கப்பக்காரத் தாத்தா : வெள்ளை முயல்

‘முயல் ரத்தம் குடிச்சிட்டு மைலுக்கு மைலு ஓடனும்!’ கப்பக்காரத்தா சொல்லிதான் இதை முதன்முதலில் கேட்டேன். கப்பக்கார தாத்தா முயல் வளர்த்தார். பள்ளியிலும் கதைகளிலும் அறிந்திருந்த முயலை வாழ்வில் முதன் முறையாக சிறுவனாக பார்த்தது அவர் வீட்டில்தான். கப்பக்காரத் தாத்தா என்று என் வயது சிறுவர்களும், ‘கப்பக்காரர்’ என்று மொத்த மணக்குடியும் அழைத்த அந்த தாத்தாவின் உண்மை… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

சார்பதிவாளர் அலுவலகங்கள் அசத்தல்

குடும்ப சொத்து ஒன்றை முறைப்படி எங்களுக்குள் பதிவு செய்து கொள்வதற்காக புவனகிரி சார் பதிவாளர் அலுவலகம் வந்தேன். வெளியில் பத்திரம் விற்பனையாளர், பத்திரம் எழுதித் தருபவர் என அந்த நிலை பணிகளும் பணியாளர்களும் அப்படியேதான் உள்ளனர். ஆனால், அரசின் பதிவாளர் அலுவலகம் அசத்துகிறது. ‘இந்த நேரத்திலிருந்து இந்த நேரம் உங்கள் வேலை, அப்போது வந்தால் போதும்!’… (READ MORE)

பொரி கடலை

,

19: புவனகிரி – பள்ளி : ஆசிரியர் நினைவுகள்’புவனகிரி – பள்ளி : அடிக்கும் வாத்தியார்’

19 புவனகிரி – பள்ளி : ஆசிரியர் நினைவுகள்’ 🌸 புவனகிரி பள்ளியில் அடிக்கும் வாத்தியார் எவரையாவது நினைவில் வைத்திருக்கிறீர்களா? அடி வாங்கியிருக்கிறீர்களா அல்லது எவனாவது அடி வாங்குவதை பார்த்து ஒடுங்கி நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறீர்களா? ‘கொசகொச’வென்று பேசிக் கொண்டிருக்கும் வகுப்பில், ஒருவனுக்கு ‘பொளிச்’சென்று அடி விழுந்தால், மொத்த வகுப்பும் சப்தநாடிகளும் ஒடுங்கி முதுகின் முள்ளந்தண்டு ‘சர்க்’கென்று… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

‘வாட் ஈஸ் எக்ஸ்டஸி?’

‘வாட் ஈஸ் எக்ஸ்டஸி?’ பல்வேறு பணிகளுக்கிடையே, எதை எழுவது எதைப்பற்றி எழுதுவது என்று தெரியாத ஆனால் பத்திரிக்கைக்கு முக்கிய முகப்புக் கட்டுரை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கெடு நிலையில், உட்கார்ந்து ஓர் அலைவரிசையில் ஏதோவொன்று பிடிபட்டு உள்ளுக்குள் அது வடிவமெடுக்க அதை எழுதத்தொடங்கி சுற்றியுள்ள உலகையே மறந்து லயித்து முடிக்கும் போது, மொத்தமாக ஒரு நல்… (READ MORE)

பொரி கடலை

,

18 : ‘புவனகிரி பள்ளி : தறி கூடம்’

*18* *’புவனகிரி பள்ளி : தறி கூடம்’* புவனகிரி பள்ளி அரசுப் பள்ளிதான், ஆனால் அதில் இங்கிலீஷ் மீடியம் இருந்தது தெரியுமா உங்களுக்கு? … (சென்ற பதிவைப் படித்து விட்டு ‘பன்னு ராமலிங்கம் கூரை மேல உட்கார்ந்தது, இந்த ரெண்டு பேரு இறந்து போனது பத்திதான் அப்ப மொத்த புவனகிரியும் பேசிச்சு பரமன்!’ என்று இ… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , ,

‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’17: ‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’

17 ‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’  புவனகிரியில் ஓடுவது சுவேத நதி என்கிறார்களே? உண்மையா?…..  புவனகிரி பள்ளியில் படித்த ஜெயக்குமாரை தெரியுமா உங்களுக்கு? மொத்த புவனகிரிக்கும் தெரியும் அவனை. நான் ஒரேயொரு முறை புவனகிரி பள்ளியில் அவனை பார்த்தாக நினைவு. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்து… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , ,

16: புவனகிரி பள்ளி: புவனகிரியின் கத்தி வெட்டு ‘பெராக்கு’ வைபவம் புவனகிரி பள்ளி: புவனகிரியின் கத்தி வெட்டு ‘பெராக்கு’ வைபவம் ( ‘பரமன், புவனகிரியில் ஏதோ சமீபத்திய அதிசயம் என்று ஒரு பதிவில் குறிப்பிட்டு விட்டு அதை அப்படியே விட்டுவிட்டீர்களே?’ சரி, இந்த பதிவில் எழுதி விடுவோம்!) … சுமாராக 150 ஆண்டுகள் கொண்ட புவனகிரி… (READ MORE)

Uncategorized, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , ,

15: புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார்புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார்

15 புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார் (சென்ற பதிவில் நாராயண ஐயர் ஹோட்டல் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு ‘கணேஷ் பவன்’ ‘துர்கா பவன்’ என வேறு வேறு காலகட்டங்களில் அவ்வுணவகம் கொண்டிருந்த வேறு பெயர்களையும் இயங்கிய வேறு வேறு இடங்களையும் குறிப்பிட்டு நெகிழ்ந்து… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , ,

ஆசிரியரிடம் அடி வாங்கினேன் நேற்று

முப்பத்தியேழு ஆண்டுகள் கழித்து உங்கள் தமிழாசிரியரை ஒரு மேடையில் சந்திக்கிறீர்கள். அங்கேயே மேடையிலேயே கையை நீட்டச் சொல்லி அடிக்கிறார். எப்படியிருக்கும் உங்களுக்கு. எனக்கு பெரும் மகிழ்ச்சி! மேடையிலேயே கையை நீட்டச் சொல்லி ஓங்கி அடிக்கிறார். வலித்து இழுத்து விடுவேன் என்று நினைத்து அடித்தவருக்கு அதிர்ச்சி, ‘வலிக்கலியா உனக்கு?’ என்று மறுபடியும் அடிக்கிறார். இத்தனையாண்டுகள் கழித்து நமக்கு… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

14 புவனகிரி பள்ளி

*14* *புவனகிரி பள்ளி* புவனகிரி ‘நாராயண ஐயர் ஹோட்டல்’ தெரியுமா, உங்களுக்கு? …. (விளையாட்டாக புவனகிரி பள்ளியில் என்னோடு படித்த வகுப்புத் தோழர்கள் கொண்ட கட்செவியஞ்சல் குழுவிற்காக நாம் எழுதத் தொடங்கிய இந்த ‘புவனகிரி பள்ளி’ தொடர் வெளியிலும் பகிரப்பட்டு பல வகையான பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறது. அதில் மிக முக்கியமானவை இரண்டு. ஒன்று – தமிழாசிரியர்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

wp-16410883621398515048242616711124.jpg

சுடச்சுட வெண்ணெய்

அதிகாலை 05.50க்கு அருகில் வந்து ‘சிவா, ஆ… காட்டு! வாயத் தொற!’ என்று ஊட்ட வருகிறார் அம்மா. சுடச்சுட இப்போதுதான் கடைந்த வெண்ணெய்! லேசான புளிப்போடு வாயிலிருந்து, தொண்டையில் வழிந்து நெஞ்சு வரை வழிக்கிக் கொண்டே சூடாய் இறங்குகிறது வெண்ணெய்.  தயிர் நிறைந்த பெரிய பானையை வைக்கோல் பிரி சிம்மாடில் வைத்து, தரையில் தண்டாசனம் இட்ட… (READ MORE)

Manakkudi Manithargal

, ,

wp-1640793438085.jpg

‘மிமி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

பாலிவுட் சினிமா கனவுகளோடும் உற்சாகத் துள்ளலோடும் இளமைத் திமிரோடும், ராஜஸ்தானின் உள்ளூர் அரங்குகளில் நடனமாடிக்கொண்டிருக்கும் ஓர் அழகிய மங்கையின் வாழ்வில் ஒரு டாக்ஸி ஓட்டுநரின் வழியே ஓர் அமெரிக்க தம்பதிகள் வருகின்றனர். முதலில் மிரண்டு எதிர்த்த இளம்பெண் பின்பு பெரிய பேரத்திற்கு மடிகிறாள், அமெரிக்க தம்பதியினரின் குழந்தைக்கு தன் வயிற்றில் இடங்கொடுத்து வளர்க்க ஒன்பது மாத… (READ MORE)

Manakkudi Talkies

13: புவனகிரி பள்ளி  – வேதம் புதிது படமும் தமிழ்மணி டீச்சரும்

*13* ( சென்ற பதிவைப் பார்த்துவிட்டு ‘யார் அந்த சேரன்?’ என்று பெங்களூரில் இருக்கும் ஸ்ரீதர் திரிசங்கு உட்பட பலரும் கேட்டிருந்தனர். ‘சேரன்’ என்பது மாற்றப்பட்ட பெயர் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.  சென்ற வாரம் புவனகிரிக்கு வந்திருந்த போது புவனகிரி பள்ளி மாணவர்கள் பலரை வெள்ளியம்பலம் சுவாமி மடம் கோவிலில் வரவழைத்து ஒரேயிடத்தில் நிறுத்தி இன்ப… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , ,

வாழப்பாடி ஆசிரியர்: தட்றா கைய அவருக்கு!

