பொரி கடலை

மஞ்சுமல் பாய்ஸ் தந்த எண்ணம்

பஞ்சு அருணாச்சலம் தன் வாழ்நாள் முழுக்க சொல்லியும் எழுதியும் வந்த ‘ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதைதான் முதல் ஹீரோ’ என்ற கருத்து மறுபடியும் மறுபடியும் நீரூபனமாகிக் கொண்டேயிருக்கிறது ஆண்டாண்டுகளாக. இப்போது ‘மஞ்சுமல் பாய்ஸ்’ மூலமாகவும். வேலை நேரத்தில் வேலை, மீதி நேரத்தில் குடி, கயிறு இழுக்கும் போட்டி என பொழுது போக்கும் எதையும் அசிரத்தையாக செய்யும் கேரளத்தின்… (READ MORE)

பொரி கடலை

வலசைக்கு வந்த ஃப்ளெமிங்கோ

பிசி, எக்ஸ்டி, ஏடி என கணிப்பொறிகள் பயன்பாட்டில் இருந்த எண்பதுகளின் இறுதியிலான என் கல்லூரிக் காலங்களில் ஃப்ளாப்பி டிஸ்க்கள் கோலோச்சின. 360கேபி(கிலோ பைட்ஸ்) அளவு சேமிக்கும் கொள்ளளவு கொண்ட டிடிகே அல்லது ஆம்க்கிட் தயாரிப்பு ஃப்ளாப்பி டிஸ்க்களை நாங்கள் பயன்படுத்தினோம். பேசிக், ஃபோர்ட்ரான் போன்ற நிரல் மொழிகளை இயக்க அன்று அது போதுமானதாக இருந்தது. உள்ளடக்கத்தை… (READ MORE)

பொரி கடலை

ராமலிங்கம் பிள்ளை உடல் விட்டார்

இறந்தவரின் ஆன்மா வேறு தற்காலிக உடல் தரப்பட்டு எம பட்டினத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 12 நிமிடங்களில் திரும்பவும் சடலம் இருக்கும் இறப்பு வீட்டிலேயே கொண்டு வந்து விடப்படுவதாக சைவ சமயக் குறிப்புகள் சொல்வதை எண்ணிய படியே குயப்பேட்டை கந்தசாமி கோவில் தெருவில் அக்கா வீட்டு வாசலில், நேற்றிரவு உடலை விட்டு அமரராகிப் போன ராமலிங்கம் பிள்ளையை… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில்…

ஒரே உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில் வாழ்கிறோம். அருகருகே இருந்தாலும் அவரவர் வாழ்க்கை வேறாகவே இருக்கிறது. எவர் பற்றியும் பிரஞ்ஞையில்லாமல் தூரத்தில் எதையோ வெறித்தபடி சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்த இந்த மனிதர் நம்மை ஈர்த்தார், மலர்ச்சி வகுப்பெடுக்க திருவண்ணாமலை வந்தடைந்ததும் தேநீருக்காக இறங்கிய போது. ‘டீ குடிக்கறீங்களா?’ ‘இப்பத்தான் குடிச்சேங்க! வேண்டாம்!’ ‘சாப்பாடு இப்ப தருவாங்க… (READ MORE)

பொரி கடலை

, , , ,

சினிமாவின் உச்ச நிலையிலில் இருக்கும் போது நடிப்பை நிறுத்தி விட்டு அரசியலுக்குள் நுழைகிறாரே விஜய்?

கேள்வி: சினிமாவின் உச்ச நிலையிலில் இருக்கும் போது நடிப்பை நிறுத்தி விட்டு அரசியலுக்குள் நுழைகிறாரே விஜய்? பதில்: அமிதாப் பச்சன், எம்ஜியார் இதை செய்தார்கள். இப்போது விஜய் வருகிறார். அவருக்கு வாழ்த்துகள். சினிமாவில் நடிப்பதை அவர் நிறுத்துவது சிறந்த செயல் அல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. கட்சி தொடங்கிய பின்பு எம்ஜிஆர் நடித்த ‘உலகம்… (READ MORE)

பொரி கடலை

, , ,

ஃபெரேரோ ரோச்சர்

‘ஃபெரேரோ ரோச்சர்’ சாக்லேட் பிடிக்குமா உங்களுக்கு? … மதிப்பிற்குரிய சுகி சிவம் அவர்கள் ஒரு நாள் நம்மை அழைத்து, தான் நடத்தும் இணைய தள பயிலரங்கு ஒன்றில் நாம் உரையாற்ற வேண்டுமென்று கேட்டு நம்மை வியப்பிலாழ்த்தினார். பல பேச்சாளர்கள் பங்கேற்ற அந்தப் பயிலரங்கில் ‘உறவுகள்’ பற்றியதாக நிகழ்ந்தது நம் மலர்ச்சி உரை. மிக மரியாதையாக நடத்தினார்,… (READ MORE)

பொரி கடலை

‘மோடி புதுப்பொலிவுடன் டிடி தமிழை தொடங்கினார்’ இந்து தமிழ் தலைப்புச் செய்தி இலக கண பிழைதானே!

‘மோடி புதுப்பொலிவுடன், டிடி தமிழை தொடங்கினார்’ – என்ற பொருள் வருகிறது இதில். ‘புதுப்பொலிவு பெற்ற டிடி தமிழை தொடங்கினார் மோடி’ அல்லது ‘புதிப்பொலிடன் கூடிய டிடி தமிழை தொடங்கினார் மோடி’ என்றிருப்பதுதானே சரி! #HinduTamil #Tamil #Paraman #ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #நல்லதமிழ்

பொரி கடலை

, , , , ,

தேசிய நெடுஞ்சாலையில் ஏ ஆர் ரஹ்மான் பாடல்களோடு…

எந்த பாடலைத் தந்தாலும் அதில் தன்னையே குழைத்து ஊற்றி சின்னதாய் சிரித்து, கொஞ்சி, அழுது, கர்ஜித்து விளாசி விடுவார் எஸ்பிபி என்பதைத் தாண்டி ரஹ்மானின் இசையும் அசரடிக்கிறது ‘அழகான ராட்சசியே’வில். அதனால்தான் ஹரிஹரன் குரலில் வரும் ‘குறுக்கு சிறுத்தவளே…’ என்னை இன்னமும் சொக்கிப் போக வைக்கிறது. அதுவும் ‘கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே’ எனும் முதல் சரணத்திற்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

இந்தியா அசத்தல் கடலிலும் விண்ணிலும்

விண்வெளியில் ஆதித்யா 1 தனது லெக்ராஜியன் பாயிண்ட் எனப்படும் எல் -1 புள்ளியை இன்று அடையப் போகிறது என்று மகிழும் இதே நேரத்தில் வானிலும் கடலிலும் மூன்று நிகழ்வுகள் இந்தியர்களால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டுள்ளன என்று கூடுதல் மகிழ்ச்சி கொள்கிறோம். கருந்துளை எனப்படும் கருங்குழியிலிருந்து வெளிப்படும் கதிர்கள், எரிபொருள் தீர்ந்து வெடித்து சிதறும் விண்மீன்களிலிருந்து உருவாகும் கண்ணுக்குத்… (READ MORE)

பொரி கடலை

எம்ஜியார்…

சினிமா கொட்டகைகளோ தொலைக்காட்சிப் பெட்டிகளோ இல்லாத அன்றைய மணக்குடியில் படம் பார்க்க வேண்டுமென்றால் 7கிமீயில் இருக்கும் புவனகிரிக்கோ, 12 கிமீயில் இருக்கும் சிதம்பரத்திற்கோதான் போக வேண்டும். பேருந்து வசதியே இல்லாத அக்காலங்களில் மாட்டுவண்டி கட்டிக் கொண்டு அதில் வைக்கோலை பரப்பி அமர்ந்து கொண்டு எப்போதாவது சினிமாவுக்கு கூட்டிப் போனாலும் அது ‘திரிசூலம்’ ‘கௌரவம்’ வகை சிவாஜி… (READ MORE)

பொரி கடலை

,

கஹாங் ஸே பையா…

பழக்கமில்லா தெரியாத உணவகங்களில், எது வயிற்றைக் கெடுக்காதோ அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு வருவதும், தெரிந்த பழகிய உணவகத்தில் புதியதை முயற்சி செய்வதும் என் வெளியூர்ப் பயணங்களில் கடைபிடிக்கப்படும் செய்முறை. ‘சரி! காலை டிஃபனுக்கு இந்த ஒரு வேளைக்கு அரிசி இல்லாத உணவு கிடைக்குதா பாப்போம்!’ என்று இறங்குவது ஓர் உதாரணம். பலமுறை உணவுண்ட சிங்க பெருமாள்… (READ MORE)

பொரி கடலை

அசத்திய சந்தோஷம் டாக்டர்

அண்ணா நகர் ஸ்டார்பக்ஸ் வாசலில் காரில் ஏறப் போனவன், கீழே சாக்கடை பொங்கி வழிவதால் வண்டியை நகர்த்தச் சொல்லி சாலையில் இறங்கி நின்றேன். ‘ஹலோ சார்!’ குரல் கேட்டு திரும்பினால் இன்ப அதிர்ச்சி. அப்பல்லோ, ட்ரிப்பிள் எம் என உயர் ரக பெருமருத்துவமனைகளில் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும், எழும்பூர் சந்தோஷ் செஸ்ட் ஹாஸ்பிட்டலின் தலைமை… (READ MORE)

பொரி கடலை

வரலாற்று சுற்றுலா!

