனியார் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகத்திற்கும் மக்களுக்கும் என்று குறிப்பிட்ட அளவிற்கு ஒரு நல்ல தொகையை ‘சமூகப் பொறுப்பு நிதி’ என்று ஒதுக்கி நற்செயல்களை செய்கின்றன. சென்னை நகரின்… (READ MORE)

Politics

, , , ,

wp-1627380516810.jpg

‘சார்பட்டா பரம்பரை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பிரித்தானியர்கள் இந்த மண்ணை விட்டுப் போன பின்னும், அவர்கள் விட்டுச் சென்ற ‘ரோஸமான ஆங்கில குத்துச்சண்டை’, ‘ப்ளாக் டவுன்’ என்றழைக்கப்பட்ட அசல் மெட்ராஸான வடசென்னையை பல ஆண்டுகள் ஆட்சி செய்தது. மத்தியில் இந்திரா காந்தியும் மாநிலத்தில் கலைஞர் கருணாநிதியும் ஆட்சியிலிருந்த 70களில், ப்ளாக் டவுனில் பெயர் பெற்றிருந்த இரண்டு குத்துச் சண்டை பள்ளிகளுக்கிடையே (பரம்பரை, ‘க்ளான்’)… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , ,

தலையாலங்கானத்துப் போர் மற்போராம்!

தலையாலங்கானத்துப் போர் பற்றி பாடமாகப் படித்திருக்கிறோம். ஆட்சியில் இருப்பது சிறுவன்தானே என எண்ணி, சோழன் பெருநற்கிள்ளி, சேரன் சேரல் இரும்பொறை, வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் (பெயர்களை கவனியுங்கள்!) ஆகிய எழுவரும் படையெடுத்து வந்ததும், ‘தன் கால் கிண்கிணி களைந்து ஒண்கழல் அணிந்து, தன் முதற்போருக்குப் புறப்பட்ட அன்றுதான் பால் குடித்தலை… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

wp-1627152148127.jpg

‘வால்காவிலிருந்து கங்கை வரை’ : ராகுல சாங்கிருத்தியாயன் – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

8000 ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பயணித்து, விலங்குகளை வேட்டையாடி அப்படியே கடித்து பச்சை மாமிசத்தை உண்ட குகை மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து, கிபி 1942ல் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய ஃபாஸிஸ்ட் போர் விமானங்களை குறி வைக்கும் பாட்னாவின் மனிதன் ஒருவனின் காலம் வரையிலான நிகழ்வுகளை 20 புனைவுக் கதைகளின் வழியே விவரித்துப் போகிறது இந்நூல். ‘இது உண்மையல்ல’… (READ MORE)

Books Review

, , , , , , , , , ,

மெட்ராஸ்

‘மெட்ராஸ்’ சிறு வயதில் போதையேற்றிய எங்கோ தூரத்திலிருந்த, ‘ஒரு நாளு அந்த ஊரைப் போய்ப் பாக்கனும்!’ என்று ஆசையூற வைத்த ஒரு கனவு நகரம். ‘மெட்ராஸ்’ – பிரித்தானியர்கள் தங்கள் வசதிக்கேற்ப வழுவிச் சூட்டிய பெயர். மெட்ராஸ் சென்னையாக மாறிக்கொண்டிருந்ததை கண்ணெதிரே கண்ட தலைமுறையில் நானும் ஒருவன். மவுண்ட்ரோடு, ஜெமினி ஃப்ளை ஓவர், ஏவிஎம் ஸ்டுடியோ,… (READ MORE)

பொரி கடலை

நாடே கவனிக்கிறது உங்களை!

தொடங்குகிறது நாடாளுமன்றம். பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேளாண் மசோதா, மருத்துவக் கட்டமைப்பு, நீட் தேர்வு என விவாதங்களில் இறங்கி கேள்விகளால் அரசை திக்குமுக்காட வைக்கட்டும் எதிர்க்கட்சிகள். மக்களின் மீதான நாட்டின் மீதான உண்மையான அக்கறை அது. இவற்றைத் தவிர்த்து கூச்சல், அமளியில் ஈடுபட்டு செயல்பட தடுப்பது, ரஃபேலை எடுத்துக் கொண்டு கத்துவது என செயல்படாமல்,… (READ MORE)

Politics

காமாட்டிப் பய

நீச்சல் மட்டுமல்ல உலகமே தெரியாத சிறுபிராயத்தில், வெள்ளமென நிறைந்திருக்கும் நீர்நிலையில், குப்புற விழுந்து மூச்சு முட்டி பிரஞ்ஞையிழந்து வாழ்வின் விளிம்பிற்குப் போய் வந்திருக்கிறீர்களா? நான் போய் வந்திருக்கிறேன். தவறுதலாக நீருக்குள் குப்புற விழுந்து மூச்சு முட்டி நினைவு தப்பும் நிலையில் பிட்டம் தெரிய மிதந்த என்னை முதலில் பார்த்து  அஞ்சலாட்சி அம்மாதான் வாய்குழறி கத்தி தெரியப்படுத்தினார்…. (READ MORE)

Manakkudi Manithargal

, , ,

தட்டைப் பார்க்கையில்…

‘படக் படக்’கென குதிகாலில் அடிக்கும் ரப்பர் வார் செருப்பையும் அரைக்கால் சட்டையும் அணிந்து கொண்டு புவனகிரி கடைத்தெரு வழியே பெருமாத்தூர் ஆண்கள் பள்ளிக்கு அர்ச்சுனனோடும் சரவணனோடும் போன காலத்தில், ராமலிங்கசுவாமி மடத்திற்கெதிரே இருந்த உணவகப் பலகையில் ‘பூரி சாம்பார் 50 பைசா’ ‘பூரி கிழங்கு 60 பைசா’ என்று எழுதியிருந்தவையும், ‘என்னைக்காவது ஒரு நாள் எப்படியாவது… (READ MORE)

பொரி கடலை

நல்லது

ஒன்று – நெல்கொள்முதல் பற்றிய எதிர்க்கட்சி தலைவரின் குரல், அதற்கு பதிலளித்து அமைச்சரின் பதில். இரண்டு – மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகள் கூட்டம் என்ற முதல்வரின் முடிவு இரண்டையும் பாராட்டுகிறேன். இவற்றால் உடனே பலன் கிடைக்குமா தெரியாது, ஆனால்  சரியான திசையில் பயணம். வாழ்க! – மணக்குடி மண்டு10.07.2021

Politics

கவனிக்க தக்கது

*Disclaimer:* இது ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடுகள் பற்றிய அரசியல் பார்வை.  ‘நோ பாலிட்டிக்ஸ்’ ‘தனிப்பட்ட முறையில் தலைவர்களை தாக்கிப் பேச மாட்டேன்’ என்னும் தகைமை கொண்ட ‘நடுநிலை நியாயமார்கள்’ இந்தப் பதிவிற்கு கமெண்ட் கூட போட வேண்டாம், இது Politics பற்றியது, அரசு – பாலிசி – நிர்வாகம் பற்றியது இல்லை என்பதால். என்ன… (READ MORE)

Politics

17வது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 🌸 இன்று மிருகசீரிடம் ( ஆனி மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் சிவன் பார்க் எதிரிலும் (அங்கே, வீதியோரம் வாழும் மனிதர்களுக்கு)நடந்தது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை08.07. 2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

‘நவரசா’ – மணிரத்னத்திற்கு பூங்கொத்து

அந்தக் காலத்திலிருந்தே படமெடுக்கும் விதத்தாலும், திரைமொழியாலும், தொழில்நுட்பப் பயன்படுத்தலாலும் மதித்துப் பார்க்கப்படும் இயக்குநர் மணிரத்னத்தை வேறொன்றிற்காகவும் மதிக்கிறேன் இன்று. ஓடிடி தளத்திற்காக கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், அர்விந்த் சுவாமி, வசந்த், பிரியதர்ஷன், கார்த்திக் நரேன் என பலரை இயக்குநராகப் போட்டு, சூர்யா, விஜய் சேதுபதி, அசோக் செல்வன். அர்விந்த் சுவாமி, ப்ரகாஷ் ராஜ், அதர்வா… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

தமிழக அரசுக்கு பூங்கொத்து

ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தொடர்ந்து இயங்க 1.25 கோடி நிதியுதவி செய்திருக்கிறது தமிழக அரசு. ஆகா… நல்லது. இந்து தமிழ் திசையில் வெளியான செய்தியைப் பார்த்து தமிழக அரசு உடனடியாக செயல்பட்டதைப் போலவே, மத்திய கல்வித் துறை அமைச்சகம் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சொல்லுகிறது காலைச் செய்தி. என்ன நடவடிக்கை விவரம்… (READ MORE)

Politics

, ,

நிறைய நல்லது செய்ய முனையும் ஸ்டாலின் அவர்களின் அரசு இதை கவனிக்க வேண்டும்.