எவ்வளவு படித்தாலும் எழுதினாலும்  பேச்சில் பயன்பாட்டில் இல்லாத மொழியில் சரளம் வராது. தமிழக மாணவர்களைப் பொறுத்த வரையில் ஆங்கிலத்தில் தவிப்பது இதனால்தான். உரையாடலை கொண்டு வந்து விட்டால் பழகப் பழக மொழி வசமாகும்.  பேசக் கற்றால் எழுதுவதும் படிப்பதும் இன்னும் எளிதாகும் என்னும் வழியை அடிப்படையாக வைத்து, சேலம் வாழப்பாடி அரசுப் பள்ளியில் சிவக்குமார் என்னும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

மு பச்சைமுத்து : 2ஆம் குருபூசை

🌸 என் தந்தை மு. பச்சைமுத்து அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூசை (நினைவு நாள் / அவர் வீட்டிற்கு வரும் நாள்) தினம், திருப்புகழ் இசை அஞ்சலி, கோ பூசை, ஓதுவார்களின் திருமுறைகள் முற்றோதல், அவர் பூசை செய்து வழிபட்ட வேலுக்கு நீராட்டு பூசனைகள், அமுது படைத்தல், அழைத்து விருந்தினர்களுக்கு அன்னம் படைத்தல் என அவர்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1639876840741.jpg

‘அப்பா….!  வாழ்த்துங்கள் அப்பா!’

எவ்வளவு இருந்திருந்தாலும் ‘இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம்!’ என்று நினைப்பதுதானே மனித மனசு! இதுதான் அந்தக் கணம் இப்படியொரு கணம் வாய்க்காது இனி என்று முக்கிய கணங்களில் எவரேனும் சொல்லியிருந்தால் இன்னும் வாழ்ந்திருப்பேனே என எவ்வளவு வாழ்ந்த போதும் வழுக்கி விழுகிறது மனம் வாழ்வதும், வாழ்ந்த கணங்களை எண்ணி வாழ்வதும் தொடர்ந்து மேலே வாழ்வதும்தானே வாழ்க்கை…. (READ MORE)

கவிதை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

12 : ‘புவனகிரி பள்ளி : இவர்கள் இருந்திருப்பார்கள் உங்கள் வகுப்பில்!’

12 ‘புவனகிரி பள்ளி : இவர்கள் இருந்திருப்பார்கள் உங்கள் வகுப்பில்!’  ( சென்ற பதிவில் ‘வாரியார் – கி வீரமணி – புவனகிரி பள்ளி’பற்றிப் படித்துவிட்டு, ‘புவனகிரி இறை பணி மன்றத்தின் நோட்டீஸ்களை எங்கள் ஐயப்பன் அச்சகத்தில்தான் நாங்கள் அடித்துத் தருவோம். உங்கள் தொடர் பல பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது. தொடரட்டும்!’… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , , ,

11. ‘புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்’புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்

*11* *’புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்* (புவனகிரி பள்ளி பற்றிய நம் பதிவுகளை படித்து விட்டு துபாயிலிருந்து கண்ணன் தகவல் அனுப்பியிருந்தார், ‘ரஜினி புவனகிரி வந்த போது, அந்த மேடையில அவருக்குப் பின்னாடி நின்னது நானும் புவனகிரி மெடிக்கல்ஸ் கணேஷும். நாங்க புவனகிரி ரஜினி ரசிகர் மன்றம் நடத்துனவங்க’ என்று. (நாளைக்கு ரஜினி… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புவனகிரி பள்ளி : புவனகிரிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி் வந்த கதை

*10* *புவனகிரி பள்ளி : புவனகிரி வைணவ வரலாற்றில் உள்ளது* வைணவத்தின் பிரிவான மாத்வத்தில் புவனகிரி ஒரு புன்னிய பூமி என்று போற்றப்படுகிறது தெரியுமா? புவனகிரி பள்ளியில் ‘கடவுளை மற, மனிதனை நினை!  அழும் குழந்தைக்குப் பால் இல்லை, பாழுங்கல்லுக்கு பாலா?’ என திராவிடர் கழக பற்றாளராக தீவிர நாத்திகம் பேசிய ஆசிரியர் ஒருவர் இருந்தார்…. (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , , ,

மு பச்சைமுத்து – 2ஆம் குருபூசை

🌸 திருச்சிற்றம்பலம் 🌸 நிகழும் பிலவ ஆண்டு மார்கழி திங்கள் நான்காம் தேதி ஞாயிற்று கிழமை (19.12.2021) மிருகசீரிடம் வின்மீன் கூடிய தினத்தில் எங்கள் குருநாதர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அடிப்பொடி வில்லிசை வித்தகர் திரு. மு. பச்சைமுத்து ஆசிரியர் அவர்களின் 2வது குருபூசை விழா எங்களது இல்லத்தில் காலை கோபூசை, ஆன்மார்த்த பூசை… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1638291489871.jpg

‘மாநாடு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

ஓர் அலப்பரை அரசியல்வாதி உட்பட பயணிகளை ஏற்றிக் கொண்டு ஓடுதளத்தில் புறப்பாட்டிற்குத் தயாராக இருக்கும் கோவை விமானத்தில் கடைசியாக ஓடி வந்து அப்துல் காலிக் ஏறியதும் புறப்படும் அந்த விமானத்தின் பயணம் முடிவேயடையாததாக, திரும்பத் திரும்ப வரும் கால வளையத்துக்குள் சிக்கிக் கொண்டால் என்னவாகும், அப்படியொரு பிரச்சினையை நாயகன் எப்படி எதிர் கொண்டு வெளிவருகிறான் என்னும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

ஆர்யாஸ் காஃபி

மாயவரம் காளியாகுடியைப் போலவே, வேலூர் க்ரீன் சர்க்கிள் ‘ஆர்யாஸ்’ காஃபியும் தனி வகையே! தேசிய நெடுஞ்சாலை வழியே வேலூரை கடக்கும் போதெல்லாம் மேம்பாலத்தில் ஏறாமல் இடதில் இறங்கி க்ரீன் சர்க்கிளை சுற்றி ஆர்யாஸில் நுழைவது ஒரு வழக்கம். தாயம் வகுப்புகள், வேலூர் – குடியாத்தம் – திருப்பத்தூர் மாணவர்கள் பலரின் முகங்கள் எல்லாம் வந்து போகும்…. (READ MORE)

பொரி கடலை

9. புவனகிரி பள்ளி – ஸ்கூல் பெல்:

*9* *புவனகிரி பள்ளி – ஸ்கூல் பெல்:* ( சென்ற பதிவை படித்து விட்டு துபாயிலிருந்து கண்ணன் (புவனகிரி நாராயண ஐயர் ஹோட்டல்) தனது பள்ளி நாட்களை திரும்ப வாழ்ந்ததாகவும் அவரது நண்பரகள் பதிவை படித்து மகிழ்ந்ததாகவும் குரல் பதிவு அனுப்பியிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை தலைவர் முனைவர் சரவணன் மகிழ்ந்து எழுதியிருந்தார். … (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புவனகிரி – பள்ளி : ப்ரேயர் திடல்

8 புவனகிரி – பள்ளி : ப்ரேயர் திடல்  (புவனகிரி பள்ளியின் இதயமான ‘க்ரவுண்ட்’ பற்றிய நம் முந்தைய பதிவைப் படித்து விட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைப் பேராசிரியரும் முனைவருமான சரவணன் (புவனகிரி பள்ளி மாணவர்) தமது வருத்தத்தைப் பகிர்ந்திருந்தார். முந்தைய பதிவுகளில் ஒன்றான ‘அசோக மரமும் பச்சைப் பைப்பும்’ பதிவைப் படித்துவிட்டு,… (READ MORE)