இருபதாண்டுகளுக்கு முன்பு வெளிநாடு ப்ராஜெக்டுகள் முடித்து திரும்பிய ராமு பெருமாள், முகுந்தன், நான் ஆகிய மூவரும், ‘பொன்னியின் செல்வன்’ படித்து விட்டு பெங்களூரிலிருந்து காரை எடுத்துக் கொண்டு ‘பொன்னியின் செல்வன் ட்ரிப்’ கிளம்பினோம். கோடியக்கரை குழகர் கோவிலையும், மந்தாகினி ஏறிய கலங்கரை விளக்கத்தையும் சோழ இளவரசர்கள் பயணித்த கடலையும் கண்டு வியந்தோம். ஒரு படகில் ஏறி… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , ,

ஆகச் சிறந்த கலைஞனால் ஆனது எனக்கு…

நெல்வயல்கள், வாய்க்கால், வீடுகள், ஓர் அரசுப்பள்ளி என்றிருந்த மணக்குடியில் என்றுமே திரையரங்குகள் இருந்ததில்லை. ஆறு கில மீ் தூரத்தில் கிழக்கு நோக்கி பாயும் வெள்ளாறு. வெள்ளாற்றின் அந்தக் கரையில் இருக்கும் கீரப்பாளையத்தில் ‘வீஆர்கே டாக்கீஸ்’, வெள்ளாற்றின் இக்கரையில் இருக்கும் புவனகிரியில் ‘ரங்கராஜா திரையரங்கம்’ ஆகிய இரண்டுதான் சுற்று வட்டார ஊர்களுக்கே திரையரங்குகள். எம்ஜியார் அரசு விவி… (READ MORE)

பொரி கடலை

1200-675-19862542--thumbnail-16x9-cdl

காவலருக்கு சல்யூட்!

சில செய்திகளை செய்திகளாகக் கடக்க முடிவதில்லை. செய்தி படித்து முடித்த பிறகும் செய்து விடுகிறது எதையோ. இதுவரை இப்படி நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை! வாகனத்தில் அடிபட்டு சாலையிலேயே இறந்து போனார் டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளியான சக்திவேல் என்பவர். வாகனத்தில் அடிபட்டு இறந்து விட்டார் கணவர், இழப்பீடாவது வாங்கித் தாருங்கள் என்று அழுதபடி விருத்தாசலம் காவல்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , ,

20231029_090831

வைணவத்திற்கு சேவை செய்தவர் குலோத்துங்க சோழர். கமல் சொல்வது தவறோ!

சைவத்தின் பாற்கொண்ட பெரும் பற்றால் வைணவத்தை இகழ்ந்ததாகவும் தில்லை சித்ரகூடத்தில் வணங்கப்படும் கோவிந்தராசர் சிலையை பிச்சாவரம் பக்கத்தில் கடலில் போட்டதாகவும் குலோத்துங்க சோழனுக்கு வடிவம் தந்திருப்பார் கமல்ஹாசன் தனது ‘தசாவதாரம்’ திரைப்படத்தில். குலோத்துங்கரின் காலத்தில்தான் வீரபாண்டியன் மறைந்து வாழ்ந்ததாகவும் அவருடைய மனைவி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் பிரமாதமான புனைவு செய்திருப்பார் அரு. ராமநாதன் தன் ‘வீரபாண்டியன் மனைவி’… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

கடுதாசி

எதில் எழுதப் பிடிக்கும் என்று எவரேனும் என்னைக் கேட்டால் ‘அஞ்சல் அட்டை’ என்பது என் பதிலாக இருக்கும். ‘ஷீஃபர்’ பிராண்ட் ‘இங்க் பால் பென்’ அதுவும் கருப்பு மையில் 1.0 அல்லது 0.8 அளவில் எழுதும் பேனா, அது இல்லையென்றால் குறைந்த பட்சம் ‘யூனிபால்’ தயாரிப்பின் யுஎம்153எஸ், யுபி157 அல்லது அதற்கும் மேலுள்ள 1.0 பேனாக்கள்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

ரத்தினகிரி மலையடிவார அலங்கார்…

வேலூர் ஆர்யாஸ் காஃபி பற்றி நாம் பதிவிட்டதைப் பார்த்துவிட்டு அவரவர் ஊர் உணவகங்கள் தொடங்கி திருவரங்கம் ‘முரளி காஃபி’ வரை அன்புப் பரிந்துரைகள் அனுப்பித் தள்ளிவிட்டனர் அன்பர்கள். ‘ஆமாம்! கரெக்டா சொன்னீங்க!’ ‘இப்பல்லாம் அந்த அளவுக்கு இல்ல!’ ‘விலை அதிகம்!’ ‘நான் கால்டாக்சி டிரைவர், 5 முறையும் அங்கதான் சாப்ட்டேன்!’ என தனித் தகவல்கள் இன்னும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

வேலூர் ஆர்யாஸ் காஃபி

மாயவரம் காளியாகுடி காஃபி, பெங்களூர் எம்டிஆர் காஃபி, பெங்களூரு அடிகாஸ், ஒரு காலத்தைய சரவண பவன் காஃபி போல குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சுவையான காஃபி வேலூர் ஆர்யாஸ் காஃபி. இன்றும் அதே சுவை மாறாமல் கிடைக்கிறது. உள்ளே உட்கார்ந்து அவர்கள் கொண்டு வரும் காஃபியை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு வெளியே காஃபி போடுமிடத்திலேயே சுடச்சுட… (READ MORE)

பொரி கடலை

மணக்குடிகள் மாறவில்லை…

சிறுவனாக இருந்த போது மனைப்பலகையையும் கிண்ணத்தில் எண்ணெய்யையும் தந்து ‘போய் புள்ளையார் வாங்கிட்டு வா! இந்தா எட்டணா!’ என்று தருவார்கள். கொழுக்கட்டையை விட இந்த மண் பிள்ளையாரை வீட்டுக்குக் கொண்டு வரும் நிகழ்வே ஒரு உற்சவம் போல குதூகல களிப்பு தரும் அரைக்கால் சட்டையணிந்த அவ்வயதில். பிள்ளையார் கொண்டு வருவது ஒரு சிறுவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ,… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

ஆரஞ்சு வண்ண கோலி சோடாவை குடித்திருக்கிறீர்களா, நீங்கள்?

ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் கோலி சோடாவை குடித்திருக்கிறீர்களா, நீங்கள்? கோலி சோடா பாட்டில்களே வித்தியாசமாக இருக்கும். லெகர் போன்ற கம்பெனி சோடா பாட்டில்கள் காக்கைகள் என்றால், கோலி சோடா பாட்டில்கள் அண்டங்காக்கைகள் போன்று வித்தியாசமானவை, கொஞ்சம் அழகானவையும் கூட. வெள்ளை வண்ணத்தில் பளிங்கு போல வரும் சோடா, கருப்பு வண்ணத்தில் வரும் கலர் சோடா என… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, இந்த எம்ஜிஆர் படத்தை?

புவனகிரி ரெங்கராஜா திரையரங்கில் ‘சேர்’ டிக்கெட்டில் போய் அந்தப் படத்தைப் பார்த்தோம். ‘மேடை’ டிக்கெட், ‘பெஞ்ச்’ டிக்கெட் என்று குறைந்த விலை டிக்கெட்டிலேயே திரைப்படங்களை பார்த்திருந்த சிறுவர்களான எங்களுக்கு ‘சேர்’ டிக்கெட் ஒரு பேரனுபவம். எம்ஜியார், பானுமதி, சரோஜா தேவி, நம்பியார், எம்ஜி சக்கரபாணி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருந்த மூன்றே கால் மணி… (READ MORE)

பொரி கடலை

எம்எல்ஏ பெஸரேட்

எம்எல்ஏவாக இல்லாமலேயே ‘எம்எல்ஏ பெஸரேட்’ சாப்பிடலாம்! விஜயவாடாவிலிருந்து காக்கிநாடா பயணித்த போது ஒரு முறை மலர்ச்சி மாணவர்கள் வலுக்கட்டாயமாக வாங்கித் தந்து சுவைக்கச் செய்தது ‘எம்எல்ஏ பெஸரேட்டு’. ‘அது என்ன எம்எல்ஏ பெஸரேட்டு? இந்த ஊரு எம்எல்ஏக்கி அது ச்சால இஷ்டமோ?! ஏமிரா… ஏமிரா… ஏய் ஏமிரா அது?’ என்று ராஜமௌலி பட வில்லன்கள் போல… (READ MORE)

பொரி கடலை

பறவை சூழ் உலகு…

பறவைகள் என்று மொத்தமாய் சொன்னாலும் எல்லா பறவைகளும் ஒன்றல்ல. தரைக்கு மேலே வானுக்குக் கீழே என்ற வெளியில் வசிப்பவை பறவைகள் என்றாலும் உற்றுக் கவனித்தால் நிலைகள் புரியும். மிக மிக உயரத்தில் மட்டுமே பறக்கும், உயரத்தில் மட்டுமே கூடு கட்டி வசிக்கும் பறவைகள் (செங்கழுகு, கருங்கழுகு), அதற்கு அடுத்த நிலையில் பறக்கும் வசிக்கும் பறவைகள் (நாரை,… (READ MORE)

பொரி கடலை

திருவானைக்காவல்

இருபதாண்டுகளுக்கு முன்பு பெங்களூர் வாழ் இந்தியா டாட் காம் பொறிஞனாக இருந்த போது என் மகள்களைத் தூக்கிக் கொண்டு திருச்சியில் காவிரியில் இறங்கிக் குளித்து, வயலூருக்கும் திருவானைக்கா கோவிலுக்கும் போயிருந்தேன். இன்று இறை பற்றிய புரிதலும் நம்பிக்கையும் வேறு வடிவம் பெற்றிருந்தாலும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கு உரையாற்ற திருச்சி வந்ததும், வண்டியை திருவானைக்காவிற்கு விட்டேன்…. (READ MORE)

பொரி கடலை

ஒன்லி காஃபி

‘விமானமேறும் முன் முடித்துவிடுவோமே!’ என்று ஒதுங்குமிடத்திற்குள் ஒதுங்க நுழைகையில், முகப்கில் யாரிடமோ செல்லிடப் பேசியில் பேசிக்கொண்டிருந்தவர் அதை நிறுத்திவிட்டு நம்மிடம் வருகிறார். ‘பரமன் சார்!?’ ‘எஸ்!’ ‘சார்… நான்….!’ ‘அடடா! ஆகா!’ ‘கத்தார்லேருந்து எறங்கி கோவை போறேன்!’ ‘வாங்க! அதே ஃப்ளைட்லதான் நானும்!’ நான் எழுதிய ‘உண்மையான மகளிர் தினம்’ என்ற கவிதையை மிகப்பெரிய பலகையில்… (READ MORE)

பொரி கடலை

(தென் துருவ)சந்திரனைத் தொட்டது யார், நாம்தானே, அடி நாம்தானே!