நீட் தேர்வு பற்றிய சர்ச்சையும் வழக்கும் போராட்டமும் வெகுநாட்களாக நடக்கின்றன என்றாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவுவதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோச்சிங் என்ற திட்டங்களை செயல்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் செய்தது முந்தைய அரசு. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை நீக்குவோம் என்று தேர்தலில் சொல்லி ஆட்சிக்கு வந்த… (READ MORE)

Uncategorized

wp-1625402343370.jpg

‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ – ‘என் எண்காலி ஆசான்’ : திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து:

ஆழ்கடலுக்குள் நீந்தித் திரியப் போன க்ரெய்க் ஃபோஸ்டரின் கண்ணில், சரேலென நகர்ந்து மறையும் வித்தியாசமான எதுவோ ஒன்று தென்படுகிறது. அது ஓர் ஆக்டோபஸ்(‘எண்காலி’) என்பதை அறிந்து கொள்ளும் அவர், எலும்பில்லா மெல்லுடல் கொண்ட அந்த ‘லிக்விட் அனிமல்’ மீது ஓர் ஆர்வம் கொள்கிறார். அடுத்த நாளும் கடலின் அடியாழத்தில் கடற்பூண்டுகள் செழித்துக் கிடக்கும் அதே பகுதிக்குத்… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

அணில்

அந்நாளைய அயோத்தி இளவரசன் ராமாயண ராமர் கதையிலிருந்து,   இந்நாளைய தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி (‘அணில்’ பாலாஜி) கதை வரையில் அணில்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.  தமிழ் வழிக் கல்வி பயின்ற பலருக்கு ஒன்றாம் வகுப்பில் ‘அணில், ஆடு, இலை, ஈ…’ என்ற முதல் பாடத்தில் தொடக்கமே அணில்தான். சமீபத்தில் வடிவேலுவை ஓவர்டேக் செய்து அதிகமாக… (READ MORE)

பொரி கடலை

,

சரியான ஆட்களை சரியான இடங்களில் நியமிப்பதால்…

நன்னீர்க் கொசுக்கள், கழிவு நீர்க் கொசுக்கள் என இரண்டு வகைகளாலும் பாதிக்கப்படும் சென்னையில், கொசுக்களை ஒழிக்கவும் தொற்றுகளிலிருந்து மக்களை காக்கவும் பெருநகராட்சி எப்போதுமே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது உண்டு. இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதகளில் 15 நாட்களுக்கு சோதனை முறையில் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படும் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். மருந்து… (READ MORE)

Politics

, , , ,

கத்தாழை கார்த்திக்ராஜாவுக்கு மலர்ச்சி வணக்கம்

ஆன் லைன் பள்ளி வகுப்புகளை குறைந்த அளவே இணைய சேவையுள்ள சிற்றூரில் உள்ள மாணவர்கள் சாதாரன பட்டன் ஃபோனில் கவனிக்க என்ன செய்யலாம்? பெருகல்வியாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் தர வேண்டிய அந்த தீர்வை, ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர் தந்தால், ஒரு கல்வி ரேடியோவைத் தொடங்கி நிகழ்த்தித் தந்தால் கொண்டாடுவோம்தானே! தனது வகுப்பு மாணவர்கள் 15 பேருக்காக… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

அந்தப் பாடல்களை அவர்கள் இசைப்பதைக் காண்கையில் வருவது ஓர் அனுபவம்

“….  திரையிசைப் பாடல்களை திரைப்படங்களில் காட்சிகளோடு காண்பது ஓர் அனுபவம். அதே பாடல்களை அதன் இசையமைப்பாளர், பாடகர்கள் மேடைகளில் நிகழ்த்தும் போது கண்டு ரசிப்பது வேறொரு அனுபவம். சில பாடல்களை சிலர் இசைப்பதை காண்பது பேரனுபவமாக இருக்கும். மேடைகளில் அதே பாடல்களை மறு உருவாக்கம் செய்து அவர்கள் இசைப்பதை பார்க்கையில், அந்த மூல பாடலின் மீது… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , ,

நேற்று மாலை (27.06.2021) நாம் கொண்டது நல்ல வளர்ச்சிப் பாதை.

‘பரமன், ஒரு குழப்பத்தோடே உட்கார்ந்தேன் லைவ் வளர்ச்சிப் பாதையில். எனக்கு தேவையானதை எப்பவும் குடுக்கற மாதிரி நேற்றும் அள்ளித் தந்தது வளர்ச்சிப்பாதை. எனக்காகவே எடுத்தது போல இருந்தது. நன்றி!’ ‘இது என்னது இது! எங்க வீட்டுக்குன்னே எடுத்தது மாதிரி இருக்கு!’ ‘தேவையான நேரத்தில் தேவையானதை தந்தது வளர்ச்சிப் பாதை. நன்றி பரமன்!’ ‘ஏன் நட்சத்திரம் முக்கியம்… (READ MORE)

Malarchi Maanavargal

அணில் அல்ல

அணிலால் பவர் கட் வரலாம்தான். ஆனா, இவ்ளோ பவர் கட்டுன்னா காரணம் வேற ஏதோ ‘பெருச்சாளிகள்!’தான் போல! – மணக்குடி மண்டு28.06.2021

Uncategorized

முன்னுதாரணமாக இருக்கட்டும் தலைவர்கள்

ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் என 14 கட்சித்தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு என்பது நல்ல செய்தி. அதை விட நல்ல செய்தி அவர்கள் ஒற்றுமையாக வெளியே வந்து ஊடகங்களுக்கு முன் நின்றது. இதில் சில தலைவர்கள் பல மாதங்களாக சிறை வைக்கப்பட்டவர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்…. (READ MORE)

Politics

, , , , ,

விளையாட்டு வீரர்களுக்கு மிக நல்லது

👏👏 விளையாட்டுப் பயிற்சிகளை தருவதற்காகவும் முன்னேற்றத்திற்காகவும், தமிழகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு 3 கோடி, 1 கோடி என பரிசுகள் என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர்.நன்று. அதை விட சிறப்பானது, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கியது. தற்போதைய பயிற்சிகளுக்கும் கருவிகள் வாங்கவும் பெரிதும் பயன்படும். பதக்கம் வாங்கி… (READ MORE)

Politics

இதையும் செய்யட்டும்

‘உறவினர்களை நண்பர்களை சந்திக்கும் போது வழக்கமாக உதிர்க்கும் கதாநாயக புன்னகை தற்போது முதல்வரிடம் காணப்படவில்லை. அவர் முள் கிரீடம் சுமந்து அல்லும் பகலும் உழைக்கிறார்’ என்று புதிதாக பொறுப்பேற்றிருப்கும் அமைச்சர் புதிதாகத் தொடங்கப்பட்ட சட்டப்பேரவையில் தனது உரையில் பேசியிருப்பது ஊடகங்களில் வந்தது.  நீட் பற்றியும், கொரோனா கட்டுப்படுத்தல் பற்றியும் இரண்டு நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியும்,… (READ MORE)