Uncategorized, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

சத்தம்

அருகிலுள்ள ஏதோவொரு வீட்டிலிருத்து முகந்தெரியா மனிதரொருவர் ‘ஆ…’வென்று செய்யும் யோகா உச்சாடனம் பக்கத்து மனை கிணற்றடியில்வேலைக்கார பாட்டியம்மா பாத்திரம் கழுவையில் எழும்‘களங் ப்ளங் டங்’ குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே பக்கத்து வீட்டு ஓய்வுபெற்ற மருத்துவர் சொல்லும், ‘ஆங்… நான் பாத்துக்கறேன். போங்க!’ பலகணிக்கு வெளியே சோறு வைக்கப்பட்டதும் உற்சாகத்தில் தன் இனத்தை அழைக்க காகம்… (READ MORE)

ஆ...!, கவிதை

22வது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 இன்று மிருகசீரிடம் (கார்த்திகை மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை21.11.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

மைக்ரோப்ராஸர் ட்ராஃபிக் சிக்னல் – ஏவிசிசி

இன்று காலை அண்ணாநகர் ரவுண்டானா சிக்னலில் நின்ற போது, வண்டிகளில் இருக்கும் உலோகங்களை வைத்து எடையைக் கணக்கிட்டு எந்தப் பக்கம் நிறைய வண்டிகள் எனக் கணக்கிடும், கல்லூரியில் படித்த ‘மைக்ரோப்ராசர் கன்ட்ரோல்டு எலக்ரானிக் வெய்யிங் ட்ராஃபிக் சிக்னல்’ நினைவுக்கு வர, மனதில் இடிசி லேப், அந்த வி ஐ மைக்ரோ மைக்ப்ராசர் கிட் எல்லாம் நினைவுக்கு… (READ MORE)

AVCCP

wp-1637256468265.jpg

‘அண்ணாத்த’ : திரை விமரசனம்: பரமன் பச்சைமுத்து

முன்குறிப்பு 1: தொடர்ந்த வெளியூர்ப் பயணங்கள், சென்னைப் பெருமழை என பல காரணங்களால் திரைப்படங்கள் பார்ப்பது பின் வரிசைக்குப் போய் ‘அண்ணாத்த’ ‘ஜெய் பீம்’ இரண்டும் பார்க்க முடியாமல் போனது. இப்போதுதான் ‘அண்ணாத்த’ படத்தை பார்க்க முடிந்தது. இத்தனை நாளுக்குப் பிறகு இனி திரைவிமர்சனம் எதற்கு என்றிருந்த என்னிடம் தொடர்ந்து ‘உங்கள் கருத்து வேண்டும்’ என்று… (READ MORE)

Manakkudi Talkies

,

92 பேட்ச் சரவணக்குமார்

🌸 முதல் முறை சந்திக்கும் போதே பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்த உணர்வு வந்துவிடுகிறது சிலரை சந்திக்கும் போது.ஏவிசிசிபி 92 பேட்ச்சின் சரவணக்குமார் உடன் ஆன சந்திப்பு அப்படியே இருந்தது. வளைகுடாவிலிருந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்தவர், மலர்ச்சி அலுவலகம் வந்து நம்மை சந்தித்து இன்ப அதிர்ச்சி தந்தார். ஏவிசி பாலிடெக்னிக்கில் படிக்கும் போது குத்தாலத்திலிருந்து… (READ MORE)

AVCCP

வெள்ள நீர் வடிகால் – தமிழக அரசின் சூப்பர் முடிவு

தமிழகம் முழுக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் முதல்வர். இதனால் சில சங்கதிகள் நடந்துள்ளன. ( ‘அவரு ஹெலிகாப்டர்ல போவல, நேரில் போனாரு பாரு!’ என்றும், ‘அந்தத்  தொகுதியில் இன்னும் தண்ணி நிக்குது, போட்லதான் போகனும்!’ என்றும் அரசியல் நிலை சார்பு எதிர்ப்பு கொண்டோர்கள் பேசுகிறார்கள், பேசட்டும். நமக்கு வேண்டியதை மட்டும் நாம்… (READ MORE)

Politics

7. புவனகிரி பள்ளி – புவனகிரி பள்ளியின் இதயம்:புவனகிரி பள்ளி – புவனகிரி பள்ளியின் இதயம்:

7 புவனகிரி பள்ளி – புவனகிரி பள்ளியின் இதயம்: புவனகிரி பள்ளியின் இதயம் எது என்று பழைய மாணவர்களைக் கேட்டால், இதையே சொல்வார்கள்! ‘எதை?’ என்று பார்ப்பதற்கு முன் பழைய மாணவர்கள் என்று நாம் குறிப்பிடும் வகையினர் எவர் என்பதை சொல்லியாக வேண்டும். … புவனகிரி கடைத்தெருவில் ஜெயா காப்பிக்கு எதிர்ப்புறம் ஆசியா சைக்கிள் மார்ட்டுக்கு… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

நீலம் – நாவல் வடிவில் பாகவதம்

அங்கொன்றும் இங்கொன்றுமாக துண்டு துண்டாக படித்தும் செவி வழி கதைகள் கேட்டதுமன்றி பாகவதத்தை முழுதுமாக இதுவரை வாசித்தில்லை நான். பாகவதத்தை உள்வாங்கி நாவல் வடிவில் ஜெயமோகன் எழுதியிருக்கும் நூல் நண்பர் மதுவின் பரிசாக நம் வாசல் வந்து சேர, பாகவதம் விரிகிறது என் முன்னே என்னுள்ளே. சில அத்தியாயங்கள் படித்ததுமே வியப்பில் உறைந்து கீழ்வருவனவற்றை சொல்கிறேன்:… (READ MORE)

Books Review, பொரி கடலை

சென்னை – நூர் மேலாண்மை

பொன்னையன், இளங்கோவன்! கேள்விகளுக்கு நன்றி. எனக்கு எந்த கட்சியையும் சார்ந்திருக்கவோ எதிர்த்து நிற்கவோ அவசியம் ஏற்படவில்லை. சிவன் அதை எனக்கு ஏற்படுத்த மாட்டான் என்று நம்புகிறேன். நல்லதென்றால் எவராக எந்த கட்சியாக இருந்தாலும் பாராட்டுவேன். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதிலாக நான் எழுதும் இந்தப் பதிவும் அப்படியே. கட்சிகள் தாண்டி அரசியல் இல்லாமல் கொஞ்சம் பேசுவோம்…. (READ MORE)

Uncategorized

சென்னை – ReEngineering

இப்போது ஆட்சிக்கு வந்த இந்த அரசுக்கு அவகாசம் தேவை என்பதை உணர்வோம். சென்னையில் 16 நீர் வழித்தடங்கள் உள்ளன, அவற்றை முறையாக தூர்வாரவில்லை, ஒவ்வோர் ஆண்டும் 500 கோடி அதற்காக ஒதுக்கப் படுகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். இவர்கள் அவர்களை கை காட்டுகிறார்கள். பதிலுக்கு ‘மத்திய அரசு தந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இவ்வளவு கோடி… (READ MORE)

Politics

6. புவனகிரி பள்ளி – அசோகமரமும் பச்சை பைப்பும்புவனகிரி பள்ளி – அசோகமரமும் பச்சை பைப்பும்

…. சென்ற பதிவில் புவனகிரியைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொன்னதை விட, என்சிசி வாத்தியார் நடராஜன் பற்றி பின்னூட்டம் அனுப்பியவர்களே அதிகம். சிலர் சரியான விடையை எழுதியிருந்தார்கள்.  ‘பள்ளிக்கு வடமேற்கே’ என்று சொன்ன பதில் தவறானது. வடமேற்கே இருந்தது புதர்கள் அடர்ந்த கருவக்காடு. (இன்று அதுவும் இல்லை. அழிக்கப்பட்டுவிட்டது) பள்ளியின் வடகிழக்கே இருந்தது வரலாற்றில் இடம்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , , ,

புவனகிரி பள்ளி – என்சிசி வாத்தியார்

*5* *புவனகிரி – பள்ளி* ( சென்ற பதிவில் புவனகிரி பள்ளியின் டிஜே எனப்படும் ஜெயராமன் ஐயா பற்றி எழுதியிருந்ததை படித்துவிட்டு மகிழ்ந்து அமெரிக்காவிலிருந்து அவரது மகன் ஒளி, குரல் பதிவொன்றை அனுப்பியிருந்தார். அந்தப் பதிவை ஜெயராமன் ஐயாவிற்கு வாசித்துக் காட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். கூடுதல் மகிழ்ச்சி! வாழ்க! ) ‘புவனகிரியின் பெயர் வரலாற்றில் இருந்தது  தெரியுமா?’… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