சந்திரனில் 1 நாள் பொழுது என்பது பூமியின் பொழுதில் எத்தனை நேரம் என்று கேள்விப்பட்டீர்களா? (விடை – கடைசியில்) இருட்டும் உறைய வைக்கும் அதீத மைனஸ் 200 டிகிரி குளிரும் கொண்ட இதுவரை யாருமே நுழையாத நிலவின் தென் துருவத்திற்குள் இறங்கி ஆராய்ச்சி செய்ய இருக்கிறது நம் சந்திரயான் – 3.  தற்போது வானவெளியில் பயணித்துக்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1688525934247.jpg

தலைவா! #Thalaiva #Wimbledon

விம்பிள்டன் சென்டர் கோர்ட்டில் ஃபெடரர் கௌரவிக்கப்பட்டதும், மனைவியோடு எழுந்து நின்று அவர் அதை ஏற்றதும் சிறப்பான தருணங்கள். ஆனால், அதைத் தாண்டியவொரு தருணம் காண்கிறேன் நான் இப்போது! ‘வாட்! அட! ஒஓஓஒ! ஊவ்!’ என்று நிற்கிறேன்! ‘பாட்ஷா’ திரைப்படத்து இடைவேளை பின்னணி இசை ஓடுகிறது மனதில். எத்தனை பேர் வந்தாலும் ரோஜர் ஃபெடரெர்தான் இன்று வரை… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

சென்னை காவல்துறை இந்தியாவில் முதல்முறையாக…

சென்னை காவல்துறை செய்திருக்கும் இந்த முன்னெடுப்பு, வரப் போகிற பல முன்னேற்றங்களுக்கு புதிய மைல் கல் ஆக இருக்கும். இந்தியாவில் முதன் முயற்சியாக சென்னையில், மிக நுட்பமான கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமான (ட்ரோன்) தொழில்நுட்பம் காவல் கண்காணிப்பு பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முகத்தை கண்டறியும் (‘ஃபேஸ் டிடெக்டிங் கேமாரா’) தகவமைப்பு  கொண்ட கேமராக்கள் என்பதால் பல… (READ MORE)

பொரி கடலை

wp-1687437768955522814222534623991.jpg

நினைவெல்லாம் நாரத்தை

கடாரங்காயை பார்க்கும் போதெல்லாம் ராஜராஜ சோழனும், நார்த்தங்காயை பார்க்கும் போதெல்லாம் மணக்குடியும் என் அம்மாவும் அப்பாவும் நினைவுக்கு வருவர் எனக்கு. கடாரங்காய்க்கும் நார்த்தம் காய்க்கும் வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு?  எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, குடை ஆரஞ்சு எனும் கூம்பு ஆரஞ்சு எனும் கமலா ஆரஞ்சு, நார்த்தம், கடாரம் எல்லாம் ஒரே வகையில்தான் வருகின்றனவாம் என்றாலும் அவைகள்… (READ MORE)

பொரி கடலை

, , ,

எழுதுவது நன்றே…

அவ்வப்போது தோன்றும் சிந்தனைகளை, வகுப்புக்கான சிந்தனைகள் வந்தால், வகுப்பு எடுத்த பிறகு சிலவற்றை என சில நேரங்களில் குறிப்பு எழுதுவதுண்டு நோட்டுப் புத்தகத்தில். பள்ளி நாட்களிலிருந்து எழுதுவது பிடிக்கும். லினக்ஸ், மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ, சிவபுராணம் என பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். எழுதுவதற்காகவே விதம் விதமாக நல்ல நோட்டுகளை வாங்கி வைத்திருப்பேன். நல்ல நீளமான… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

wp-1686239896347.jpg

இப்படி தரலாமே திருமண பரிசுகள், அட…!

திருமணத்திற்கு வருவோர் மணமக்களுக்கு என்ன பரிசு பொருள் தருவர்? பேனா, கடிகாரம், நகை, பொன்னாடை, கண்ணாடி – பீங்கான் வேலைப்பாடுகள் கொண்ட அழகுப் பொருள்கள், சாமி சிலைகள், நூல்கள், இவைதானே? கோவையில் நடைபெற்ற நம் மலர்ச்சி மாணவர்கள் ஜவகர் சுப்ரமணியம் – பத்மாவதி தம்பதியினரின் மூத்த மகள் ஸ்வர்ணபிரபா திருமணத்திற்கு சென்றிருந்த எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , ,

எந்த கல்லூரி டாப் ?

கேள்வி: பரமன், எந்த கல்லூரி சிறந்தது? பரமன்: நான் ஆகச் சிறந்த கல்லூரியில் படிக்கவில்லை. சுமாரான கல்லூரியில் படித்தவன். கல்வியின் தரம், ஆய்வுக் கூடம், படித்து வெளியேறியவர்கள் பெற்றிருக்கும் வேலை மற்றும் வளர்ச்சி, கல்வி முடித்து எந்த அளவுக்கு உலகிற்கு தயாராகி வருகிறார்கள் என பல அளவுகோல்களை வைத்து விகடன் பெரும் சர்வே ஒன்றை செய்தது…. (READ MORE)

Uncategorized, பொரி கடலை

சிரிப்பு ஓர் அழகு

சிரிப்பு ஓர் அழகு. சிரிப்பு சிரிப்பவருக்கு தருகிறது ஓர் அழகு. சிரிப்பு அழகாக அடுத்தவரையும் தொற்றுகிறது. சிரிப்பு, சிரிப்பவரின் முகத் தசைகளை சீராக்குகிறது.  சிரிப்பு, இதயத்தை இலகுவாக்குகிறது. ‘அழகாக இருக்க ஆசையா? அப்படியானால் சிரியுங்கள்!’ என்கிறது என் பழைய கவிதை (நூல்: மனப்பலகை). சிரிப்பு, சக்தி தந்து புத்தி சீர் செய்யப்படுகிறது. சிரிப்பு, உயிரினத்தை மனிதனாக… (READ MORE)

பொரி கடலை

கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

பாலாசோரில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் நற்கதியடைய பிரார்த்தனைகள். விபத்து நடந்த இடத்திற்கு உடனே போய் வெளிச்சமில்லா இருட்டில் மொபைல் ஃபோன் விளக்கில் பாதிக்கப்பட்டோருக்கு முதல் கரம் தந்த உள்ளூர் மக்களும், காயம்பட்டு மருத்துவமனையில் அவசரப்பிரிவில் கிடப்பவர்களுக்கு ரத்தம் கொடுக்க தாமாகவே குவிந்த அந்த உள்ளூர் மக்களும் நெஞ்சம் நனைக்கிறார்கள்.   அவர்கள் வாழட்டும், அவர்கள்… (READ MORE)

பொரி கடலை

சரஸ்வதி மகால் நூலகம் காப்கப்படட்டும்

சோழர்கால நூல்கள், நாயக்கர்கள் கால நால்கள், இவற்றைத் தாண்டிய பழந்தமிழ்ப் படைப்புகளை ஓலைச்சுவடிகளாகக் கொண்டிருக்கும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை நடத்துவதற்கு நிதியின்மையால் திணறுகிறார்கள் என்று செய்திகளைப் பார்க்கிறோம். நூலகங்களை போற்றும், பரிசுகளை நூல்களாகத் தரச் சொல்லி அறிவுறுத்தும் முதல்வர் இந்நூலகத்திற்கு உதவட்டும். பழைய நூல்கள் வெறும் நூல்கள் அல்ல, நேற்றைய மரபின் வரலாற்றின் சான்றுகள்…. (READ MORE)

பொரி கடலை

wp-16855162427415291964789283028218.jpg

விமான சேவை பணிப்பெண்ணுக்கு ஒரு பயமென்பது நமக்கு சங்கடம்

ஏர் இந்தியா பணிப்பெண்ணுக்கு பய உணர்வு வந்து விட்டது நம்மால் இன்று.  அந்த வகையில் ஒரு சின்ன சங்கடம்தான் நம் மனதில். ‘சார்… பேட்டரி, பவர் பேங்க், எலக்ட்ரானிக் ஐட்டம் எதுவும் இருக்கா இதில்?’ போர்டிங் பாஸ் தரும் இடத்தில் என் பெட்டியை உள்ளே எடுத்துக்கொள்ளும் முன் ஏர்-இந்தியா ஊழியர் வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் சார்ந்து… (READ MORE)