Politics

உடனடி கவனம் நன்று

காவலர் தாக்கி போதையிலிருந்தவர் உயிரிழந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுத்துள்ள முதல்வரின் அறிக்கையில் இரண்டு மகிழ்வு தரும் சங்கதிகள் உள்ளன. ( உயிரிழப்பு என்பது கொடுமை, பெரும் இழப்பு. வருத்தம் என்பதை மறுக்கவே முடியாது) 1. காலந்தாழ்த்தாமல், எதிர்க்கட்சிகளும் விவாத மேடைகளும் பேசும் வரையில் காத்திருக்காமல் உடனடியாக முதல்வரின் கவனம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 2. போலீஸ்… (READ MORE)

Politics

மகள்கள் ஓர் அதிசயம்…

மகள்கள் ஓர் அதிசயம்… மாதாவுக்காக மாறாதவனும்மனைவிக்காக மாறாதவனும்மகள்களுக்காக மாறிவிடுகிறான்! – பரமன் பச்சைமுத்து22.06.2021பெரும்பாக்கம் #Children#LoveForChildren#Parenting#Daughters#Magal Facebook.com/ParamanPage

கவிதை

, , , , , , ,

wp-16242665057132283860693803501635.jpg

ஓகத்தை கொண்டாடுகிறேன்

ஓட்டப் பயிற்சி, நடைப் பயிற்சி, தசையை உறுதியாக்கும் எடை பயிற்சி, நீச்சல் பயிற்சி என பலவற்றை மாற்றி மாற்றி செய்து பழகுபவன் நான். யோகப்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் அந்த ஒரு நிலையை வேறெந்த உடற்பயிற்சியும் தருவதில்லை என்பதை உரக்கவே சொல்வேன். உடலையும் உள்ளத்தையும் ஒரு நிலையில் ஒன்றினைக்கும் என்பதால் அது ‘ஓகம்’, அதற்கான பயிற்சிகளுக்கு ‘இருக்கை’… (READ MORE)

Uncategorized

, , , , , ,

தவறாகப் படுகிறது

சன் டிவியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு யாகவா முனிவரும் சிவசங்கர் பாபாவும் அடித்துக் கொள்ளும் நிகழ்வை காட்டிய வரை சிவசங்கர் பாபாவைப் பற்றி ஏதும் தெரியாது எனக்கு. பின்னாளில் நடிகர் விவேக், மயில்சாமியோடு சேர்ந்து அந்த நிகழ்வை அச்சு அசலாக பகடி செய்து நகை செய்திருந்தபடியால் அது திரும்பவும் நினைவில் வந்தது. பல ஆண்டுகள் பெங்களூருவில்… (READ MORE)

பொரி கடலை

,

புனித வன முயற்சியை புவனம் போற்ற வேண்டும்

மக்கள் வாழும் ஊரின் புறத்தே ஒரு 50 ஏக்கர் நிலத்தில் 442 வகையான தாவரங்களையும் ஆயிரக்கணக்கான மரங்களையும் 18 நன்னீர்க்குளங்களையும் கொண்ட ஒரு காட்டை உருவாக்கி, அதில் 291 வகையான விலங்குகள் வசிக்கின்றன, அருகி வரும் அரிய விலங்கான சாம்பல் நிற இந்திய எறும்பு தின்னி, சாம்பல் நிற தேவாங்கு, புள்ளி கூழைக்கடா, புள்ளி வாத்து,… (READ MORE)

பொரி கடலை

முத்து மாறி விட்டான்!

கண் விழிக்கும் காலை முதல்கண் துஞ்சும் நள்ளிரவு வரைகண நேரமும் மோடி நினைவே அவனுக்கு ஏழு ஆண்டுகளாக எதிர்ப்புஎதற்கும் எதிர்ப்புவடக்கென்றால் எதிர்ப்பு‘வட’ என்று வருவதால் வடைக்கும் எதிர்ப்பு சேவை வரி நிலுவைசேமியா விலையேற்றம்தடுப்பூசி  தருதல்தடுப்பூசி பற்றாக்குறைதடுக்கி எவரும் விழுதல் பால் விலையேற்றம்பாத்ரூம் குழாய் துடைப்பம்பாடத்திட்டம்பாதசாரிகள் பேண்டமிக் காலம் எது நடந்தாலும் மோடிஎது நடவாவிட்டாலும் மோடி ஒரு… (READ MORE)

Politics

,

wp-1623941308603.jpg

பாதி தட்ட இட்லி போல்

மைசூரு ‘தட்ட இட்லி’யைசரிபாதியாக கத்தி வைத்து நறுக்கிஇருட்டில் எறிந்தது போல்,வானத்தில் நிலா!…. இளையராஜா இசையில் பவதாரணி பேசுவது போலவே பாடிய அந்த பாடலை இளம் இரவின் நிலவை நோக்கிப் பாடுகிறேன், நான்! ‘என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற?இளநெஞ்ச தொட்டு தொட்டு ஏன் தாக்குற!’ பரமன் பச்சைமுத்துஅண்ணா நகர்17.06.2021 Moon ChennaiSky EnveettuJannal Ilaiyaraja… (READ MORE)

பொரி கடலை

, ,

அம்மா இதோ இங்கேதான் உட்கார்ந்திருக்கிறேன்

கீழ்த்தளத்து ரத்த வங்கியிலிருந்து செல்லிடப் பேசியில் அழைப்பு வர  கீழே ஓடி வருகிறேன். சாயிபாபா சிலையை வணங்க வந்த சுவாசக்கவசம் அணிந்த ஒரு வயதான பெண்மணி நம்மை கவனித்து விட்டு இரு கைகளாலும் வணங்கிக் கொண்டே நம்மை நோக்கி விரைந்து வருகிறார். ‘நம்மளயா கும்படறாங்க!’ ‘பரமன் பச்சைமுத்து சார்!’ ‘ஆமாங்க! நீங்க?’ ‘என் பையனுக்கு கொரோனா… (READ MORE)

பொரி கடலை

, ,

wp-16238166260836095598387423334784.jpg

வீடென்பது…

வீடென்பது வெறும் கட்டிடமல்ல. உண்மையில் வீடு என்பது நான்கு சுவர்களுக்கும் தரைக்கும் தளத்திற்கும் இடையிலிருக்கும் வெற்றிட வெளி. ஒன்றுமில்லாத அந்த வெற்றிட வெளி, சிறிதும் பெரிதுமாய் நாம் வாங்கி நிரப்பும் திடப் பொருள்களைத் தாண்டி, அங்கே வாழும் வாழ்ந்த கணங்களாலேயே நிரப்பப்படுகிறது. கல்வி கற்ற தருணங்கள், பணியில் சேர்ந்த பொழுதுகள், புதிய முயற்சிகள் செய்த காலங்கள்,… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

சிறந்த செயல்பாடு : வார் ரூம்!