எப்படி நடக்கிறது இது

என்ன சொல்வது, எப்படி சொல்வது இதை! ஓர் இடத்தில் ஒருவருக்கு உயிர் போய்க்கொண்டிருக்கும் தருணத்தில், அது பற்றி எதுவுமே தெரியாத வேறொரு ஊரில் இருப்பவனுக்கு அவரது நினைப்பே தொடர்ந்து வருமா!? மகனை மகளை கொண்டாடுவதை விட இன்னும் அதிகமாய் பேரன் பேத்திகளை கொண்டாடுவர் தாத்தாக்கள். ஒருவருக்கு எத்தனை பேரன்கள் பேத்திகள் இருப்பார்கள்! ஒன்று, இரண்டு, மூன்று,… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

தமிழ்நாடு தினம்

மெட்ராஸ் ராஜதானியிலிருந்து பிரிந்து போன கர்நாடகமும் ஆந்திரமும் நவம்பர் 1ஐ ‘கர்நாடகா டே’ ‘ஆந்திரா டே’ எனக் கொண்டாடுகிறார்கள். ‘நம்மிடமிருந்து பிரிந்து போனது இழப்பு, எப்படி அந்த நாளை நாம் கொண்டாட முடியும்?’ என்று பலகாலமாக பேசப்பட்டு வந்து கருத்துகள் மாறியுள்ளன இன்று. பழ நெடுமாறன் போன்றோர் நவம்பர் 1ஐ  ‘தமிழ்நாடு தினம்’ எனக் கொண்டாட… (READ MORE)

Politics

தாத்தாவாம்

நாம் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒன்றும் செய்யாமலிருந்தாலும் உலகம் இயங்கத்தானே செய்கிறது. அக்காவின் பையனையே இன்னும் சின்னவன் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அவனது பிள்ளைக்கு இன்று காதுகுத்தல் செய்து பொன்நகை பூட்டும் நிகழ்வு திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவிலில்.  எல்லாக் குழந்தைகளையும் போல மொட்டையடிக்க அழுதான், காது குத்தும் போது கேவினான் சிறுபிள்ளை லித்தீஸ்வரன். அக்காவின் பேரன் என்பதால்… (READ MORE)

பொரி கடலை

ஜென் நிலைக்கு முன் நிலை

‘அந்த பனாரஸ் காட்டுங்க’ ‘மேடம், இது பனாரஸ் இல்லை. கோட்டா’… ‘இதில மொத்தம் மூணுதான் இருக்கு மேடம். அதே பேட்டர்ன், டிசைன். கலர் மட்டும் வேற. இதோ ரெட், க்ரீன், ப்ளூ! மூணு இருக்கு!’ ‘ஓ! வேற கலர்ஸ் இருக்கா?’ … ‘நீங்க கேட்ட அதே புடவை, பெட்டர் மெட்டீரியல் ‘தஸ்ஸாரா’ல இருக்கு பாருங்க. இதோ!’… (READ MORE)

பொரி கடலை

, ,

நீலம் : என்ன விலை கொடுத்தால் தகும்?

சில நேரங்களில் நமக்கு தரப்படும் சிலவற்றை எதைக் கொண்டும் அளவிட முடியாது.  தாகத்தில் தவிப்பவனுக்கு தரப்படும் ஒரு குவளை நீரைப் போன்று, வேண்டிய நேரத்தில் வரும் அவை விலைமதிப்பற்றவை, என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாதவை. வாங்கி வைத்திருந்து வாசிக்காமலே இரண்டாண்டுகள் கடந்து, பிற்பாடே கையிலெடுத்த ‘வெண்முரசு’ வரிசையின் ‘முதற்கனல்’ மெல்ல மெல்ல என்னை… (READ MORE)

Books Review, பொரி கடலை

, , ,

ஜெயராமன் ஐயா : புவனகிரி பள்ளி

*4* *புவனகிரி – பள்ளி* ( புவனகிரியின் பெயர் வரலாற்றில் இருந்தது தெரியுமா?. சரி பாதியில் விட்ட ஜெயராமன் ஐயா பற்றியதை முடித்து விட்டு வருவோம் முதலில்) ஆற்றல் உள்ளிருந்தும் எதனாலோ குவியம் பெறாமல் ஏனோதானோ என்று பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருக்கும் மாணவனை, எங்கிருந்தோ வந்து சில ஆசிரியர்கள் ‘படக்’கென்று பொருத்தி திருத்தி உள்ளே… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

தமிழக அரசின் அறிவிப்பை எழுந்து நின்று பாராட்டுகிறேன்!

தமிழக அரசின் அறிவிப்பு ஒன்றை எழுந்து நின்று பாராட்டுகிறேன்! …. ஆர் ஏ புரத்தில் அடுத்தடுத்து 6 பள்ளிகள் இருக்கும் பகுதியொன்றின் முக்கிய வீதியில் இருந்த அடுக்ககம் ஒன்றில் குடியிருந்தேன். 2015ல் நிகழ்ந்த சென்னைப் பெருவெள்ளத்தின் போது நிறைய பகுதிகள் வெள்ளத்தில் மிதந்த போதும், எங்கள் வீதியிலும் அடுக்கக வளாகத்திலும் நீர் தேங்கவில்லை. மாநகராட்சியின் வெள்ள… (READ MORE)

Politics

,

அட இவர் பேசுகிறார்!

பேசும் விதத்தால் தன் பேச்சு வன்மையால் எதிரில் கேள்வி கேட்பவரை விவாதத்தில் எதிரில் இருப்பவரை சாமர்த்தியமாக நிறுத்தி ‘லெவல்’ காட்டுவது பெரியாரிய திராவிட தலைவர்களிடம் பொதுவாகவே இருக்கும் பல காலமாகவே நாம் கண்டு வரும் இயல்பு. ஆ ராசா, சுபவீரபாண்டியன் என பலரை குறிப்பிடலாம். அதிலும் என்ன கருத்துக்களை பேசினாலும் சுபவீ ‘சம்பூகன்’ சங்கதியைக் கொண்டு… (READ MORE)

Politics

இரு திரையரங்குகள் : புவனகிரி – 3

*3* *புவனகிரி – பள்ளி* போன பதிவைப் படித்து விட்டு புவனகிரி ‘ஆபிதா வீடியோ விஷன்’ பற்றி  ‘மணி ஜூவல்லர்ஸ்’ ஜெகன் உட்பட சிலர் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள்.  ‘இப்படி ஒன்று இருந்ததா?’ என்று கேட்டும் எழுதியுள்ளனர். இதற்கு பதிலாக சிறு குறிப்பு வரைய வேண்டுமானால் ஆபிதா வீடியோ விஷன் இருந்த காலத்தை முதலில் சொல்லியாக வேண்டும்…. (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புத்தர் சிரிக்கிறார்…

புத்தர் சிரிக்கிறார்,சிலுவையிலறையப்பட்ட ஏசு கிறிஸ்துவுக்கும்பௌத்தம் தந்த புத்த பகவானுக்கும்பூமாலை சூட்டி ஆயுதபூசை பொட்டிட்டதொழிலாளியின் வெள்ளந்தி மனம் கண்டு! – பரமன் பச்சைமுத்து15.10.2021 #AyuthaPoojai#Paraman

கவிதை

போற போக்கைப் பார்த்தால், பிரியங்கா வதேராவை காங்கிரஸ் தலைவராக்கிடுவாங்களோ! நடக்கறதெல்லாம் பாத்தா அப்படித்தான் தெரியுது! – மணக்குடி மண்டு 14.10.2021

Politics

புவனகிரி பள்ளி – 2

*2* *புவனகிரி பள்ளி* ( சாயப்பு வாத்தியார் பற்றிய முந்தைய பதிவு பல்வேறு குழுக்களுக்கும் பகிரப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றதாக அறிகிறோம். ‘பரமன், சாயப்பு வாத்தியார்ன்னா அந்த +2 கெமிஸ்ட்ரி வாத்தியாரா?’ என்று கேள்வி அனுப்பியிருக்கிறான் பங்காருபேட்டையிலிருந்து முன்னாள் புவனகிரி மாணவன், இந்நாள் ரயில்வே ஊழியன். பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புக்கு வேதியல் எடுத்தது, ’16 வயதினிலே’… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புலம் பெயர்ந்தோர் நலம்