பொரி கடலை

, , , ,

அப்பா – அம்மா – பிறந்த நாள்

என் அம்மா பிறந்த போது அதை குறிப்பெடுத்து வைக்க எவரும் இல்லையோ, குறிப்பெடுத்தவர் பிறகு இல்லையோ தெரியவில்லை. என் அம்மாவின் பிறந்த நாள் எவருக்கும் தெரியாது.  ‘ஆடி மாசம் பொறந்தான் சிவா! பத்துமாசம் சின்னவன் சரவணன்!’ என்பதே பொதுவான பிறந்த கணக்கு வழக்கு முறை கொண்ட அக்காலமதில், பிறந்த நாள் ஆங்கிலத்தேதி பற்றியே சிந்தனைகளே இல்லை…. (READ MORE)

அம்மா, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

போர்த்திக் கொள்ள தூக்கம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது இம்மனிதனுக்கு…

இருமங்கிலும் ரயில்களின் பேரிறைச்சல், நடைமேடையில் ஓயாமல் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் பயணிகளின் பெருஞ்சந்தடி, மிக அருகில் ஊர்ந்து கொண்டே இருக்கும் பேட்டரி வாகனங்களின் ஒலிப்பான்கள் என எல்லா சத்தங்களுக்குமிடையே, மனப்பேய்களின் இறைச்சல்களுக்கு நடுவே அமைதி கொண்ட புத்தனைப் போல துயில்கிறான் இம்மனிதன் சென்ட்ரல் ரயில்நிலைய 10 ஆம் நடைமேடையின் நடுவே, ஒரு கொசுவலையைக்  கட்டிக்கொண்டு…. (READ MORE)

பொரி கடலை

wp-1684470137111.jpg

80 அடி நீளத் திமிங்கிலமும் 9 ஒளி ஆண்டுகள் தூர எல்பி 791-18 கிரகமும்

சோழமண்டல கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலத்தை கட்டி போராடி இழுத்துச் சென்று ஆழ் கடலில் விட்டனர் நூறு மீனவர்கள் என்றொரு செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது சென்ற வாரம்.  ‘நூறு மீனவர்களா!’ என்று விவரம் பார்த்ததும் வியப்பு வந்தது. திமிங்கிலத்தின் நீளம் 80 அடி! நமக்குப் பத்துக் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கடலுக்குள் என்னென்னவோ இருக்கின்றன. கடல் என்பது… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , , , ,

‘ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச் சத்து…!’ : பரமன் பச்சைமுத்து

‘ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச் சத்து…!’ : கேள்வி: பழைய சோறு பற்றி உங்களுடைய பதிவு ஒன்றில் பார்த்தேன். நானும் உண்ணலாமா? பதில்: நாம் உண்ணும் உணவை செரிப்பதற்கு பாக்டீரியாக்களின் உதவி தேவை. நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் என்றழைக்கப்படும் இவை நம் வயிற்றில் இருந்து கொண்டு தங்கள் பணியை செவ்வனே செய்து நமக்கு உதவுகின்றன…. (READ MORE)

பொரி கடலை

,

என் பள்ளி நாட்களில் ரசித்த அந்தத் திரைப்படத்தை…

என் பள்ளி நாட்களில் பரமகுரு போன்ற தோழர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட,  பிறகு இரண்டாம் கட்ட வெளியீடாக சிறு நகரங்களில் திரையிடப்பட்ட போது கீரப்பாளையம் விஆர்கே டூரிங் டாக்கீஸில் பாலசரவணனின் பரிந்துரையில் அவனோடு மணக்குடியிலிருந்து சைக்கிளில் போய் நான் பார்த்த படம் – ‘ஊர்க்காவலன்’ ‘அந்த வானத்துல இருக்கற சூரியன் எழறதுக்கு முன்னாடி எழுந்து, ஆ… ஜில்..சக்…… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

புலோத்துங்கன் கால செப்பேடுகள் சீர்காழியில் கிடைத்தவை

கேள்வி: சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் கிடைத்துள்ள சிலைகள், தேவார செப்பேடுகளைப் பற்றி? பரமன்: பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆய்வு செய்யப்பட வேண்டியவை. பல புதிய செய்திகள் கிடைக்கலாம். இந்த செப்பேடுகள் பற்றி நாம் சொல்வது இருக்கட்டும். நாம் மிகவும் மதிக்கும் வரலாற்று ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் சொல்லியிருக்கும் இரண்டு தகவல்களைக் கவனியுங்கள். “சிதம்பரம் கோயிலில் குலோத்துங்கச் சோழனிடமும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

wp-1679809970130.jpg

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

சூரியன் ஓர் அதிசயம்! 152 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு இங்கேயிருக்கும் நமக்கும், செடிக்கும், கொடிக்கும், உயிரினங்களுக்கும் மொத்த பூமிக்கும் ஆற்றலை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறது. அட, ஆமாம் சந்திரனுக்கும் கூட! ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வலம் வருவதாக கொள்கிறது சமய நம்பிக்கை. அதையொட்டியே சூரியனின் அம்சம் பெற்ற சூரியனின்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

வைக்கோல் உருளை

‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்தெல் என்று யானை கட்டிப் போரடித்த…’ என்று சங்கப்பாடல் குறித்தது போய், ‘ஆட்கள் வைத்துப் போரடித்தால் அல்லோலகல்லோலப்படுவோமென எந்திரம் வைத்து நெல்லறுக்கும் காலமிது!’ என்றாகிப் போனது இன்று. மணக்குடி போன்ற ஊர்களில் இரு வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன நெல் அறுவடைக்கு. வளர்ந்த கதிர்களை அப்படியே அறுத்து உள்ளிழுத்து சுழற்றியடித்து  நெல்மணிகளை… (READ MORE)

பொரி கடலை

முன் உழைப்பு

‘ஜக்கியை பதற வைத்து விட்டார் சமஸ்!’ ‘சமஸின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் தந்துள்ளார் ஜக்கி!’ என்றெல்லாம் இரு வகையாக செய்யப்படும் விவாதங்களுக்கு வெளியே நின்று ஒன்றைப் பார்க்கிறேன். ஒருவரை நேர்காணல் செய்யும் முன் அவரைப் பற்றி மேய்ந்து ஆராய்ந்து விவரம் சேகரித்துக் கொண்டு போவது மொத்த நேர்காணலையும் சத்தானதாக மாற்றிவிடும். கேள்விகளும் ஆழமாகும், கடைவதால் வரும்… (READ MORE)

பொரி கடலை

, ,

குடியேற்றம் நுழைவு

நுழைவு அனுமதி பெற குடியேற்றம் எனப்படும் இமிக்ரேஷன் துறையில் நுழையும் போது பலருக்கும் பலவித அனுபவங்கள் உண்டு நாடுகளைப் பொறுத்து. கமல்ஹாசன் போன்ற நடிகரையே நான்கு மணி நேரம் கனடாவில் உட்கார வைத்தது உண்டு. அமெரிக்காவின் கதவு வரை போய்விட்டு அனுமதி கிடைக்காமல் ‘நோ’ என்று முத்திரை குத்தப்பட்டு விமானத்தில் திருப்பியனுப்பப் பட்டவர்களும் உண்டு. மருத்துவத்திற்காக… (READ MORE)

Paraman Touring, அரேபிய அனுபவங்கள், பொரி கடலை

போய் வாருங்கள் பாடகியே

‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்தரிக்கா…’என் தந்தை போகிற போக்கில் பாட அவர் வழியாகவே அந்தப் பாடலை முதன் முறை கேட்டதாக என் நினைவு. ரேடியோவும் இசைத்தட்டுகளுமே இருந்த டேப் ரெக்கார்டர் இன்னும் வந்திராத அந்த மணக்குடி காலங்களில், இந்தக் குரல் கேட்டே வளர்ந்தோம். மஞ்சள் நீராட்டு, திருமணம் என நற்காரியங்களில் பந்தலிட்டு,… (READ MORE)

பொரி கடலை

,

அட்சதை…

திருமணத்தில் மணமக்கள் மீது தூவி வாழ்த்த தரப்படும் அட்சதை தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிய சிறுவன் ஒருவனைப் பார்த்தேன் நேற்று காலையில் நிகழ்ந்தவொரு திருமணத்தில். கையில் தந்ததும் அப்படியே அதை வாயிலிட்டுத் தின்று நம்மை சிரிக்க வைத்துவிட்டான் அவன். சிரிப்போடு, ‘இவனது வயதில் நாம் என்ன செய்தோம் அட்சதையை கையில் வைத்துக் கொண்டு?’ என்று… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

wp-1674269527392.jpg

பூம்புகார் சிந்துசமவெளிக்கும் முந்தைய உலகின் முதன் 15,000 ஆண்டுகள் பழமையான நகரம்! : ஆய்வறிக்கை

2,500 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னர்களால் நிறுவபட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மறைந்ததாக சொல்லப்படும் பூம்புகார் பற்றிய அகழ்வாராய்ச்சி ஆய்வு திட்ட குழுவின் புதிய தகவல் விழிகளை விரிய வைத்து வாயைப் பிளக்க வைக்கிறது. பூம்புகார் நகரத்தின் வயது 15,000 ஆண்டுகள்!!!! 15,000 ஆண்டுகள் பழமையான நகரம், 70 – 80 கப்பல்களை நிறுத்துமளவிற்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , ,

wp-1672893421062.jpg

அப்பா…

அப்பா… தவறு சரி பார்க்காமல்தன் பிள்ளைகளுக்காகஎதையும் செய்யும் சீவன் இதயத்திலிருந்து எழும்பும் அன்பைகழுத்துப் பகுதியில் கண்டிக்கும் வார்த்தையாக மாற்றியனுப்பும் கால எந்திரம் தனக்கிணை ஒருவரும் தரணியிலேயேயில்லையென்று தலைகனத்து இறுமாந்திருந்தாலும்தன் பிள்ளைகளிடம் தன்னையே பாரக்கும் முரண் பெற்றோர் வைத்த தன் பெயரை காலாகாலத்துக்கும் நிற்கும் படிபிள்ளைகளின் நெற்றியில் எழுதிப் போகும் தலை (தலைப்பெழுத்து) எழுத்தாளன் வானகம் புகுந்த… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

wp-1672289809192.jpg

அட காக்கையே!