மலர்ச்சி மாணவரொருவரின் குடும்பம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளது. வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ள அவர்களது வீட்டின் கதவு தட்டப்படுகிறது. திறந்தால்…. மாநகராட்சி ஊழியர்கள் மருத்துவர் ஒருவரோடு வந்து நிற்கின்றனர். முழு கவச உடை அணிந்த அந்த மருத்துவர், தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளியை வீட்டின் உள்ளேயே வந்து பரிசோதித்து, நிலையறிந்து அடுத்து செய்ய வேண்டியவற்றையும்… (READ MORE)

Politics

, , , ,

மொத்த வீடும் பெட்டிகளில்

10 ஆண்டுகளுக்கு முன்பு,20.05.2011 அன்று பெங்களூர் மந்த்ரி வுட்லண்ட்ஸ் வீட்டை காலி செய்த போது பள்ளிச்சிறுமிகளாக இருந்த என் மகள்கள், ‘Appa, they made our houses into boxes’ என்றார்கள். இன்றும் அதே நினைவு. மொத்த வீட்டையும் பெட்டிகளில் நிரப்பி, ஒட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். ஆர் ஏ புரத்திலிருந்து அண்ணா நகருக்கு குடி… (READ MORE)

பொரி கடலை

தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகிறார்கள் மக்கள்

மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசமாகத் தரப்படும் என்ற மத்திய அரசின் கொள்கை பாராட்டுதலுக்கு உரியது. எவ்வளவு அச்சங்களை பலர் கிளப்பிய போதும், அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு எல்லா ஊரிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் நீண்ட பெரும் வரிசையில் நிற்கிறார்கள் என்பது நல்ல செய்தி். முதலில் நடுவனரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை என்று தொடங்கி,… (READ MORE)

Politics

மேகமலை புலிகள் காடு காக்கப்படட்டும்

ஒரு பக்கம் கோவை மாவட்டம் கல்லாறு பகுதியின் யானை வலசைப் பாதையிலுள்ள 50.79 ஹெக்டேர் தனியார் நிலங்களை காடாக அறிவித்து காடுகளை விலங்குகளை பல்லுயிர்ப்பெருக்கத்தைக் காக்கிறார் கோவை மாவட்ட ஆட்சியர். மறுபக்கம் சத்தமில்லாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் சரணாலய காடு பகுதியில் சாலை அமைக்கும் வேலைகள் நடக்கின்றன. இந்த சாலை அமைக்கும் அனுமதி கடந்த ஆட்சியால்… (READ MORE)

Politics

நன்றி மாசு அவர்களே!

மருத்துவர்கள், செவிலியர்கள் உணவு உறைவிடச் செலவில் நேரடியாக இறங்கிக் கண்காணித்து இடைத்தரகர்களை நீக்கியதன் மூலம், அதே உணவு, அதே உறைவிடத்துக்கு 9 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் செய்திருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார் மருத்துவம் –  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாசு. அட்டகாசம்! நன்றி! இன்னும் இறங்கிச் செய்யுங்கள் ஐயா, இவ்வாறான முன்னெடுப்புகள் மற்ற துறைகளுக்கும்… (READ MORE)

Politics

,

அடிப்படை கேள்விகளும் ஆலோசனையும்

சேத்துப்பட்டில் காவலர்கள் – வக்கீல் பெண்மணி சம்பவ காணொளி காட்சி தீயாகப் பரவியிருக்கிறது. ‘உன் காக்கிசட்டையை கழட்டறேன் பாரு, போடா!’ என்று அந்தப் பெண்மணி பேசியது வெளியாகியிருக்கிறது. ‘வாடி போடி என்று சொன்னார்’ என்கிறார் அவர்.  முழு பதிவும் இல்லாததால் எது உண்மையான பின்னணி தெரியாது நமக்கு. ஆனால், சில அடிப்படை கேள்விகளும் ஓர் ஆலோசனையும்… (READ MORE)

Politics

16வது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 🌸 🌸 இன்று மிருகசீரிடம் ( வைகாசி மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் சிவன் பார்க் எதிரிலும் (அங்கே, வீதியோரம் வாழும் மனிதர்களுக்கு)நடந்தது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை10.06.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1623298858256.jpg

காஃபி் ஓர் உள்ளக் கடத்தி

காஃபி் ஓர் உள்ளக் கடத்தி ஒன்றில் அமிழ்ந்து கிடக்கும் உள்ளமதைஓரிரு நிமிடங்களில் மீட்டுக் கடத்திவிடும் தொலைவிலிருப்பவரை அருகிலும்அருகிலிருக்கும் போதே தொலைவுக்குமென கடத்திவிடும் ஓரிரு வாய்காஃபி உறிஞ்சல்கள் காஃபியின் கசப்புவிரும்பிகளுக்கு உவப்பு சிலருக்கு உடல் தேவைசிலருக்கு உள்ளத் தேவைபலருக்கு மணித் தேவை காஃபி ஒரு முரண்சிலருக்கு ஆசுவாசம்சிலருக்கு தளர்வுசிலருக்கு உயிர்ப்புசிலருக்கு குவியம் அதிகமருந்துவோர்க்கு அசிடிட்டிஅருந்தவேயருந்தாதவர்க்கு ஆரோக்கியம்குறைவாய் குடிப்போர்க்கு… (READ MORE)

கவிதை

, , , , ,

wp-16232446706748570732241435619494.jpg

எதிர்ப்பு சத்து உணவு – முருகைப் பொடி

அமெரிக்காவின் அடியில் உட்கார்ந்து கொண்டு அவர்களின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய குட்டி நாடு என்று சொல்லப்படும் கியூபாவின் தலைசிறந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து முருங்கையை வரவழைத்து தனது தோட்டத்தில் தானே வளர்த்தார். அதை பெருக்கி தன் தேசமெங்கும் நட்டு வளரச்செய்தார். ‘கியூபாவில் இருக்கும் எல்லோரும் வீட்டுக்கொரு முருங்கை மரம் வளருங்கள்!’ என்று அறிவித்தார்… (READ MORE)

Food

, , , , , , , , , , ,

ஹோமியோபதி குணப்படுத்துகிறதாமே!

‘வெளியிலிந்து செயற்கையாக ஆக்ஸிஜன் தரப்படும் போது உடலின் செல்கள் ஆக்ஸிஜனை உறிஞ்சுவதில்லை. கரும்பூஞ்சை தொற்றுக்கு இது ஒரு முக்கிய காரணம். ஆர்சனிக் ஆல்பத்தோடு சில மருந்துகளை நோயாளிக்குக் கொடுத்தால், கரும்பூஞ்சை வராமலே தடுக்கவும் முடியும், வந்தால் குணப்படுத்த முடியும்!’ என்று ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் அறிவித்திருக்கிறார்.  தமிழக அரசு இவர் சொல்வதை கவனித்து, உண்மைத் தன்மையை… (READ MORE)

Politics

, , , ,

குயவர்களும் குலாலர்களும் ஒன்றல்ல!:

குயவர்களும் குலாலர்களும் ஒன்றல்ல!: 1942ல் மத்திய சிறைச்சாலையில் அமர்ந்து கொண்டு ராகுல சாங்கிருத்தியாயன் தன் பயணங் களின் ஆராய்ச்ணிகளின் அடிப்படையில் எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். கடைசி இந்து மன்னரான ஹர்ஷரது கதையில், பாணபட்டர் எழுதிய ஹர்ஷசரிதம், ரத்னாவளி, பிரதர்ஷிகா போன்ற நூல்களைக் குறித்தும், சீனப் பயணி யுவாங்சுவாங்… (READ MORE)

பொரி கடலை

மாநில வளர்ச்சிக் குழுவில் மருத்துவர் சிவராமன்!

👏👏 ‘மாநில வளர்ச்சிக் கொள்கை குழு’ அறிவிக்கப் பட்டு அதில் சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் பெயரும் அறிவிக்கப் பட்டுள்ளது. 👏👏👏👏 பாரம்பரிய மருத்துவம், நவீன அறிவியல் என இரண்டையும் மதிக்கும் இரண்டுமே தேவை என்று குரல் கொடுக்கும் சிவராமன் அவர்களை பொறுப்பில் வைத்ததை மிகச் சிறப்பானது என எண்ணுகிறேன். அரசுக்கு நன்றி!சிவராமன் சார் வாழ்த்துகள்!… (READ MORE)

Politics, Uncategorized

,

wp-1622818773027.jpg

முடி கொட்டுவதே இல்லை இவர்களுக்கு…

ஒரு பள்ளிச் சுவரையொட்டிய நடைபாதை மேடையில் படியும் மர நிழலில் அமர்ந்து வெறுமனே சாலையை வெறித்துக் கொண்டு இருந்தவரை, ராயப்பேட்டையிலிருந்து திரும்பும் போது பார்த்தேன். ‘யு டெர்ன்’ அடித்து எதிர்ப்புறம் வண்டியை நிறுத்தி விட்டு, தக்காளி சோறு பொட்டலமும் ‘மாஸ்க்’கும் எடுத்துக் கொண்டு இறங்கி அவரை நோக்கிப் போனோம் (ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணியும், வீடும்… அருமை!