பிழைப்பிற்காக வெளிநாட்டுக்குச் சென்று அங்கேயே வாழும் புலம் பெயர் தமிழர்களுக்கு என திட்டங்கள் அறிவித்து அசத்தியிருக்கிறது தமிழக அரசு! வாழ்க!  வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் தமிழ் கற்றுத்தருதல், அங்குள்ள ஆசிரியர்களை தமிழ் கற்ற ஊக்கப்படுத்துதல் என்பன மிகச் சிறப்பானவை. அதே மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் மொழித் தொடர்பு அற்றுப் போன அந்த சந்ததியினருக்கு… (READ MORE)

Politics

, ,

wp-1633974077591.jpg

டாக்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தனது திருமணத்தை உறுதி செய்ய பெண் வீட்டுக்கு வந்த ராணுவ மருத்துவரை ‘உன்னோட செட் ஆகாது போப்பா!’ என்று சொல்லி அதிர்ச்சி தரும் அந்தக் குடும்பத்தினரே கொஞ்ச நேரத்தில் அதிர்ச்சியடைந்து நிற்க, இவர்  உதவ இறங்கி ‘ஹ்யூமன் ட்ராஃப்பிக்கிங்’ எனும் சிறுமிகளைக் கடத்தி விற்கும் கும்பலின் நூல் பிடிக்கிறார். உலக அளவில் பலம் மிக்க அந்த… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , , ,

‘சாயப்பு வாத்தியார்’ என்னும் ‘பாய் வாத்தியார்’:

‘சாயப்பு வாத்தியார்’ என்னும் ‘பாய் வாத்தியார்’: புவனகிரி பள்ளியில் தினமும் ‘ஷூ’ அணிந்தவர், அந்தக் காலத்திலேயே அப்படியொரு ‘ஷூ’ அணிந்தவர் என்றால் அது அவர்தான். இந்த ஊருக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லை என்பது போன்ற தோற்றம் கொண்டவர் சாயப்பு வாத்தியார். நல்ல உயரம், அது தெரியாத அளவிற்கு பருமனான உடல், நீளமான முகம். பாகிஸ்தான் முஸ்லீம்கள்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

புரட்டாசி சனி

பிஜேபியா திமுகவா என்பதற்குள் நுழையவில்லை, விரும்பவுமில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு குழந்தைகள் பள்ளி வருவதற்குக் கூட ஏற்பாடுகள் அறிவித்துள்ளது அரசு, சிறப்பான முன்னேற்பாடுகளோடு. திரையரங்குகள், வணிக வளாகங்கள் என எல்லாமும் செயல்பாட்டில். பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கும் ஏற்பாடு செய்திருக்கலாம். புரட்டாசி சனியில் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசிப்பது அவர்களுக்கு காலம்காலமான ஒரு விருப்பம், வேண்டுதல்…. (READ MORE)

Politics

நெடுஞ்சாலை வழி நிறுத்த உணவகத்தில் நமது நூல்கள்

நெடுஞ்சாலைப் பயணத்தில் தேநீருக்காக இறங்கிய உணவகத்தில் மருமகனின் நூல்கள் வைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து பரவசப்படும் அத்தை! அதுவும் ‘அப்பாவின் 75வது பிறந்த நாளுக்கு அர்ப்பணம்!’ என்று வந்த ‘வாழ்க்கை பாசறையில்…’ நூலைப் பார்த்ததும் பல உணர்வுகள் அவருக்கு! பரமன் பச்சைமுத்துஅச்சரப்பாக்கம்06.10.2021

Paraman's Book

, , , ,

wp-1633404586787.jpg

உள்ளே கனல் – Malarchi Online Course

பலரின் உள்ளத்தில் கனல் மூட்டி உந்தித் தள்ளி புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி நேற்று நிறைவு பெற்றது ‘உள்ளே கனல்’ MALARCHI Online Course. பல நாடுகளிலிருந்து பல ஊர்களிலிருந்து பங்கேற்ற மாணவர்கள், ஆழமான மாற்றங்கள், நிறைவான உணர்வுகள் என நிறைவு பெற்றது ‘உள்ளே கனல்’. இறையை நோக்கி ததும்பும் நன்றியுணர்வோடு நான்! – பரமன் பச்சைமுத்து05.10.2021… (READ MORE)

Paraman's Program

, , , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை ‘சிவ்வழிபாட்டு மாலை’நோக்கம் ஒன்று நிறைவேறுகிறது

மு பச்சைமுத்து அவர்களின் முதல் குருபூசையில் மு பச்சைமுத்து அறக்கட்டளையில் வெளியிடப்பட்ட நூல் ‘சிவ வழிபாட்டு மாலை’. மணக்குடி (மணியார் வீட்டு) நடராஜன் ஐயரின் மகள் வயிற்றுப் பேரன் சென்னை சைதாப்பேட்டையில் இந்த நூலிலிருந்து சிவபுராணம் கற்றிருக்கிறான். எல்லோரையும் சிவபுராணம் சொல்லச் சொல்லும் அப்பா, இதோ இதைத்தான் விரும்பியிருப்பார்! இந்நூலின் நோக்கம் என்று அதன் முன்னுரையில்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

wp-1633322887231.jpg

‘நோ டைம் டு டை – 007 ‘ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

‘நோ டைம் டு டை – 007 ‘ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து நீண்ட காலத்துக்குப் பிறகு திரையரங்கில் ஜேம்ஸ்பாண்ட் 007 படம் என்பதே சுவையான உணர்வுதான், அதுவும் முப்பரிமாணத்தில் கண்களுக்கருகில் படம் விரிய நல்ல பின்னணி இசை தெறிக்க. டேனியல் கிரெய்க் வந்ததிலிருந்தே பியர்ஸ் ப்ராஸ்னன் காலம் வரையிலிருந்த ஜேம்ஸ் பாண்டிற்கென்று… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

பணம் இல்லாத போது

மாநிலங்களிடம் குறிப்பாய் தென்னிந்திய மாநிலங்களிடம் நிதி இல்லை என்பது தெரிந்ததே. இந்நிலையில் கொரோனா உயிரிழப்புகளுக்கு மாநில அரசே இழப்பீடு தரவேண்டும் என்று மத்திய அரசு சொல்வது சரியில்லை. மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும் இந்தப் பொறுப்பை. – மணக்குடி மண்டு01.10.2021

Politics

பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள்

வளரும் வெளியே ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், பிற குழந்தைகளோடு கலந்து விளையாட வேண்டிய பருவத்தில் நோய்த்தொற்று பொது முடக்கம் வந்து நீண்ட காலத்திற்கு வீட்டிலேயே முடக்கப்பட்டனர் இளம் சிறார்கள். உளவியல் ரீதியாகவும், கற்றல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிள்ளைகளிடையே சரி செய்ய முடியா சரிவு ஏற்பட்டுள்ளது. பழக்க வழக்கங்கள் உணவு முறை என எல்லாமே… (READ MORE)

Politics, பொரி கடலை

, ,

wp-1632816024215.jpg

20ஆவது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 இன்று மிருகசீரிடம் (புரட்டாசி மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை28.09.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

தமிழக அரசுக்கு ‘சபாஷ்!’

தடுப்பூசி செலுத்த பதிவு செய்து விட்டு கேரளாவில் மக்கள் காத்திருக்க, இங்கே தமிழகத்தில் தடுப்பூசி முழுநாள் முகாம்கள் நடத்தி செப்டம்பர் மாதம் மட்டும் 70.71 லட்சம் தடுப்பூசி செலுத்தி கலக்கியிருக்கிறது தமிழக அரசு. முழுநாள் தடுப்பூசி முகாம்களுக்கு அரசு ஊழியர்கள் களப்பணியாளர்கள் ஞாயிறு காலை 7 மணியிலிருந்து இரவு வரை பணி புரிய வேண்டும் என்பது… (READ MORE)

Politics

மொத்த நாட்டிற்கும் ‘சபாஷ்!’

ஆகஸ்ட் மூன்றாம் வாரம் கொரோனா மூன்றாம் அலை உச்சத்தில் இருக்கும் என்றது ஐசிஎம்ஆர், செப்டம்பர் இரண்டாம் வாரம் இந்தியாவில் மூன்றாம் அலை உச்சத்தில் இருக்கும் என்றது உலக சுகாதார மையம். இவற்றுக்கு நேர்மாறாக கட்டுக்குள் இருக்கிறது நோய்த்தொற்று. நாணு முழுக்க கொரோனாவே இல்லையென்று சொல்ல முடியாவிட்டாலும் கட்டுக்குள் இருக்கிறது. சிக்கிம், ஹிமாச்சல் பிரதேஷ், லடாக், கோவா,… (READ MORE)

Politics

முதல் நாள்

படித்து தேர்வாகி  வென்று வேலைக்கு போவது ஓர் உணர்வு என்றால் நம் பிள்ளைகள் வேலைக்கு போவது வேறொரு நிலை, வேறோர் உணர்வு. தனது ப்ரொஃபஷனல் வாழ்வில் முதல் அடி எடுத்து வைக்கும் என் மகள், இண்ட்டர்ன்ஷிப்பிற்காக ஒரு நிறுவனத்தில் சேரும் முதல் நாளான இன்று நாமே சேர்வது போல பயபக்தியோடு போய் அவளை விட்டு வந்தேன்…. (READ MORE)

பொரி கடலை

வெள்ள நீர் வடிகால் பணிகள் – சபாஷ்!