சோறு வைத்தால் மறுத்து ஓடும் நொறுக்குத்தீனி வைத்தால் ஓடி வரும் சிறு பிள்ளையைப் போலவே செய்கிறது தினமும் காலையில் பால்கனியில் பிஸ்கட் துண்டுகள் கொத்தியுண்ண வரும் காக்கை. வைக்கும் சில பிஸ்கட் துண்டுகளை தின்றுவிட்டு அடுத்த நாள் மட்டுமே வரும் இப்பறவை, பிஸ்கட் தீர்ந்துவிட்டதே வெறும் (கையோடு!) அலகோடு அனுப்பக்கூடாதேயென்று சில துண்டுகள் மந்தைவெளி ‘சுஸ்வாத்’… (READ MORE)

Self Help, பொரி கடலை

,

ஆர் எம் ராஜேந்திரன் மணிவிழா

பூசம் நட்சத்திரம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுபகிருது ஆண்டு பிறந்தார் இராம. இராஜேந்திரன்.  எதற்கு இது என்பதை சொல்லும் முன் ஒரு சங்கதியைப் பார்த்துவிட வேண்டியிருக்கிறது. அறுபது நாழிகைகள் கொண்டது ஒரு நாள்,  அறுபது ஆண்டுகள் கொண்டது ஒரு சுழற்சி என்பது இங்கு காலகாலமாக நம் நாட்காட்டிகளும் பஞ்சாங்கங்களும் கொள்ளும் கணக்கீடு…. (READ MORE)

பொரி கடலை

முதலை இருக்கு, பாத்து…

‘முதலை இருக்கு, முந்தா நாள் குளிச்சிட்டு இருந்த பசங்களை இழுத்துட்டு போயிருச்சு. பாத்து பரமன்! எறங்க வேண்டாம்!’ என்று எச்சரித்தார் உள்ளூர்வாசியும் கிராமநிர்வாக அலுவலருமான அன்பு நண்பர். ….. சோழதேசத்தின் தானாதிகாரி பெரிய பழுவேட்டரையர் பழுவூரிலிருந்து படகில் பயணிக்கும் போது கரைபுரண்ட வெள்ளத்தின் நீர்ச்சுழலில் சிக்கி நீரில் அடித்துச்செல்லப்பட்டார் என்று கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’… (READ MORE)

பொரி கடலை

wp-1669082489126.jpg

போய் வாருங்கள் அவ்வையாரே!

‘பொதுவெளியில் மக்கள் பணி, மொழிப் பணி செய்பவர் எப்படி இருக்க வேண்டும்?’ என்று நானே கேட்டுக் கொண்ட என் கேள்விக்கு நாமே கொடுத்துக் கொண்ட உதாரணம் ‘ஐயா அவ்வை நடராசன்’ .  கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா என எதிரெதிர் கட்சிகள் ஆட்சிக்கு வந்த போதும் மொழித்துறை, உலகத் தமிழ் மாநாடு என பெரும் செயலாற்றும் உச்சிப்… (READ MORE)

பொரி கடலை

,

பம்பரம் விட்டிருக்கிறீர்களா?

பம்பரம் விளையாடியிருக்கிறீர்களா? ஆர்வி உதயகுமார் படத்தில் சுகண்யாவின் தொப்புளில் விட்டதைப் போலல்ல, தரையில் ஓங்கிக் குத்தி. சிறியவர், பெரியவர் பேதமும் இல்லை, இத்தனை பேர்தான் என்ற கட்டுப்பாடும் இல்லை. எவரும் ஆடலாம். எத்தனை பேரும் இணையலாம். ஒரு பம்பரம், சில மீட்டர் கயிறு (சாட்டை என்று பெயர் அதற்கு), சில சதுர அடி கட்டாந்தரை அவ்வளவே… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

என்னவெல்லாஞ் செய்யும் இத் திருப்பாவை வரிகள்…

🌸 இன்று புரட்டாசி சனி – சைவ நெறியில் பழகிய எங்கள் வீட்டில் பெருமாளுக்குத் தளிகை. மகள்களும் ஊரிலிருந்து வந்துள்ளதால் இந்த சனி அன்று என்று முடிவு. நெற்றியில் நீறு சைவ பதிகங்களே சொல்லி பழகிய நமக்கு பெருமாளை போற்றிடத் தெரியவில்லை. ‘ஆதி மூலமே!’ என்றழைத்தற்கே வந்தவனாச்சே என்று கட்டு கட்டினாலும், ‘அரங்கா… பார்த்தசாரதி… பெருமாளே!’… (READ MORE)

பொரி கடலை

சூப்பர் ஸ்பீடில் பாஸ்போர்ட் வருகிறது

👏👏என்ன நடக்கிறது இந்தியாவில்! பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்தோம். ‘வெள்ளிக்கிழமை காலை 11.15க்கு நேர்முகம், 11க்கே சான்றுகளோடு வரவும்!’ என மின்னஞ்சல் வந்தது. வெள்ளிக்கிழமை 10.45க்கு பாஸ்போர்ட் அலுவலகம் போனேன். சான்றிதழ் படிமங்கள் கேட்டார்கள். நகலெடுத்துக் கொண்டார்கள். என்னைப் படமெடுத்துக்கொண்டார்கள்.ஞாயிறு காலை போலீஸ் வந்தார் தகவல் சரி பார்த்து உறுதிசெய்ய.செவ்வாய் காலை பாஸ்போர்ட்டோடு என் வீட்டு வாசலில்… (READ MORE)

பொரி கடலை

, ,

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த…’

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்தயோகமே ஊற்றையேன் தனக்கு…’ சில வரிகளைப் படிக்கும் போதே அவை, அது தொடர்பாக நாம் பதிந்து வைத்திருக்கும் சிலரை அல்லது சிலதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து மேலெழுப்பிக் கொண்டு வந்து விட்டு விடுகின்றன.  அப்படியொன்றானது மேலுள்ள வரிகள். நியாயமாக இவ்வரிகளைப் பார்க்கையில் தலைக்குள் சிவன் வரவேண்டும் அல்லது இந்தத் திருவாசக வரிகளை இயற்றிய மணிவாசகர்… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , , , , , ,

புதுப்பித்தல் வரிசையில்

இருபத்தியிரண்டாண்டுகளுக்கு முன்பு 1999ல் வந்த போது பதற்றம் கொஞ்சமும் உள்ளே ‘நடக்கனும் நடக்கனும்!’ என்ற வேண்டல் நிறையவும் இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு 2012ல் வந்த போது பதற்றம் இல்லை, ‘நடந்திடனும் நடந்திடனும், ஒழுங்கா தலை வாரிக்கனும் அதுதான் பிரிண்ட் ஆகி வரும்!’ என்ற கூடுதல் கவனம் இருந்தது. இன்று பதற்றமில்லை, தலையைக் கூட வாரவில்லை, ‘நடக்கும்!’… (READ MORE)

பொரி கடலை

பொட்டு வைத்த காசு…

சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்ட ரூபாய் நாணயம் ஒன்று உங்களுக்குப் தரப்பட்டால் நீங்கள் அதை என்ன செய்வீர்கள்? … ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணையும், ஒரு மனைப்பலகையும் ‘எட்டணா’ எனப்படும் ஐம்பது காசு வில்லையையும் தந்து, ‘சிவா! போய் புள்ளாரு வாங்கிட்டு வா!’ என்பார் அம்மா. பிள்ளையார் செய்யுமிடத்திற்குப் போவது தொடங்கி, செய்து வாங்கி,  ‘பைசப்ஸ் கர்ல்’ வருவதற்கு… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , ,

நெல் தெளிக்கிறோம் நேரடியாய்…

காவிரி – கொள்ளிடம் – வீராணம் திறப்பு நீர் வந்து பாயும் வரை காத்திருந்தால் பருவம் போய்விடுமென்பதால், மணக்குடியில் எங்கள் வடக்குவெளி வயலில் நேரடி நெல் விதைத் தெளிப்பு தொடங்கி விட்டோம் இன்று.  அழைத்துச் சொல்லி படத்தைப் பகிர்ந்தார் ஊரிலிருந்து சித்தப்பா. படத்தில் விதை தெளிக்கும் பூராயர் அண்ணனின் காலில் கட்டு போடப்பட்டு இருப்பதைப் பார்த்து… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

தனக்கான ஒரு வேலை என்று வரும் போது பொறுப்பு வத்துவிடுகிறது

பள்ளியில் பயின்ற காலங்களிலும் கல்லூரிக் காலங்களிலும் இரவு சீக்கிரம் உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்ட என் மகள்கள், முதுகலை படித்த போது கொரோனா தீ நுண்மி பொதுமுடக்கக் காலங்களில் இயல்பு மாறி நள்ளிரவு வரை கண்விழிப்பு காலையில் நேரங்கழித்து எழல் என இரண்டு மூன்று மாதங்கள் இருந்தார்கள். காலை உடற்பயிற்சியை விடவில்லையென்றாலும் இரவில் உறங்குவது தள்ளிப்போனது.இரண்டொரு… (READ MORE)

பொரி கடலை

நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா?

நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா? இதைப் பறித்து வாணலியில் இட்டு புரட்டி மாலைச் சிற்றுண்டியாக உண்ட பாட்டிகள் சிலரை மணக்குடியில் பார்த்திருக்கிறேன் அந்தக் காலங்களில். சிறுவயதில் பள்ளி இடைவேளைகளில் முத்து, முரளி, சரவணன், நட்ராஜோடு பள்ளிக்குப் பின்புறம் கிளைகளில் பூத்திருக்கும் இவற்றை பறித்து வாயிலிட்டு மென்று துவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த அலாதி கலவையை சுவைத்து மகிழ்ந்திருக்கிறேன். உயர்… (READ MORE)

பொரி கடலை

வந்தவாசி தம்பதிகள் சொல்லும் சங்கதி…

கிராமத்தையொட்டிய தங்களது விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழும் 76 வயது கோதையானுக்கும் அவரது மனைவி 72 வயது ராணியம்மாளுக்கும் எவர் சொல்லிக் கொடுத்தார்கள்!! 40 ஆண்டுகளாக வெறும் மழை நீரை மட்டுமே பிடித்து காய்ச்சி பருகி, சமைத்து வருகின்றனர். ‘எவ்வளவு நாளானாலும் புழுவோ பூச்சியோ பிடிக்காது மழை நீரில். 40 ஆண்டுகளாக மழைநீர்தான் எங்களுக்கு…. (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

சிறு கன்றாக நாம் நட்டவை

சிறு கன்றாக நாம் நட்டுப் பராமரித்தவை இன்று அண்ணார்ந்தே பாத்தாலும் உச்சி் தெரியா உயரத்திற்கு வளர்ந்துவிட்டால்… நம் உள்ளம் கொள்ளும் நிலை என்ன!?  மலையளவு மகிழ்ச்சிதானே! ஷெனாய் நகரில் நம் தெருவில் தடித்த தண்டுகளோடும் பரந்த கிளைகளோடும் வளர்ந்து பறவைகளுக்கும் பல்லுயிர்க்கும் உதவி செய்து நிற்கின்றன நமது அரசு, ஆல், வேம்பு, நாவல் மரங்கள். ம..கி…ழ்…ச்…சி…!… (READ MORE)

பொரி கடலை

வரிசையாய் அரசமரம் – NH 79

தேசிய நெடுஞ்சாலை என்ஹெச்44ல் பயணித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று ஓரிடத்தில் தொடங்கி சில கிலோ மீட்டர்களுக்கு வரிசையாக ஒரே வகை மரங்கள் இருந்தால், ‘அட..!’ என்று ஒரு வியப்பு வரும்தானே! எந்த இடம் இது? சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இடதில் ஆத்தூருக்கு இறங்குவதற்கு முன்பு. ‘வருசலா கண்ணுக்கு எட்டன தூரம் வரைக்கும் அரசமரங்க, ஒரே மாதிரி! வண்டிய… (READ MORE)

பொரி கடலை

, ,

வகுப்பென்பது…

வகுப்பென்பது மாணவரும் ஆசிரியரும் தங்களைத் தந்து நிற்கும் ஒரு வகைத் தவம்.         கண்கள், செவிகளைக் கொண்டு ‘வை ஃபை’யைப் போல உருவாக்கப்படும் கம்பியில்லா தொடர்பில் உட்கருத்தும், உணர்வுகளும், உயிராற்றலும் கடத்தப்படும்      சாலை. வகுப்பு என் உயிர் ஊறும் இடங்களில் ஒன்று. சிறந்த ஆசிரியர்கள்  மாணவர்களை உருவாக்குவதைப் போலவே, சிறந்த மாணவர்களால்  ஆசிரியரின் அகம் மேம்படுகிறது என்ற… (READ MORE)

பொரி கடலை

பொன்னியின் செல்வன் : வரலாற்றை மாற்றுகிறார்களா?

மலர்ச்சி வணக்கம் பொன்னுஸ்வாதி! ‘கல்கியின் கதையும் மணிரத்னத்தின் திரைக்கதையும் மக்களுக்கு தவறான வரலாற்றை தந்துவிடுமே!’ என்ற உங்கள் பின்னூட்டம் கண்டேன். ஒரு வரலாற்று நிகழ்வை அல்லது வரலாற்றில் உள்ளவரின் வாழ்விலிருந்து சில நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி கற்பனைகள் புனைந்து கதை செய்வது காலகாலமாக வழக்கத்தில் உள்ளது. நம் புராணங்களிலேயே அத்தனை ‘வெர்ஷன்கள்’ இருப்பது… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1660048969063.jpg

பொன்னியின் செல்வன் – உண்மைக் கதையா?

கேள்வி: எனக்குத் தெரிந்தே பதினைந்து ஆண்டுகளாக ‘பொன்னியின் செல்வன்’ பற்றி மேடைகளில், எழுத்துகளில் சொல்லி வருபவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ‘பொன்னியின் செல்வன் டூர்’ போனவர் நீங்கள்.  ராஜராஜனின் கதையை ‘வளர்ச்சி’யில் சித்திரக் கதையாகவும் வெளியிட்டீர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு. உங்கள் உந்துதலால் பொன்னியின் செல்வன் நூலை படித்த பலரில் நானும் ஒருத்தி. பொன்னியின் செல்வன்… (READ MORE)

VALARCHI Tamil Monthly, பொரி கடலை

, , , , , , , , , , ,

ஈரோடை

‘ஓர் ஆடு’ ‘ஒரு புலி’ என்று மட்டுமே பள்ளிக் காலத்திலிருந்து பயன்பாடு கொண்டிருந்தவன், மலேசியாவின் ‘பெந்தாங்’ போனபோதுதான் அங்கிருக்கும் பயன்பாடு கண்டு தலையில் தட்டிக்கொண்டு ‘ஈராயிரம்’ என்று என் சொல் பயன்பாட்டை மாற்றிக் கொண்டேன். அடுத்த ஆண்டு மலர்ச்சி நிகழ்ச்சியின் அனுமதி சீட்டில் ‘ஈராயிரத்து பதினெட்டு’ என்றே அச்சேற்றினோம். மலர்ச்சி பயிலரங்கம் ஒன்றிற்காக இன்று ஈரோட்டுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

திருவருட்பா

நீண்ட காலமாக (பல ஆண்டுகளாக) என் பட்டியலில் இருந்த தொடாமல் விட்ட திருவருட்பா நூலை புரட்ட எண்ணி எடுத்தேன் இன்று (அழைப்பு இப்போதுதான் வருகிறது). முதல் பக்கம் அவரது கையெழுத்து, ‘சிதம்பரம்’ என்று ஊர்ப்பெயரை சேர்த்து எழுதியிருப்பதை கண்டது என வியப்புடன் நகர்த்தி, முதல் பக்கம் முதல் செய்தி ‘இந்திரிய ஒழுக்கம்’ படித்தேன். ஆடிப் போனேன்…. (READ MORE)

Spirituality, பொரி கடலை

யாரிடம் கேட்பேன் இதை?

குளித்து விட்டு, நகங்களை வெட்டலாமென பால்கனியைத் திறந்து கம்பித் தடுப்புக்கு அருகில் நின்று கை விரல் நகங்களை வெட்டத் தொடங்கினேன் இன்று காலை. எங்கிருந்தோ வந்து அருகிலமர்ந்தது ஒரு காக்கை. தின்னும் பண்டம் எதுவும் வைத்திருக்கிறேன் என்று நினைத்தது போல. ஆனாலும் இவ்வளவு நெருக்கமாக வராதே காக்கை.  உணவே வைத்தாலும் ஓரக் கண்ணால் பார்த்து பார்த்து… (READ MORE)

பொரி கடலை

, ,

தமிழக அரசு நல்ல திட்டம் : கட்டுமான தொழிலாளர்களுக்கு…

என் அலுவலகத்துக்குப் பக்கத்து மனையில் புதிதாக ஒரு கட்டடமெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் வந்திருக்கும் சிலர் தினந்தோறும் வேலை செய்ய மளமளவென உயர்கிறது கட்டிடம். எவர் வந்தாலும் போனாலும் சட்டை செய்யாமல் தங்கள் வேலையை மட்டுமே கவனிக்கும் அவர்களின் முகங்களை உற்று கவனித்திக்கிறேன். இப்படிப் பல கட்டிடங்களை பல இடங்களில் எழுப்பியிருப்பார்கள் என்று எண்ணியிருக்கிறேன்…. (READ MORE)

Politics, பொரி கடலை

, , , ,

wp-1658727979233.jpg

நமக்கு நடை பயில்வித்தவளை…

நமக்கு நடை பயில்வித்தவளைநாம் நடத்திக் கூட்டிப் போவது ஓரனுபவம் இதையும் எதையும் நடத்தி வைப்பதே அவனென உணர்கையில் கிடைப்பது பேரனுபவம் இடரினும் தளரினும் உறுநோய் தொடரினும் உடன் நிற்பதுசிவம் – பரமன் பச்சைமுத்துகுளோபல் மருத்துவமனை,பெரும்பாக்கம்25.07.2022 ( Here for a check up ) #Amma #AmirthamPachaimuthu#MuPachaimuthuArakkattalai #Paraman #GlobalHospital