👏👏நடந்தே விட்டது அது! குமுதத்தில் ‘ஸ்டாலினுக்கு கடிதம்’ எழுதியிருந்த எழுத்தாளர் சாருநிவேதிதா, ‘மலையாளம், வங்காளம், கன்னடம் ஆகியவற்றில் இருப்பது போல எழுத்தாளர்களுக்கு மரியாதை உயர்த்தப்பட வேண்டும். எழுத்தாளன் வாழ்நாள் முழுக்க சேகரித்த நூல்களை இடம் இடமாக வாடகை வீடுகளுக்கு மாற்றி மாற்றி செத்தே போகிறான். பெரிய எழுத்தாளர்களுக்கு வீடு ஏற்பாடு செய்து தர வேண்டும். பத்தோடு… (READ MORE)

Politics

, , ,

wp-16227322188062523304432770968332.jpg

நன்றி எலந்தங்குடியாரே!

வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு, செய்யும் வேலையில் தன்னையே மறந்து தற்காலிக சோதனைகளை கடந்து விடும் மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகளை எப்போதும் எனக்கு வழங்கிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. அடையாறு மலர் மருத்துவமனையிருக்கும் பிரதான சாலையையொட்டிய உள்வட்டச் சாலையில், ‘அடுத்தது யாருக்கு கொடுக்கலாம் உணவு!?’ என்ற தேடலோடு போய்க் கொண்டிருந்த நம் கண்களுக்கு அவர் தெரியவேயில்லை (ஊரடங்கு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

இதை நடத்துவதற்கு பணம் இருக்கிறது. நன்றி!

மலர்ச்சி மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும்… மலர்ச்சி வணக்கம்! ஊரடங்கின் முதல் வாரத்தில் ஒரு நாள், மயிலை குளத்தினருகே பேருந்து நிறுத்தத்தில் தஞ்சம் புகுந்திருந்த சிலரை பார்க்கையில், ‘உணவு வேண்டுமே இவர்களுக்கு!’ என்ற எண்ணம் வந்து, ‘மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கம்’ வழியே முன்னெடுத்ததே, ‘உதவலாமே!’ வீதியோர மனிதர்களுக்கு மதிய உணவு விநியோகித்தல். சேர்ந்து நாம் செய்வோம் என்று அறிவித்த… (READ MORE)

பொரி கடலை

பள்ளிகளில் தமிழ் கட்டாயமாகட்டும்

சிங்கப்பூரில் தமிழ் வாழ்கிறது, இனியும் வாழும் என்பதற்கான காரணம் தொடக்கக் கல்வி தொடங்கி மேல்நிலை வரை தாய் மொழிக் கல்வியாக தமிழ் இருக்கிறது.  என்னதான் நூல்கள், இலக்கியத்துறை என பார்த்துப் பார்த்து செய்தாலும், அடுத்த தலைமுறை தாய்மொழியை கைவிட்டால் அம்மொழி நலிவடைந்து விடும். இளம் தலைமுறை தாய்மொழியை வெறும் பேச்சு மொழியாக மட்டுமே கொண்டால், அவர்களின்… (READ MORE)

Politics

, , , , , ,

தமிழ் எழுத்துலகிற்கு…

‘மலையாளம், வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இலக்கியத்திற்கும் எழுத்தாளர்களுக்கும் அரசும் பொதுவெளியும் மரியாதை தருகிறது. தமிழில் சினிமா தாண்டி கலை குறிப்பாய் எழுத்தாளர் மதிக்கப்படுவதில்லை. வாடகை வீட்டில் சேகரித்த நூல்களோடு செத்துப் போகிறான் எழுத்தாளன். எழுத்தாளர்களை உயர்த்தி தமிழுக்கு ஞானபீடம் கிடைக்க வழி செய்யுங்கள், வரலாற்றில் நிற்பீர்கள்’ என்று குமுதத்தில் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார்… (READ MORE)

Uncategorized

எல்லாமும் கொடுத்தும் விடுகிறது வாழ்க்கை.’

நாம் சிலரை உற்றுக் கவனிக்கும் போது, நாம் அழைக்காமலேயே உள்ளுணர்வு எழுப்ப சடக்கென்று நம்மை நோக்கி திரும்புவார்கள், கவனித்திருக்கிறீர்களா? அப்படித்தான் எழுந்தாரவர். நாகேஸ்வரராவ் பூங்காவின் ஓரமுள்ள கல் இருக்கையில், கைப்பையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருக்கும் ஒருவரைப் பார்த்துவிட்டு வண்டியை நிறுத்தி இறங்குகிறோம் (ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு விநியோகிக்கும், மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கங்கத்தின்… (READ MORE)

Food, பொரி கடலை

, , , , , , ,

wp-1622621401566.jpg

உதவலாமே!: வீதியோர மனிதர்களுக்கு மதிய உணவு

இன்று ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா பகுதியில் மதிய உணவு விநியோகம். ‘உதவலாமே!’ – ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு வழங்க மலர்ச்சி மாணவர் நற்சங்கம் முன்னெடுப்பு. உதவி செய்த அனைவருக்கும் பிரார்த்தனைகள்! பரமன் பச்சைமுத்துவாலண்டையர் –மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கம்02.06.2021 Udhavalaamey LockDown LockDiwnTimes FoodForPeople Food Malarchi MalarchiMaanavargal Facebook.com/ParamanPage

Uncategorized

, , , ,

தமிழக அரசிற்கு பாராட்டுகள்

கடந்த வாரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்கின்றன. ஆக்ஸிஜன் கிடைக்கின்றன. உள் கிராமங்களில் சில இடங்களில் இன்னும் பிரச்சினைகள் உள்ளன என்றாலும் சமாளிக்கும் நிலைக்கு வந்தாயிற்று. இனி நிலைமை முன்னேறவே செய்யும். கட்சி சார்பு – எதிர்ப்புகளை ஒத்தி வைத்துவிட்டுப் பார்த்தால், சமாளித்து சரியாக செயல்பட்டிருக்கிறது ஸ்டாலின் அவர்களின் தமிழக அரசு என்பதை… (READ MORE)

Politics

கப்பா… அடங்’கப்பா’!

கப்பா, டெல்டா, ஆல்ஃபா, பீட்டா, காமா, ஜீட்டா, எப்சிலான், லோட்டா – நல்லவேளை பெயர்களை வைத்தார்கள்! போன நூற்றாண்டின் பெருந்தொற்று ஸ்பெயினில் முதல் முதலில் கண்டறியப்பட்டாலும், அது சீனாவிலிருந்தே பரவியதாக சிங்கப்பூர் நண்பர் ஒருவர் சில தரவுகளின் அடிப்படையில் பகிர்ந்தார். ஆனால்  கண்டறியப்பட்ட இடத்தைப் பொறுத்து சூட்டப்பட்ட பெயரான ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ நிலைத்து விட்டது. கொரோனாவை… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

wp-16224785173645093509496326166161.jpg

ஊரடங்கு நேரத்தில் ஒருவர்

உறக்கம் என்பது உடலின் இயல்புத் தேவை என்பதைத் தாண்டி அது மனிதனுக்கும் இன்னும் சில உயிர்களுக்கும் இறைவன் கொடுத்த கொடை என்றே கருதுபவன் நான். இன்று ஒரு மனிதன் உறக்கத்தில் அமிழ்த்து கிடப்பதைப் பார்க்க நேரிட்ட போது, இந்தக் கருத்து கூடுதல் உறுதி பெற்றது. ஊரடங்கு காலத்தில் வீதியோரம் வசிக்கும் மனிதர்களுக்கு உணவளிக்கலாமே என்று மலர்ச்சி… (READ MORE)

பொரி கடலை

images-18.jpeg

நெல்லி மோர் – அடிச்சி குடிங்க!