பாடி மேம்பாலத்திற்கு வடமேற்கேயுள்ள கொரட்டூர் போன்ற தாழ்நிலை பூமி பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக ‘எல்லா தெருவையும் தோண்டி தோண்டி போட்டுறாங்க. வண்டி போக முடியல’ என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள். ஆனால், சங்கதி வேறு. வெள்ள நீர் வடிகாலுக்காக பெரிய ஆழ் குழாய்கள் பதிக்கும் வேலை மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இவ்வளவு… (READ MORE)

Politics

, , ,

சில பாடல்களின் வரிகளினிடையே

சில பாடல்களின் இடையே ஊடுபயிர் போல பழைய வேறு பாடலின் துண்டை வைத்து அனுப்புவது இசையமைப்பாளரின் சித்து. ‘ஹம் ஆப் கே ஹேன் கவுன்’ பாடல்களில் நடு நடுவே ‘மைனே ப்யார் க்யா’ பாடல்கள் வைத்தது, நதியாவை கேட்டு ‘மாமா உன் பொண்ணக் குடு, ஆமாம் சொல்லிப்புடு’ என்று ரஜினி ஆடிப்பாடும் பாடலில் இடையில் ராஜா…… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , ,

சரியான தேர்வு போல

கோயில் நிலத்தை ஆக்ரமித்துக் கட்டப்பட்ட குயின்ஸ்லேண்ட் தீம் பார்க் அப்புறப்படுத்தப்படும். மதுரவாயல் மார்க்கசகாயேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கடை வைத்திருந்த 23 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு…. பல செய்திகள் இப்படி. அமைச்சராக சேகர்பாபு சரியான தேர்வு எனத் தோன்றுகிறது. சபாஷ்! 👏👏👏👏

Politics

, ,

wp-1632332717868.jpg

மனிதர்கள் மீதான என் வியப்பு கூடிக்கொண்டேதான் போகின்றது

ஒவ்வொரு மனிதனிடமும் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றனதான். வடுக்கள், படிப்பினைகள், பூக்கள், அனுபவங்கள், நினைவுகள் என எவ்வளவோ இருக்கின்றன ஒவ்வொரு மனிதனிடமும்.  ஒவ்வொரு மனிதனும் உண்மையில் ஒரு புத்தகம். சில புத்தகங்கள் பலராலும் புரட்டப்பட்டும், சில புத்தகங்கள்  திறக்கப்படாமலேயும் இருக்கின்றன. மறையும் ஒவ்வொரு மனிதனையும் சிங்களர்களால் கொளுத்தப்பட்ட யாழ்ப்பானத்து நூலகமாகவும், ஆப்கானியர்களின் படையெடுப்பால் அக்காலத்தில் எரிக்கப்பட்ட நாலந்தா… (READ MORE)

VALARCHI Tamil Monthly, பொரி கடலை

வாழ்க்கை என்பது தேடலா

செந்தில் நாதன்: ‘விடைதேடுவதா வாழ்க்கை, வாழ்க்கை என்பது வாழுவதில்லையா?’ பரமன்: தேடலே வாழ்வாக அமையலாம் சிலருக்கு. தேடிக் கண்டடைதல் கடைசியில் நிகழலாம் சிலருக்கு. தொடக்கத்திலேயே கூட நிகழலாம் இன்னும் சிலருக்கு. கண்டடைய வேண்டியது கைக்கு வந்துவிட்டதே தெரியாமல் கால் கடுக்க ஓடிக்கொண்டேயிருப்பதும் வாழ்க்கையாகி விடுகிறது சிலருக்கு. கண்டடைய ஒன்றுமேயில்லை. ‘தேடித் துழாவ ஒரு துரும்பும் இல்லை… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , ,

வேகவதி வேகமாய் காப்பாற்றப் படட்டும்!

வேகவதி ஆற்றை நீக்கிவிட்டு காஞ்சியின் சிறந்த மன்னனான மகேந்திர பல்லவனின் வரலாற்றை எழுதவே முடியாது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி படையெடுத்த வந்த போது,  அந்தப் பக்கம் சாளுக்கிய படை, இந்தப் பக்கம் கோட்டை மூடப்பட்ட காஞ்சி மாநகரம் என வரலாற்றின் இடையே வேகமெடுத்து ஓடுகிறது வேகவதி ஆறு.  சங்ககால பத்துப்பாட்டின் அரசன் ‘தொண்டைமான் இளந்திரையர்’… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

தொடங்கட்டும், நல்ல திட்டம்!

காஞ்சியின் வேகவதி ஆற்றைப் பார்த்து விட்டு நாம் வருந்தி எழுதிய கட்டுரையில், ‘…நல்ல நதிகளை ஆக்ரமித்து வீடுகட்டுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினை, நதிகளை கழிவுநீர் வடிகாலாக மாற்றுவது நாம் தொடங்கி வைக்கும் அடுத்த பெரும் பிரச்சினை. இதற்கேதேனும் தீர்வு வர வேண்டும். நிலமும் கெடுகிறது, நிலத்தடி நீரும் கெடுகிறது. …’ என்று எழுதியிருந்தோம்.  அதைப் படித்து… (READ MORE)

Politics

, , , , ,

உடலும் உள்ளமும் இருந்தால் போதும்

ஒரே நேரத்தில் உடலுக்கு உறுதியும் தந்து வளையும் தன்மையும் தரும் ஓர் உன்னதம் யோகா.  வீடு, வெளி, உள்ளே, வெளியே என எங்கும் செய்யலாம்.  யோகப் பயிற்சி செய்ய உடலும் உள்ளமும் இருந்தால் போதும். இன்று மணக்குடியில் வானம் பார்த்த வயலின் பாட்டையான பெருவரப்பில் வானத்துக்கடியில் இதோ ஓர் யோக ஆசனப் பயிற்சி! -பரமன் பச்சைமுத்துமணக்குடி,18.09.2021… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

சில மனிதர்கள் மறைந்து ஆண்டுகளாயினும் கூட

சில மனிதர்கள் மறைந்து ஆண்டுகளாயினும் கூட அவர்களைப் பற்றிய உணர்வுகள் உயிரோடே உள்ளன நம்முள்ளே. புதுச்சேரி ஜிப்மரைக் கடக்கையில் அம்மாவிற்குள்ளும் எனக்குள்ளும் தனித்தனியே ஆயிரம் நினைவுகள். கடந்து வந்து காப்பி குடித்த பின்னும் கடக்க முடியா நிகழ்வுகளை நினைவு கூர்கிறோம். அப்பா இருந்த போதே போற்றிக் கொண்டாடியவன், இல்லாத போது Miss பண்ணுவேன்தானே! #MuPachaimuthu #AmirthamPachaimuthu

Uncategorized

மறைந்தவர்களுக்கு செய்யப்படும் மிகச்சிறந்த நினைவு அமைப்பு.

மறைந்த ஒருவரின் நினைவாக சிலை வைப்பார்கள், மணி மண்டபம் கட்டுவார்கள், பெரிய படம்  வைத்து மரியாதை செய்வார்கள்.ஓர் ஊருக்கே பயன்படும் அளவிற்கு ஓர் ஊருணியை செப்பனிட்டு ஊருக்கே பயன்படக் கொடுத்தவர்களும்   இருக்கிறார்கள். மறைந்த எழுத்தாளர் அசோகமித்ரனின் மகன் அதைச் செய்து மிகச் சிறந்த முன் மாதிரியாக உயர்ந்து நிற்கிறார்.  சிதம்பரம் வட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த குமுடிமூலை… (READ MORE)

பொரி கடலை

,

பிள்ளகள் என்றால்

நாம ரொம்ப பெரிய ஆளுங்க இல்லன்னாலும், கொஞ்ச பேர் நம்ம நேரத்துக்காக காத்துகிட்டு இருக்காங்க. நம் ஆஃபீஸில நிறுவனத்துல பலர் வேலை செய்யறாங்க. பலர் சேர ஆசைப்படறாங்க. எல்லா வேலையையும் விட்டுட்டு ஒதுக்கி வச்சிட்டு உட்கார்ந்துருக்கோம் ஒரு அலுவலகத்தின் வெளியே ஒரு இருக்கையில் ஒன்றரை மணி நேரமாக. உள்ளே மகள் இண்டர்வ்யூக்கு போயிருக்கிறாள் என்பதற்காக. அவளாகவே… (READ MORE)

பொரி கடலை

துளசி இலையை வாயிலிட்டால் என்ன சுவை வரும் உங்களுக்கு?