Manakkudi Manithargal, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

குட்டி பையன் டு மாம்பலர் ஐயர் கேட்டரிங்

1991ல் கல்லூரி முடித்திருந்த சமயத்தில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கபில்தேவ், அசாருதீன் கொண்ட இந்திய அணி – டேவிட்பூன் போன்றோர் கொண்ட ஆஸ்த்திரேலிய அணி, லாராவின் மே.இந்திய தீவு அணி ஆகியவை ஆடிய மேட்ச்களை மெத்த ஐயர் வீட்டின் மகாதேவ ஐயரின் கருப்பு வெள்ளை டிவியில் பார்த்திருந்தேன் மணக்குடியில். (ஐயர்கள் வீட்டுக்குள்ளும் போனேன் நான்!) அப்போது எங்கள்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் நெற்றியில் நாமம் – வழக்கு

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வரலாறை மறைக்கிறார்கள் என்று சொல்லி மணிரத்னம், விக்ரம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சுபாஷ் கரன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார் ஒருவர் என்ற தலைப்புச் செய்தியை பார்த்ததும் அதியசமாக இருந்தது. ‘இன்னும் படமே வரலியே! அதுக்குள்ள வரலாற்றை மாற்றினார்கள் என எப்படி சொல்ல முடியும்!?’ என்ற கேள்வியோடு செய்தியை தொடர்ந்து கவனித்தால், சமீபத்தில்… (READ MORE)

Manakkudi Talkies, பொரி கடலை

, , , , ,

‘பரமன்…’  எனும் பெயரைக் கொண்ட நான் இன்று முதல் ‘…. ….’  என்று எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்!’ – பரமன்

‘பரமன்…’  எனும் பெயரைக் கொண்ட நான் இன்று முதல் ‘…. ….’  என்று எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்!’ – பரமன்…. எனது பெயரை மாற்றிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து அதற்கான அரசு அலுவலகத்திற்குப் போனேன் இன்று காலை. நீண்ட காலமாக ‘பேரை மாத்தனும், இதோ இப்போ செய்யலாம், இப்போ செய்யலாம்!’ என்றே எண்ணிக்கொண்டிருந்ததை… (READ MORE)

பொரி கடலை

, , ,

ஆளை ஈர்க்கும் ஆல் : இரும்பை

மரங்கள் எப்போதுமே எனை ஈர்க்கின்றன. சில மரங்களைக் கண்டதும் தொடத் தோன்றும், சிலதை வெறுமனே பார்க்கத் தோன்றும், இந்த மரத்தையும் அதனடியில் இருந்த கல்லிருக்கையையும் பார்த்ததும் அதில் அமரலாமெனத் தோன்றியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இலுப்பை மரங்களாலான காடுகளாக இருந்து ‘இலுப்பை’ என்று வழங்கப்பட்டு, மருவி இன்று ‘இரும்பை’ என்றாயிருக்கிறது. திருஞானசம்பந்தரின் பதிகம் பெற்ற தலம்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே…

‘அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே, என் கழுத்துக்கு மூணு முடிச்சுப் போடச் சொன்னாரே!’ சில பாடல்கள் மிகச் சாதாரணமானவையாக எளிமையானவையாக இருக்கும், ஆனால் முதல்முறை கேட்கும் போதே ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். அப்படியொரு பாடல் இது. ரஹ்மானின் ‘என் வீட்டுத் தோட்டத்தின் பூவெல்லாம் கேட்டுப் பார்’, இளையராஜாவின் ‘காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா?’… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

ட்ராஃபிக் சிக்னலில் வழிகிறது இசை: பெருநகர போக்குவரத்து காவல்துறை அசத்தல்

ஒரு காலை அண்ணாநகர் ரவுண்டானாவில் ஒளிரும் சிவப்பு விளக்கு அணைந்து பச்சை விளக்கு வரட்டுமென சிந்தாமணி நோக்கி வலதில் திரும்பக் காத்திருக்கிறேன்.  ஏதேதோ சிந்தனைகள் ஓட இருந்தவனை ‘டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்க் டோடம் டோடங்…’ என்று எங்கிருந்தோ வந்த மெல்லிய வீணை இசை உலுக்கியது. உள்ளம் பாடலை கண நேரத்தில் கண்டறிந்து கூடவே பாடவும்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

வந்தது சாகித்ய விருது!

குமுதம் இதழால் எனக்கு அறிமுகப்படுத்தவர் மாலன்.  யதேச்சையாக படிக்கத் தொடங்கி அவரின் கட்டுரைகளைத் தேடித் தேடிப் படித்ததெல்லாம் நிகழ்ந்திருக்கிறது எனக்கு ஒரு காலத்தில். தொலைக்காட்சி ஷோ நடத்திய மாலனை விட பத்திரிக்கையாளர் மாலன் சிறந்தவர் என்பேன். மறைந்த பத்திரிக்கையாளர் சுப்ரமணிய ராஜூ, சமகால நிகழ்வுகள் என எதைப் பற்றியும் மாலனால் வேறு பரிணாமத்தில் எழுதமுடியும்.  ‘ஜன்னலுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

காக்கைகளுக்கும் சுயமரியாதை உண்டு போல

காலை பால்கனி கதவை திறந்து செடிகளை கவனித்துவிட்டு, இரண்டு பிஸ்கட்களை துண்டாக்கி விளிம்பு சிமெண்ட் கட்டையில் வைத்து விட்டு உட்கார்ந்து செய்தித்தாள்களை வாசிப்பது என்ற என் வழக்கத்தில் பிஸ்கட் துண்டுகள் வைப்பதை மறந்து விட்டேன் இன்று. கைக்கெட்டும் தூரத்து எலுமிச்சை மரத்தில் வந்தமர்ந்த காக்கை, பிஸ்கெட் இல்லாத சிமெண்ட் கட்டையைப் பார்த்து விட்டு ‘கா…’ என்றது…. (READ MORE)

பொரி கடலை

மனித மலம் அள்ள ரோபோ – ஹோமோசெப் – சென்னை ஐஐடி

‘மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தை ஒழித்தார் எங்கள் தலைவர்!’ என்று ஆளாளுக்கு சரடு விட்டுக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் மனித கழிவுகளை அகற்ற உண்மையாகவே ‘ஹோமோசெப்’ என்றொரு ரோபோவை வடிவமைத்து தயாரித்து செயல்படுத்திக் காட்டிவிட்டார்கள் சென்னை ஐஐடி மாணவர்கள். பெங்களூருவும், புனேவும், டெல்லியும் இதைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனவாம். தமிழகம் அதிக அளவில் பநன்படுத்திக் கொள்ளட்டும்… (READ MORE)

பொரி கடலை

பாய் வீட்டுக் கல்யாணம்

‘பாய் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்துட்டு, சைவ சாப்பாட்டு பந்திக்கு போறீங்களே பரமன்! ‘ என்று என்னை பாவமாக பார்த்து சைவ உணவு உண்ணும் இடத்திற்கு வழி சொன்னார் அந்த தெரிந்த நண்பர். கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பெயின் ஸ்கூலின் ஒரு கோடியில் போடப்பட்ட பந்தலில் நுழைந்து பந்தியில் அமர்ந்தால், என் எதிர்ப்பந்தியில் தலையில் குல்லாய் அணிந்த இளம்… (READ MORE)

பொரி கடலை

, , ,

அதே சிறு பயிற்சி, ஆனால்…

அதே சிறு பயிற்சி, ஒவ்வொரு நாளும் என சில பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது, அவை ஈட்டித்தரும் பலன்களும் அதன் ஆழமும் அதிகமாயுள்ளன. குதிகால்களை உயர்த்தி, மொத்த உடலையும் முன்னங்கால்களில் நிறுத்தி கைகளை உயர்த்தி விரல்களைக் கோர்த்து வானை நோக்கித் தள்ளிய படி சில மூச்சுகளுக்கு நிற்கும் தாடாசனமும்,பாதங்கள் அரையடி இடைவெளியில் எனும் நின்ற வாக்கிலிருந்து… (READ MORE)

பொரி கடலை

wp-1653388447065.jpg

தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை

ஆர்பி சௌத்ரி வீட்டுக்கு எதிர் வீட்டில் தி.நகரின் சவுத் வெஸ்ட் போக் ரோட்டில் நாங்கள் பேச்சுலர்களாகத் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். மைக்ரோசாஃப்ட் பெரிதாக வளராத அந்த நேரத்தில்  ஹார்டுவேர் சர்வீஸ் அண்ட் நாவல் நெட்வொர்க்கிங் என்று சில்வர் வண்ண டிவிஎஸ் சாம்ப்பில் திரிந்து கொண்டிருந்த நான் (பெட்ரோல் லிட்டர் 18.50/- என்பது நினைவு), ஆர்பி… (READ MORE)

பொரி கடலை

, , ,

இரைச்சலுக்கிடையே அமைதி

‘இதுதான் வாழ்க்கை!’ என்று ஏற்றுக் கொள்ளும் போது, இன்னல்களுக்குக் காரணமான உளைச்சல்கள் உதிர்ந்து விடுகின்றன, ‘இனி செய்ய வேண்டியது என்ன!’ என்பது பற்றி தெளிவும் வழிகளும் தோன்றி விடுகின்றன.  ‘என்னைச் சுற்றி எல்லாமும் சரியாக இருந்தால்தான் என்னால் இயங்கமுடியும், எதையும் செய்ய முடியும்!’ என்பவர்களுக்கு எல்லா நேரங்களிலும் அப்படியான தருணங்களை வாழ்க்கை தந்துவிடுகிறதா என்பது கேள்விக்குறிதான்…. (READ MORE)

பொரி கடலை

wp-1650609481779.jpg

‘யாருக்கு வேண்டும் பன்னீர் டிக்கா சாண்ட்விச்!’