‘இங்க பாரு! சென்னை 37 டிகிரி, வேலூர் 39 டிகிரி… ஆனா ஊட்டி 21 டிகிரி’ ‘அக்னி நட்சத்திரம் முடிஞ்சாலும் இந்த வெய்ய கொறையுதா பாரேன்!’ ….. கோடை அலாதியான பழங்களை கொடையாகத் தருகிறது என்ற போதும் உடற்சூடு, அதீத வியர்வை வெளியேற்றம், வியர்க்குரு, சிறுநீர் சுருக்கம், கண் எரிச்சல், பார்வை மங்கிய உணர்வு என… (READ MORE)

Food, Uncategorized

, , , , , , ,

20210526_174658

ஆசனங்கள் தரும் பலன் அட்டகாசம்தான்

ஒரு புறம் உறுதி – ஒரு புறம் வளையும் தன்மை என்ற இரு நேர் எதிரெதிர் சங்கதிகளைத் தருவதில் ஆசனப் பயிற்சிகளே சிறந்தவை. இல்லையா! #Workout #Excercise #Yoga #ParamanPachaimuthu #LockDownWorkOuts – பரமன் பச்சைமுத்து 26.05.2021

பொரி கடலை

, , ,

தடுப்பூசி ஸ்பெஷல் பாஸ் தரலாமே

தடுப்பூசி் பற்றி இன்னும் எதிர்ப்பு தகவல்கள் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தி முகாம்களை இயக்குகிறது அரசு. நேற்று வரை 20 கோடிக்கு பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்கிறது செய்தி. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு ஒரு சிறப்பு அட்டை (‘ஸ்பெஷல் வேக்ஸின் பாஸ்’) ஒன்றைத் தந்து, அந்த அட்டைக்கு பல… (READ MORE)

Politics

, , , , ,

20210523_135945

சோயா / மீல்மேக்கர் பிரியாணி

🌸 பிரியாணி என்பது அரபு நாடுகளின் உணவு என்று ஒதுக்கி விட வேண்டியதில்லை. கறியையும், அரிசியையும், உப்பையும், குறு மிளகையும் ஒன்றாய் பாத்திரத்திலிட்டு வேகவைத்து ‘ஊன் சோறு’ என்று மக்கள் உண்டதாக சோழ தேசத்து கதைகள் பல சொல்கின்றன. எப்போதும் வழக்கமான உணவை ஒதுக்கி புதிய உணவை விரும்பும் குழந்தைகளின் கண்களுக்கு பிரியாணி ஒரு கொண்டாட்டம்…. (READ MORE)

Food

, , , ,

கார்பன் உமிழும் பேருந்துகள் போகட்டும்!

சவுதி அரேபியாவின் இளவரசர் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காகவும் கரிமில வாயு உமிழ்வை பெருமளவு குறைக்கவும் ‘சவுதி முழுக்க 1 கோடி மரங்கள் வளர்ப்போம்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். மரங்கள் இருந்த பகுதிகள் பாலைவனமாக மாறி வரும் வேலையில், பாலைவனத்தில் 1 கோடி மரங்கள் என்பது நினைக்கவே மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. வெற்றி பெறட்டும் இத்திட்டம். வாழ்க!… (READ MORE)

Politics

, , , ,

கொரோனாவிற்குப் பின் வரும் சோர்வை சக்தியின்மையை நீக்க

‘பரமன், கொரோனா வந்து குணமானாலும் ஒரு வித சோர்வும் அசதியும் போகவில்லை. சுத்தமா உடம்புல சத்து இல்லை போல உணர்வு. எதுவும் மருந்து?’ பரமன்: நல்ல சத்தான உணவு, மிதமான உடற்பயிற்சி, நல்ல உறக்கம், ஓய்வு, சூரிய ஒளி இவை நல்லதை செய்யும். இருப்பினும் கீழுள்ள மருந்துகள் மிக நன்றாக வேலை செய்கிறது. சித்த மருத்துவர்… (READ MORE)

பொரி கடலை

,

ஆக்ஸிஜன் அளவை உயர்த்துகிறதாம் ‘கிராம்புக் குடிநீர்!’

ஆக்ஸிஜன் குறைபாட்டால் செறிவூட்டிகளையும் சிலிண்டர்களையும் தேடி அலையும் வேளையில், ‘கிராம்புக் குடிநீர்’ என்று ஏற்கனவே சித்தமருத்துவத்தில் பரிந்துரைக் கப்பட்ட பானத்தை நோயாளிக்குத் தந்து ஆக்ஸிஜன் அளவை உயர்த்தியுள்ளார்கள் சேலம், நாமக்கல் மாவட்ட சித்தமருத்துவர்கள் என தகவல் வருகிறது. கிராம்பு 10 கிராம், ஓமம் 20 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், மிளகு 10 கிராம்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

48 மணி நேரத்தில் செய்த நாயகர்கள்!

கோவையில் தொற்று அதிகரித்து விட்டது, மக்கள் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் கோவை அரசு மருத்துவ மனைக்கும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்குமே அதிகம் வருகின்றனர். படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை – இவை எல்லோரும் படித்த, பார்த்த செய்தி. சங்கதி கேள்வி பட்டு தங்களது ‘ஆர்டர் அறக்கட்டளை’ மூலம் 48 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

இதே்நாளில்தான் புலம் பெயர்ந்தேன்

10 ஆண்டுகள் முன்பு இதே நாளில் ராமு – ராதை – முகுந்தன் – ப்ரீத்தியிடம் விடை பெற்று பெங்களூரிலிருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தேன். வேலூரில் நடந்து கொண்டிருந்த தாயம் பேட்ச் 2, பேட்ச் 3 வகுப்புகளுக்கிடையில் பெங்களூரு மந்த்ரி உட்லண்ட்ஸ் வீட்டைக் காலி செய்து சென்னை ஆர் ஏ புரத்திற்கு குடிவந்து விட்டு என்… (READ MORE)

Manakkudi Manithargal

வல்லாரைத் துவையல் ஆசிய பண்ணலாமே

வல்லாரைத் துவையல் எளிதாக செய்யலாம், இதோ வழி! உங்கள் பிள்ளைகளுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது. ….. பாப்பாக் குளத்திலிருந்து நீர் வெளியேறும் வடமேற்குக் கண்ணியின் பெருவரப்பில்சிறுவனாக அப்பாவோடு நடந்த போதெல்லாம் பாட்டையோரத்து கீரையைக் காட்டி, ‘வல்லாரைக் கீரை பாரு, மூளைக்கு நல்லது’ என்று குனிந்து கை நிறைய பறித்து, வலது பக்க கண்ணியின் நீர்முள்ளைக் கவனமாகக்… (READ MORE)

Food

, , , ,

பாரம்பரியம் நவீனம் இரண்டும் இருக்கலாமே

‘திமுக முற்போக்கு சிந்தனையுள்ள கட்சி. அறிவியல் அல்லாத இந்த சித்தமருந்து வேலைகளில் நேரத்தை வீண்டிப்பதை விட்டுவிட்டு வேலையைப் பார்க்க வேண்டும்!’ எனும் பொருள்பட பேசியிருக்கிறார் தருமபுரி திமுக எம்பி எவரும் அவரவர் கருத்தைச் சொல்ல உரிமையுள்ளவர்களே. அது தவறென்றால் அதைச் சுட்டிக்காட்டி சரியான கருத்தை சொல்வதும் நம் உரிமையே என்பதால் இந்தப்பதிவு. தமிழகம் முழுவதிலும் 12… (READ MORE)

Politics

வரும் அந்தக் குழந்தைக்கு தெரியாது

இரவு 2 மணிக்கு ஓர் அழைப்பு, அரை தூக்கத்தில் எடுத்தால், ‘நான் ஜோதி பேசறேன்ப்பா. பாப்பாவுக்கு பனிக்குடம் உடைஞ்சிருச்சி. மகாத்மா காந்தி ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துக்க மாட்றாங்க. கொரோனா டெஸ்ட் எடுக்கனுமாம்! டாக்டர் யாரும் தெரியுமாப்பா?’ அரைத்தூக்கத்தில் சுதாரித்து… ‘டாக்டர்… தெரியுமா தெரியாதேன்னே தெரியல விசாரிக்கனும். இப்ப எங்க இருக்கீங்க?’ ‘என்ன செய்யறதுன்னு தெரியல. நடுதெருவுல நிக்கறோம்ப்பா!’… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

அடடா! அருமை!