துளசி இலையை வாயிலிட்டால் என்ன சுவை வரும் உங்களுக்கு? ‘யோவ்! நான் இல்ல, யாரு துளசிய வாயில போட்டாலும் ஒரே சுவைதான், சுருக்கென்று வரும் கார்ப்புதான்! போவியா!’ என்கிறீர்களா? (ஜப்பானில் வேலை பார்த்த காலத்தில் டோக்கியோவின் உணவகம் ஒன்றில் காரமான பீட்ஸா வேண்டுமென நான் ஆர்டர் செய்திருந்த போது, அதில் துளசியை தூவித் தந்தார்கள். அவர்களுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

செம்மை சீர் ஆசிரியர் விருது – எதற்காம்? என்ன செய்து விட்டார்கள் அவர்கள்?

ஆசிரியர்களுக்கு ஏன் இந்த விருது? என்ன செய்து விட்டார்களாம் அவர்கள்? …. கேள்வி: பரமன், ஆசிரியர் தினமன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 50 பேருக்கு ‘செம்மை சீர் ஆசிரியர்’ பதக்கங்கள் வழங்கி மலர்ச்சி உரை ஆற்றியுள்ளீர்கள் என்பதை செய்தித்தாள்களில் பார்த்தேன். என்ன செய்தார்கள் இந்த ஆசிரியர்கள்? கொரோனா காலகட்டத்தில் தங்களது ஊதியத்தை குறைத்துக் கொண்டார்களா? இல்லை ஏதும் வேலை பார்த்தார்களா?… (READ MORE)

VALARCHI Tamil Monthly

நல்ல அறிவிப்பு: அரசுப் பள்ளிகளில்…

👏 கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் ஆகியவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பதோடு ‘அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் பணியில் முன்னுரிமை!’ என்று அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். 👏👏 சபாஷ்! சென்ற ஆட்சியிலிருந்தே அரசுப்பள்ளிகளை நோக்கி பிள்ளைகளை பெற்றோர் கொண்டு வருவது கணிசமாக உயர்த்தொடங்கியது என்பதை… (READ MORE)

Politics

,

அசத்தியிருக்கிறார் தமிழக முதல்வர்!

அசத்தியிருக்கிறார் தமிழக முதல்வர்! ஆண்டு தோறும் ‘மகாகவி நினைவு நாள்’ என்று மக்களை எட்டயபுரத்துக்கு வரவைத்து, விழா எடுத்து, பாரதி ஆய்வாளர்களுக்கு காசோலையும் விருதும் தரும் பணியை செய்த தினமணி நாளிதழ் நிச்சயம் திக்குமுக்காடியிருக்கும், இவற்றையும் இன்னும் பலதையும் சேர்த்து அரசு சார்பாகவே செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பதைக் கண்டு. செப் 11 –… (READ MORE)

Uncategorized

, , , , ,

முன்னாடியிலேருந்தே இதை அணியறேன்!

கை மடிச்சு வுட்ட ஹாஃப் குர்தாவ ‘அண்ணாத்த’ டீசர் பாத்துட்டுதான் நான் போடறேன்னு சொல்லிடாதீங்க. நான் 12 வருஷமா அப்படிதான் டிரெஸ் பன்றேன், அத போட்டுட்டு இருக்கேன். ஆமா! நன்றி! பரமன்

பொரி கடலை

என்ன சொல்வது இதற்கு

இந்த அரசியல்வாதிகள் செய்யும் அட்ராசிட்டிகள் தாள முடியவில்லை. ஜார்கண்ட் மாநில பேரவை வளாகத்தில் முஸ்லீம் எம்எல்ஏக்கள் தொழுகை நடத்த ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அதை எதிர்த்து போராட்டம், தடியடி, தண்ணீர் பீச்சியடித்தல்.  தொழுகை நடத்த ஓரிடம் ஒதுக்கியதற்கு ஏன் இவ்வளவு பிரச்சினை! பண்ணிட்டு போகட்டுமே! வேறு கட்சிகாரர்கள் திமுகவின் சின்னத்தில் நின்று ஜனநாயகத்தை ஏமாற்றுகின்றனர், தகுதி… (READ MORE)

Politics

சர்ச் வெட்டிங் அனுபவம்

‘சர்ச் வெட்டிங்’ எனப்படும் கிறிஸ்துவ முறை திருமணம் நான் பார்த்ததில்லை.  இன்று மலர்ச்சி மாணவன் விஜய்சிவா – தான்யா திருமணம் சர்ச்சில் நடந்ததால் அதில் பங்குபெறும் அனுபவம் பெற்றேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு நானும் முகுந்தனும் கொல்லத்தில் நடந்த அலெக்ஸ் அப்ரஹாம் திருமணத்திற்குப் போயிருந்தோமென்றாலும் அது சர்ச்சில் நடக்கவில்லை, நாங்களும் ‘குமாரகோம் – ஆலப்புழா’ பற்றி… (READ MORE)

பொரி கடலை

ஒருவேளை இவர்தான் சுந்தர சோழரோ!

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை முடித்து விட்டேன் என்று நடிகர் ரகுமான் ட்வீட் செய்திருக்கிறார். ஒருவேளை அமிதாப் பச்சன் நடிப்பதாக இருந்த ‘சுந்தர சோழர்’ பாத்திரத்தில் இவர்தான் நடிக்கிறாரோ! நடித்தால் நல்லதுதான்! இல்லை மதுராந்தகனோ! பிரகாஷ்ராஜ் அனிருத்தராகவோ பார்த்திபேந்தர பல்லவனாகவோ இருக்கலாமோ! பார்ப்போம்! – பரமன் பச்சைமுத்து07.09.2021

Manakkudi Talkies

, , ,

wp-1630852742451.jpg

‘மு. பச்சைமுத்து அறக்கட்டளை’யிலிருந்து, 65 ஆசிரியர்களுக்கு ‘செம்மை சீர் ஆசிரியர் 2021’ பதக்கம்:

அரசுப் பள்ளிகளிலிருந்தும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்தும் பல்வேறு காரணிகளைத் தகுதிகளாக வைத்துக் கணக்கிட்டு, அதிலிருந்து 65 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து ‘செம்மை சீர் ஆசிரியர் 2021’ என்ற பதக்கமும் சான்றிதழும் அளித்து அணி செய்யும் பணியை செய்யும் ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ இயக்கத்தினரோடு கைகோர்க்கும் பேறினை பெற்றோம். ஆசியர்களுக்கு அளிக்க ‘செம்மை சீர் ஆசிரியர் 2021’… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , ,

மொத்த மீடியாவும் காத்திருக்க…

நம் பத்திரிக்கையின் அஞ்சல் பதிவிற்கு விண்ணப்பித்து நீதிபதி முன் ஆஜராகியே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அரசு விதிப்படி இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தின் வளாகத்துக்குள் நுழைகிறேன். இயல்புக்கு மாறாக ஏக கூட்டம்! மதிற்சுவருக்கே வெளியிலிருந்து உள்ளே குறிபார்த்து வரிசையாக தயாராக நிற்கும் ஆளுயர வீடியோ கேமராக்கள், ஊடகவியலாளர்கள் என பெருங்கூட்டம். இயல்புக்கு மாறாக விறைப்பாய்… (READ MORE)

பொரி கடலை

போலிப் பத்திரவுக்கு புதுச் சட்டம்: நன்று!