‘எக்ஸ்க்யூஸ் மீ… யூ ஆர் பிகேவிங் ஃபன்னி!’ கருநீல இறுக்கமான உடையணிந்து, சாயாலி என பெயர் பொறித்த பட்டையை மார்பில் அணிந்திருந்த,  கண்ணிமையில் சிவப்பு வண்ணம் பூசியிருந்த விமான பணிப்பெண் சற்று அதிகமான சத்தத்திலேயே கூவினாள்.  தூங்கத் தொடங்கிய நான் அதிர்ந்து கலைந்து எழுந்தேன். கவிஞர் வைரமுத்து கழுத்து இறங்க தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு நேராய்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

மணிமேகலை, காவிரிப்பட்டினம், மணிமாறன்

காவிரிப் பட்டினம், தொடிதோட் செம்பியன் மன்னன், பொதிகை அகத்திய முனி, இந்திர விழா, புகார் நகரத்து நாளங்காடி பூதம், சதுக்கப் பூதம், சித்திராபதி, மகள் மாதவி, தோழி வயந்த மாலை, சுதமதி, சோழ இளவரசன் உதயகுமாரன், யாழ் மீட்டும் எட்டிக்குமரன், அழகிற் சிறந்த மணிமேகலை, அறவணடிகள், வாரணாசி அந்தணர்கள், பசுவின் மகன், பசிப்பிணி தீர்க்கும் அட்சய… (READ MORE)

பொரி கடலை

wp-16493315866315944067076977724616.jpg

செக்யூரிட்டி செக்கின்

மணக்குடி போகும் போதெல்லாம் இது நடக்கும். வீட்டின் வெளிச்சுவரையொட்டிய படியே செல்லும் ஒன்றரையடி  நீள் சிமெண்ட் மேடையில் செருப்பை அழகாக கழற்றி வைத்து விட்டு உள்ளே போவோம். மாலை வெளியில் வந்தால் செருப்பு இருக்காது. வாசல் தெளித்து இருபது புள்ளி அரிசி மாவு கோலம் போடும் அம்மா, அப்படியே நீண்ட சிமெண்ட் மேடையிலும் நீர் விட்டடித்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

காவல்துறை நண்பன்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பார்கள், காவல்துறையில் நண்பர்களும் உண்டு என் நண்பர்களில் சிலர் காவல்துறையிலும் உண்டு. திரைப்படங்களில் மிகையாக காட்டப்படுவது போல உண்மை உலகில் காவலர்கள் எப்போதும் இல்லை என்பது நமக்கே தெரியும். ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்ரா… பாக்கறியா… பாக்கறியா?’ என்று கத்துகிற காவலர் நிசத்தில் இருக்க மாட்டார்தான்.‘மூன்று முகம் – அலெக்ஸ்பாண்டியன்’ ‘விக்ரமார்குடு… (READ MORE)

பொரி கடலை

,

wp-16492538636646380278259803578736.jpg

காவல்துறை நண்பன்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பார்கள், காவல்துறையில் நண்பர்களும் உண்டு என் நண்பர்களில் சிலர் காவல்துறையிலும் உண்டு. திரைப்படங்களில் மிகையாக காட்டப்படுவது போல உண்மை உலகில் காவலர்கள் எப்போதும் இல்லை என்பது நமக்கே தெரியும். ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்ரா… பாக்கறியா… பாக்கறியா?’ என்று கத்துகிற காவலர் நிசத்தில் இருக்க மாட்டார்தான்.‘மூன்று முகம் – அலெக்ஸ்பாண்டியன்’ ‘விக்ரமார்குடு… (READ MORE)

பொரி கடலை

,

wp-1648197244922.jpg

உயரம் என்பது எதை வைத்து?

உயரம் என்பது எதை வைத்து? மனித உடலின் அளவை வைத்தா, உள்ளிருக்கும் உள்ளத்தின் அளவை வைத்தா,  மனிதன் ஆற்றும் அளவை வைத்தா? உடல் உயரம் கொண்டவர்கள் உயர்ந்தவர்களாக ஆகாமல் போகலாம், உயர்ந்த உன்னத மனிதர்கள் உடலளவில் உயரமாக இல்லாமலும் போகலாம்.  ஓடும் உசேன் போல்ட்டின் ஓட்ட வேகத்திற்கும் உடல் உயரத்திற்கும் சம்மந்தம் இருக்கலாம். கர்மவீரர் காமராஜுக்கும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

குறுந்தொகை ஆடிப்பாவை – மாலன்

🌸 இவ்வார குமுதமில் மாலனின் கட்டுரை மிக நன்று. உலகில் முதன் முதலில்கண்ணாடியை உருவாக்கியவர்கள் துருக்கியர்கள், மெருகேற்றியவர்கள் எகிப்தியர்கள், இல்லை சீனம்தான் முதலில் என்று கூகுளில் கதைகள் பல இருக்க, கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ‘குறுந்தொகை’யில் ஆலங்குடி வங்கனார் ‘ஆடிப்பாவை’யில் கண்ணாடியைப் பற்றியும் அதில் தெரியும் பிம்பத்தை உவமையாக வைத்தும் எழுதியிருக்கிறார் என்று… (READ MORE)

பொரி கடலை

, , ,

ஆனை ஆனை அழகர் ஆனை

சிறுவர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் எழுதுவது எளிதில்லை என்பதை பல ஆண்டுகளாக ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் சிறுவர்களுக்கான சித்திரக்கதை பகுதியில் எழுதி வருவதால் அடிக்கோடிட்டு சொல்ல முடியும்.(சிறுவர்களுக்காக நாம் செய்யும் அந்தப் பகுதியை பெரியவர்களே அதிகம் ரசிக்கின்றனர் என்பது வேறு கதை) இயல்பாக வருவதை சிறுவர்களுக்கான எளிய நடையில் மாற்றிதான் நாம் எழுதுகிறோம் என்று நாமே… (READ MORE)

பொரி கடலை

வசுதேவனுக்காக நண்பன் கம்சன்!?

பர்சானபுரியின் தேவகர் தனது செல்ல மகள் தேவகியை, குலத் தொழில் மாறி நூல் கற்று அமைச்சனாகிப் போன வசுதேவனுக்குத் தந்து விடக் கூடாதென்பதற்காகவே, திமிலும் திமிறும் கொண்ட ஏறுவை மன்றிலில் அடக்குபவனே மகள் கொண்டு போவான் என்றறிவிக்க, வசுதேவனால் முடியாதிது  என்றெல்லோரும் எண்ணியிருக்கும் வேளையில் களத்தில் குதித்து காளையையடக்கி தங்கையைத் தூக்கிச் சென்றானாம் ஆளும் கம்சன்… (READ MORE)

பொரி கடலை

, ,

பச்சையப்பாஸ் சில்க்ஸ் திருவண்ணாமலை

🌸 ‘திருவண்ணாமலை வகுப்புக்கு வர்றீங்க! அப்படியே நம்ம புது ஷோருமூக்கு வரணும்!’ என்று நம் மலர்ச்சி மாணவரின் அழைப்பின் பேரில், திருவண்ணாமலை ‘பச்சையப்பா சில்க்ஸ்’க்கு போயிருந்தேன். (அவர்கள் விரும்பியபடி அங்கிருந்த பிள்ளையாருக்கு தீபம் காட்டினேன். நான் விரும்பிய படி கண் மூடி பிரார்தனை செய்தேன்) உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அசந்து போனேன். ஒரு திருமணத்திற்கு என்று… (READ MORE)

பொரி கடலை

இயக்குநர் வசந்த் : புத்தகக் கண்காட்சியில்

இயக்குநர் சிகரம் பாலசந்தர் சாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்பதைத் தாண்டி, ‘எஸ்பிபியை இப்படிப் பார்க்கிறாரே இவர்!’ என்று வியக்க வைத்து, அதை நமக்கும் கடத்தி எஸ்பிபி மீதான நம் பார்வையின் அடர்த்தியையும் கூட்டிவிட்டுப் போன திரைப்பட இயக்குநர் வசந்த் அவர்களோடு, நேற்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  ஜீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கொண்ட அளவளாவுதல் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

ஆசிரியனாக அகமகிழ்கிறேன்

‘நிறைய பண்ணிப் பாத்துட்டேன். எதையும் சரியா பண்ண முடியலை. மனசு கஷ்டமா இருக்கு. எதில போறதுன்னே வழி தெரியல! எனக்கு எது வரும்ன்னே எனக்குப் புரியல!’ சில ஆண்டுகளுக்கு முன்பு மனக்குமுறலோடும் கண்ணீரோடும் மாணவனாக வந்து நின்று நம்மிடம் செய்யப்பட்ட பகிர்வு இது.  சில சந்திப்புகள், சில முடிவுகள், புதிய பாதை தீர்மானிப்பு,  புதிய இலக்குகள்,… (READ MORE)

MALARCHI, Malarchi Maanavargal, பொரி கடலை

, , , ,