கேரளம் வெள்ளத்தில் மூழ்கித் தவித்த போது, முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும் இணைந்து செயல்பட்டதை, இந்தியா – பாக் சிக்கலின் போது பி வி நரசிம்மராவ்வும் வாஜ்பாயும் இணைந்து செயல்பட்டதை… நினைக்காமல் இருக்க முடியவில்லை இப்போது. மாநிலத்தின் நோய்த்தொற்று பேரிடரை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள குழுவில், எல்லாக் கட்சியிலிருந்தும் முக்கிய ஆரோசகர்களை தேர்வு செய்து ஒரு சிறந்த உதாரணத்தைக்… (READ MORE)

Politics

ஊரடங்கு நேரத்தில் உணவு

🌸 ஊரடங்கில் சாலையோரம் வாழும் வீடற்ற மனிதர்களுக்கு உணவு தேவைப்படலாமே, எவராவது கொடுப்பார்கள் என்றாலும் கண்டு வைத்தால், வழி சொல்லி இடம் சொல்லி அனுப்பலாமே என்று ஆர் ஏ புரத்திலிருந்து மயிலை கோயில் குளம் வரை நடந்தேன். மந்தவெளிவெளி எல்லையில் மயிலை துவங்கும் இடத்தில் இரட்டை சுவாசக் கவசமணிந்த காவலர்கள் வரும் ஒன்றுரண்டு வாகனங்களை நிறுத்தி… (READ MORE)

பொரி கடலை

தமிழக அரசு பரிசீலிக்கட்டும்

ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி! அதே ரெம்டெசிவிர் மருந்தை ரூ. 400க்குத் தயாரித்துக் காட்டியுள்ளது ஒரு நிறுவனம். ஆனால், உலகளாவிய ஒப்பந்தம், காப்புரிமை என்ற விதிகளால் கைகள் கட்டப்பட்டு நிற்கிறது அம்மருந்து நிறுவனம். இது போன்ற தொற்றுக்காலங்களில் மருந்தின் அடிப்படையை அனைவருக்கும் பகிர்ந்து… (READ MORE)

Politics

மு பச்சைமுத்து அறக்கட்டளை 15வது அன்னதானம்

🌸 🌸 இன்று மிருகசீரிடம் ( சித்திரை மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், வடபழனி மெட்ரோ ஸ்டேஷன் அருகிலும் ( அங்கே தங்கியிருப்போர்களுக்கும்)நடந்தது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை14.05.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

நல்ல ஏற்பாடு

மருத்துவமனைகளில் படு்க்கைகள் இல்லை, மருத்துவமனை வாசலில் வரிசையாக நோயாளிகளோடு ஆம்புலன்ஸ்கள், ஆக்ஸிஜன் கிடைக்காமல் வரிசையில் பல மணி நேரம் காத்திருப்பிலேயே இறப்பு என தமிழக நிலவரம் இருக்கும் வேளையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனை வாசலில் ‘ஆக்‌ஸிஜன் பேருந்து’ என ஒரு அமைப்பை பெங்களூரில் ஏற்படுத்தி கவனம் கவர்ந்தது கர்நாடக அரசு. நோயாளிகள் காத்திருக்காமல் அவசரத்திற்கு… (READ MORE)

Politics

,

வரவேற்கிறோம்!

கடந்த ஆண்டு நோய்த்தொற்றின் போது திருப்பத்தூரில் சித்த மருத்துவர் விக்ரம் குமார், சென்னையில் சித்த மருத்துவர் வீரபாபு ஆகியோரின் கண்காணிப்பில் நடந்த சித்த மருத்துவ மையங்களையும் அவற்றின் பலனையும் கண்ட போது, நம்மைப் போலவே பலரது மனதிலும் எழுந்த கேள்வி, ‘இதையே தமிழகத்தின் மற்ற இடங்களிலும் செய்தாலென்ன?’ புதிய தமிழக அரசு அதை முன்னெடுத்திருக்கிறது.சென்னை வியாசர்பாடியில்… (READ MORE)

Politics

, , , , ,

வளர்ந்து நிற்கிறது தேக்கு மரம்

‘ஐயே, அறிவு இல்ல உனக்கு. நல்ல தீனிதானே திங்கற, இல்ல பீயத்திங்கறியா? சொல்லிட்டே இருக்கன். கேக்க மாட்டேங்கறே!’ வள்ளியம்மைப் பாட்டியின் குரல் உரத்து இப்படி வந்தால் வீட்டின் பின்புறத் தொழுவத்தில் நின்று பசுமாட்டிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.  மனிதர்களிடம் பேசுவது போலவே மாட்டிடம் பேசிக் கொண்டிருப்பார், சில நேரங்களில் உரிமையாக கோபத்தில் திட்டியும் தீர்ப்பார்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , , , ,

இன்று வீட்டில் இருங்களேன்

நாளையிலிருந்து ஊரடங்கு என்பதால் அதிகாலையில் மூக்கில் விடும் அணு தைலம், நாளையிலிருந்து தொடங்கும் மூச்சு ‘ஆன்லைன்’ வகுப்பிற்கு தேவைப்படும் ‘மைக்’கிற்கான AA பேட்டரிகள் வாங்க கடைகளுக்குப் போயிருந்தேன். அடையார் மெர்ஸி எலக்ட்ரானிக்ஸ், திருவான்மியூர் இம்ப்காப்ஸ், ஆர் ஏ புரம் ஏகே டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என எல்லாவற்றிலும் ஏக கூட்டம். திருவான்மியூரிலிருக்கும் சித்த மருந்துக்கடைக்கு ஆர் ஏ… (READ MORE)

பொரி கடலை

முதல் தேர்வு நன்று

சிங்கப்பூரில் ஸ்டேண்டர்டு சார்ட்டண்ட் வங்கியில் நிதித்துறை பணி அனுபவம், அமெரிக்காவில் முதுகலை என்ற அனுபவம் கொண்ட பழனிவேல்ராஜன் தியாகராஜனுக்கு ( பிடிஆர் மகன்) நிதி – மனித வள மேலாண்மை,சென்னைப் பெருநகரின் பேரிடர்களை எதிர்கொண்டு மேயராக இருந்த அனுபவம் கொண்ட மா. சுப்ரமணியனுக்கு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு…. சரியான தேர்வுகளாகத் தெரிகிறது. இவர்களும் மற்ற… (READ MORE)

Politics

நல்ல தொடக்கம்

நடந்ததை ஏற்றுக் கொண்டு ‘அடுத்தது செய்ய வேண்டியது என்ன?’ என்ற மனப்பான்மையில் இயங்குகிறார் மக்கள் நீதி மய்யத்தின் கமல் என்று எண்ணுகிறேன்.  முதல்வர் ஸ்டாலினின் வீடு தேடிப் போய் வாழ்த்து சொன்னதை இப்படியே ‘பார்க்க விரும்புகிறேன்’. ‘பயந்துட்டாரு! ச்சும்மா போய் பாத்து வச்சிக்கறாரு, நாளைக்கு பிரச்சினை ஏதும் வந்துடக்கூடாதுன்னு!’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இருக்கலாம். (அரசியல்… (READ MORE)