நம் நண்பரின் வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவர் நகரில் நிலம் வாங்கிப் போட்டிருந்தார். மனை வெகுநாட்களாக சும்மாவே இருப்பதை கவனித்து, மெதுவாகத் திட்டமிட்டமிட்ட சில மோசடியாளர்கள், திடீரென்று ஒரு நாள் அதில் கொட்டகை போட்டதோடு நிலம் தோண்டி கடைக்கால் போடும் கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டனர். நிலவரம் தெரிந்த நம் நண்பர் தமது உறவினரின் நிலத்தில்… (READ MORE)

Politics

ஜெயமோகன் – பொன்னியின் செல்வன் – – விகடன் நேர்காணல்

ஜெயமோகனின் நேர்காணல் விகடனில் – நன்று. ஏன் விருதுகளைப் புறக்கணிக்கிறார், பெண் எழுத்தாளர்களைப் பற்றி ஏன் எழுதுவதில்லை? (பல காலமாக அவரை இதையே கேட்கிறார்கள், அவரும் திரும்பத் திரும்ப பதில் சொல்கிறார்), பொன்னியின் செல்வன் வசனம் அனுபவம் என கேட்கப்பட்டதற்கு சரியான பதில்கள்.  ஆனாலும், ‘விருது கொடுக்கும் இடத்தில் நான் இருக்கிறேன்!’ ‘ஞானியாவற்கான தகுதிகள் கொண்டவனாக… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

ஜெ வழி

‘சங்கி மாப்ள! திமுக கலைஞர் வழியில ஆட்சி பண்ணல, ஜெயலலிதா வழியிலதான் ஆட்சி பண்ணுது!’ ‘என்ன இப்படி சொல்றிய!’ ‘அதிமுக வெளிநடப்பு, தர்ணா, ஓபிஎஸ் கைது செய்திய  பாத்தீயா?’ ‘பாத்தேன் மச்சான். எடப்பாடியை காணோம்னு பரப்பப்படும் செய்தியையும் பார்த்தேன்!’ ‘எதுக்கு இந்த தர்ணா? கைது?’ ‘ஜெ பல்கலை கழகத்தை கேன்சல் பண்ணி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தோட… (READ MORE)

Politics

wp-1630399708704.jpg

19 வது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 இன்று மிருகசீரிடம் ( ஆவணி மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை31.08.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

18வது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 🌸 🌸 இன்று மிருகசீரிடம் ( ஆடி மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை04.08.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

என் வழி கிருஷ்ண ஜெயந்தி

சைவநெறி குடும்பம் சைவ வெறி மூதாதையர் என்பதால் பொதுவாக வைணவ கிருஷ்ண ஜெயந்தி பழக்கத்தில் இல்லை எங்களுக்கு. காலையிலிருந்து மதியம் வரை 75 பேருக்கு 4 மணி நேரம் நின்று ‘Sales Excellence’ பயிற்சி வகுப்பு, மதியம் முழுக்க குழுவோடு அமர்ந்து வளர்ச்சி இதழ் வடிவமைத்து திருத்தி முடித்து அச்சேற்ற… என கழிகிறது இந்நாள் –… (READ MORE)

Uncategorized

அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்பு

👏👏 அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்பு என்ற அம்சம் கொண்ட ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தைப் பயன்படுத்தி ஒரு நகரின் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடி தண்ணீர் இணைப்பு தந்து இந்தியாவின் முன்னோடி நகரமாக நிற்கிறது ஒரிசாவின் புரி நகரம். முதல்வர் பிஜு பட்நாயக்கும் அங்குள்ள அதிகாரிகளும் நிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர். 👏👏👏👏

Politics

,

500 ஏரிகள்

சுற்றியுள்ள 500 ஏரிகள், நீர்நிலைகளை சுத்தப்படுத்தி சென்னையின் குடிநீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு அறிவித்திருக்கிறார். இது மட்டும் சரியாக செயல்படுத்தப்பட்டால் சென்னைக்கு மட்டுமல்ல நாளைய தமிழகத்திற்கே நல்லதாக அமையும். வீராணத்திலிருந்து குழாய்களில் சென்னைக்கு கொண்டு வருவதை நிறுத்தலாம். அந்த உபரி நீர் கடலூர் மாவட்டத்தின் வேறு பயன்பாட்டிற்கோ… (READ MORE)

Politics

, ,

ஆண்கள் அனைவரும் பிரம்மச்சரியம் காக்கவேண்டும் அப்போதுதான் உயர் அளவு சக்தி கிடைக்கும் என்கிறார்களே?

கேள்வி: பரமன், வணக்கம்! ஆண்கள் அனைவரும் பிரம்மச்சரியம் காக்கவேண்டும் அப்போதுதான் உயர் அளவு சக்தி கிடைக்கும் என்கிறார்கள். என்னைப் போன்ற திருமணம் ஆனவர்கள் என்ன செய்வது? பரமன்: ஏன் இதை சொன்னார்கள், என்னென்ன பிரிவுகள் உள்ளன, இப்போது என்ன தீர்வு என்று மூன்று பகுதிகளாக இதை பார்ப்போம். ஒன்று: இதன் பின்னிருக்கும் அடிப்படை என்ன?: நாம்… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , ,

wp-1629719816694.jpg

‘நெற்றிக்கண்’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

நகரில் ஒரு புறம் இளம்பெண்களை ஒருவன் தொடர்ந்து கடத்திக் கொண்டிருக்க, மறுபுறம் சிபிஐ அதிகாரியொருவர் விபத்தில் பார்வையையிழக்க, யதேச்சையாக அவன் பார்வையில் இவர் விழுந்தால்… கண் பார்வையற்ற நாயகி தன் சிபிஐ ‘அறிவுக்கண்’ கொண்டு எதிர்கொள்வதை  த்ரில்லர் திரைக்கதையில் சொன்னால்… ‘நெற்றிக்கண்!’! கொரிய திரைப்படத்தின் தமிழாக்கம் என்கிறார்கள். இதே கொரியப் படத்திலிருந்து உற்சாகமாகிதான் மிஷ்கி்ன் ‘சைக்கோ’… (READ MORE)

Manakkudi Talkies

, ,

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி வந்தது!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி, வலியில்லா தடுப்பூசி, ‘உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசி’, அதிக அளவில் வீணாகாது தட்ப வெப்பம் தாங்கும், இந்திய விஞ்ஞானிகள் சாதனை, 3 கட்ட சோதனைகள் முடிந்தது, 66.6% செயல் திறன் கொண்டது, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி தந்தது என இவர்கள் சொல்லும் பலதையும் தாண்டி… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

முதியவர்களுக்கான நல்ல திட்டம்

தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருந்த ‘முதியவர்களுக்கான – வீட்டிலிருந்தே வாக்களிக்கும் திட்டம்’ ஒரு பெரும் புரட்சித் திட்டம்.  பல ஊர்களில் கிராமப் பணியார்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் சிறப்பாக இது நிறைவேற்றப்பட்டாலும், அதே அளவு பல ஊர்களில் இந்தத் திட்டத்தை கூடுதல் பணி என்று சொல்லி தவிர்த்த பணியாளர்களும் அதிகாரிகளும் உண்டு. இன்று தமிழக அரசு… (READ MORE)

Politics

, ,

wp-16294374282851962198108112523958.jpg

இண்டிகோ ராமாயி

‘பிபி சூட் அணிந்திருக்கிறீர்களா?’ விமானப் பயணத்தில் நடைவழிக்கு அருகே அமர்ந்திருப்பவர்களுக்கும்,இரண்டு பயணிகளுக்கு இடையே அமர்பவர்களுக்கும் ‘அணிந்தே ஆக வேண்டும்!’ என்று கட்டாயமாக கொடுக்கப்படும் ‘ஒரு முறை பயன்படுத்தி எறிந்து விடக் கூடிய கவச உடை’ ஒரே வீட்டிலிருந்து கணவனும் மனைவியுமாக வந்தாலும், தந்தையும் மகளுமாக வந்தாலும் அடுத்தடுத்து அமரும்போது ஒருவர் பிபி சூட் அணிய வேண்டும்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-16294351639235545552684397536543.jpg

தாமிர பரணி தந்த அனுபவம்

‘சார் மொறப்ப நாட்டுக்கா? இவ்ளோ இருட்டிட்டு. ஒண்ணும் தெரியாது சார் பாத்துக்கோங்க!’ ‘தாமிரபரணியில எறங்கனுமே! ராத்திரின்னாலும் பரவாயில்லை. இருட்டாருந்தாலும் பரவாயில்ல. செல்ஃபோன்ல லைட் போட்டுக்கலாம்! கூட்டிட்டுப் போங்க!’ ‘அதில்லை சார், இருட்டுல வழியில பாம்பு பல்லி பூச்சி பொட்டு இருக்கும்’ ‘அதெல்லாம் நண்பர்கள் நமக்கு, அக்ரிமெண்ட் உண்டு கிட்டயே வராதுங்க. போங்க!’ ‘மொறப்பநாடு தூரம் சார்…. (READ MORE)

பொரி கடலை

, , , , ,

தவறு தவறுதானே

அவை தொடங்குகிறது. அவைத் தலைவர் பேசத் தொடங்குகிறார். அதற்குள் எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து வேறொரு பிரச்சினை பற்றி பேச வேண்டும் என்று அனுமதி கேட்கிறார். ‘நிச்சயம் நேரம் ஒதுக்கப்படும். அதற்கு முன்பு இந்த முறைமைகளை முடித்து விடுவோம். உங்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்’ என்கிறார். ‘முடியாது, இப்பவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்!’ என்று கூச்சலிடுகிறார். ஏற்கனவே… (READ MORE)

Politics