Uncategorized

நடந்தேறட்டும் நல் அரசியல்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பான்மை வெற்றி பெற்று முதல்வராக வந்திருக்கிறார் ஸ்டாலின் அவர்கள். அட்டகாசம்! வாழ்க!  தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படட்டும்! வாழ்த்துகள் ஐயா! நியமனம் செய்யப்பட்டவராக நுழைந்து தலைவராக வளர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர்கள். மிக நல்ல எதிர்கட்சியாக அமர்ந்து தன் குழுவோடு அரசியல் செய்யட்டும் அவர். வாழ்த்துகள்! கோவை தொகுதி தவிர கிட்டத்தட்ட ஒட்டு மொத்த… (READ MORE)

Politics

உறுதியோடு உயர்வோம்

திமுக முன்னிலை என்று ஊடகங்கள் செய்தி வெளியிடும் இவ்வேளையில், வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியில் வாழும் நிலையில் இருப்பது சங்கடம்தான் என்றாலும் இருக்கிறோம். கோவிட் பாஸிட்டிவ் வந்த அத்தையை மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். மகள் ஓர் அறையில் தன்னை அடைத்துக் கொண்டு தனிமைப் படுத்திக் கொண்டாள். சுவருக்கு அந்தப்பக்கம் இருப்பவளிடம் செல்ஃபோனில் பேசுகிறோம். கதவருகே… (READ MORE)

Uncategorized

உருத்திரனும் சிவனும் ஒன்றல்ல, திருவருட்பா வரிகள்

இறைவனை ‘ஏகன்’ என்று சொல்லும் நான் ‘அநேகன்’ என்பதையும் மறுப்பதில்லை.  ஆல் அமர் செல்வர் தட்சினா மூர்த்தியையும் குருவையும் ஒன்றென ஏற்கனவே குழப்பியது போதாதென்று, சிவனும் ருத்திரனும் வேறு வேறு என்பது புரியாமல் இருவரையும் ஒன்றெனவும் குழப்பிக் கொள்கின்றனர் பலர் என மணக்குடித் தம்பிகள் சிலரிடம் சில முறை பகிர்ந்திருக்கிறேன்.  மறுக்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல்… (READ MORE)

Religion, Spirituality

நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும்

கொரோனா நோய்தொற்றின் முதல் அலையை சரியாக கையாளப்பட்டதை பாராட்டும் போது, இரண்டாம் அலையை சரியாக கையாளவில்லை என்பதையும் சொல்லித்தானே ஆக வேண்டும்! ‘தேர்தலை ஒத்தி வைத்திருக்கலாம்!’ என்பது நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் தெரியவில்லை. தேர்தலைத் தள்ளிப் போட அரசியல் நிர்ணய சட்டம் இடம் அளிக்காது என்பதையும் மறக்க இயாலாது. தேர்தலை, 7 கட்டங்கள் 8 கட்டங்கள்… (READ MORE)

Politics

மனிதகுலம் கிமு 6000

கிமு 6000த்தில் வால்கா நதிக்கரையில் வாழ்ந்த ‘இந்தோ ஸ்லாவியா’ இன மனிதர்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். ‘வேள்பாரி’யில் ஆதி மனிதர்கள் தாய் வழி சமூகம் கொண்டிருந்ததாக சு வெங்கடேசன் எழுதியிருப்பாரே, அப்படியிருந்திருக்கிறது இவர்களின் வாழ்க்கை.பத்து பதினாலு பேர் கொண்ட குடும்பத்தின் தலைவி மூத்த தாய் வழியில் குடும்பம் நடத்தப் பட்டிருக்கிறது. அவரின் சந்ததியோடு குடும்பம் நடக்கிறது…. (READ MORE)

Uncategorized

ஏற்கனவே அறிந்த பாத்திரங்களை வேறு வண்ணத்தில் என்னுள்ளே உலவ விட்ட பெரும் எழுத்து சித்திரக்காரர்

நல்ல எழுத்து என்பது ஒரு தவம் என்பது என் கருத்து. ஒரு நிலைக்கு ஓர் அலைவரிசைக்கு நம்மை பொருத்திக் கொள்ளும் போது, நம் உள்ளிருக்கும் படிமங்களை தொட்டுக் கொண்டு,  எழுத்து அதுவாக நம் வழியே நிகழ்த்திக் கொள்ளும். சில எழுத்தாளர்கள் ஒரு சாதகர்களாகவே என் கண்ணுக்குத் தெரிவார்கள்.  இவர் அப்படியொருவர்.  இவரது சித்தாந்தங்களோடு முரண்பட்டு நிற்பவர்கள்… (READ MORE)

பொரி கடலை

, ,

வந்தது கொரோனா ஆயுர்வேத மருந்து!

கொரோனாவிற்கு ஆயுர்வேத மருந்து ஒன்றை அறிவித்து விட்டார்கள், 100 நோயாளிகளுக்கு தந்து சோதித்து வெற்றி கண்டு விட்டார்கள், ஐசிஎம்ஆர் ஒப்புதல் தந்துவிட்டது! மருந்து கொடுக்கப்பட்ட 5 நாளில் 86% தொற்றும், 10 நாளில் 100% தொற்றும் குணமாகியுள்ளதாம். க்ளெவிரா மாத்திரை, சிரப் – என இரண்டு கூட்டு மருந்துகளை அறிவித்திருக்கிறார்கள். பப்பாளி, காட்டுவேம்பு, நில வேம்பு,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

wp-1619008359356.jpg

‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’ – தமிழ்மகன் : பரமன் பச்சைமுத்து

ஆதியில் அண்டப் பெருவெளியில் நிகந்த பெரு வெடிப்பின் (‘பிக் பாங்’) பின் நிகழ்ந்த மாற்றங்களில் இந்தப் பிரபஞ்சம் உருவானது. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் உருவானபோதே இன்னும் சில பிரபஞ்சங்களும் உருவாகியிருக்கலாம், இந்த உலகில் இப்போது நீங்களும் நானும் பேசிக்கொண்டிருப்பதைப் போலவே, அங்கும் ‘இணைப் பிரபஞ்சம்’ எனப்படும் பேரலல் யுனிவர்ஸ்ஸிலும் இருவர் பேசிக்கொண்டிருப்பர் என்பது அறிவியலாளர்கள்… (READ MORE)

Books Review

, , , , , , , , ,

கவனித்த செய்தி

‘கவனித்த செய்தி’ : கோதுமை கொள்முதல் எம்எஸ்பி தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு செலுத்துவதை எதிர்த்து வந்தன பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள். விவசாயிகளின் கோதுமைக்கான எப்சிஐ (உணவுக் கழகம்) தரும் தொகையை இது நாள் வரை தனியார் நிறுவனங்கள் கமிஷன் முறையில் பெற்று வந்தன. அவர்களிடமிருந்து  விவசாயிகளுக்கு பணம் சரியாக தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன. இந்நிலையில்… (READ MORE)

Politics

wp-1618899909136.jpg

‘என்னாது, சம்மர்ல காஃபி குடிக்கக் கூடாதா? அப்புறம்?’

valarchi Summer கேள்வி: கோடையில் காஃபி அதிகம் வேண்டாம் என்று ஒரு முறை நீங்கள் சொன்னதாக நினைவு. குறைத்துக் கொள்ள வேண்டுமா, குடிக்கவே கூடாதா? பரமன்: அடிப்படையை சொல்கிறேன். குறைத்துக் கொள்வதா, குடிக்கவே கூடாதா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். கோடையில் வெப்பம் மிக உயர்ந்து நிற்கும். நம் உடலும் சூடாகும். சரியான வெப்பநிலையில் உடலை… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , ,